வியாழன், 18 ஜூலை, 2019

சாய் பாபா அருள்


சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு.

சிட்டுக்குருவியின் காலில் கயிற்றை கட்டி இழுப்பது போல பக்தர்களை என் பக்கம் இழுப்பேன் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வதுண்டு. அதை உறுதிபடுத்துவது போல சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு. சிலருக்கு பாபாவை பற்றி துளி அளவு கூட எந்த விஷயமும் தெரிந்திருக்காது. ஆனால் அவர்களை மிகக்குறுகிய காலத்தில் சாய்பாபா தனது அதிதீவிர பக்தனாக மாற்றி இருக்கிறார்.

அவர்களில் சீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைத்து தி.நகரில் ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான -பிரார்த்தனை மையம் நடத்தி வரும் பேராசிரியர் திருவள்ளுவன் வித்தியாசமானவர்.

இதுபற்றி பேராசிரியர் திருவள்ளுவன் கூறியதாவது:-

2001ம் ஆண்டு கல்லூரியில் என்னுடன் பணிபுரிந்த சாய்ராம் என்பவர் என்னை சீரடிக்கு அழைத்தார். அவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர். சாய்பாபா மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அவருடன் நானும் எனது மனைவியும் சீரடிக்கு சென்றோம்.

சீரடியில் பாபாவின் சமாதி மந்திருக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு நிறைய பேர் அமர்ந்து பாபாவை புகழ்ந்து பாட்டுபாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்தேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. பாபா சமாதியில் வழிபட்ட பிறகு சென்னைக்கு திரும்பிவிட்டோம். அதன் பிறகு நான் பாபாவை சுத்தமாக மறந்து விட்டேன்.

நானும் அதை ஏற்றுக் கொண்டேன். சீரடி சாய்பாபா பற்றிய புத்தகங்களை தேடி தேடி சேகரித்தேன். பாபாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்க படிக்க ஆச்சரியமாக இருந்தது. அவர் மெல்ல மெல்ல என் மனதுக்குள் ஊடுருவினார். அந்த சமயத்தில் கல்லூரி முதல்வர் நான் சீரடி சென்று பாபா ஆலயத்தில் உள்ள நூலகத்தில் புத்தகங்கள் பெறுவதற்கு அனுமதி வழங்கினார். அதன் பேரில் நான் சீரடி செல்ல முடிவு செய்தேன். அப்போது பாபா ஒரு அதிசயம் நிகழ்த்தினார்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நான் சீரடி செல்வதை அறிந்து என்னை பார்க்க வந்தார். அவர் என்னிடம், “சீரடியில் இருந்து ஷிண்டே என்பவர் வந்திருக்கிறார். அவருடன் சீரடிக்கு செல்லுங்கள். உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அவர் பார்த்துக் கொள்வார்” என்று கூறினார். அதன்படி ஷிண்டேவுடன் நானும் நண்பர் பல்லவ ராஜாவும் சீரடிக்கு சென்றோம். அங்கு சாய்பாபா ஆலயத்தின் பி.ஆர்.ஒ. லட்சுமன் சகானே எனக்கு அறிமுகமானார்.

லட்சுமன் சகானே என்னை அவரது வீட்டுக்கும் அழைத்து சென்று பாபா பற்றிய புத்தகங்கள் கொடுத்தார். பிறகு சமாதி மந்திருக்குள் சென்று சாய்பாபாவை வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்தார். சமாதி மந்திரில் பாபா சிலை அருகே வெள்ளித்தூண் பகுதியில் நின்று நான் பாபாவை வழிபட்டேன். அப்போது பாபாவுக்கு நடந்த ஆரத்தி பூஜையில் மெய் மறந்தேன்.

அன்று இரவு என் வாழ்க்கையில் மேலும் ஒரு அதிசயத்தை பாபா நிகழ்த்தினார். என்னுடன் வந்திருந்த பல்லவராஜா தான் கொண்டு வந்திருந்த பாபா படத்தை காண்பித்து இதே போன்று இன்னொரு படம் வேண்டும் என்று சீரடி முழுக்க தேடினார். நாங்கள் அப்துல் பாபா காட்டேஜுக்கு சென்று விசாரித்தோம். அப்போது அங்கு இருந்த அப்துல் பாபாவின் கொள்ளு பேரன் “இரவு 10 மணிக்கு வாருங்கள் தருகிறேன்” என்று கூறினார்.

அவர் சொன்னபடி நானும், எனது நண்பரும் இரவு 10 மணிக்கு அப்துல் பாபா வாழ்ந்த வீட்டுக்கு சென்றோம். எங்களை கண்டதும் அவரது கொள்ளு பேரன் கனிபாய் உள்ளே அழைத்து சென்றார். ஒரு கதவை திறந்து பழைய இரும்புபெட்டியை எடுத்து வந்தார். அந்த பெட்டிக்குள் பாபா தினமும் 5 வீடுகளில் பிச்சை எடுக்க பயன்படுத்திய பாத்திரம், சட்கா ஆகியவை இருந்தன. அவற்றை தொட்டு வணங்க சொன்னார். எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. சாய்பாபா மகா சமாதி அடைந்ததும், அவர் பயன்படுத்திய பொருட்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற 7வது நபர் நீங்கள் என்றார்கள். நான் ஆடிப்போய் விட்டேன்.

ஆச்சரியத்தில் மூழ்கி இருந்த எனக்கு பாபா மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தார். அந்த சூட்கேசுக்குள் இருந்த பிச்சைப்பாத்திரத்துக்குள் கிடந்த ஒரு நாணயத்தை எடுத்து கனிபாய் எனக்கு கொடுத்தார். அது பாபா பயன்படுத்திய நாணயம் ஆகும். அந்த நாணயத்தை தொட்ட வினாடியே நான் பாபாவிடம் முழுமையாக என்னை ஒப்படைத்துவிட்டேன். பாபா என்னை தூண்டில் போட்டு இழுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...