புதன், 5 டிசம்பர், 2018

ஆன்மீகம் என்பது கோயிலுக்கு நன்கொடை செய்வது மட்டுமல்ல **** நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது



மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு, பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும் அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வதும் மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல் இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது. உன்னை தவிர வேறு யாரும் கிடையாது. அனைத்தும் நீயாக இருக்கிறாய். இந்த உடலை நீயே வழிநடத்தி செல் என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால் இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக் கொள்கின்றனர். ஆனால் நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.

அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து படையலிட்டு மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து சதா சர்வ காலமும் அவனை நினைத்து எந்த செயல் செய்தாலும் அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து அதற்கான பலனை எதிர்பார்க்காமல் வாழ்ந்து வந்தால் மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உணவில் உள்ள தோஷங்கள்



நம்முடைய உயிரைத் தாங்குவது எது?
அன்னம்
உணவு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?
ஆம்
உணவு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் உண்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்காக சான்றோர்கள் என்ன சொல்லி வைத்திருக்கின்றனர்?
‘உணவில் ஆசாரத்தை கடைப்பிடி’ என்று

ஆசாரம் என்பதற்கு என்ன பொருள்? சுத்தம்

நாம் உண்ணும் உணவில் எத்தனை வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது?
ஐந்து
அந்த ஐந்து வகையான தோஷங்களும் எவை?அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம்

‘அர்த்த தோஷம்’ எதனால் வருகிறது?
நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே ‘அர்த்த தோஷம்.’

இங்கே ‘அர்த்தம்’ என்பதற்கு என்ன பொருள்?
‘பொருள்’

நிமித்த தோஷம் எதனால் ஏற்படுகிறது?
நாம் சாப்பிடும் உணவைச் சமைக்கும் நபர் நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர் நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் சமைக்கப்பட்ட உணவானது, நாய், எறும்பு, பல்லி, காகம் போன்றவற்றால் தீண்டப்படாமல் இருப்பதும் முக்கியம். உணவில் தூசி, தலை முடி, புழுக்கள் போன்றவையும் இருக்கக்கூடாது. மேற்கூறிய ஏதேனும் ஒரு குற்றம் இருந்தாலும் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ‘நிமித்த தோஷம்’ ஏற்படும்.

அசுத்தமான உணவு என்ன செய்யும்?
மன அசுத்தத்தை விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு என்ன செய்யும்?
தீமையான எண்ணங்களையே உண்டாக்கும்.

மனதில் நற்சிந்தனைகள் எழுவது யார் சமைத்த உணவால்?
நல்லவன் சமைத்த உணவால்

ஸ்தான தோஷம் எதனால் ஏற்படுகிறது?
எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சமைக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள், அற்ப காரியங்களுக்காக விவாதங்கள் போன்றவை நடந்தால் அதனால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அதே போல் கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், வழக்கு மன்றம் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

குண தோஷம் எதனால் ஏற்படுகிறது?
சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்களினால்

நாம் சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்கள் எப்படிபட்டதாக இருக்க வேண்டும்?
சாத்வீக குணமுடையதாக

சாத்வீகமான உணவுப் பொருட்கள் எவை?
பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை

புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளிட்டவை எப்படிபட்ட பொருட்கள்?
ராஜஸிகமானவை.

பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை எப்படிபட்ட பொருட்கள்?
தாமஸிகமானவை.

சாத்வீக உணவு எதைத் தருகிறது? ஆன்மிக முன்னேற்றத்தை

ராஜஸிக உணவு என்ன செய்கிறது?
உலக மாயையில் சிக்கும் உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய எதைத் தருகிறது?
தீய எண்ணங்களை வளர்க்கிறது.

சம்ஸ்கார தோஷம் என்பது எதனை?
உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்கும் உணவு வகைகள்.

உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்கும் உணவு வகைகள் எவை?
தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்கக் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. இவைதான் உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் என்ன சொல்லி வைத்தார்கள்?
அன்னை அல்லது மனைவியால் இல்லத்தில் சமைத்து பரிமாறப்படும் உணவை ஏற்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

முன்னோர்களின் சாபம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்



நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை வைத்து முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.

