செவ்வாய், 14 மே, 2013
ஸ்ரீராம ஜெயம்
10025) ஸ்ரீராம ஜெயம் என்ற மந்திரத்தை எழுதுவதாலும் கூறுவதாலும் எமக்கு ஏற்படும் நன்மை என்ன?
இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட
குணங்களையும் வெல்லும் பக்தியைத் தரும்.
10026) ராம என்ற மந்திரத்திற்கு உரிய பொருள் என்ன?
பாவங்களைப் போக்கடிப்பது
10027) ராம என்ற மந்திரத்தை வால்மீகி முதலில் என்னவென்று உச்சரித்தார்?
மரா என்று
10028) மரா என்றால் என்ன பொருள்?
பாவங்களை போக்கடிப்பதுதான்
10029) ராமனுக்குள் சீதை அடக்கம் என்பதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டவள் யார்? ரமா
10030) ரமா என்ற பெயர் யாருக்குரியது? சீதைக்கு
10031) ரமா என்ற பதத்திற்கு உரிய பொருள் என்ன? லட்சுமி
10032) ராம மந்திரம் எதை வழங்க்கூடியது? லட்சுமி கடாட்சத்தை
10033) ராம மந்திரம் எழுதுவோருக்கும் சொல்லுவோருக்கும் என்ன கிடைக்கும்?
எங்கும் எதிலும் ஜெயம்
10034) ராமன் என்ற சொல்லில் ‘ரா’ என்றால் என்ன? இல்லை.
10035) ‘மன்’ என்றால் என்ன? தலைவன்
10036) ராமன் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பதுதான்
செவ்வாய், 7 மே, 2013
சுக்கிரன்
கே.ஈஸ்வரலிங்கம்
சுக்கிரன்
10011) மனைவியை தரும் உரிமை பெற்றவர் யார்?
சுக்கிரன்
10012) மனைவியை தரும் உரிமை உடையவர் என்பதால் சுக்கிரனை எவ்வாறு அழைப்பர்?
களத்திரகாரகர்
10013) களத்திரகாரகர் என்பதன் பொருள் என்ன?
மனைவியை தரும் உரிமை உடையவர்
10014) அழகான வீட்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவர் யார்?
சுக்கிரன்
10015) ஒருவன் பிறந்தான், வாழ்ந்தான் என்றில்லாமல் அவன் பெயர், புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
இசைப்பட வாழ்தல்
10016) அந்த புகழை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
சுக்கிரனிடம்
10017) சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குபவர் யார்?
சுக்கிரன்
10018) சுக்கிரனுக்குரிய அதிதேவதை யார்?
மகாலட்சுமி
10019) ஆடம்பரப் பொருட்கள், மலர்கள், சந்தனம், கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, சென்ட் போன்ற நறுமணப் பொருட்களை உபயோகிக்க வைப்பவர் யார்?
சுக்கிரன்
10020) ஸ்ப்ரிங் கட்டில், வெல்வெட், மெத்தை, குஷன், கதிரை போன்ற சொகுசுப் பொருட்களை வாங்க காரணமாக இருப்பவர் யார்?
சுக்கிரன்
10021) வாகனம், கப்பல், வியாபாரம், நவரத்தின வியாபாரம், கடல் வழி விமான பயணங்களை அனுபவிக்க செய்பவர் யார்?
சுக்கிரன்
10022) நகைச்சுவை உணர்வுடன் விகட வினோதமாக பேச வைப்பவர் யார்?
சுக்கிரன்
10023) தலைமைப் பதவி கிடைக்கச் செய்பவர் யார்?
சுக்கிரன்
10024) நண்பர்களுடன் நல்லுறவு கொள்ளச் செய்பவர் யார்?
சுக்கிரன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...