செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஈமச் சடங்குக்குச் சென்று வந்த பின் குளிப்பது ஏன்?

ஈமச் சடங்குக்குச் சென்று வந்த பின் குளிப்பது ஏன்?
ஈமச்சடங்கு முடிந்த பின் குளித்தல் பிரேத ஆத்மாக்கள் உங்களை பிடித்து விடும் என்தைத் தான் இதற்கு காரணமாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அது நுண்ணுயிர்கள் சம்பந்தப்பட்டவையாகும்.
ஒருவர் இறந்த பின் அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கும். ஈமச்சடங்கில் கலந்து கொள்பவர்கள் இறந்த நபருக்கு அருகில் தான் இருக்க வேண்டி வரும். இதனால் அழுகிக் கொண்டிருக்கும் இறந்த உடலில் இருந்து வரும் பக்டீரியாக்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். அதனால் தான் ஈமச்சடங்கை முடித்த கையோடு பிற வேலைகளை செய்வதற்கு முன் குளிக்க வேண்டும்.

 இறைவனிடம் வேண்டுதல் வைப்பது சரியா?
இறைவன் கருணையாளராக இருக்கும் போது வேண்டுதல் வைப்பது தவறு தான். இதையே மாணிக்கவாசகர், வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ என்று குறிப்பிடுகிறார். இதை உணர்ந்தவர்கள் வேண்டுதல் எதுவும் வைக்க மாட்டார்கள். குழந்தை அழுவதற்கு முன் பாலூட்டும் தாயின் கருணையை, பால் நினைந்து ஊட்டும் தாயினும் என தாயையே இறைவனுக்கு உதாரணப்படுத்துகின்ற அளவுக்கு அவர் பெருமைப்படுகிறார். ஆனால் குழந்தைகள் இது புரியாமல் அழுகின்றன. அழத்தேவையில்லை. நாம் கேட்காமலேயே இறைவன் தருவான் என்ற உணர்வு வரும் வரை வேண்டுதல் என்பது இருக்கும். இறையருளால் மனம் பக்குவப்படும் போது மாணிக்கவாசகரின் திருவாசகம் சாத்தியமாகி விடும்.


 மாங்கல்யம் தந்துனானேன யார் சொல்ல வேண்டிய மந்திரம?
இந்துக்களின் திருமணங்களின் முக்கிய நிகழ்வான தாலி கட்டுதலின் போது புரோகிதர்களால்,
மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே தீவம் ஜீவ சரதச்சதம் என்ற மந்திரம் உச்சரிக்கப்படும்.
இந்த மந்திரத்தின் பொருள்,
எனது வாழ்வுக்குக் காரணமான மங்கல நூலை உனது கழுத்தில் அணிவிக்கின்றேன். நீயும் என்னுடன் நூறாண்டு வாழவேண்டும் என்பதாகும்.
ஆரம்பத்தில் இந்த மந்திரத்தை மணமகன் உச்சரிப்பது தான் வழக்கம். ஆனால் காலப்போக்கில் புரோகிதரே கூறும் படி மாறிவிட்டது. எனவே இந்த மந்திரத்தை மணமகன் உச்சரிப்பது தான் சரி.


வீட்டில் விளக்கு எரியும்போது வாசலை மூடலாமா?
தலை வாசலைத் திறந்து வைப்பதோடு கொல்லைப்புறத்தைப் பூட்டிய பின்பே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.


ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…?
எந்த ஒரு விசேஷத்திற்க்கு சென்றாலும் மொய்  என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பது நமக்கு வழக்கம். இவ்வாறு வைக்கும் போது முழு தொகையுடன் ஒரே ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்போம். ஏன் நம் முன்னோர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..மிகவும் சிறிய விஷயமானலும், இதிலும் நம் முன்னோர்களின் பண்பாடு சார்ந்த மேன்மை வெளிப்பட்டிருக்கிறது.
பொதுவாக மொய்பணம் கொடுப்பது என்பது நம் பண்பாட்டில் நீண்ட நாட்;களாக இருந்து வரும் மரபே. அந்தக்காலத்தில் பணம் என்பது பொன், மற்றும் வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் வடிவத்தில் தான் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க உலோக நாணயங்களாக இருந்தன.
அதனால் மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்பு மிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததான ஒரு மன நிறைவு இருந்தது. ஆனால் நோட்டுக்கள் என்கிற ருபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. நோட்டுத் தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.
எனவே ரூபாய் தாளை மொயப்;பணமாக கொடுப்பவர் மனதில் தான் ஓர் உண்மை மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது. எனவே மொய்ப்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் உண்மை மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.
அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான்நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்த வந்தன. எனவே தான் நம் மொய்ப்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐநூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.
அது போலவே கூடுதலாக சேர்த்துக் கொடுக்கப்படும் ஒரு ரூபாய் நோட்டு தாளாக இல்லாமல் ஒரு ரூபாய் நாணயமாக தான் இருக்க வேண்டும் என்பதும் கண்டிப்பான மரபாகவும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அது போல் ஒரு ரூபாய் தட்சணையாக கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் ஒரு ரூபாய் தாளுடன் வெள்ளியிலான கால் ரூபாயும் சேர்த்துக் கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்தது.

வெள்ளி, 27 நவம்பர், 2015

வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல்

(14596) சங்கடம் என்ற வட மொழி சொல்லுக்குரிய தமிழ் மொழி சொல் எது?
இக்கட்டு, தொல்லை

(14597) சங்கதி என்ற வட மொழி சொல்லுக்குரிய தமிழ் மொழி சொல் எது?
செய்தி

(14598) சங்கோஜம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
கூச்சம்

(14599) சதம் என்ற வடமொழி சொல் லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
நூறு

(14600) சதா என்ற வடமொழி சொல் லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
எப்பொழுதும்

(14601) சதி என்ற வடமொழி சொல் லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
- சு+ழ்ச்சி

(14602) சத்தம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
ஓசை, ஒலி

(14603) சந்தானம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
மகப்பேறு

(14604) சந்தேகம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
ஐயம்

(14605) சந்தோ'ம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
மகிழ்ச்சி

(14606) சபதம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
சு+ளுரை

(14607) சம்சாரம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
மனைவி

(14608) சம்பந்தம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? தொடர்பு

(14609) சம்பவம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
நிகழ்ச்சி

(14610) சம்பாதி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
ஈட்டு, பொருளீட்டு

(14611) சம்பிரதாயம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
மரபு

(14612) சம்மதி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது?
ஒப்புக்கொள்
(14585) பஞ்ச கோசங்களும் எவை?

அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய
கோசம், விஞ்ஞானமய கோசம்.

(14586) பஞ்ச காவ்யங்களும்; (பசு) எவை?

பால், தயிர், நெய், கோமியம், சாணம்.

(14587) பஞ்ச லோகங்களும் எவை?

தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.

(14588) பஞ்ச ஜPவநதிகளும் எவை?

ஜPலம், ரவி, சட்லெட்ஜ் , பீஸ்(பீயாஸ்), ரசனாப்.

(14589) பஞ்ச மாலைகளும் எவை?

இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.

(14590) பஞ்சமா யக்ஞங்களும் எவை?

பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பு+த யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.

(14591) பஞ்ச ரத்தினங்களும் எவை?

வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

(14592) பஞ்ச தந்திரங்களும் எவை?

மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.

(14593) பஞ்ச வர்ணங்களும் எவை?

வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

(14594) பஞ்ச ஈஸ்வரர்களும் யார்?

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன்

(14595) பஞ்ச சுத்திகளும் எவை?

ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.
(14571) வேலவனின் வேறு பெயராகிய சுப்ரமணியன் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.


(14572) வேலவனின் வேறு பெயராகிய வள்ளற்பெருமான் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

(14573) வேலவனின் வேறு பெயராகிய மயில்வாகனன் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

(14574) பஞ்ச என்றால் என்ன? ஐந்து

(14575) பஞ்சபு+தத் தலங்கள் எவை?

காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

(14576) பஞ்சலோகங்கள் எவை?

செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

(14577) பஞ்சபுராணங்களும் எவை?

தேவாரம் , திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

(14578) பஞ்சலிங்கத் தலங்களும் எவை?

அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.

(14579) பஞ்சபட்'pகள் எவை?

வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்

(14580) பஞ்ச கங்கைகள் எவை?

ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.

(14581) பஞ்சாங்கங்கள் எவை?

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.

(14581) பஞ்ச ரி'pகள் யார் யார்?

அகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர்.

(14582) பஞ்ச குமாரர்கள் யார்?

விநாயகர், முருகர், வீரபத்திரர், பைரவர், சாஸ்தா.

(14583) பஞ்ச நந்திகள் எவை?

போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி, தர்ம நந்தி.

(14584) பஞ்ச மூர்த்திகள் எவை?

விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.

(14585) பஞ்சாபஷேகங்கள் எவை?

வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பு+ரம், குங்குமப்பு+ கலந்த நீர் , கிராம்பு, கொரோசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.

 (14586) பஞ்ச பல்லவம் எவை?

அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி.

(14587) பஞ்ச இலைகள் எவை?

வில்வம், நொச்சி, விளா, துளசி, கிளுகை. (14588) பஞ்ச உற்சவங்கள் எவை?
நித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச(மாதம் இருமுறை)உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.

(14589) பஞ்ச பருவ உற்சவங்கள் எவை?

அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப்பிறப்பு.

14590) பஞ்ச சபைகள் எவை?

ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.

திங்கள், 28 செப்டம்பர், 2015

(14510) அகங்காரம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? செருக்கு

(14511) அக்கிரமம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? முறைகேடு

(14512) அசலம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? உறுப்பு

(14513) அசு+யை என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? பொறாமை

(14514) அதிபர் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? தலைவர்

(14515) அதிருப்தி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? மனக்குறை

(14516) அதிருஷ்டம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொற்கள் எவை? ஆகூழ், தற்போது

(14517) அத்தியாவசியம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? இன்றியமையாதது

(14518) அநாவசியம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? வேண்டாதது

(14519) அநேகம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? பல

(14520) அந்தரங்கம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? மறைபொருள்

(14521) அபகரி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொற்கள் எவை? பறி, கைப்பற்று

(14522)அபாயம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? இடர்
(14523) அபிப்ராயம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? கருத்து

(14524) அபிN'கம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? திருமுழுக்கு

(14525) அபு+ர்வம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? புதுமை

(14526) அமிசம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? கூறுபாடு

(14527) அயோக்கியன் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? நேர்மையற்றவன்

(14528) அர்த்தநாரி என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? உமைபாகன்

(14529) அர்த்த புஷ்டியுள்ள என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? பொருள் செறிந்த

(14530) அர்த்தம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? பொருள்

(14531) அர்த்த ஜhமம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? நள்ளிரவு

(14532) அர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? படையல்

(14533) அலங்காரம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? ஒப்பனை

(14534) அலட்சியம் என்ற வடமொழி சொல்லுக்குரிய தமிழ்மொழி சொல் எது? புறக்கணிப்பு

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

(14498) வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?
காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.
(14499) செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால் இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
(14500) கண்ணை மூடிக்கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும் போது கண்ணாரக் கண்டு வழிபடவேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில் கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.
(14501) சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே ஏன்?
சஞ்சீவி என்பது உயிர்காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
(14502) மாலை நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?
சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மாற்றத்தை செய்யக்கூடாது.
(14503) திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது?
சாம்பிராணி புகைபோட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.
(14504) கோயில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?
முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

14496) வீடுகளிலும் கடைகளிலும் அர்ஜுனனுக்காக கிருஷ்ண பகவான் தேரோட்டும் படத்தை வைக்கக்கூடாது என சிலர் கூறுகிறார்களே சரியா?
மனிதப் பிறவியே இறைவனோடு இரண்டற கலக்கவே ஏற்பட்டதாகும். அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் நம்முடைய உள்ளத்தில் உறைகிறார்.
பாரதப்போர் துவங்கும்போது உறவினர்களை அழிக்கத் தயங்கிய அர்ஜுனனுக்கு அரிய பெரிய வேதாந்த கருத்துகளை ஸ்ரீபகவத் கீதை என்று வெளிப்படுத்துகிறார்.
இந்தப் படத்தை மாட்டினால் துறவறம் கிடைத்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். துறவும், ஞானமும் நம் கைகளில் இல்லை.
இந்தப் படம் வாழ்க்கை, ஆன்மீகம் என்று சகல விஷயங்களைப் பற்றியும் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் பேசுவதாக உள்ளது. ஆகையால், இந்தப் படத்தை எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம். இந்தப் படத்தை ஒரு ஜென்மம் முழுவதும் பார்த்தாலே அது தியானமாகி ஞான பரியந்தம் வரை கொண்டுபோய் சேர்க்கும்.

