புதன், 29 ஆகஸ்ட், 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம் நல்ல நாள் 9371) வியாழக்கிழமை எந்த திசையில் பயணிக்கலாம்? மேற்கு 9372) வியாழக்கிழமை செய்வதற்கு ஏற்ற நற்காரியங்கள் எவை? புதிய பணியில் சேர்தல், வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருதுசாந்தி, காது குத்துதல், கிரஹப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள். 9373) வெள்ளிக்கிழமை எந்த திசை நோக்கி பயணம் செய்யலாம்? வட திசை 9374) வெள்ளிக்கிழமை செய்வதற்கு ஏற்ற நற்காரியங்கள் எவை? பெண் பார்க்க செல்லல், காது குத்துதல், சாந்தி முகூர் த்தம், புதிய வாகனங்களை வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் 9375) சனிக்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்? தென்திசை. 9376) சனிக்கிழமை எந்த நற்காரியங்களை ஆற்ற உகந்த நாள்? பூமி தொடர்பான விஷயங்கள், அதாவது வீடு, நிலம்,மனை வாங்குதல், விற்றல் செயல்களுக்கும் இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும். 9377) சிலர் எந்தெந்த நாட்களை சுப நாட்கள் என்று கூறுவர்? திங்கள், புதன், வியாழன், வெள்ளி 9378) அசுப நாட்கள் என்று கூறுவது எந்த நாட்களை? ஞாயிறு, செவ்வாய், சனி 9379) சுப நாட்களிலும் எந்தெந்த திதிகள் வருகின்ற நாட்களில் நற்காரியங்கள் ஆற்றாமல் தவிர்ப்பது நல்லது? பிரதமை, அஷ்டமி, நவமி 9380) ஞாயிற்றுக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியம் செய்ய ஏற்றதல்ல? பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி 9381) திங்கட்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியம் செய்ய ஏற்றதல்ல? சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி 9382) செவ்வாய்க்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம் 9383) புதன்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம். 9384) வியாழக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? கேட்டை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி 9385) வெள்ளிக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? பூராடம், ரோகிணி, மிருகசீரிடம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம் அவிட்டம்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம் நல்ல நாள் 9352 பஞ்சாங்கத்தில் அடங்கியுள்ள ஐந்து அங்கங்களும் எவை? நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம். 9353 பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது எது? வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள் 9354 திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்கள் செய்ய விசேஷமான நாட்கள் எவை? ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி. 9355 நெருப்பு கிரகம் என்பது எது? செவ்வாய். 9356 அக்னி சம்பந்தமான செயல்களுக்குரிய நாள் எது? செவ்வாய்க்கிழமை. 9357 இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள் எது? சனிக்கிழமை. 9358 ஞாயிற்றுக்கிழமைக்குரிய அதிபதி யார்? சூரியன். 9359 சூரியன் எத்தகைய தன்மை வாய்ந்தவர்? ஆரோக்கியத்தை அளிப்பவர். 9360 நீண்ட கால பிணிகளுக்கு டொக்டரின் ஆலோசனை பெற்று மருந்து குடிக்க ஆரம்பிக்கக் கூடிய நாள் எது? ஞாயிற்றுக்கிழமை. 9361 ஞாயிற்றுக்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்? வடக்கு. 9362 அரச பணி தொடர்பான பணிகளுக்கு உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கக் கூடிய நாள் எது? ஞாயிற்றுக்கிழமை. 9363 திங்கட்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்? தென்திசை நோக்கி. 