நமது பெற்றோர்கள் உயிரேடு இரு
க்கும் போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிக் பார்க்க வேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து அதற்குள் அவர்கள் அமராகி விட்டால் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை வருடா வருடம் நாம் தவறாமல் செய்ய வேண்டியது நமது தலையாக கடமையாகும்.

நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும்.

அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை அழைத்துமுறைப்பிடி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.

அப்படி செய்ய தவறிவிட்டால் நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினருக்கு ஏற்பட்டு விடுகிறது. நமக்கு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் இதோ...

அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால் அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்ல் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்று தெரிவித்தார்.

சிவனுக்கு ஆகாத பாவங்கள்

சிவனுக்கு ஆகாத பாவங்கள்

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை என்று பார்க்கலாம்.
மும்மூர்த்திகளில் சிவ பெருமான் சம்ஹார மூர்த்தியாக அறியப்படுகிறார். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். பொதுவாகவே ஈசன் தவறுகளை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்றும், அவருக்கு கோபம் வந்தால் பிரளயம் ஏற்படும் என்றும் காலங்காலமாக நமக்கு சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.ஆனால் உண்மையில் ஈசன் அன்பே உருவானவர். தன்னை யார் சிரத்தையுடன் வணங்கினாலும் அவர்களுக்கு அவரின் பரிபூரண ஆசி கிடைக்கும்.உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பார்.

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை தெரியுமா?

பிறன் மனை நோக்குவது ஆண்மையற்றது மட்டுமின்றி அது பாவச் செயலாகும். அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது நமது இந்து மத சாஸ்திரப்படி பாவமாகும்.

அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படுவதும் அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது கூட மகா பாவத்தில் அடங்கும்.

சுய நலத்திற்காக எளியவர்களின் வாழ்வை அழிப்பதும் அவர்களின் மீது வீண் பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத பாவம்.

ஒருவன் தன் வாழ்நாளில் தொடர்ந்து தீய வழியிலே செல்வது அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.

கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும் அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.

தனக்கு சம்பந்தம் இல்லாத இன்னொருவரைப் பற்றி அப்பட்டமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

வதந்திகளையும் தேவையில்லாத விஷயங்களையும் எல்லாரிடம் பரப்புவது அதனால் மற்றவர்களின் மனதை காயப்படுத்துவதும் மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

நமது இந்து சமயத்தில் சில உணவுகளை தவிர்க்க சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு நாம் தெய்வமாக மதிக்கும் கோமாதா என்று போற்றப்படும் பசு. அவற்றை உண்பது பாவச் செயல்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்தும் மன்னிக்கமுடியாத பாவமாக கருதப்படுகிறது.

மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது மற்றும் அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவை சிவனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கும்.

மொத்தத்தில் நம்முடன் வாழும் நம் சக உயிருக்கு தீங்கு இழைக்காத ஒரு வாழ்வே நம்மை இறை தன்மைக்கு உயர்த்தக் கூடியது.

கலைஞர் ஈஸ்வரலிங்கத்திற்கு கௌரவம்



மேல் மாகாண கலைஞர்களை கௌரவிக்கும் விஷ்வாபிநந்தன 2018 விருதுக்காக கலைஞரும் இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் பொருளாளரும் தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகருமாகிய கே. ஈஸ்வரலிங்கம் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கான விருதை அதிதிகளாக கலந்து கொண்ட மேல் மாகாண கல்வி, கலாசார, கலை விவகார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச, மேல்மாகாண சபை உறுப்பினர் கே. டீ. குருசாமி ஆகியோர் வழங்குவதை காணலாம். இந்நிகழ்வு மேல் மாகாண அழகியல் கலை கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

வெள்ளி, 9 நவம்பர், 2018

ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது

இலங்கை  மேல் மாகாண சபை 2017-12-14ஆம் திகதி  கொழும்பிலுள்ள மேல் மாகாண அழகியற்கலை மண்டபத்தில் நடத்திய விழாவில் தமிழர் நற்பணி மன்றத் தலைவரும் கலைஞருமாகிய கே. ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது வழங்கப்பட்டபோது.....