14497) நெற்றியில் திருநீறு அணிவது ஏன்?
நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம்.
இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம்.
மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம்.
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.
இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

சுவாமி முருகேசு மஹரிஷியின் சமாதி தின நிகழ்வு

காயத்திரி சித்தர் சுவாமி முரு கேசு மஹரிஷி அவர் களின் 8 ஆவது சமாதி தின விசேட பிரார் த்தனை நிகழ்வுகள் அவரது சீடர் ஜோதிஷ ஆச்சாரிய குருதாசமணி சுவாமி சங்கரானந்தா மஹ ராஜ்ஜி தலைமையில் எதிர்வரும் 24ம் திகதி வியாழன் அன்று காலை 10.00 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ் வதி மண்டபத்தில் நடத்தப்படுவதற்கு குருவருளும் திருவரு
ளும் கூடியுள்ளது.
சுவாமி முருகேசு மஹரிஷியின் அருளாசியை வேண்டி விசேட யாகபூசையும் பஜனை வழிபாடுகளும் சுவாமி சங்கரானந்தா மஹராஜ்ஜியின் அருளுரையும் பேராசிரியர் டாக்டர் கருணாநிதியின் விசேட சொற்பொழிவும் இடம்பெறவுள்ளன. அதனையடுத்து மஹேஸ்வர பூசை என்று அழைக்கப்படும் அன்னதானமும் இடம்பெறும்.
அனைவரும் வருகை தந்து மஹரிஷிகளினதும் காயத்திரி அன்னையினதும் அருளாசிகளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். காயத்திரி சித்தர் சுவாமி முருகேசு மஹரிஷி ஆத்மயோக ஞான சபாவினர்.
(14498) வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?
காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

(14499) செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால் இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

(14500) கண்ணை மூடிக்கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும் போது கண்ணாரக் கண்டு வழிபடவேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில் கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

(14501) சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே ஏன்?
சஞ்சீவி என்பது உயிர்காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

(14502) மாலை நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?
சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மாற்றத்தை செய்யக்கூடாது.

(14503) திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது?
சாம்பிராணி புகைபோட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

(14504) கோயில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?
முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

06ம் வகுப்பு


(11486) அட்சர அப்பியாச ஆரம்பம் என்று அழைப்பது எதனை?
ஏடு தொடக்குதலை

(11487) மனித வாழ்வை மேம்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படும் வாழ்க்கை பண்புகளை எவ்வாறு அழைப்பர்.
விழுமியங்கள்

11488) உண்மை என்பதற்குரிய ஒத்த கருத்துள்ள சொல் எது?
மெய்ம்மை

11489) நன்கு முற்றாத தேங்காயை எவ்வாறு அழைப்பர்?
முட்டுக்காய்

11490) பதில் என்பதற்குரிய ஒத்த கருத்துள்ள சொல் எது?
மறுமொழி

11491) சம்பந்தர் எத்தனை திருமுறைகளை பாடினார்?
முதல் மூன்று திருமுறை

11492) சுந்தரமூர்த்தி எத்தனையாம் திருமுறையை படினார்?
7 ஆம் திருமுறையை

11493) திருவாசகம் எத்தனையாம் திருமுறை?
8 ஆம் திருமுறை

11494) திருப்புகழை பாடியவர் யார்?
அருணகிரிநாதர்

11485) மாவட்டபுரம் என்ற சொல்லில் “மா” என்பது எதனை குறிக்கும்?
குதிரையை

11486) இதில் “விட்ட” என்ற சொல் எதனை குறிக்கும்?
நீங்கிய

11487) “புரம்” என்ற சொல் எதனை குறிக்கும்?
இடம்

11488) மாவிட்டபுரத்தின் தலவிருட்சம் எது?
மாமரம்

11489) பால்குடம் எடுப்பது ஏன்?
ஒருவன் பால் குடம் எடுக்கிறேன் என்று பிரார்த்தனை செய்துகொண்டு அதனை செய்கின்றபோது குடத்தை சுத்தம் செய்வதுபோல தனது மனதையும் சுத்தப்படுத்துகிறான்.

அதனை பக்தியுடன் தனது சிரசின் மீது வைத்துக்கொண்டு தன்னை மறந்த நிலையில் ஆலயத்துக்கு செல்கிறான். இதனை தத்துவரீதியாக பார்க்கிறபோது குடம் என்றால் மனித சரீரம். கீழே போட்டால் குடம் உடைந்துவிடும். மனது கெட்டால் மனிதன் அழிந்து விடுவான்.
 
இப்படி பால்குடம் எடுக்கிற பக்தனுக்கு ஆண்டவனுக்காக வேண்டிக்கொண்ட பிரார்த்தனை என்ற சத்தும் அதனை சுமப்பதால் ஏற்படும் சித்தும் அபிN'கத்தால் ஏற்பட்ட திருப்தி என்ற ஆனந்தமும் கிடைக்கிறது. இது அவன் நினைத்துள்ள நல்ல எண்ணங்களை, நல்ல காரியங்களை நடத்தி வைத்துவிடுகிறது. 

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

6ஆம் வகுப்பு


(11468) மருத்து நீர் வைத்து மங்கல நீராடுவது எந்த பண்டிகையின் போது? சித்திரை புத்தாண்டு

(11469) ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்சத்துச் சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை எது?
தீபாவளி

(11470) கிருஷ்ண பகவான் அழித்த அசுரனின் பெயர் என்ன?
நரகாசுரன்

(11471) நாகராசுரனை கிருஷ்ண பகவான் அழித்த தினத்தை எந்த பண்டிகையில் கொண்டாடுகிறார்கள்?
தீபாவளி

(11472) திருக்கார்த்திகை விரதம் எந்த தெய்வத்துக்குரிய விரதம்?
முருகன்

(11473) வெள்ளிக்கிழமை எந்த கடவுள்ளுக்காக விரதமிருப்பர்?
முருகனுக்கு

(11474) சுக்கிரவார விரதம் எந்த கடவுளுக்குரியது?
சக்தி

(11475) கேதாரகெளரி விரதம் எந்த கடவுளுக்குரியது?
சிவன்

(11476) பிரதோஷ விரதம் எந்த கடவுளுக்குரியது?
சிவன்

(11477) மஹா நவமி விரதம் எந்த கடவுளுக்குரியது?
விஷ்ணு

(11478) தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் இவை ஐந்தையும் என்னவென்று கூறுவார்கள்?
பஞ்சபுராணம்

(11479) பஞ்சபுராணத்தை ஓதும் போது முதலில் சொல்ல வேண்டியது என்ன? திருச்சிற்றம்பலம்

(11480) பஞ்சபுராணத்தை ஓதியபின் பாடப்படுவது என்ன?
திருப்புகழ்

(11481) கர்ண வேதனம் என்று அழைப்பது எதனை?
காது குத்தலை

(11482) நாமகரணம் என்றால் என்ன?
பெயர் சூட்டுதல்

(11483) குழந்தை பிறந்து எத்தனையாம் நாளில் துடக்கு கழிக்கப்படும்?
31 ஆம் நாள்

(11484) காது குத்துவதற்கு சிறப்பான நாள் எது?
தைப்பூசம்

(11485) அன்னப் பிரசனம் என அழைப்பது எதனை?
சோறூட்டலை

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ காளியம்மன் ஆலயம்

இன்று கொழும்பு வெள்ள வத்தை மயூராபதி என்று அழைக்கப்படும் இடத்தில் அதாவது 1880 ஆம் ஆண்டுக்கும் 1890 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நெசவாலை ஒன்று அமைக்கப்பட்டது. அது அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட காலம் இந்த நெசவாலையை தனியார் நிறுவன மொன்று ஆரம்பித்து. அன்றைய காலகட்டத்தில் நெசவுத் தொழிலா னது இலங்கைக்கு புதிய தொழிலாக இருந்து.

எனவே இந்த நெசவாலை யில் வேலை செய்யக்கூடிய அனு பவசாலிகள் எவரும் இலங்கையில் இருக்கவில்லை. இதனால் இலங் கையில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியாவிலி ருந்து தொழிலாளர்களை அழைத்து வந்ததுபோல் இந்த நெசவாலையில் வேலை செய்வதற்கும் தமிழகத்தி லும் கேரளாவிலும் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப் பட்டனர்.

அந்த தொழிலாளர்கள் குடியிருப்பதற்காக இந்தப் பகுதியில் தொடர் மாடி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டன. அங்கு குடி யேறிய மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை இங்கும் தொடர விரும்பினார்கள். அதற்கமைய அந்த தொடர் குடியிருப்புகளுக்கு மத்தியில் வழிபாட்டுக்காக ஒரு மண்டபம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அங்கு காத்தல் கடவுளாகிய திருமாலின் அவதாரமாகத் திகழும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் அமைக்கப்பட்டது.

அந்த ஆலயத்திற்கு முன் நின்ற இரு அரச மரங்களுக்கும் வேப்ப மரத்துக்கும் இடையில் சூலாயுதத்தை வைத்து அன்னை காளிகா அம்பாளாக வழிபடத் தொடங்கினார்கள். கால சுழற்சிக்கு ஏற்ப அரச மரமும் வேப்ப மரமும் ஓங்கி வளர்ந்தது போல் ஆதிமூலமாகிய நாராயணனினதும் அவரின் தங்கை என கருதப்படும் அன்னை காளிகா அம்பாளின் அருள் மகிமையாலும் இவ்வாலயம் வளர்ச்சி பெற்று வந்தது.