9364 திங்கட்கிழமை செய்யக்கூடிய மதம் சம்பந்தமான விசேஷமான நற்காரியங்கள் எவை? காது குத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல், சாந்தி முகூர்த்தம், சீமந்தம் விருந்து உண்ணல் 9365 திங்கட்கிழமை செய்யக்கூடிய பொதுவான நல்ல காரியங்கள் எவை? ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபாரம் தொடங்குதல். 9366 செவ்வாய்க்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்? கிழக்கு 9367 செவ்வாய்க்கிழமை எதற்கு ஏற்ற நாள்? வாங்கிய கடனை அடைந்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல். 9368 செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் என்ன நடக்கும்? அது வருவாயை பெருக்கும் அதனால் வீட்டில் செல்வம் பெருகும். 9369 புதன்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்? மேற்கு திசையை நோக்கி. 9370 புதன்கிழமை ஆற்றக்கூடிய நற்பணிகள் எவை? புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளை தொடங்கலாம், வழக்குகள் சம்பந்தமாக சட்டத்தரணிகளை சந்தித்தல், புதுமனை புகுதுதல், கிணறு வெட்டுதல், உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், கல்வி கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்துண்ணல். கொம்பனித்தெருவை கோலாகலமாக்கி பக்தி பரவசமூட்டிய தங்கத் தேர்விழா இலங்கைத் திருநாட்டின் கொழும்பு மாநகரிலுள்ள கொம்பனித்தெரு ஆடிக் கிருத்திகை திருநாளான கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை பக்திபூர்வமான கோலகலமான நகரமாக காட்சி அளித்தது. வர்த்தக நிலையங்களும் தொழில் நிறுவனங்களும் நிறைந்து விளங்கும் நகரமாக கொம்பனித்தெரு திகழ்கிறது. அன்று இந்த நகரில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் கடைகளிலும் வாழைக்குலைகளுடன் வாழை மரங்கள் கட்டப்பட்டு மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒன்று விடாது அனைத்து தமிழ் கடைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் நிறைகுடம் என பூரண கும்பங்களும் பூஜைத் தட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆடிக் கிருத்திகையை வரவேற்று அன்று விடியக்காலையில் அடைமழை அவ்வப்போது பொழிந்து கொண்டிருந்ததால் அன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் தங்கத் தேரில் ஆரோகணித்து பவனி வந்து அருள்பாலிக்க புறப்படத் தயாராகும் போது மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம் வருண பகவானின் கடைக்கண் பார்வை பட சூரிய பகவான் வான வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கத் தொடங்கினார். இந்தத் தேர் திருவிழாவையொட்டி ஆலயத்தின் இராஜ கோபுரமும் மணிக் கோபுரமும் ஆலய உள் வீதி கோபுரங்களும் ஆலய உள் வீதிகளும் வெளி வீதிகளும் 20 ஆயிரம் மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வாழை மரங்களாலும் மாவிலை தோரணங்களாலும் நந்தி மற்றும் தேசிய கொடிகளாலும் ஆலயமும் ஆலயத்தின் வெளி வீதிகளும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. ஐந்து கரங்களையுடைய விநாயகப் பெருமானை போன்று ஐந்து யானைகள் ஊர்வலத்தில் முன்னிலையில் செல்ல முருகப் பெருமானின் வாகனமாகிய மயில்களைப் போல் அலங்கரித்துக் கொண்ட சிறுமிகள் சிலர் மயில் நடனமாடிக் கொண்டு சென்றனர். இதேபோன்று சிங்கங்களைப் போன்று வேடந் தரித்துக்கொண்ட சிறுவர்கள் அவர்களைத் தொடர்ந்து நடனமாடிக்கொண்டு வந்தனர். ஒளவையார், முருகப் பெருமான் போன்ற ஆன்மீக வேடந் தரித்த சின்னஞ்சிறு பாலகர்கள் பாலமுருகனைப் போன்று அடி மேல் அடி வைத்து நடந்துவர, வீர அனுமான்களைப் போல் வேடமிட்ட சிறுவர்கள் ஆடிக் கொண்டு வந்தனர். இலங்கையிலேயே நிறைய இந்து அமைப்புகள் உள்ளன. அந்த எந்த அமைப்புக்கும் இல்லாத ஒரு சிறப்பு, கொம்பனித்தெருவில் உள்ள பழம் பெரும் அமைப்பான சைவ முன்னேற்றச் சங்கத்துக்கு உள்ளது. அந்தசிறப்பு என்னவென்றால், அதற்கென பேண்ட் இசைக் கருவிகள் இருப்பது தான். இந்தத் தங்கத் தேர்த் திருவிழாவில் சைவ முன்னேற்றச் சங்க நால்வர் அறநெறி பாடசாலை மாணவர்கள் பேண்ட் வாத்தியம் இசைத்துக் கொண்டு செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது. முருகப் பெருமானுக்கே உரித்தான கரஹ ஆட்டம், கோலாட்டம், ஆகியனவும் பக்தர்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. கூந்தலில் மலர்களை சூடிய மங்கையர்கள் ஒன்றுகூடி ஒரு புறம் வடமிழுக்க, மறுபுறத்தில் வேஷ்டி அணிந்த மேலாடைகள் ஏதுமில்லா ஆண்கள் வடமிழுத்தனர். நாதஸ்வர வாத்திய கலைஞர்களின் நாதஸ்வர மேள இசையும் கொம்பனித்தெரு முழுவதையும் தமிழ் மற்றும் சைவ மணம் கமழச் செய்தன. இந்தத் தேர்த்திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது. தங்கத் தேர் பவனி வந்த வீதிகளில் உள்ள வர்த்தகர்கள் பக்தர்களின் தாக சாந்திக்காக பால் பக்கெட்டுக்களையும் குளிர்பானங்களையும் கொடுத்தனர். இந்த தங்கத் தேர் சிற்பசாரியார் சரவணமுத்து ஜெயகாந்தன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களால் அமைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இதன் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெற்றது. அதன் போது வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி இந்த புதிய தங்கத் தேரில் ஆரோகணித்து பவனி வந்தது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் மீது தீவிர பக்திகொண்ட அப்போதைய அறங்காவலர் சபை உறுப்பினரும் தற்போதைய ஆலய அறங்காவலர் சபை தலைவருமான திருக்குமார் நடேசன் தலைமையிலான தேர்த்திருப்பணிச் சபையினரால் இத்தேர் அமைக்கப்பட்டது. தமிழ் சைவமும் தழைத்தோங்கி வளரும் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருபவர் ஸ்ரீ கந்தசுவாமிப் பெருமான். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா வருடாந்தம் நடைபெறும் போது யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்த மக்களுக்கு அதில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை காண முடியாது கவலைப்பட்டனர். இவர்களது கவலையை போக்கும் வண்ணம் கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இந்த தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த தங்கத் தேர் பவனியில் மெய்சிலிர்க்க வைக்கும் பக்திப் பரவசமுட்டும் பரவைக் காவடிகளும் இடம்பெற்றன. சைவ முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த பூமிநாதன் தலைமையிலான குழுவினர் பஜனை பாடிவந்தார்கள். பொதுவாக பக்தர்கள் ஆலய உள் வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். இந்தத் தேர்த் திருவிழாவில் பக்தர்கள் தேர் பவனி வந்த வீதிகளில் அங்கப்பிரட்சணம் செய்து வந்தனர். சில பக்தர்கள் நேர்த்திக்கடன் வைத்து அலகு குத்தி வேல்களை தமது முகங்களில் குத்தி தேருடன் வலம் வந்தனர். தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து மகேஸ்வர பூசை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபையினர், நல்லூர் தேர்த் திருவிழா நடைபெறும் அதே காலகட்டத்தில் இவ்வாலயத்திலும் தேர்த்திருவிழாவை நடத்தத் தலைப்பட்டனர். - லிஷாலி

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் இலங்கைத் திருநாட்டின் கொழும்புத் திருநகரில் கொம்பனித்தெரு எனும் பட்டினத்தில் அமைந்துள்ள ஆலயம், கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம். இந்த ஆலயம் 180 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. 