திங்கள், 8 அக்டோபர், 2018

நடிகை ப்ரியா ஜெயந்திக்கு விருது

கொழும்பு பிரதேச சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட சாஹித்திய விழாவில் பழம்பெரும் சினிமா, நாடக
நடிகையான ப்ரியா ஜெயந்திக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வீணை இசை கச்சோி

கொழும்பு பிரதேச சபையினால் நடத்தப்பட்ட சாஹித்திய விழாவில்  தமிழா் நற்பணி மன்றத்தினால் மேடையேற்றப்பட்ட
வீணை இசை கச்சோியை படத்தில் காணலாம். திருமதி சுபாஷினி பிரணவனின் மாணவிகளான செல்விகளான எஸ். சனுக்கா, எஸ். சாய்ந்தவி, கே. கௌஷிகா, டீ. ஆர்த்தி, பீ. தேஜஸ்வினி ஆகியோார் இதில் கலந்து கொண்டனர். இதில் பிரபல கலைஞர் பீ. பிரம்மநாயகம் மிருதங்கம் வாசிப்பதை காணலாம்.

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்



மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.

துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் தர்மரும் சூதாட்டம் ஆடத் தொடங்கினார்.

என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார் என்றான் துரியோதனன். பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன் என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள்.

முருகன்

முருகன் அழித்த ஆறு பகைவர்களும் யார்?
ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?
அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்

இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?

வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில்

முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை?
திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை ஆகும்.

முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று பாடியவா் யார்?
அருட்கவி அருணகிரி நாதர்

யார் யாரின் கூட்டுக் கலவை முருகன்?
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம்

முருகனின் கையில் உள்ள வேல் எதனை குறிக்கும்?
இறைவனின் ஞானசக்தியை

விசாகன் என்று அழைப்பது யாரை?
முருகனை

விசாகன் என்றால் என்ன பொருள்?
மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

குக்குடம் என்று அழைப்பது எதனை?
முருகனின் கோழிக் கொடியை

கந்தனுக்குரிய விரதங்கள் எவை?
1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

முருகனின் மூலமந்திரம் எது?
ஓம் சரவணபவாய நம

முருகனை எத்தனை முறை வலம் வருதல் வேண்டும்?
ஒரு முறை

மந்திரங்கள்





தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள் எவை?

மந்திரமும் யந்திரமும்


மந்திரம் என்பது எத்தனை அங்கங்களைக் கொண்டது?
ஏழு


மந்திரத்தின் 7 அங்கங்களும் எவை?
1. ரிஷி 2. சந்தஸ் 3. தேவதை 4. பீஜம் 5. சக்தி 6. கீலகம் 7. அங்க நியாசம் என்பன.


மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் யார்?
ரிஷிகள்


ஒவ்வொரு மந்திரமும் முக்கியமான மூன்று விடயங்களைக் கொண்டுள்ளது. அந்த மூன்று விடயங்களும் எவை?
ரிஷி, தேவதை, சந்தஸ்



இங்கு ரிஷி என்பது யார்?

மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி,



தேவதை என்பது யார்?

அந்த மந்திரத்துக்குரிய தேவதை,



சந்தஸ் என்பது என்ன?

அந்த மந்திரத்தின் சொல்லமைப்பு



மந்திர ஜெபம் செய்யும் போது என்ன செய்ய வேண்டும்?

மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி.


மந்திரத்தை வெளியிட்ட ரிஷி யார்?
ஆதி குரு
அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்தவர் யார்?
மானிட குரு



ஆதி குரு, மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக என்ன செய்ய வேண்டும்?
வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும்.



இதனை என்னவென்று சொல்லுவார்கள்?

ரிஷி நியாசம்


நமக்குச் சமமானவரை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?
நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.



தேவதையை வணங்கும்போது எப்படி வணங்க வேண்டும்? இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.


சந்தஸ் என்பது என்ன?
மந்தரத்தின் சொல் அமைப்பு.



அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறை என்னவென்று அழைக்கப்படுகிறது?
அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.


தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவதை என்னவென்று அழைப்பர்?

தேவதா நியாசம்


பீஜம் என்பது எதனை?
மிகச் சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்தை பீஜம் என்பா்.


இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வந்தவை?
சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தவை



அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக எந்த நிலையில் இருந்தது?
அதி சூக்கும நிலையிலிருந்தன. இந்த ஒவ்வொரு சூக்குமும் ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா்.



சக்தி என்பது என்ன?
அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும்.



சக்தியின் வெளிப்பாடுகள் எவை? வீரியம் தேஜஸ், பலம் என்பன


கீலகம் என்பது என்ன?
சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கமாகும்.

கொலு கோலாகலம்




நவராத்திரிப் பண்டிகை என்
று ஒன்பது நாட்களைக் குறிக்கும் இப்பண்டிகையைக் கொலுப் பண்டிகை என்ற பெயரிலும் பொருத்தமாக அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச்சிறப்பு.
நவராத்திரி பண்டிகையின் நோக்கமே இக, பர வாழ்வின் உயர்வுதான். அந்த உயர்வினைப் படிகள் மூலம் விளக்குவதே கொலுவின் முக்கிய அம்சம். இந்தப் படிகள் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என ஒன்றைப்படையில் அமைந்திருக்க வேண்டும். அவரவர் இடம், பொருள் ஆகியவற்றின் வசதியைப் பொறுத்து இந்த எண்ணிக்கைகளில் படிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் பொம்மைகளின் வைப்பு முறையில் இயன்றவரை ஒன்பது படிக்கான முறையைப் பின்பற்ற வேண்டும்.
உயிரினங்கள் ஓருயிரி முதல் ஆறறிவு மனிதன்வரை வளர்ச்சி அடைவதையே இவை நினைவுபடுத்துகின்றன. பின்னர் மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதையும் நினைவுறுத்துகின்றன. இதற்காக சக்தியின் அம்சங்களை எண்ணிப் பூஜித்தால் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறலாம் என்பது ஐதிகம்.
நவராத்திரி கொலுவின் கதை
மகாராஜா சுரதா, எதிரிகளை வெல்வதற்குத் தனது குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி சுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தைச் சிலையாக வடிக்கிறான். அதை அலங்காரம் செய்து உண்ணா நோன்பிருந்து மனமுருக வேண்டுகிறான். காளி அவனது பூஜையால் மகிழ்வுற்று அம்மன்னனின் பகைவர்களை அழித்து ஒரு புது யுகத்தினை உருவாக்கி அளிக்கிறாள். தன் ரூபத்தை மண்ணால் செய்து பூஜித்தால் சகல சுகங்களும், செளபாக்கியங்களும் பெறலாம் என்று அம்பிகையான தேவி அருளுகிறாள்.
தேவி மகாத்மியம்
ஆதிபராசக்தியான தேவி அசுரர்களை அழித்து தேவர்களையும், பாபங்களை அழித்து மனிதர்களையும் காப்பவள். இவள் கொண்டிருக்கும் ரூபங்கள் மூன்று: தடைகளை நீக்கும் துர்க்கை, ஐஸ்வர்யங்களை அருளும் லஷ்மி, கல்வியையும், ஞானத்தையும் அருளும் சரஸ்வதி.
அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைக்கும் வழக்கத்தைக் கொண்டவர்கள். அவர்கள் வரம் கேட்கும்பொழுதே, பெண்கள் வலிமையற்றவர்கள் என்று நினைத்து, தாங்கள் எந்த ஆணாலும் கொல்லப்படக் கூடாது என்றே வரம் கேட்பார்கள். அதுபோன்ற வரங்களைக் கேட்ட அசுரர்கள் சண்டமுண்டன், ரக்த பீஜன், சும்ப நிசும்பன், மகிஷாசுரன். இவர்களை தேவி அழித்த நிகழ்வுகளே தேவி பாகவதம்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்கள் சக்தியினைத் திரட்டி அம்பாள் போர் புரியச் செல்லும்பொழுது உதவுகிறார்கள். சக்தி அனைத்தையும் கொடுத்துவிட்டதால், பொம்மை போல் ஆகிவிடுகிறார்கள். அதுவே கொலு என்ற ஐதீகமும் உண்டு.
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளைப் படி ஒன்றில் வைக்க வேண்டும். இது தவிரப் பொதுவாகக் கொலு வைக்கும் இல்லங்களில் பூங்கா அமைப்பது உண்டு.
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். அந்தக் காலத்தில் திண்ணைகளில் அமர்ந்து சோழி உருட்டி விளையாடுவது வழக்கம். இந்தச் சோழிகளையும், சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் இந்தப் படியில் வைக்கலாம்.
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு, சிறு பூச்சிகள், மண் புழு ஆகியவற்றின் பொம்மைகள்.
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு, பட்டாம்பூச்சி ஆகியவற்றின் பொம்மைகள்.
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை அழகுற வைக்கலாம்.
ஆறறிவு மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். சாதனையாளர்கள், உலகத் தலைவர்கள் ஆகியவற்றை வைத்தால், இல்லத்திற்கு வரும் விருந்தாளிகள் அச்சிலையில் உள்ளவர்களின் சாதனைகளை நினைவுகூர முடியும்.
மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் முதலானோரின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
தேவர்கள், அஷ்டதிக் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை மண் பொம்மைகளாக வைக்கலாம்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் சிலையுடன் அவ்வவர்களின் தேவியருடன் அமைந்திருக்குமாறு இந்த மேல் உச்சிப்படியில் வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதி பராசக்தி இருக்குமாறு அமைக்க வேண்டும்.