அன்னையின் பல்வேறு வடிவங் களில் அகோர வடிவமும் ஒன்று அன்பே உருவாக அமைதியாக சாந்தமாக இருந்து அருள்பாலித்து வரும் அம்பாள் அசுரர்களிடமிருந்து தேவர்களை காப்பாற்றவும் தீயவர்கள் கொடியவர்களிடமிருந்து பக்தர்களை காப்பாற்றவும் அகோர வடிவம் கொண்டாள். அவ்வாறு அகோர வடிவம் கொண்ட அன்னையவளைத் தான் காளிகாம்பாள் என அழைக்கி ன்றனர். எனவே இந்த அன்னையை சாந்தப்படுத்தும் முகமாகவே ஆண்டு தோறும் ஆவணி மாதம் குளிர்ந்த உணவமுதினையும் கனியமுதங்க ளையும் படைத்து பூஜை செய்து வந்தனர். இதனை குளிர்க்கஞ்சி வைபவம் என்று அழைத்தனர்.
இன்று தாலி வரம் வேண்டி, குழந்தை வரம் வேண்டி பேதி, அம்மை போன்ற நோய் நொடிகள் தீர வேண்டி தமது எண்ணங்கள் ஈடேற வேண்டி நேர்த்தி வைத்து வழிபட்டு வருவது போல் அன்று அம்மை, பேதி நோய்களிலிருந்து தம்மை காக்கும் படி பக்தர்கள் வேண்டி வந்தனர்.
காலப் போக்கிலே இந்த நெசவா லையில் இங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பாலும் சேர்க்கப்பட்டதால், நெசவாலை ஆரம்பிக்கப்பட்ட காலத் தில் தொழிலுக்காக அக்கறையிலிருந்து கடல் கடந்து அழைத்து வரப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்களது சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவர்கள் இடம்பெயர்ந்து குடியிருப் புகளை விட்டுவிட்டு சென்றதால் அதுவரை காலமும் அவர்கள் வாழ்ந்து வந்த குடியிருப்புகள் அனைத்தும் உடைத்து அகற்றப்பட்டன.
அந்த குடியிருப்புக்கள் இருந்த இடத்தில் இரட்டை மாடி வீடுகள் அமைக்கப்பட்டன. அந்த மாடி வீட்டிலே இருந்த ஓர் அறைக்கு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம் கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு ஓர் அறைக்குள் இயங் கத் தொடங்கிய ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தை ஏகாம்பரம் என்று கங்காணி தலைமை தாங்கி நிர்வகித்து வந்தார்.
அவருக்குப் பின் இந்த ஆலயத்தின் பரிபாலன நடவடிக்கைகள் அனைத் தும் இரத்தின வேலு முதலியார் வசம் வந்தது. இவர்கள் இருவரினதும் நிர்வாகத்திற் குப் பின் இவ்வால யத்தை பரிபாலிக்கும் பொறுப்பு சிவப்பிர காசம் பேராயிரம் உடையா ரிடம் ஒப்படைக்கப்பட்டது. அம்பா ளின் அருள் மகிமையால் இவரது தலைமையில் ஆலயத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பயனாக ஆலயத்தில் சமயப் பணி களும் சமூகப் பணிகளும் துளிர்விட்டு தளிர்க்கத் தொடங்கின. இவ்வாறே இவ்வாலயத்தில் வருடந்தோறும் சிவராத்திரி விழா சிறப்பாக நடந்தேறத் தொடங்கின.
ஆலய பணிகளில் இவ்வாறு அளவிடற்கரிய அம்சங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகையில் ஈ. பி. சுப்பிரமணியம் என்பவரின் பரிபாலனத்தின் கீழ் இவ்வாலயம் புதுப்பொழிவு பெறத் தொடங்கியது. 1977 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் ஆதரவோடு ஆலயத் திற்கென மண்டபமொன்று அமைக் கப்பட்டது. இம் மண்டபம் அமைந்த பின் வருடாந்தம் நடைபெற்று வந்த சிவாரத்திரி விழா மென்மேலும் சிறப் பாக நடந்தேறி வந்தது குறிப்பிடத் தக்கது. 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையில் அந்த மண்ட பத்திலே தான் ஆலய வழிபாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்தன.
1980 ஆம் ஆண்டு இங்கு புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டது. அப்போது ஆலயம் முதன் முதலில் எங்கு அமைந்திருந்ததோ அதே அரச மரத்திற்கு அருகில் மீண்டும் ஆலயம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஆலயத்திற்கென 4 x 34 x 5 1/2 அடி இடத்தில் மடமொன்று அமைக்கப்பட்டது. இதில் வேறு மதத்தினரின் மதஸ்தானமொன்று அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடந்தன.
திரைமறைவில் நடக்கின்ற அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்தையும் வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்து கருவறுக்கக் கூடியவள் அல்லவா இந்த காளிகாம்பாள் இரவோடு இரவாக அம்பாள் தரி சனம் தரத் தொடங்கினாள். இதன் விளைவாக அவர்களது எண்ணங்கள் அனைத்தும் முயற்சிகள் அனைத்தும் ஈடேறாமல் தவிடு பொடியாகின.
அரச மரத்தடியில் சூட்சும வடிவில் சூலாயுதமாக நின்று அருள் மழை சுரந்த அம்பாள் அன்று தொடக்கம் திருவுருவாய் காட்சிதரத் தொடங் கினாள். அம்பாளின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் இவ் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய் யப்பட்டு 48 நாட்கள் மண்டலா பிஷேகமும் செய்யப்பட்டது.
மண்டலாபிஷேக பூர்த்தி தினத்தன்று அம்பாளுக்கு சங்காபிஷேகம் செய்யப் பட்டதுடன் அம்பாள் சர்வ அலங்கார நாயகியாக வண்ணமிகு இரதத்தில் ஏறி வெளி வீதியுலா வந்து அருள் பாலித்தார்.
1983 ஆம் ஆண்டு நாட்டில் பாரிய கலவரம் வெடித்த போதும் இவ்வாலயத்துக்கு கடுகளவேனும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால் ஆலயத்தைத் தவறான பாதையில் இட்டுச்செல்ல பலரும் பல்வேறு முயற்சிகளை செய்த போதும் அவை ஒன்றும் ஈடேறாமல் விடவே புதிய பரிபாலன சபை யொன்று ஸ்தாபிக் கப்பட்டு தொடர்ந்து ஆலய சடங்குகள் இடையூறின்றி நடத்தப்பட்டு வந்தது.
எனினும் ஆலய உடைமைகளும் ஆலயத்துக்குரித்தான உரிமை ஆண வங்களும் கைமாறியிருந்தன. அவற்றை மீட்டெடுப்பதற்கு பெரும் போராட்டம் நடத்தவேண்டிய சூழ் நிலை இருந்தது. அவற்றை மீட்டபின் மரத்தடி ஆலயமாக இருந்த இந்த மடாலயத்தை மணிமண்டப ஆலய மாக கட்டியெழுப் புவதற்கான திருப் பணிகளை மேற்கொள்ள திருப்பணிச் சபையொன்று உருவாக்கப்பட்டது.
இவ்வாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்ட போது அம்பாள் எவ்வாறு குடிகொண்டு அருள் பொழியத் தொடங்கினாளோ அதே முறையில் ஆலயம் அமைக்கப்பட்ட துடன், ஆரம்பத்தில் இங்கு வைத்து வணங்கப்பட்ட வந்த பிள்ளையார், லிங்கம், வேலாயுதம் ஆகிய பரிவார மூர்த்தங்கள் அனைத்தும் மீளப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1987.03.22 ஆம் திகதி பாலஸ்தானம் செய்யப் பட்டு திருப்பணி வேலைகள் செய் யப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிள்ளையார், பத்திரகாளி.
சிவன், நாகதம்பிரான், இவ் ஆலயத்திலே இருந்த புராதன அம்பாள், நவக்கிரகம் ஆகிய மூர்த் தங்களை அமைக்க எண்ணி அந்த இடங்களில் அவற்றை அமைக்க இடவசதி போதாமையால் அரச மரத்தைச் சுற்றி இந்த பரிவார மூர்த்தங்களின் சந்நிதானங்கள் அமைக்கப்பட்டு இனிதே கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது.
அரச மரமும் வேப்ப மரமும் பின் னிப்பிணைந்து இந்த அம்பாளுக்கு நிழலாக குடை பிடித்து அருள் சுரந்துகொண்டிருப்பதால் இந்த ஆலயத்தை நாடிவருகின்ற பக்தர் களுக்கு அருள்மழை பொழிகின்ற அம்பாள் அந்த அடியார்களின் அனைத்து குறைகளையும் அதாவது குழந்தைப் பேறு, திருமணப் பேறு, தொழில் வாய்ப்பு, கல்வியில் பாண்டித்தியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அடியார்களின் குறைகளை தீர்த்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

(11453) தேங்காயைத் துருவலாகப் படைப்பது எங்கே?


 ஸ்ரீரங்கத்தில் 

இங்கு தேங்காயை ஏன் துருவலாகப் படைக்கிறார்கள்?
ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்துவிடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

(11454) வீட்டில் நிலைப்படியில் யார் இருப்பதாக ஐதீகம்?
மகாலட்சுமி

(11455) வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது ஏன்?
வீட்டில் நிலைப்படியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். அதனால் தலைவாசலில் மங்கலகரமாக மாவிலைத் தோரணம் கட்டுவர். இதற்கான காரணம் ஒன்று உண்டு. வீட்டில் வாக்தேவதை என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்.
நன்மை தரும் சுபவார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிடும். ஆனால் மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும்.

(11456) அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்?
மலையில் ஏறும்போதும் கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும் நமது இரத்தத்தில் ஒட்சிசன்; கலக்கிறது.

(11457) இந்த ஒட்சிசன் என்ன செய்கிறது?
இது ஹீமோகுளோபின் என்னும் இரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில், மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது.

(11458) இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது ஏன்?
இது எப்படி என்றால் மேலே குறிப்பிட்ட கோயில்களுக்கு அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

வியாழன், 23 ஜூலை, 2015

கொழும்பில் ஆடி வேல் விழா

கொ ழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இவ் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வரன் பூஜையுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து குமாரசுவாமிக்கும் விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு உள்வீதி உலாவுடன் சுவாமி காலை 7.30 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி நகர் பவனி வந்து அருள் பாலிப் பார்.
முதலாம் குறுக்குத் தெரு தேவஸ்தானத்தி லிருந்து மூத்த மன்னடியார் கார்த்திக் குழுவினரின் கேரளா பாலக்காட்டு கொச்சி மேளத்துடன் தேர் நகர் பவனி ஆரம்பமாகி பிரதான வீதி, கோட்டை யோர்க் வீதி, ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். காலி முகத்திடலில் பக்தர்களுக்கு திருவமுது ஜேராஜனம் வழங்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு காலி முகத்திடலில் இருந்து மீண்டும் தேர்பவனி ஆரம்பமாகும்.
இத்தேர் பவனி காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடையும். அதன் பின் பக்தர்களுக்கு திருவமுது அளிக்கப்படும்.
பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இருந்து அருள்பலிக்கும் சுவாமிக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 5 மணிக்கு வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடத்தப்படும். அன்று காலை 11.30 மணிக்கு வேல விழா விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதத்துடன் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் விழா அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவான் கலை மாமணி ராஜேஷ் வைத்தியா குழுவினரின் வீணை இசைக் கச்சேரி நடைபெறும். எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு வழமையான பூஜையுடன் வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சவாமியின் மயில்வாகனக் காட்சியும் ஆடிவேல் அச்சர்னையும் நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் விபூதிப் பிரசாதத் துடன் நண்பகல் 12 மணிக்கு அன்னதா னம் வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும்.
எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பெளர்ணமி தினம் என்பதா ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகம் அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகர் குருமண்டலம் வீரமணிதாசனம் தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் இணைந்து வழங்கும் பக்தி இன்னிசைக் கச்சேரி இடம்பெறும். யாரோ ராஜா இசைக்குழுவின் இந்த இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
எதிர்வரும் 2015.08.01 ஆம் திகதி காலை 7 மணிக்குவழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை இடம்பெறும். அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறும்விசேட பூஜையுடன் 12 மணிக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும்.

சைவ முன்னேற்றச் சங்க கதிர்காம வேல்பூஜை

கொழும்பு 02, கியூ விதி, 101/ 70 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 13வது ஆண்டாக நடத்தும் புனித கதிர்காம வேல்பூஜை திருவிழா கடந்த (17) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.
இந்த பூஜை வழிபாடுகள் தினமும் மாலை 6 மணி முதல் 8 மணிவரை எதிர்வரும் 29 ஆம் திகதி தொடர்ந்து நடைபெறும். மாலை அணிந்து விரதமிருக்கும் அடியார்களின் அபிஷேகம் ஆராதனைகள் அருள்மிகு பஜனை, சிறப்புச் சொற்பொழிவு என்பன இங்கு இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 29ஆம் திகதி இரவு 9 மணிக்கு புனித கதிர்காம யாத்திரை ஆரம்பமாகும். எதிர்வரும் 30ஆம் திகதி திஸ்ஸமஹாராம வழிப்பிள்ளையாரை வழிபட்டு செல்வக்கதிகாமம் நேர்த்தி பாதயாத்திரை இடம்பெறும். அன்று பகல் செல்லத்துப் பிள்ளையார் சந்நிதானத்தில் பொங்கல் வைக்கப்படும்.
31ம் திகதி காலை இடம் பெறும் கதிரைமலை தரிசனத்தைத் தொடர்ந்து அன்று மாலை பெரிய கோயில் முன்னால் ஆனந்த மிக பஜனை இடம்பெறும். எதிர்வரும் 2015-08-01 ஆம் திகதி காலை மாணிக்ககங்கையில் வெற்றி வேலுடன் புனித தீர்த்தமாடல் இடம்பெறும். அன்று மாலை சங்கு மண்டபத்தில் இடும்பன் பூஜை இடம்பெறும் என பெருமாள் பூமிநாதன் குருசாமி தெரிவித்தார்.

சைவ வைணவ சிற்பங்கள்



கே. ஈஸ்வரலிங்கம்

11443) சிந்தனையின் வெளிப்பாட்டு வடிவங்களின் ஆறு நிலைகளைக் குறிப்பிடவும்.
சிந்தனை வடிவம்,
சொல் வடிவம்,
எழுத்து வடிவம்,
ஓவிய வடிவம்,
புடைசிற்ப வடிவம்,
சிற்ப வடிவம்.
11444) சைவ வைணவ சிற்பங்கள் வழி விளக்க முற்பட்ட பொதுவான கருத்து என்ன?
கடவுள் மனித உருவெடுத்து இவ்வுலகிற்கு வந்து தன்னையே பலியாகக் கொடுத்தார் என்னும் கருத்தை சாதாரண பொது மக்கள் விளங்கிக் கொள்வதற்காக சிற்பங்கள் வழி விளக்க முயன்றன.
11445) சைவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரை இணைத்துக் காட்டும் உருவத்திற்கு என்ன பெயர்?
சோமாஸ்கந்தர்
11446) வைணவ நோக்கில் சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்திருக்கும் உருவத்திற்கு என்ன பெயர்?
மும்மூர்த்தி
11447) கடவுள் ஒருவரே ஆனால் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றார் என்பதைக் காட்டும் உருவங்களின் பெயர்கள் என்னென்ன?
அர்த்தநாரீஸ்வரர்- ஹரிஹரா
11448) அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர் ஆகிய இவை இரண்டும் எதை விளக்குகின்றன?
அர்த்தநாரீஸ்வரர். ஹரிஹரர் ஆகிய இரண்டு உருவங்களில் சிவனுக்கு இடப்பகுதியில் உள்ள இருவரும் (சக்தியும், விஷ்ணுவும்) பரிசுத்த ஆவியானவரின் பெண், ஆண் உருவகங்களே என்பதை விளக்குகின்றன.
11449) சிவனின் உடம்பின் இடப்பாகம் பெண் வடிவாக (சக்தி) விவரிக்கப்பட்டால் அது எவ்வாறு குறிக்கப்படுகிறது.
அர்த்த நாரீஸ்வரர்
11450) சிவனின் உடம்பின் இடப்பாகம் ஆண் வடிவாக (விஷ்ணு) விவரிக்கப்பட்டால் அது எவ்வாறு குறிக்கப்படுகிறது?
அரிஅரன் எனப்படும்
114451) சிவனுடைய உடம்பின் இடதுபாதி ஆண்வடிவமாகவும் மறுபாதி பெண் வடிவமாகவும் சித்தரிக்கப்படுவது எதை விளக்குகிறது?
அன்பே உருவான பிதாவாகிய கடவுளாம் சிவனின் உடம்பின் இடப்பாகம் பரிசுத்த ஆவியை இரண்டு நோக்கில் சித்தரிக்கும் உருவக நிலையைக் காட்டுகிறது.
அதாவது பிதாவாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் (பெண் நிலை) முதலியவை சைவ நோக்கில் அர்த்தநாரீஸ்வரராக விளக்கப்பட்டுள்ளது.
பிதாவாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் (ஆண் நிலை) ஆகியவை வைணவ நோக்கில் அரிஅரனாக விளக்கப்பட்டுள்ளது.
11452) மூன்று தலைகள் - ஒரே உடல் உள்ள சிவன் உருவம் மூலம் விளக்கப்படுகின்ற கருத்து என்ன?
சிவன், சக்தி. குமரக்கடவுள் - சிவன், விஷ்ணு, பிரமன் எனப் பல்வேறு முறைகளில் கடவுள் மூன்று வித்தியாசமான ஆள தத்துவமாகக் காணப்பட்ட போதிலும். அவர் மூவரல்லர்- மூன்று ஆள்தத்துவமுடைய ஒரே கடவுளே ஆவார். என்பதையே மேற்கண்டவை காட்டுகின்றன.

திங்கள், 6 ஜூலை, 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11404) பஞ்ச உற்சவம் எவை?
நித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச (மாதம் இருமுறை) உற்சவம், மாதாந்த உற்சவம், வருடாந்த உற்சவம்

11405) பஞ்ச பருவ உற்சவம் எவை?
அமாவாசை, பெளர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப் பிறப்பு.

11406) பஞ்ச சபைகள் எவை?
இரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை,

11407) பஞ்ச ஆரண்யம் எவை?
உஷத் காலம், கால சாந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

11408) பஞ்ச முகங்கள் (சிவன்) எவை?
தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம்

11409) பஞ்ச முகங்கள் (காயத்திரி) எவை?
பிரம்மன், விஷ்ணு, சதாசிவன். ருத்ரன். ஈஸ்வரன்

11410) பஞ்ச மாலைகள் எவை?
இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்

11411) பஞ்சமா யக்ஞம் எவை?
பிரம்ம யக்ஞம். பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்
.
11412) பஞ்ச ரத்தினங்கள் எவை?
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்

11413) பஞ்ச தந்திரங்கள் எவை?
மித்ரபேதம். சுகிர்லாபம். சந்திரவிக்ரஹம், லப்தகானி. அசம்ரேசிய காரித்வலம்.

11414) பஞ்ச வர்ணங்கள் எவை?
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11415) பஞ்ச ஈஸ்வரர்கள் யார்?
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன்

11416) பஞ்ச கன்னியர்கள் யார்?
அகலிகை, திரெளபதி, சீதை, மண்டோதரி, தாரை

11417) பஞ்ச பாண்டவர்கள் யார்?
தர்மன். அர்ச்சுனன். பீமன், சகாதேவன், நகுலன்

11418) பஞ்ச ஹோமங்கள் எவை?
கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்

11419) பஞ்ச சுத்திகள் எவை?
ஆத்ம சுத்தி, ஞ்தாபன சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.

11420) பஞ்ச கோசம் எவை?
அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.

11421) பஞ்ச காவ்யம் (பசு) எவை?
பால், தயிர், நெய், கோமயம், சாணம்

11422) பஞ்ச ஜீவநதிகள் எவை?
ஜீலம், ரவி, சட்லெட்ஜ். பீஸ் (பீயாஸ்), இரசனாப்.

புதன், 1 ஜூலை, 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11393) பஞ்சலிங்கத் தலம் எவை?
அர்கேசுவரர் லிங்கத் தலம், பாதாளேஸ்வரர் லிங்கத் தலம், மரனேஸ்வரர் லிங்கத் தலம், மல்லிகார்ச்சுனர் லிங்கத் தலம், வைத்திய நாதேஸ்வரர் லிங்கத் தலம்.
11394) பஞ்சபட்ஷிகள் எவை?
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்
11395) பஞ்ச கங்கை எவை?
ரத்தின கங்கை, தேவ கங்கை, கையிலாய கங்கை, உத்திர கங்கை, பிரம்ம கங்கை
11396) பஞ்சாங்கம் எவை?
திதி, வாரம், நட்சத்திரம், யோகம். கரணம்
11397) பஞ்சர ரிஷிகள் எவை?
அகத்தியர். புலஸ்தியர். துர்வாசர், ததீசி, வசிஷ்டர்
11398) பஞ்ச குமாரர்கள் எவை?
விநாயகர், முருகர். வீரபத்திரர், பைரவர், சாஸ்தா
11399) பஞ்ச நந்திகள் எவை?
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி
11400) பஞ்ச மூர்த்திகள் எவை?
விநாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு
11401) பஞ்சாபிஷேகம் எவை?
வில்வ இலை கலந்த நீர், இரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர், கிராம்பு, கொரேசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.
11402) பஞ்ச பல்லவம் எவை?
அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி
11403) பஞ்ச இலைகள் எவை?
வில்வம், நொச்சி, விளா. துளசி, கிளுகை

பனை

தொல்காப்பியத்தில் ஒரு பொருளை பெரிதாக சொல்வதற்கு 'பனையளவு' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளை தினையளவு என்றும் பெரிய பொருளை பனையளவு என்றும் ஒப்பிட்டனர்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104வது குறள், பொருட்பாலில் 433வது குறள், இன்பத்துபாலில் 1282வது குறள்களில் பனை என்று வருகிறது. 'கள் உண்ணாமை' என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில் தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில் பனையை பனம்புல் என்றும் தென்னையை தென்னம்புல் என்றும் கூறியுள்ளனர். வெளியே காழ்த்து (கெட்டியாகி) உள்ளே சோறு போல மென்மையாக இருந்தால் அது புல். அதனால் பனம்புல். வெளியே மென்மையாகவும், உள்ளே வைரம் போல உறுதியாகவும் இருந்தால் அது மரம். அதனால் வேம்புவை மரம் என்கிறோம்.

புதன், 24 ஜூன், 2015


தேர்தல் இடாப்புகளை தமிழில் வெளியிட திணைக்களம் நடவடிக்கை எடுக்காதா?


அரசியல்வாதிகள் பெற்றோருக்கு உதவ வேண்டும்

2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள் வதற்கு தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வதற்காக கடந்த ஐந்தாண்டு கால தேர்தல் இடாப்பில் தமது பெயர். தேர்தல் தொகுதி> கிராம சேவகர் பிரிவு ஆகிய விபர ங்களை இணைத்து அனுப்பும்படி கோரப்பட்டுள்ளது.
அதாவது 2010ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை உள்ள விபரங் களை இணைத்து அனுப்பும்படி கோரப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இராஜகிரியில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் இந்த விபரங்களை பெற்றுக் கொள்ள பெற்றோர்கள் பெருமளவில் வருகின்றனர். தேர்தல் திணைக்களத்தில் இதற்குரிய விண்ணப்பப்படிவம் வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தாங்களாகவே பார்த்து அந்தந்த ஆண்டுக்குரிய விபரங்களை எழுதி பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இங்கு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான அனைத்து வாக்காளர் இடாப்புகளும் தனிச் சிங்களத்திலேயே உள்ளன. இந்த விவரங்களை பெற வருகின்ற பெற்றோர்கள் மத்தியில் சிங்களமொழி எழுதஇ வாசிக் கத் தெரியாதவர்களும் இருக்கின்றார்கள். இங்கு இவர்கள் படுகின்ற பாடு பெரும்பாடாக உள்ளது.
தேர்தல் திணைக்களம் தமிழ் மொழியில் தேர்தல் இடாப்புகளை தயாரிக்க இன்னும் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று தெரிய வில்லை. எவ்வளவோ தொழில் நுட்பங்கள் வளர்ந்து எல்லாம் கணனி மயமாகிவிட்ட இந்த கால கட்டத்தில் மக்கள் இவ்வாறு புத்தகங்களை புரட்டி தேடி கஷ்டப்பட மேண்டுமா? இவற்றை இலகுவாக பெறுவதற்குரிய எளிய நடவடிக்கை முறையொன்றை தேர்தல் திணைக்களம் அறி முகப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கூடாதா?
தேர்தல் காலங்கள் நெருங்கும் போது வாக்கு வேட்டையாட வீடு வீடாக தேர்தல் இடாப்புகளை சுமந்து வரும் அரசியல் வாதிகளாவதுஇ தமது கட்சி அலுவலங்களில் இந்த வாக்காளர்கள் இடாப்புகளை வைத்து பொது மக்களுக்கு உதவி செய்ய நடவடி க்கை எடுக்கக் கூடாதா?
தமிழர் நற்பணி மன்றம்

செவ்வாய், 23 ஜூன், 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11385) பஞ்ச குமாரர்கள் எவை?
விநாயகர், முருகர். வீரபத்திரர், பைரவர், சாஸ்தா

11386) பஞ்ச நந்திகள் எவை?
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி

11387) பஞ்ச மூர்த்திகள் எவை?
விநாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு

11388) பஞ்சாபிஷேகம் எவை?
வில்வ இலை கலந்த நீர், இரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர், கிராம்பு, கொரேசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம். 

11389) பஞ்ச என்றால் என்ன?
ஐந்து

11390) பஞ்சபூதத் தலங்கள் எவை?
காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல். திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

11391) பஞ்ச உலோகங்கள் எவை?
செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

11392) பஞ்ச புராணம் எவை?
தேவாரம். திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

செவ்வாய், 16 ஜூன், 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11376) பஞ்ச என்றால் என்ன? 
 ஐந்து

11377) பஞ்சபூதத் தலங்கள் எவை?
காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல். திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

11378) பஞ்ச உலோகங்கள் எவை?
செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

11379) பஞ்ச புராணம் எவை?
தேவாரம். திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

11380) பஞ்சலிங்கத் தலம் எவை?
அர்கேசுவரர் லிங்கத் தலம், பாதாளேஸ்வரர் லிங்கத் தலம், மரனேஸ்வரர் லிங்கத் தலம், மல்லிகார்ச்சுனர் லிங்கத் தலம், வைத்திய நாதேஸ்வரர் லிங்கத் தலம்.

11381) பஞ்சபட்ஷிகள் எவை?
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்

11382) பஞ்ச கங்கை எவை?
ரத்தின கங்கை, தேவ கங்கை, கையிலாய கங்கை, உத்திர கங்கை, பிரம்ம கங்கை

11383) பஞ்சாங்கம் எவை?
திதி, வாரம், நட்சத்திரம், யோகம். கரணம்

11384) பஞ்சர ரிஷிகள் எவை?
அகத்தியர். புலஸ்தியர். துர்வாசர், ததீசி, வசிஷ்டர்

செவ்வாய், 9 ஜூன், 2015

பூக்களை மொய்க்கும் வண்டுகள் போல் - நல்ல
பாக்களை ரசிக்கும் உள்ளங்கள் உள்ளவரை
தமிழும் வளரும் தமிழ் கலையும் வளரும்

திங்கள், 8 ஜூன், 2015

திருமணத்தின் ஏழு அடிகள்

(11362) திருமணத்தின்போது அக்னியை சுற்றி எத்தனை அடிகள் நடப்பார்கள்? ஏழு அடிகள். (11363) சம்ஸ்கிருதத்தில் இதை என்ன என்று கூறுவார்கள்? சப்தபதி. (11364) ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்? ஏழு அடிகள் நடக்கும்போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று தனது பிராத்தனையைச் சொல்கிறான். (11365) முதல் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? பஞ்சமில்லாமல் வாழ வேண்டும். (11366) இரண்டாம் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? ஆரோக்கியமாக வாழ வேண்டும். (11367) மூன்றாம் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும். (11368) நான்காவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும். (11369) ஐந்தாவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெறவேண்டு. (11370) ஆறாவது அடியில் என்ன பிராத்தனையை சொல்கிறான்? நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடரவேண்டும். (11371) ஏழாவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? தர்மங்கள் நிலைக்க வேண்டும். (11372) இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் என்ன நடக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது? அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும். (11373) நாம் வீதியில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவருடன் சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் என்ன நடக்கும்? ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டு விடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். (11374) இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் என்ன நடக்கும்? இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷயமமான விஷயம். (11375) இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இந்து தர்மத்தில் என்ன செய்தார்கள்? அதை ஒரு சம்பிரதாயமாக வைத்தார்கள்.

செவ்வாய், 2 ஜூன், 2015

(11358) விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக்கூடாது?

“விரதம்” என்ற சொல்லுக்கு ‘கஷ்டப்பட்டு இருத்தல்’ என்று பொருள். நாள் முழுக்க தெய்வ சிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது “விரதம்”. “பசி” என்ற நினைப்பு வரும்போதெல்லாம் ‘தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம்’ என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் விரதத்திற்கு “உபவாசம்” (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால்,. பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம். (11359) தாரக மந்திரம் என்றால் என்ன? ‘தாரக’ என்ற சொல்லுக்கு நுண்ணிய, நுட்பமான, உயர்ந்த என்று பொருளுண்டு. இறைவனுடைய திருநாமத்தை அதற்குரிய பீஜாட்சர மந்திரத்துடன் சேர்த்து உச்சரித்தால் சக்தி அதிகம். உடனடியாக பலன் கிடைக்கும். இத்தகைய உயர்ந்த மந்திரத்தையே ‘தாரகமந்திரம்’ என்பர். இவற்றைப் புத்தகத்தைப் பார்த்துப் படித்து ஜெபிக்கக் கூடாது. உச்சரிப்பு பிழை ஏற்பட்டால் எதிர்மறை பலன்கள் ஏற்படும். தெரிந்தவர்களிடம் முறையாக கற்று உச்சரிப்பது நல்லது. ராமநாமத்திற்கு தாரகமந்திரம் என்றொரு பெயர் உண்டு. (11360) அமாவாசையில் சுப நிகழ்ச்சி நடத்தலாமா? அமாவாசை பிதுர் வழிபாட்டுக்குரிய நாள். ஆனால், நிறை அமாவாசை என்று பலரும் சுப நிகழ்ச்சி நடத்துகின்றனர். அவரவர் குடும்பப் பெரியவர்கள் அமாவாசையில் சுப நிகழ்ச்சி நடத்தியதாகவும் சொல்கின்றனர். அமாவாசை, பிரதமை ஆகிய இரு திதிகளும் முடிந்த பிறகு, வளர்பிறை துவிதியை முதல் சுப நிகழ்ச்சி நடத்துவதே நல்லது. (11361) எவர் சில்வர் விளக்கில் தீபம் ஏற்றலாமா? கூடாது. மண் அகல், வெண்கலம், வெள்ளி, தங்கம் இவற் றினால் ஆன விளக்குகளில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். இரும்பு உலோகம் பூஜை சம்பந்தமான விஷயங்களில் கூடாது. எவர் சில்வர் இரும்பிலிருந்து தயாரிக்கப்படுவதால் இவ்விளக்குகள் விலக்கத்தக்கன.

திங்கள், 25 மே, 2015

(11349) வி என்றால் என்ன?

பட்சி (மயில்) (11350) சாகன் என்றால் என்ன? சஞ்சரிப்பவன் (11351) விசாகன் என்று அழைப்பது யாரை? முருகனை (11352) முருகனை விசாகன் என்று அழைப்பது ஏன்? மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் (11353) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து எந்த கடலில் போர் புரிந்தார்? திருச்செந்தூரில் (11353) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து தரையிலே போர் புரிந்த இடம் எது? திருப்பரங்குன்றம் (11354) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து வானத்திலே போர் புரிந்த இடம் எது? திருப்போரூர் (11355) போரின் பெயரால் இந்த ஊருக்கு ஏற்பட்ட பெயர் என்ன? போரூர் (11356) பழங்காலத்தில் இத்தலத்தை எவ்வாறு அழைத்தனர்? சமராபுரி, யுத்தபுரி (11357) ஸ்ருதி என்றால் என்ன? ரிக், யஜுர். சாமம், அதர்வணம் என வேதம் நான்காகும். வேதம் என்ற சொல்லுக்கு சத்தியமான தத்துவத்தை அறியச் செய்யும் அறிவின் மூல இருப்பிடம் என்று பொருள். வேதம் எந்த மனிதராலும் உருவாக்கப்படவில்லை. அநாதி காலம் தொட்டே இருந்து வருகிறது. கடவுளின் சுவாசக் காற்றாக விளங்குகிறது. பிரம்மா, வேதத்தைக் கொண்டே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். வேதத்திற்கு ச்ருதி (ஸ்ருதி) என்ற பெயருண்டு, ச்ரோத்ரம் என்ற சொல்லுக்கு காது என்று பொருள் சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை ஸ்ருதி என்றனர்.

11338) பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? து, ஷா, ஜு, சா, சி, சீ, டா, தா, த, ஜ, ஞ 11340) ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? தே, தோ, ச, சி, டே, டோ, சா, சி வைகாசி விசாகம் (11341) சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக விளங்குபவர் யார்? முருகப்பெருமான் (11342) பழனி தலத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? சித்தன்வாழ்வு (11343) பழனிக்கு சித்தன்வாழ்வு என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன? சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் (11344) முருகனை பழநியாண்டி என்று அழைப்பது ஏன்? பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் (11345) வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்? விசாக (11346) வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்திற்கு ஏற்பட்ட பெயர் என்ன? வைசாக மாதம் என்றிருந்து பின்னாளில் வைகாசி என்றானது. (11347) இந்த மாத பௌர்ணமி நாளை என்ன நாள் என்று குறிப்பிடுகிறோம்? வைகாசி விசாகம் (11348) இந்த நாளில் யார்; அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன? முருகப்பெருமான்

வியாழன், 7 மே, 2015

11314) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?

சு, சே, சோ, ல, ர 11315)) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? லி. லு. லே. லோ 11316)) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? அ, இ, உ, ஏ 11317)) ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ஒ, வ, வி, வு 11318)) மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? வே, வோ, கா, கி, ரு 11319)) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? கு, கம், ஹம், ஜ, ங, ச. க 11320)) புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? கே, கோ, ஹா, ஹீ 11321) பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ஹு, ஹே, ஹோ, டா 11322) ஆயிலியம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? டி, டு, டெ, டோ, டா 11323)) மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ம, மி. மு. மே 11324)) பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? மோ, டா, டி. டு 11325)) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? டே, டோ, ப, பா, பி

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

11313) வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது என்பது ஏன்?

பூமியானது சு+ரியனிடமிருந்து வெளிவரும் சக்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது. பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது, அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது, பூமியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது. அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது. இப்படி பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது. இதனால் ஓரு காந்தமாய் மாறுகிறது. பூமி இதனை நீருபிக்க ஒரு காந்த ஊசியை தொங்கவிட்டால் அது வடக்கு- தெற்காக நிற்கும். இதை, இயற்பியல் மின்காந்த புலம், காந்த திசைகளின் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன. காந்த ஊசி வடக்கு தெற்காக நிற்பதற்குக் காரணம், காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும். தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதல். இதேபோலத் தான் மனித உடலில் காந்த சக்தி உள்ளது. உடலில் இரத்தத்தில் முக்கிய பாகம் இரும்பு சத்தாகும். மேலும் பகலில் உட்காரும்போதும் நடக்கும்போதும் அடையும் காந்த சக்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும். தூங்கும் போது தெற்கே தலை வைத்துக் கொண்டால், நமது வடதுருவமும் பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு உடலின் காந்த சக்தி கெடாமல் இருக்கும். ஆனால் வடக்கில் தலை வைத்துக் கொண்டால், பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது ஒன்றையொன்று தாக்கி தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது. உடலுடைய இயற்கையான நிலை மாறுபடும.; எனவேதான் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது. நம்ம முன்னோர்கள் சொல்வது பழைய பஞ்சாங்கம் என்று ஓதுக்கினால் பாதிக்கப்படுவது நாம் தான்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

கோவில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

கே. ஈஸ்வரலிங்கம் 11310) கோவிலில் வாயில்படி இருந்தால் அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்? இதில் அறிவியல் பு+ர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். ஒரு பக்தன் கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சு+ரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள். அது உங்களை புது மனிதனாக்கி புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். 11311) சைவ சமயத்தின் பண்புகள் எவை? கொலை, களவு, மது, மட்ச்ச மாமிசம், பொய், விபச்சாரம் முதலிய பாவங்களை நீக்கி இருப்பது உயிர்களுக்கு கருணை காட்டுதல் (அஹிம்சை), மெய் பேசுதல், வறியவர்களுக்கு தானமிடல், செய்நன்றி அறிதல் ஆகிய தர்மங்களை பாதுகாத்து நடத்தல், மாதா, பிதா, குரு, அரசன், வயதில் பெரிய வர்கள் ஆகியோரை அன்பாய் உபசரித்தல், விபு+தி உததி;ரார்ட்சம் தரிப்பது, சிவதீட்சை பெற்றுகொள்ளுதல், சந்தியா வந்தனம் , சிவ தியானம், பஞ்சாசற செபம் , சிவ ஸ்தோத்திரம் இவைகளை நித்தமும் ஒரு பத்து நிமிடமாவது மனதை ஒடுக்கி விதிப்படி அன்புடன் செய்து முடிப்பது, நித்தமுமாவது புண்ணிய காலங்களிலாவது சிவலிங்க பெருமானை அன்புடன் விதிப்படி வணங்கி துதிப்பது, சைவ நெறி தரும் நூல்களை வசித்தோ அல்லது கேட்டோ அறிதல், சமய பிரசங்கங்களை கேட்டு அதன் வழி நடப்பது, சிவ நிந்தை, குரு நிந்தை, சிவனடியார் நிந்தை இவைகளை கேளாமல் ஒதுங்கி விடுவது, சைவ சமய குறவர் நால்வருடைய நட்;சத்திர நாட்களில் (குருபு+சை ) அவரவருடைய சரித்திரத்தை கேட்டு தானம் செய்து விரதத்துடன் இருப்பது, மகாபாதங்களை செய்தலும், அல்லது செய்ய கூடிய புண்ணியத்தை செய்யாது விட்டாலும் அதற்காக வருந்தி சிவகாமப் பிரகாரம் விதித்த பிராயச்சித்தத்தை செய்தல். 11312) காதுகுத்துதல் என்ற சொல்லுக்கு ஏமாற்றுதல் என பொருள் வந்தது ஏன்..? காதுகுத்த போகின்றேன் என தட்டார் வரும்போது குழந்தை காதை பொத்திக்கொண்டு அழத்துவங்கிவிடும். இதனால் காதுகுத்த வரும் தட்டார்கள் கைக்குள்ளேயே கருவியை மறைத்து வைத்துக்கொண்டு காதைப்பார்ப்பவர் போல நெருங்கிவந்து வெடுக்கென காதை குத்தி விடுவார்கள்..! இதன்காரணமாக காதுகுத்துதல் என்ற பதத்திற்கே ஏமாற்றுதல் அல்லது வஞ்சித்தல் என்ற பெயர் வந்து விட்டது..!

புதன், 15 ஏப்ரல், 2015

(11303) தேங்காய் உடைக்கும் வழக்கம் எங்கு இல்லை?

கே. ஈஸ்வரலிங்கம் (11303) தேங்காய் உடைக்கும் வழக்கம் எங்கு இல்லை? ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதப் பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்துவிடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள். (11304) வீட்டில் நிலைப்படியில் மாவிலை கட்டுவது ஏன்? வீட்டில் நிலைப்படியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். அதனால் தலைவாசலில் மங்களகரமாக மாவிலைத் தோரணம் கட்டுவர். (11305) இதற்கான வேறு காரணம் ஏதாவது உண்டா? ஆம். வீட்டில் வாக்தேவதை என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக்கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும். நன்மை தரும் சுப வார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிடும். ஆனால் மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும். (11306) கால் மண்டபங்கள் என்பது எதனை? பெரிய கோயில்களில் அர்த்தமண்டபம், மகா மண்டபம் பிரதானமாக அமைந்திருக்கும். மண்டபம் முழுவதும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கல்தூண்கள் அமைந்துள்ள மண்டபத்தை கால் மண்டபங்கள் என்பர். (11307) நூறு கல்தூண்கள் இருந்தால் எவ்வாறு அழைப்பர்? நூற்றுக்கால் மண்டபம் என்று. (11308) ஆயிரம் கல் தூண்கள் இருந்தால் எவ்வாறு அழைப்பர்? ஆயிரங்கால் மண்டபம் என்று. (11309) ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள ஆலயங்கள் எவை? திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல் (திருச்சி அருகில்) ஸ்ரீரங்கம், திருவாரூர், திருவக்கரை (விழும்புரம் மாவட்டம்), காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி.

(11298) சாதம் பிரசாதம் ஆவது எப்படி?

கே. ஈஸ்வரலிங்கம் (11298) சாதம் பிரசாதம் ஆவது எப்படி? உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தக்காரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள். அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்? உண்மையில் தரிசனம் என்பது என்ன? கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும். அரிசியை கழுவி பானையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான். அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதமாகி விடுகிறது? கடவுளுக்கு மனப்பூர்வமாக அர்ப்பணிக்கும் போது சாதாரண கூழாங்கல் கூட பெரிய கல்லாகி விடுகிறது. அதுபோல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது. ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும்தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும். (11298) எப்போது தரிசனம் கூடாது? காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிட கூடாது. சிவாச்சாரியார் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட நேரங்களிலும் சந்நதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக்கூடாது. (11290) கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவலாமா? கோவிலுக்குச் சென்று விட்டு வீடுதிரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும். (11300) நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள்? இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம் அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். புரியாத குற்றங்களிலிருந்து வெகு தூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி. அது மட்டுமல்ல நெருப்பு இடயறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனத்திற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி. நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபாட்டால் போதும் நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம். (11301) கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்? அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால் கடவுளின் முன் நேர் எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும் மயிலும் முருகனிடமும் பாம்பும் கருடனும் விஷ்ணுவிடமும் சிங்கமும் காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே கடவுகளின் முன் கூடி வாழும் போது ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது. (11302) அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைக்கிறார்கள்? மலையில் ஏறும்போதும் கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போது நமது இரத்தத்தில் ஒட்சிசன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் இரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட மலைக்கோயில் கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால் இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச் செலவு மிச்சம்.

திங்கள், 30 மார்ச், 2015

கடவுளின் படம் அல்லது சிலை எது வழிபாட்டிற்கு உகந்தது

கே. ஈஸ்வரலிங்கம் (11293) கடவுளின் படம் அல்லது சிலை எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது. (11294) சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத் துணி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்திப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது. (11295) திசைச் தெய்வங்களை வழிபடுவதினால் ஏற்படும் நன்மைகள் யாது? திசைகள் பத்து என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பத்துத் திசைகளையும் இறைவனின் திருவருள்தான் நின்று ஆளுகின்றது. இறைவன் திருவருள் ஆணையைப் பெற்று ஏவல் செய்யும் திக்குப் பாலகர்களும் திசைத் தெய்வங்களும் அந்த அந்த திசைக்கு உட்பட்டே தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்ய முடியும். இத்திசைத் தெய்வங்கள் எல்லாவற்றையும் செலுத்துவதாகவும், அவற்றிற்கு மேம்பட்டும் விளங்குவது பரம்பொருளான சிவம். அந்தந்த திசைத் தெய்வங்களை மட்டும் வழிபடுகின்றவர்கள், அதற்குரிய பலன்களை மட்டுமே அடைவர். பரம்பொருளை வழிபடுவதனால் எல்லாத் திசைத் தெய்வங்களினால் கிடைக்கும் பலனும் அவற்றிற்கு மேலும் கிட்டும். (11296) கோயிலின் கருவறை ஏன் இருட்டாக இருக்கின்றது? கோயிலின் கருவறை ஒலி அலைகளின் (இறை ஆற்றலை கடத்தும்) கலமாகும். விமானக் கலசம் மூலவரின் திருவுருவச் சிலைக்குச் சூரிய கதிர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறும் ஒலி அலைகளைக் கடத்துகிறது. மூலவரின் சிலைக்கு அடியிலுள்ள நவரத்தினக் கற்களும் யந்திரத் தகடும் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கப்பெறும் ஆற்றலை மூலவரின் திருவுருவச் சிலைக்குக் கடத்துகின்றன. எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்றுக்கொண்ட மூலவரின் திருவுருவச் சிலை, அதனை இறை ஆற்றலாக மாற்றி இறைவன் திருமுன்பு இருக்கும் வாகனம், பலி பீடம் மற்றும் உற்சவ மூர்த்தங்கள் மீது அவ்வாற்றலைக் கடத்துகிறது. பிறகு கோயில் முழுவதும் அவ்விறையாற்றல் பரவுகிறது. அங்கே வழிபட வருகின்ற அடியவர்கள் மீதும் அவ்விறையாற்றல் பதிகின்றது. கருவறையில் இருந்து வரும் அருள் ஒலி அலை எப்பொழுதும் கிடைக்க கருவறை இருட்டாக இருத்தல் அவசியம். அதோடு பெருமானுக்கு முறையான பூசைகளும், நிறைவான திருநீராட்டுதலும், அவசியம் நடைபெற வேண்டும். (11297) வழிபாட்டில் ஏன் இறைவனுக்குத் திருவமுது வைக்கின்றோம்? தமது கருணையினால் பொது நிலைக்கு வரும் இறைவன் ஆனந்த கூத்தாடி நம்மை ஆட்கொள்ள விழைகின்றார். இப்படி நமக்கு அருளைப் பொழிந்து கொண்டிருக்கின்ற பெருமானுக்கு நம்மால் கைம்மாறு ஒன்றும் செய்ய முடியாது. இதனை மணிவாசகர் யான் இதற்கு இலன் ஓர் கைமாறே என்கிறார். தவிர பெருமானும் நம்மிடம் இருந்து எதையுமே எதிர்பார்ப்பதில்லை. இதனை வேண்டுதல் வேண்டாமை இலான் எனும் குறள் வழித் தெளிவுப் படுத்துகின்றார் வள்ளுவ பெருந்தகை. இவாறு நமக்கு எந்நேரமும் நன்றே செய்து கொண்டிருக்கின்றார் பெருமான். உயிரினங்கள் வாழ்வதற்காக இறைவன் அருளிய உணவுப் பெருட்களை இறை வழிபாட்டில் திருவமுதாக வைத்து அவருடைய பேரருள் திறத்திற்கு நன்றி பாராட்டுகின்றோம்.

செவ்வாய், 24 மார்ச், 2015

பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா?

11285) கடவுளை நேருக்கு நேர் நின்று வழிபடக் கூடாதாமே ஏன்? இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்தப் பார்வை நன்மை அளிக்காது. மற்ற இரு கண்களும் சூரியசந்திர வடிவானவை. இவை நன்மை தருபவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத்தான் “கடாக்ஷம்” என்பர். இதை கட + அக்ஷம் என பிரிப்பார்கள். “கட” என்றால் கடைசி. “அக்ஷம்” என்றால் கண். அதாவது கண்களின் கடைப்புறப் பார்வை என்று பொருள். இது கருணையே வடிவானது. சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லது. அதற்காகத் தான் நேருக்கு நேர் நின்று தரிசிக்காமல், ஒரு பக்கமாக நின்று வழிபட வேண்டும். (11286) பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா? பொதுவாக பூஜையறையில் குலதெய்வ தீபம் என்று ஒரு காமாட்சி விளக்கும் எல்லா தெய்வங்களுக்குமாக குத்து விளக்குமாக இரண்டு தீபம் ஏற்றவேண்டும். ஊதுபத்தி, சூடம் போன்றவற்றை இந்த விளக்கில் இருந்து ஏற்றக் கூடாது. அதற்கு பூஜை நேரத்தில், தனியாக ஒரு கைவிளக்கை ஏற்றிக்கொள்ள வேண்டும். (11287) சிவபெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி நடனம் ஆடுவது ஏன்? எல்லா சுகபோகங்களையும் அருளும் சிவபெருமான், நமக்கு தேவையில்லாதவற்றை, நாம் விரும்பாததை தனக்காக வைத்துக்கொண்டுள்ளார். இது தான் கருணையும், எரிமையும். இணைந்த திருவருள் உலக போகங்களையே பெரிதும் விரும்பி மயங்காமல் வாழவும், இறுதியில் நம் உடல் கைபிடிச்சாம்பல் தான் என்பதை உணர்த்தவும் சுடலைப்பொடி பூசி அளுள்கிறார். (11289) சுமங்கலி பூஜை செய்வதன் நோக்கம் என்ன? பக்தர்களையும் இறைவனாகவே காணும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது இந்து மதம். உமையம்மை மகாலட்சுமி போன்ற தெய்வங்களின் அருளைப்பெற சுமங்கலிப் பெண்களை அம்பாளாக வழிபட்டு, புடவை குங்குமச்சிமிழ் போன்ற மங்கலப் பொருட்களைக் கொடுத்து விருந்தளிப்பது சுமங்கலிபூஜை. இது மிக உயர்ந்த வழிபாடு. இதனைச் செய்தால் சுமங்கலிகளாக இறந்த மாதர்கள் சந்தோஷப்பட்டு, குடும்பத்தினர் நலமாகவும், தீர்க்க சுமங்கலிகளாகவும் வாழ வாழ்த்துவார்கள். (11290) விரத நாட்களில் பகலில் தூங்கக் கூடாதாமே ஏன்? சாப்பாடும் தூக்கமும் உடலுக்கு சுகமளிப்பவை ஒரு நிலைப்பட்ட மனதுடன் அன்று முழுவதும் தெய்வ சிந்தனையாகவே இருப்பதற்குத் தடையாக இருப்பவை. பசியோடும் தூங்காமலும் இருக்கும்போது, நாம் இன்று விரதம் இருக்கிறோம் என்ற எண்ணம் மறக்காமல் இருக்கும். முழுமையான தெய்வ சிந்தனையுடன் விரதம் இருந்தால் நாம் எண்ணியது நிறைவேறும். (11291) பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்லவேண்டும்? குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். (11292) யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.

வெள்ளி, 6 மார்ச், 2015

கலசம்

(11251) கலசம் என்பது என்ன? மண் அல்லது செம்பு பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு செம்பு, சிறுபானை தான் கலசம் எனப்படுகிறது. (11252) இந்த கலசத்தில் என்ன செருகப்படும்? மாவிலைகள் (11253) மாவிலைகளின் நடுவில் வைக்கப்படுவது என்ன? தேங்காய் (11254) கலசத்தில் என்ன நிறநூல் கட்டப்படும்? வெண்மை அல்லது சிவப்பு நிறநூல்கள் (11255) கலசத்தில் நூல் எவ்வாறு கட்டப்படும்? பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாக கட்டப்படும். (11256) இந்த பானையை என்னவென்று கூறுவார்கள்? கலசம் (11257) கலசத்தை எதைக் கொண்டு நிரப்புவார்கள்? நீரினாலோ அல்லது அரிசியினாலோ (11258) இவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட கலசத்தை எவ்வாறு அழைப்பர்? பூரண கும்பம்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

வழிபாடு

கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. 1. உத்தம நமஸ்காரம். லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒரு நொடியேனும் மனதார வணங்க வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம். 2. அஷ்டாங்க நமஸ்காரம் : இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் எட்டு, அங்கம் உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும். 3. பஞ்சாங்க நமஸ்காரம் : இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து, அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.

கைலேஸ்வரத்தில் மாசிமக மகோற்சவம்

கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ கைலேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ கருணாகடாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகைலாச நாதர் சுவாமி தேவஸ்தானத்தில மாசி மக மகோற்சவ விழா நேற்று கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. இவ்வாலயத்தில் இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 22ம் திகதி வரை தினமும் காலையும் மாலையும் வசந்த மண்டப பூஜை நடைபெறும். எதிர்வரும் 03ம் திகதி மாலை 5.00 மணிக்கு தேர்த் திருவிழா ஆரம்பமாகும். இவ்வாலயத்தில் 04ம் திகதி தீர்த்த உற்சவமும். 10ம் திகதி வைரவர் மடை பூஜையும் நடைபெறும். இவ்வாலயத்தில் தினமும் காலை 8.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும் திருவிழா பூஜை காலை 11.00 மணியளவில் அம்பாள் உள்வீதி வலம் வருதலுடன் நிறைவுபெறும். அதேபோன்று மாலை 4.30 மணிக்கு சாயரட்ச பூஜையுடன் ஆரம்பமாகும் மாலை திருவிழா இரவு 7.00 மணிக்கு அம்பாள் உள்வீதி மற்றும் வெளிவீதி வருதலுடன் நிறைவுபெறும். மகோற்சவ சிவாச்சாரியா முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் தேவஸ்தான குருமாகிய சிவஸ்ரீ க. மகேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ யோ. ரஞ்சிதக் குருக்கள், சிவஸ்ரீ பா. சாம்பசிவ குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீகர குருக்கள், சிவஸ்ரீ ம. சுரேஷ் குருக்கள், சிவஸ்ரீ ப. புருஷோத்ம சர்மா, சிவஸ்ரீ ரிஷிகேச சர்மா ஆகியோர் மகோற்சவ கிரியைகளை நடத்தி வருகிறார்கள்.

நமசிவாய மந்திரம்

(11242) சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? மோட்சத்திற்கு வழி வகுக்கும் (11243) அங்நங் சிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? தேக வளம் ஏற்படும் (11244) அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? சிவன் தரிசனம் காணலாம். (11245) ஓம் நமசிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? காலனை வெல்லலாம். (11246) லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? தானிய விளைச்சல் மேம்படும். (11247) ஓம் நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வாணிபங்கள் மேன்மையுறும் (11248) ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வாழ்வு உயரும், வளம் பெருகும் ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம். (11249) ஓம் நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? சிரரோகம் நீங்கும். (11250) ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? அக்னி குளிர்ச்சியைத் தரும்

நமசிவாய மந்திரம்

(11232) கிலி நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வசிய சக்தி வந்தடையும் (11233) ஹிரீநமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? விரும்பியது நிறைவேறும் (11234) ஐயும் நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? புத்தி வித்தை மேம்படும். (11235) நம சிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? பேரருள், அமுதம் கிட்டும். (11236) உங்யுநமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வியாதிகள் விலகும் (11237) கிலியுநமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? நாடியது சித்திக்கும் (11238) சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? கடன்கள் தீரும். (11239) நமசிவயவங் என்று உச்சரிக்க என்ன நடக்கும்? பூமி கிடைக்கும். (11240) சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? சந்தான பாக்யம் ஏற்படும். (11241) சிங்aங் என்று உச்சரிக்க என்ன நடக்கும்? வேதானந்த ஞானியாவார் உங்aம்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

சிவாய நம

கே. ஈஸ்வரலிங்கம் (11220) நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்? பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம், நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. (11221)பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலம் உண்டாகும்? தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். (11222) வீட்டிலிருந்து கிளம்பும் போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா? சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்சினையில்லை. (11223) வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம். (11224) அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக்கூடாது என்கிறார்களே, சரிதானா? எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத் தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழக்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும். (11225) செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரம் என்ன? செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில் செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள். (11226) சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு, திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். (11227) நங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? திருமணம் நிறைவேறும் (11228) அங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? தேக நோய் நீங்கும் (11229) வங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? யோக சித்திகள் பெறலாம் (11230) அங்சிவயநம என்று உச்சரிக்க என்ன நடக்கும்? ஆயுள் வளரும், விருத்தியாகும் (11231)ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க என்ன நடக்கும்? எதற்கும் நிவாரணம் கிட்டும்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

எண்பத்து நான்கு ஆண்டுகள் பழைமைச் சிறப்பு கொண்ட கொழும்பு பரடைஸ் பிளேஸ் மகாகாளியம்மன் ஆலய திருவிழா

கொழும்பில் தமிழர் கள் செறிந்து வாழுகின்ற ஒரு பகுதியான பரடைஸ் பிளேஸ் என்ற ஆங்கிலப் பதத்திற்கு உரிய தமிழ் வரைவிலக்கணம் ‘சொர்க்கபுரி’ என்பதாகும். அந்நியர் இலங்கையை ஆண்ட போது ஆங்கிலேயரால் இந்நாமம் சூட்டப்பட்டிருக்கலாம். உலகில் தல விருட்சங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்வது அபூர்வம். அரசும் பனையும் பின்னிப் பிணைந்த அபூர்வதலத்திலே 1931 ஆம் ஆண்டு இத்திருத்தலம் அமைந்தது. இத்தல விருட்சங்களில் அன்று நாகமாக நிலைகொண்டு நாகத்தம்பாளாக அருள்பாலித்து வந்தவள் ஸ்ரீ மகா காளியம்பாள். இதனை உணர்ந்த அம் பாள் அடியார்கள் இவ்விருட்சங்களைச் சுற்றி மாடம் அமைத்து அதில் சூலாயுத த்தை வைத்து வணங்கத் தலைப்பட்டனர். அன்று கொழும்பு நகரமாக இருந்த ¡லும் கூட இம்மக்கள் கிராமிய வழக் கப்படியே பூஜைகளை நடாத்தி வந்தனர். அம்பாளின் சக்தி படிப்படியாக வெளிப்பட காலத்தின் கோலத்திற்கேற்ப இவ்வாலயத்தை கட்டியெழுப்ப வாய்ப்புக் கிடைத்தது. அதற்கமைய கொழும்பு பரடைஸ் பிளேஸ் மக்கள் அனைவரும் அம்பாள் அருளால் அமரர் அ. குருசாமி தலைமையில் ஒன்றிணைந்து 1949 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி இவ்வாலயத்தை கட்டியெழுப்பத் திட்டமிட்டனர். அதற்கமைய தமிழகத்திலிரு ந்து சிற்ப சாஸ்திரி யான ஆர். நாகலிங்கம் அழைத்துவரப்பட்டார். ஆவணி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவரது கை வண்ணத்தில் மூலமூர்த்தியான சப்தசதி ஸ்ரீ மகாகாளியம்மனுக்கும். ஸ்ரீ முனீஸ் வரப் பெருமானுக்கும் ஸ்ரீ சூலாயுத மூர்த்திக்கும் கோபுரங்களுடன் கூடிய திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன. இக் கோயில்களின் இஷ்ட தெய் வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு புரட்டாதி மாதம் 30 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருடா வருடம் திருவிழா வெகு விம ரிசையாகக் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் முதல் நாளன்று காப்புக் கட்டு வைபவம் இடம்பெறும். அதற்கடுத்த ஏழு நாட்களும் அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். எட்டாம் நாள் கொழும்பு பரடைஸ் பிளேஸிலிருந்து அருள்பாலிக்கும் அம்பாளுக்கு முகத்துவாரம் சங்குமுகத்தில் கரகம் பாலித்தல் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து கரகம், காவடி தீச்சட்டிகள் என பக்தர்கள் புடைசூழ அம்பாள் முகத்துவாரம் ஆலயத்திலிருந்து பாலத்துறை, சேதவத்தை, பலாமரச் சந்தி, பபாபுள்ளே தோட்டம், கிரா ண்ட்பாஸ் வீதியூடாக ஆலயத்தை வந் தடைவாள். ஒன்பதாம் நாள் காலை பாலாபிஷேக மும் மாலையில் மங்கல மங்கையரின் மாவிளக்கு பூஜையும், ஆலய முற்றத்தில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். பத்தாவது நாளன்று பக்த கோடிகள் மஞ்சள் நீராடி அம்மன் அருளைப் பெற்று சக்தி அடியார்களுக்கு அருள் வாக்குக் கூறுவார். அந்த அருளோடு சக்தி கரகமும் தீச்சட்டியும் ஏந்தி முகத் துவார சங்குமுகத்திற்குச் சென்று தீர்த் தமாடுவர். அதனைத் தொடர்ந்து பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் சந்நிதானத்தில் மகேஸ்வர பூஜை நடா த்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இத் திருக்கோவிலில் விஷேஷமாக முதலில் சூரியன், சந்திரனுக்கும் தலவிருட்ஷங்களான அரசும், பனையும் பின்னிப் பிணைந்து நிழலில் வீற்றிருக்கும் ஸ்ரீ விநாயகருக்கும் பூஜை செய்தபின் ஸ்ரீ விநாயகர், மூல மூர்த்தியும் சப்த சதி நாயகியாகிய ஸ்ரீ மகா காளியம்மனுக்கு, ஸ்ரீ முருகனுக்கும் பூஜை நடைபெற்று ஏனைய பரிவார மூர்ததிகளுக்கும் பூஜை நடைபெறும். தினந்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடைபெறும். காலை 5.30 மணிக்கு திருவனந்தல் பால் பூஜை காலை 6.30 மணிக்கு காலைச்சந்தி காலை 10.30 மணிக்கு உச்சிக்காலம் கோபூஜை மாலை 5.00 மணிக்கு சாயரட்சை மாலை 6.30 மணிக்கு இரண்டாம் காலம் மாலை 8.00 மணிக்கு அர்த்த சாமம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 9.00 மணிக்கு அர்த்த சாம பூஜையும் நடைபெறும். ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் வருடா வருடம் வரும் விசேட விழாக்களாவன: வருஷாபிஷேகம், முதல் பத்து நாட்களும் காலையும் மாலையும் இலட்சார்ச்சனை வெகு விமரிசையாக நடைபெறும். தை மாதம் பூர்வ பட்ச அத்த நட்சத்திரத்தில் வருஷாபிகேம் சகஸ்ட சத சங்காபிஷேகம் நடைபெறும். ஆதி காலந் தொட்டு கிராமிய முறையில் நடைபெற்றதுபோல் இன்றும் கொழும்பு முகத்துவாரம் சங்குமுகத்தில் அம்பாள் அருளோடு தீமிதிப்பும் இரதபவனி, பால்குட பவனியும் பாலாபிஷேகமும். மாவிளக்கு பூஜையும் நடாத்தப்பட்டு இறுதி நாளன்று மஞ்சள் நீராட்டத்துடன் கொழும்பு முகத்துவாரம் சங்கமத்தில் தீர்த்த உற்சவம் நடைபெறும். அதன்பின் மகேஸ்வர பூஜை நடாத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். மாலை ஸ்ரீ பைரவருக்கும். ஸ்ரீ பத்ராகாளியம் மனுக்கும் மடைபரவி பொங்கல் படைத்து பூஜை நடாத்தப்படும்.இத் திருக்கோவிலில் நான்கு நவராத்திரி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.முதலாவதாக தை மாதம் சியாமளா நவராத்திரியும், சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், ஆடி மாதம் ஆஷாட நவராத்திரியும், புரட்டாதி மாதம் சாரதா நவராத்திரியும் நடைபெறும். சாரதா நவராத்திரியுடன் விஜயதசமி நடைபெறுவது போல ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி ஆரம்பிக்கப்பட்ட பத்தாம் நாள் மஹா சண்டி ஹோமமும் நடாத்தப்படும். ஆவணி மாதம் திருக்குளிர்த்திப் பெருவிழா நடைபெறும். இவ்விழா வேறு எந்தவொரு ஆலயங்களிலும் நடைபெறுவதில்லை. இத்திருந்கோவிலில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.மாதா மாதம் வரும் பெளர்ணமி நாளன்று விஷேஷமாக 108 சங்காபிஷேகமும். ஸ்ரீ சக்கர பூஜையும், கோபூஜையும் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் நடைபெறும். பங்குனி மாதம் வரும் பங்குனித் திங்கள் நான்கிலும் இத்திருக்கோவில் முற்றத்தில் அடியார்கள் தங்கள் கரங்களாலே பொங்கல் வைத்து ஸ்ரீ பத்ராகாளியம்மனுக்குப் படைத்து பூஜை செய்வர். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இராகுகாலப் பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.ஏனைய விஷேஷங்களாவன: விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, ஸ்கந்த ஷஷ்டி, வரலட்சுமி நோன்பு, கெளரி நோன்பு இன்னும் விஷேஷ பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. வேண்டியவருக்கு வேண்டிய வர த்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மனை நடி வரும் பக்த கோடிகளின் எண் ணிக்கையை நாளுக்கு நாள் பெருகி கொண்டிருப்பதன் மர்மம் அம்பாளின் மகிமையாகும்!

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

11229) இந்தியாவின் 280 பழமையான சிவன் கோவில்களில் எத்தனை கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன? 274 11230) இந்தியாவின் பழமையான 108 வைணவத் திருப்பதிகளில் எத்தனை திருப்பதிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன? 96 11231) சைவத்தை வளர்த்த நாயன்மார் எத்தனை பேர்? 63 பேர் 11232) வைணவத்தை வளர்த்த ஆழ்வார்கள் எத்தனை பேர்? 12 பேர் 11233) சைவத்தில் கோயில் என்று சொன்னாலே அது எதைக் குறிக்கும்? அது எங்கே இருக்கிறது? சிதம்பரத்தைக் குறிக்கும். அது தமிழ்நாட்டில் இருக்கிறது 11234) வைணவத்தில் என்றாலே அது எதைக் குறிக்கும்? அது எங்கே இருக்கிறது? திருவரங்கத்தைக் குறிக்கும். அது தமிழ்நாட்டில் உள்ளது. 11235) பொதுவாக. பெயர்களை எவ்வாறு பிரிக்கலாம்? இடுகுறிப் பெயர், காரணப் பெயர் 11236) மேசியா என்பதற்கு என்ன பொருள்? எண்ணெய் ஊற்றப்பட்டவர். 11237) அன்பு என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் என்ன? சிவம் 11238) அன்பே உருவான கடவுளுக்குத் தமிழில் என்ன பெயர்? சிவன் 11239) நாம் அனைவரும் நீங்காத இன்பத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அன்பே உருவான கடவுள் மனிதனாகப் பிறந்ததைக் கூறும் சைவ சித்தாந்தப் பாடல் ஒன்றை எழுதவும். இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்தான் 11240) மனிதனாக வந்த கடவுள் தீமையை வென்றார் என்கிற தன்மையை. சைவம் புராண நோக்கில் எந்தப் பெயரில் விளக்குகிறது? குமரக் கடவுள் 11241) சிவனுடைய வேறு பெயர்கள் யாவை? நீலகண்டன். மகேஸ்வரன். தட்சிணாமூர்த்தி. நடராசன் 11242) விஷ்ணுவின் வேறு பெயர்கள் யாவை? திருமால். பெருமாள். நாராயணன். வெங்கடேசன்.... 11243) வைணவத்தில். நீரின் மேல் அசையாடுபவர் எனும் பொருள் தரும் கடவுளின் பெயர் என்ன? நாராயணன் 11244) முருகனின் வேறு பெயர்கள் யாவை? குமரன். வேலன். கந்தன். கார்த்திகேயன் 11245) மனிதனாக வந்த கடவுள் இறந்து உயிர்பெற்றார் என்கிற தன்மையை. சைவம் புராண நோக்கில் எந்தப் பெயரில் விளக்குகிறது? பிள்ளையார் 11246) பிள்ளையாருடைய வேறு பெயர்கள் யாவை? விநாயகர். கணபதி. விக்னேஷ்வர் 11247) மனிதனாக வந்த கடவுள் சு+ரியனைப் போன்ற ஒளிமயமானவர் என்பது எந்தப் பெயரில் விளக்கப்படுகிறது? ஐயப்பன் 11248) மனிதனாக வந்த கடவுள் உலகப் படைப்புக்குக் காரணமானவர் என்பது எந்தப் பெயரில் விளக்கப்படுகிறது? பிரமன்

செவ்வாய், 27 ஜனவரி, 2015

2015.02.03 தைப்பூசம்

b>2015.02.03 தைப்பூசம்

அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர்

அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு இணையான பதினெட்டுப்படி சிறப்பு பூசையினை ஆலயகுரு சிவஸ்ரீ லோகனாதக்குருக்கள் நடாத்துவதையும் வழிபாடு செய்யும் பக்த்தர்களையும் படத்தில் காணலாம்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812