1832 ஆம் ஆண்டளவில் கொழும்பு புறக்கோட்டை டாம் வீதியில் ஒரு சிறிய கட்டிடமொன்றில் இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. பெரியதம்பி என்ற சைவப் பெரியாருக்குச் சொந்தமான காணியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கத் தொடங்கினார். அன்று கொழும்பு டாம் வீதியில் முதன் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானின் திருவுருவச் சிலை 180 ஆண்டுகள் கடந்த பின் இன்றும் கொழும்பு கொம்பனித்தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பக்தர்களுக்கு அந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானை வழிபட்டு அருள் பெறக் கூடியதாக இருக்கிறது. இது பக்தர்களுக்கு கிடைத்த அரிய அரும்பெரும் பாக்கியமாகும். அன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் கொழும்புக்கு வருகை தரும் பக்தர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இந்த முருகப் பெருமானை வழிபட்டு அவன் அருளை பெற்றுச் செல்லத் தவறுவதில்லை. இதற்கேற்ற விதத்தில் இந்த ஆலயம் அமையப்பெற்றதே இதற்குரிய மூலகாரணமாகும். அக்காலத்தில் நடைபெற்ற யுத்தமொன்றில் கலந்துகொள்ளச் சென்ற இந்திய போர் வீரர்களும் தளபதி முதலானோரும் இவ்வாலயத்திற்கு வந்து பூசை வழிபாடு செய்து தாயகம் திரும்பியதாக கூறப்படுகிறது. டாம் வீதியிலிருந்த ஆலயத்தை நாடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தமையாலும் அன்று ஆட்சிபுரிந்த அரசாங்கத்திற்கு இந்த ஆலயம் அமைந்திருந்த இடம் தேவைபட்டதாலும் ஆலயத்தை இடமாற்ற வேண்டிய நிலை தோன்றியது. அந்த காலகட்டத்தில் சைவத்தொண்டில் சிறப்புற்று விளங்கிய பெரியார் அருணாசலம் பொன்னம்பலத்திடம் இடத்தை தெரிவு செய்து ஆலயத்தை அமைக்கும்படி அரசாங்கம் கோரியது. இதற்கமைய 1887 ஆம் ஆண்டு பெரியார் அருணாசலம் பொன்னம்பலத்தினால் தற்போது ஆலயம் அமைந்திருக்கின்ற கொம்பனித்தெரு கியூ வீதி வளவில் இந்த ஆலயம் கட்டுவிக்கப்பட்டதாக வரலாறுகள் சான்று பகிர்கின்றன. சிறியதாக இருந்த இந்த ஆலயத்தை, சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெரியளவில் கட்டுவித்ததுடன் இவ்வாலயத்திற்கு ‘கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்’ என்ற திருநாமத்தையும் சூட்டினார். கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தோடு இவ்வாலய நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று கவனித்து வந்தார். இவருக்குப் பின் இ. இராஜேந்திரா இவ்வாலய நிர்வாகத்தை கவனித்து வந்தார். இவரை தொடர்ந்து பலரது தலைமையிலும் அறங்காவலர் சபை நிர்வாகத்திலும் இவ்வாலயம் மென்மேலும் வளர்ச்சி பெற்று வந்தது. 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இவ்வாலயத்தில் புனராவர்த்தன அனாவர்த்தன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின் ஆலயத்திற்கு 81 அடி உயரமும் 7 தளங்களும் கொண்ட இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி 1988 ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பிக் கப்பட்டது. இராஜகோபுர திருப்பணியின் மற்றொரு அம்சமாக கோபுரத்தின் இரு மருங்கிலும் மணிக்கோபுரமும் மணிக் கோபுரமும் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 1991 மார்ச் 10 ஆம் திகதி அதற்கான அடிக்கல் நடப்பட்டது. அதனுடன் இணைந்த வகையில் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகளும் செய்யப்பட்டு 1993 மார்ச் 29 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஒரு தங்கத்தேர் அமைக்க வேண்டும் என்ற ஆலய திருப்பணிச் சபையினரின் விருப்பத்திற்கு அமைய சிற்பாசாரியார் சரவணமுத்து ஜெயகாந்தன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களால் தங்கத் தேரொன்று உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்ட விழா 1998 ஆகஸ்ட் 9 ஆம் திகதியன்று நடைபெற்றது. அதே ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதியன்று நடந்தேறிய தேர் திருவிழாவின்போது முருகப் பெருமான் புதிய தங்கத்தேரில் ஆரோகணித்து வீதியுலா வந்தார். சிறந்த முருக பக்தரும், மாமன்ற அறங்காவலர் சபை உறுப்பினருமான திருக்குமார் நடேசன் தலைமையிலான தேர்த் திருப்பணிச் சபையினரதும், க. பாலசுப்பிரமணியம் போன்ற செயல் வீரர்களின் உதவியுடனும் தேர்த் திருப்பணி வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த ஆலயத்தில் மீளவும் மேற்கொள்ளப்பட்ட திருப்பணி வேலைகளைத் தொடர்ந்து, மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான கோவில்கள் திருத்தியமைக்கப்பட்டு, இராஜ கோபுரமும் சிறப்பான வர்ணப் பூச்சுகளுடன் புதுப்பொலிவுகாணும் வகையில் அமைக்கப்பட்டு 2007 செப்டெம்பர் 16 ஆம் திகதியன்று சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தானத்தின் பிரதம குரு முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா நடைபெறும் அதேகால கட்டடத்தில் அதற்கு இணையாக கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கொழும்பு, கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் இந்த மகோற்சவத்தையொட்டி ஆலய கோபுரம் முதல் ஆலய உள்வீதி மற்றும் வெளி வீதிகள் என்பன 20 ஆயிரம் மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆலயம் ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது. ஆலயத்தின் தலைவர் திருக்குமார் நடேசன், செயலாளர் கந்தையா நீலகண்டன், பொருளாளர் வின்சேந்திர ராஜன், சொத்துரிமை செயலாளர் பீ. விமலேந்திரன், உப தலைவர் ஏ. எம். டி. தனநாயகம், அங்கத்துவ செயலாளர் கா. தில்லைநாதன் ஆகியோர் இந்த மகோற்சவத்தை சிறப்பாக நடத்தி வருகின்றனர். கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவம் கடந்த 2ஆம் திகதி துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகியது. இவ்வாலயத்தில் தொடர்ந்து காலையும் மாலையும் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. கடந்த முதலாம் திகதி காலை விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம், ஆகியவற்றுடன் இந்த பிரம்மோற்சவ கிரியைகள் ஆரம்பமாகின. அன்று மாலை அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம் என்பன நடைபெற்றன. கடந்த 2 ஆம் திகதி எல்லாம்வல்ல மூலமூர்த்திக்கு அபிஷேகம் பூஜை துவஜாரோஹண கிரியைகள், வசந்தமண்டப பூஜை ஆகியவற்றுடன் துவஜாரோஹணம் செய்யப்பட்டது. அன்று மாலை ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பவற்றுடன் சுவாமி வீதியுலா வருதல் இடம்பெற்றது. இதேபோல் கடந்த 3 ஆம் திகதியும் காலையும் மாலையும் ஸ்நபனாபிஷேகமும், ஸ்தம்ப பூஜையும், வசந்த மண்டப பூஜையும், சுவாமி வலம் வருதலும் இடம்பெற்றது. இன்று 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலையில் 8 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூ¨சு, சுவாமி வீதிவலம் வருதல் என்பன இடம்பெறும். ஆடி வெள்ளிக்கிழமையாகிய இன்று மாலை 7 மணிக்கு சப்பறத் திருவிழா, பஞ்சமூர்த்தி உற்சவம் என்பன நடைபெறும். அத்துடன் சுவாமி வெளி வீதி உலா வருதலும் இடம்பெறும். நாளை 11 ஆம் திகதி காலை 4 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை ஆகியன நடைபெற்று காலை 7 மணிக்கு எல்லாம்வல்ல அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தங்க ரதத்தில் பவனி வந்து அருள்பாலிப்பார். இந்த தங்க ரத பவனி நாளை காலை 7 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்டு, கியூ ரோட், ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, மலே வீதி, நியூஓல்ட் பெரி லேன், குமார ரத்னம் ரோட், கியூ வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும். 11 ஆம் திகதி வழமைபோல் மாலை 4 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன நடைபெற்று கார்த்திகை உற்சவம், பஞ்சமூர்த்தி உற்சவம் என்பன நடைபெறும். 12 ஆம் திகதி காலை 10 மணிக்கு வழமையான பூஜைகளுடன் தீர்த்த உற்சவம், யாக கும்ப அபிஷேகம் நடைபெறும். 12 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஸ்தம்ப பூஜையும், அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு துவஜா அவரோஹணம் (கொடி இறக்கம்) நவகதி விசர்ஜ்ஜனம், சப்தாவாணம் உற்சவம், சண்டேஸ்வரர் உற்சவம் ஆசீர்வாதம் குரு உற்சவம் என்பன நடைபெறும். 13 ஆம் திகதி காலை 8 மணிக்கு மஹோற்சவ பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும். 13 ஆம் திகதி மாலை 7 மணிக்கு பூங்காவனம், திருவூஞ்சல் என்பன நடைபெறும். இவ்வாலயத்தில் மஹோற்சவம் நடைபெறுகின்ற நாட்களில் தினமும் நண்பகலில் அன்னதானம் வழங்கப்படுவதுடன், இரவில் திருவமுது பிரசாதமும் வழங்கப்படுகின்றது. 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அபிஷேகம், வைரவர் மடை உற்சவம் என்பன நடைபெறுவதுடன் அன்று இரவு 7 மணிக்கு வைரவர் பூஜை நடைபெறும். மஹோற்சவ குரு ஆகம கிரியா ரத்தினம் சிவஸ்ரீ மணிஸ்ரீனிவாச குருக்கள் (ஆலய பிரதம குரு) தலைமையில் மஹோற்சவ கிரியைகள் நடைபெறுகின்றன. சிவஸ்ரீ கோபாலகிருஷ்ணக்குருக்கள் (ஆலய குருக்கள்), சிவஸ்ரீ சிவாக் குருக்கள் ஆகியோர் உதவி குருமார்களாக இந்த மஹோற்சவ கிரியைகளை தினமும் நடத்தி வருகின்றார்கள். சர்வசாதகம் வேதாகம திலகம், பிரம்மஸ்ரீ க, ஆனந்தகுமார சர்மா, சர்வசாதகம் செய்ய பிரம்மஸ்ரீ தீ. கோடீஸ்வரசர்மா, பிரம்மஸ்ரீ இ. செந்தில்நாத சர்மா, பிரம்மஸ்ரீ கே. நவனீத சர்மா, பிரம்மஸ்ரீ இராகவன் சர்மா ஆகியோர் பரிசாரகர்களாக கிரியைகளை நடத்தி வருகின்றார்கள். இவ் உற்சவ காலங்களில் பிரம்மஸ்ரீ ஸ்ரீவெங்கடேச சர்மா நளபாகம் செய்ய வி. நாகேந்திரன் குழுவினர் மங்கள வாத்தியம் இசைக்க. கொழும்பு சைவ மங்கையர் சங்கம் பஜனை பாடி வருவது குறிப்பிட த்தக்கது. கே.ஈஸ்வரலிங்கம்...

புதன், 8 ஆகஸ்ட், 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம் கல்யாண நாள் 9325) இரண்டு பெளர்ணமி அல்லது இரண்டு அமாவாசை ஒரே மாதத்தில் வருவது உண்டு. இந்த மாதத்தை என்ன மாதம் என்று அழைப்பார்கள்? மல மாதம் 9326) மல மாதத்தில் திருமணம் செய்யலாமா? கூடாது 9327) எந்தெந்த மாதங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது? சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 9328) இயன்றவரை எந்த காலத்தில் திருமணம் செய்வது நல்லது? சுக்கில பட்ச காலத்தில் 9329) திருமணம் செய்வதற்கு மிக மிக ஏற்ற கிழமைகள் எவை? புதன், வியாழன், வெள்ளி 9330) எந்தெந்த லக்கின நாள்களில் திருமணம் நடத்த வேண்டும்? ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுபலக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். 9331) எந்தெந்த திதிகளில் திருமணம் வைப்பது நல்லது? துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகள் தவிர்ப்பது நல்லது. 9332) எந்தெந்த காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்று கூறப்படுகிறது? அக்னி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது 9333) திருமணத்தின் போது குரு சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கலாமா? கூடாது 9334) திருமண நாள் மணமக்களின் சந்திராஷ்டம் தினமாக இருப்பது நல்லதா? இல்லாமல் இருப்பது மிக மிக முக்கியம். 9335) மணமக்களின் ஜனன நட்சத்திர நாளில் திருமணம் நடத்தலாமா? கூடாது 9336) திருமணம் வேறு எந்தெந்த நட்சத்திர நாட்களில் நடத்தக்கூடாது? மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23 ஆவதாக வரும் நட்சத்திர நாட்களிலும் திருமணம் நடத்தக்கூடாது. 9337) மணமக்களின் பிறந்த திகதி அல்லது கிழமைகளில் திருமணம் செய்யலாமா? கூடாது ஆடிக்கஞ்சி 9338) ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும் கூழ் ஊற்றுவதும் வழக்கம். இது ஏன் தெரியுமா? ஆடி மாதம் வீசக் கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். 9339) இதனை என்னவென்று கூறுவார்கள்? ஆடிக் கஞ்சி

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812