நவராத்திரி நாளை ஆரம்பம்


18ஆம் திகதி சரஸ்வதி பூஜை
19 ஆம் திகதி விஜயதசமி




ஒன்பது ராத்திரிகளை முன்கொண்டு முத்தேவிகளின் ரூபங்களில் அன்னை பராசக்திக்கு விழாவெடுப்பது நவராத்திரியாகும்.
அகில உலகையும் காக்கும் அன்னை பராசக்தியை பூஜித்து வழிபட்டு விழாவெடுத்து அவரது கருணை, ஆசீர்வாதம், அருள் கடாட்சம் தன்னை பெறும் பாக்கியமாக நவராத்திரி விழாவைக் கொண்டாடுவதில் இந்துக்கள் பெருமை கொள்கிறார்கள்.
வழக்கம் போலன்றி இம்முறை துர்க்கா, லக்ஷ்மிக்கு மும்மூன்று நாட்களும் சரஸ்வதிக்கு நான்கு நாட்களுமாக உள்ளது. 11ஆவது நாள் விஜயதசமியாக வருகிறது. இந்தவகையில் இம்மாதம் 09ஆம் திகதி நவராத்திரி ஆரம்பமாகி 19ஆம் திகதி விஜயதசமியன்று நிறைவு பெறுகிறது.
இல்லங்களிலும் ஆலயங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் கல்வியகங்களிலும் தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
அமைச்சு மட்டத்திலும் நாடாளுமன்றத்திலும் இவ்விழா கொண்டாடப்படும் அளவுக்கு நவராத்திரியின் மகிமையும் பெருமையும் மேலோங்கியுள்ளது.
பெண்கள் முக்கியமாக நவரத்திரி காலத்தில் விரதம் நோற்று பக்தி பரவசத்துடன் நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள். கன்னிப் பெண்கள் நல்ல வரன் கிட்ட வேண்டி நவராத்திரியில் வழிபட்டு வருகின்றார்கள்.
நவராத்திரி விழா நாடளாவிய ரீதியில் மாத்திரமா கொண்டாடப்படுகிறது, உலகளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அன்னை பராசக்தியின் அருள் கடாட்சம் வேண்டி இந்நவராத்திரியின் மகிமை, பெருமை குறித்து பக்தி சிந்தையுடன் கொண்டாடுவோமாக!

வெள்ளி, 5 அக்டோபர், 2018

முருகன்

முருகன் அழித்த ஆறு பகைவர்களும் யார்?
ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?
அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்

இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?

வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில்

முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை?
திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை ஆகும்.

முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று பாடியவா் யார்?
அருட்கவி அருணகிரி நாதர்

யார் யாரின் கூட்டுக் கலவை முருகன்?
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம்

முருகனின் கையில் உள்ள வேல் எதனை குறிக்கும்?
இறைவனின் ஞானசக்தியை

விசாகன் என்று அழைப்பது யாரை?
முருகனை

விசாகன் என்றால் என்ன பொருள்?
மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

குக்குடம் என்று அழைப்பது எதனை?
முருகனின் கோழிக் கொடியை

கந்தனுக்குரிய விரதங்கள் எவை?
1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

முருகனின் மூலமந்திரம் எது?
ஓம் சரவணபவாய நம

முருகனை எத்தனை முறை வலம் வருதல் வேண்டும்?
ஒரு முறை

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கீதை உபதேசம் பெறுவதற்கான தகுதி



நீதியின் வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனும்தான் கீதையை கேட்கத் தகுதியுடையவன்.

குருஷேத்திரப் போர் தொடங்கும் நேரத்தில் தன் எதிரில் நின்ற உறவுகளைக் கண்டதும் அர்ச்சுனன் போர்புரிய எண்ணம் இல்லாமல் மனம் தடுமாறினான். அவனுக்குள் எழுந்த எண்ணற்ற சந்தேகங்களுக்கு கிருஷ்ணர் கூறிய விளக்கங்களே ‘பகவத் கீதை’ என்ற புனித நூலாக உருப்பெற்று விளங்குகிறது. மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக ‘பகவத் கீதை’ நூல் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆனால் ஒரு கட்டத்தில் கிருஷ்ணர், தனக்கு போதித்த கீதையைப் பற்றியே அர்ச்சுனனுக்கு சந்தேகம் எழுந்தது. அவனது எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்தது. ‘நுட்பமான பல அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல, கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந் தெடுத்தார்? தத்துவ உபதேசங்களுக்குத் தகுதியான பிதாமகர் பீஷ்மரிடம் ஏன் அதைச் சொல்லவில்லை.

ஒரு வேளை பீஷ்மர் எதிர் முகாமில் இருந்ததால் அவரை தவிர்த்திருப்பாரோ?.. ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே! அவரை விட கீதையைக் கேட்க பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? வயதில் மூத்தவராகவும் தரும நீதிகளை உணர்ந்தவராகவும் இருக்கும் தருமனை, ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்? பீமன் பலசாலி மட்டுமல்லாது.. மிகச் சிறந்த பக்திமானும் கூட.. இதுபோன்ற நல்லவர்களை எல்லாம் விட்டு விட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டம் உள்ளவனும் உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்பவனும் ஆத்திரக்காரனுமான என்னை எதற்காக கீதை உபதேசம் கேட்க தகுதி உள்ளவனாக தேர்வு செய்தார்’ என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தான் அர்ச்சுனன்.

தன்னுடைய சந்தேகத்தை கிருஷ்ணரிடமே கேட்டு விட எண்ணினான். அதன்படி கிருஷ்ணரைச் சந்தித்து தன்னுடைய சந்தேகங்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்தான்.

அவனது சந்தேகத்தைக் கேட்டதும் கிருஷ்ணர் பதிலளிக்கத் தொடங்கினார்.

‘அர்ச்சுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையை உபதேசம் செய்யவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்தையும் உணர்ந்தவராக என்னால் கருத முடியவில்லை. சாஸ்திரங்களை உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிட முடியாது.

அந்த சாஸ்திரங்களை கடைப்பிடிப்பதால் தான் சிறப்பு வந்து சேரும். கெளரவர்கள் அதர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை அறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே சாய்ந் திருந்தார். அதே சமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசீர்வதிப்பதாகவும் கூறினார். இப்படி ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போடுவது சரியில்லாதது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக யாரிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மன் கீதை கேட்கத் தகுதியானவர் என்பதும் உன்னுடைய எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்து விட்டுப் பிறகு வருந்துபவர். தர்மன் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் அவன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தால் அவனால் விளைந்த விபரீதங்களே ஏராளம்.

ஆனால் நீ இவர்களைப் போன்றவன் அல்ல, சிறந்த வீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தைகளைக் கற்றவன் என்றாலும் கூட நீ முன் சிந்தனை கொண்டவனாக இருக்கிறாய். அதுதான் உன்னுடைய தனிச் சிறப்பு. நீ இப்போது வாதிடுவதில் இருந்தே தெரியவில்லையா? உன்னைவிட வயதிலும் அறிவிலும் பெரியவர்களான பலரை மதித்ததன் காரணமாகவே நீ என்னிடம் இப்போது கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறாய். குருஷேத்திர களத்தில் நின்றபோதும் உற்றார்- உறவினர், மதிப்பிற்குரிய பெரியவர்களை எல்லாம் எப்படிக் கொல்வது?, இந்த யுத்தமும், இழப்பும் தேவைதானா? அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியை பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும்’ என்று கலங்கியவன் நீ. பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்.

பழைய விரோதங்களுக்கு பழிவாங்க நினைத்திருந்தாலும் களத்தில் புகுந்தபோது போரே வேண்டாம் என்று எண்ணும் உள்ளம் உன்னிடம் இருந்தது. நீதி எது? அநீதி எது? என்று ஓரளவு சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந் திருக்கிறாய். இதுபோன்ற விஷயங்கள்தான் உனக்கு நான் கீதையை உபதேசிக்கக் காரணங்கள்.

நீதியின் வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனும்தான் கீதையை கேட்கத் தகுதியுடையவன். இதைத்தவிர நான் உனக்கு எந்த சிறப்புச் சலுகையும் வழங்கவில்லை’ என்றார் கிருஷ்ணர்.

தன்னை கிருஷ்ணர் கீதை கேட்க தேர்வு செய்த விதத்தை எண்ணி மெய்சிலிர்த்த அர்ச்சுனன் அடக்கத்தோடு அவரை வணங்கி நின்றான்.

‘தாமரை இலை தண்ணீர் போல்' இந்து மதம் கூறும் ஆசை




வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்கின்ற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன் ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
இலட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது. சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால் கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால் களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால் பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல! “இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.


அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” – என்பது திருக்குறள்.


ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்' என்று போதித்தது இந்து மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் இலாபமும் குறைவு. பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.
ஓம் ‘சரவணபவ’ எனும் ஆறு எழுத்துக்கள் கொண்ட மந்திரத்திற்கு உரியவராதலால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன?

ஷடாக்ஷரன்

கோல மயிலை தன் வாகனமாகக் கொண்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன?
சிகிவாகனன்

சிகி என்பது என்ன? மயில்

சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பராசக்தியிடமிருந்து ஞானவேலைப் பெற்று சூரனை வதைத்தார். அதனால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன? ஞானசக்திதரன்

தினைப்புனம் காத்த வள்ளியம்மையை காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன? வள்ளிகல்யாணஸுந்தரன்

பிரணவத்திற்குப் பொருள் சொல்லத்தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து பிரம்மனின் கர்வத்தை அடக்கியதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன?
பிரம்மசாஸ்தா

தேவேந்திரன் அளித்த சீதனமான ஐராவதம் எனும் வெள்ளையானையின் மீது ஆரோகணித்து அருளும் முருகனை என்னவென்று அழைப்பா்?
கஜாரூடன்

முருகனுக்குாிய வேறு பெயா்கள் என்ன?

1. அமரேசன், 2. அன்பழகன், 3. அழகப்பன், 4. பாலமுருகன், 5. பாலசுப்ரமணியம், 6. சந்திரகாந்தன், 7. சந்திரமுகன், 8. தனபாலன், 9. தீனரீசன் 10. தீஷிதன், 11. கிரிராஜன், 12. கிரிசலன், 13. குக அமுதன், 14. குணாதரன், 15. குருமூர்த்தி. 16. ஜெயபாலன், 17. ஜெயகுமார், 18. கந்தசாமி, 19. கார்த்திக், 20. கார்த்திகேயன், 21. கருணாகரன், 22. கருணாலயன், 23. கிருபாகரன், 24. குலிசாயுதன், 25. குமரன், 26. குமரேசன், 27. லோகநாதன், 28. மனோதீதன், 29. மயில்பிரீதன், 30. மயில்வீரா. 31. மயூரகந்தன், 32. மயூரவாஹனன், 33. முருகவேல், 34. நாதரூபன், 35. நிமலன், 36. படையப்பன், 37. பழனிவேல், 38. பூபாலன், 39. பிரபாகரன், 40. ராஜசுப்ரமணியம், 41. ரத்னதீபன், 42. சக்திபாலன், 43. சக்திதரன், 44. சங்கர்குமார், 45. சரவணபவன்.
46. சரவணன், 47. சத்குணசீலன், 48. சேனாபதி, 49. செந்தில்குமார், 50. செந்தில்வேல், 51. சண்முகலிங்கம், 52. சண்முகம், 53. சிவகுமார், 54. சிஷிவாகனன், 55. சௌந்தரீகன், 56. சுப்ரமண்யன், 57. சுதாகரன், 58. சுகதீபன், 59. சுகிர்தன், 60. சுப்பய்யா.
61. சுசிகரன், 62. சுவாமிநாதன், 63. தண்டபானி, 64. தணிகைவேலன், 65. தண்ணீர்மலயன், 66. தயாகரன், 67. உத்தமசீலன், 68. உதயகுமாரன், 69. வைரவேல், 70. வேல்முருகன், 71. விசாகனன், 72. அழகன், 73. அமுதன், 74. ஆறுமுகவேலன், 75. பவன்.
76. பவன்கந்தன், 77. ஞானவேல், 78. குகன், 79. குகானந்தன், 80. குருபரன், 81. குருநாதன், 82. குருசாமி, 83. இந்திரமருகன், 84. ஸ்கந்தகுரு, 85. கந்தவேல், 86. கதிர்காமன், 87. கதிர்வேல், 88. குமரகுரு, 89. குஞ்சரிமணாளன், 90. மாலவன்மருகன்.
91. மருதமலை, 92. முத்தப்பன், 93. முத்துக்குமரன், 94. முத்துவேல், 95. பழனிநாதன், 96. பழனிச்சாமி, 97. பரமகுரு, 98. பரமபரன், 99. பேரழகன், 100. ராஜவேல், 101. சைலொளிபவன், 102. செல்வவேல், 103. செங்கதிர்செல்வன், 104.செவ்வேல், 105. சிவகார்த்திக்,
106. சித்தன், 107. சூரவேல், 108. தமிழ்செல்வன், 109. தமிழ்வேல், 110. தங்கவேல், 111. தேவசேனாபதி, 112. திருஆறுமுகம், 113. திருமுகம், 114. திரிபுரபவன், 115. திருச்செந்தில், 116. உமைபாலன், 117. வேலய்யா, 118. வெற்றிவேல்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ யாள் அவதரித்த ஆடிப்பூரம் இன்று



மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து ‘சகலமும் அவனே’ என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.

விஷ்ணுவின் பாதம்பற்றி, அவர் புகழ்பாடிய அடியவர்கள் ‘ஆழ்வார்கள்’ என்று போற்றப்படுகின்றனர் அப்படிப்பட்ட பன்னிரண்டு ஆழ்வார்கள், தமிழ் மொழியில் இறைவனை போற்றிப் பாடிய பாடல்களே ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில் செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட அற்புத தெய்வீக மங்கை அவர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்கு பெருமாள் அடியவரான விஷ்ணு சித்தர் உருவாக்கிய நந்தவனத் தோட்டத்தில் மாசற்ற துளசிசெடியின் கீழ் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை பின்னாளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்ட விஷ்ணு சித்தர் எடுத்து கோதை என்று பெயரிட்டு வளர்த்தார். சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள் கோதை.

பெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா?’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.

ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்?’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ ஆனாள்.

ஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய அவளோ ‘நான் கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதி கொண்டாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.

பெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல் அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார்.

அதன்படி மேளதாளம் முழங்க மகளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டதாக வரலாறு.

ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’.

ஆண்டாள் என்றாலே முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும் அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும். ஆண்டாள் கையில் உள்ள கிளி, மாதுளம்பூக்கள், மரவள்ளி இலைகள், நந்தியாவட்டை இலை, செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

ஆண்டாளிடம் இருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்ம மகரிஷிதான் கிளி ரூபத்தில் ஆண்டாளின் கைகளில் தவழ்வதாக ஐதீகம். பக்தர்களின் வேண்டுதலை இந்த கிளியே ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

மனிதர்கள் தூய பக்தியுடன் செய்யும் எந்த ஒரு செயலும் இறைவனின் கவனத்திற்குச் செல்லும் என்பதற்கு ஆண்டாளே சிறந்த சாட்சி.

மகாலட்சுமி

15616. மகாலட்சுமிக்கு உாிய வேறு பெயர்கள் என்ன?
சஞ்சலா, சபலா

15617. மகாலட்சுமியை சