வியாழன், 18 ஜூலை, 2019

முந்தல் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம்


புத்தளம் மாவட்டத்தில் இந்து மக்களின் சிறப்புக்களையும் பாரம்பரியங்களையும் அதன் இருப்பையும் கோடிட்டுக் காட்டும் அடையாளமாக துலங்கி நிற்பதே ஆலயங்களாகும்.

இவ்வாலயங்களிளே இந்துக்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் இப்பிரதேசங்களை நல்லாட்ச்சி புரிந்ததாகவும் ஆலய வரலாறுகளும் கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு அமைந்த ஆலயங்களில் ஒன்றாக மிளிர்வதே புத்தளம் மாவட்டத்தில் முத்தாக அமைந்து முச்சிறப்புக்கள் பெற்று முன்னுதாரனமாக அமைந்த ஆலயமே முந்தல் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயமாகும்.

இவ்வாலயத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 30ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவ்வாலய உற்சவங்களுக்கெல்லாம் சுடராய் சுடர்விடும் வைபவமாக திகழ்வதே தீமிதிப்பு நிகழ்வாகும். பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட முந்தலில் பார் போற்றும் பாஞ்சாலிக்கு ஆலயமமைத்த இந்துக்களின் சிறப்பையும், சமய நெறிகளை அப்பழுக்கற்ற முறைமைகளில் கடைப்பிடித்து அதன்படி வழிபட்டு வரும் முந்தல் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் சிறப்புக்கள் பெருமைகள் வரலாற்று தொன்மைகளை பரைசாற்றி நிற்கின்றன.

முந்தல் மேற்கே சீரிப்பாயும் சில்லென்ற உப்புக்காத்தும் பச்சை பசேலென சலசலக்கும் நெல்வயல் சூழலும் கற்பகத்தருவென போற்றி நிற்கும் தென்னை மரங்களின் ரீங்கார ஓசையும் தொட்டக்கலி ஆற்றிலிருந்து பாய்ந்து தவழ்ந்து வரும் தென்றலின் சாரலிலே அமைந்து அருள்பாலித்து அருள்மழை பொழிந்து அண்டி வரும் அடியார் குறைகளை தீர்த்து அபயமளித்து ஆறுதல் தரும் அன்னையாக போற்றப்படும் திரௌபதைத்தாயின் மகிமை சொல்லில் அடங்காதவை. இவ்வாலயத்தில் உற்சவங்களுக்கெல்லாம் மூலவிசையாக இருந்து நகர்த்துவது மகாபாரதக் கதையாகும். இக்கதையானது 18 தினங்களாக முன்றையகாலலட்சணமாக படிக்கப்படும் அக்கதை அம்மானை வடிவில் உடுக்கடி பாட்டுகளுடன் தெம்மாங்குப்பாடல் மெட்டுக்களுடன் அவ்வூருக்கே சொந்தமான மரபுவழிப்பாடல்களுடன் மகாபாரதக்கதை பாடிப் படித்து உற்சவங்கள் கொண்டாடப்படும்.

இவ்வாலயத்தில் இன்னுமோர் மரபுமுறைகளில் ஒன்றே கரகம் பாலித்தல். இக்கரகம் பாலிக்கும் பூசகரே தன்னை திரௌபதியாக ஆவனம் பண்ணி வாதை முடித்து வெற்றி இலக்கை அடைந்த நோக்குடன் தீமிதிப்பு வைபவம் இறுதியாக நிகழ்த்தப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் இந்துக்களின் இருப்பை அடையாளப்படுத்துவது இங்கு அமைந்துள்ள தமிழ் கிராமங்களேயாகும். அக்கிராமங்கள் இன்று ஏதோ ஓர் புறக்காரணங்களால் உள்வாங்கப்பட்ட நிலையில் காணப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் ஈடுகொடுத்து தமது தனித்துவத்தை இதன் செந்நெறிகளை பாரம்பரிய உணர்வுகளை தமிழ் இந்துக்களிக் இருப்பை பாதுகாக்கும் இடமாகவும் தலமாகவும் இருப்பதே உடப்பு, முந்தல் போன்ற இடங்களாகும். இவ்விரு இடங்களில் இருக்கும் திரௌபதி அம்மன் ஆலயங்களில் நடைபெறும் தீமிதிப்பு உற்சவங்கள் இந்து தமிழ் மக்களின் உணர்வுகளை சமய நெறிகளை இதுவரை பிளவாத முறையில் பேணிப்பாதுகாக்கின்றது.

இன்றும் இம்மக்கள் தமது சமயத்தின்பால் கொண்டுள்ள ஈடுபாட்டையும் பற்றுருதியையும் கோடிட்டு காட்டுவதாக இருக்கின்றது.

ஈழத் திருநாட்டில் திரௌபதி அம்மன் திருத்தலங்கள் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. இதன் உள்ளீடாகக் கொண்டு இம்மாவட்டத்தில் உடப்பு முந்தல் போன்ற இடங்களில் திரௌபதி அம்மன் ஆலயங்கள் உள்ளன. இவ்விரு ஆலயங்களில் நிகழ்வுறும் உற்சவங்களை நோக்கும் போது மரபை சார்ந்ததாகவும் பாரம்பரிய பண்பாட்டையும் முன்னோர்கள் கடைப்பிடித்த சமய நெறிகளை இன்னமும் அப்பழுக்கற்ற முறையில் பேணிப்பாதுகாப்பதாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் ஓர் பகுதியினர் முந்தல் போன்ற இடங்களில் குடியேறியதாக வரலாறு கூறுகின்றது. இவர்கள் தஞ்சை மாவட்டம் இராமநாதபுர மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என தொல்லியல்சான்றுகள் கோடிட்டு காட்டுவதாக இருக்கின்றது. தஞ்சை மாவட்டங்களில் எவ்வாறு திரௌபதி வழிபாடு இடம்பெறுகிறதோ அவ்வாறே முந்தல் ஆலயங்களிலும் நிகழ்த்தப்படுவதாக அறியமுடிகின்றது. சிறு கொட்டுகையில் வணங்கிவந்த இவ்வூர் மக்கள் பின்னர் பூரணவடிவில் ஆலயத்தை அமைத்து பெயர் சொல்லுமளவிற்கு கட்டி முடித்து விழாக்களை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...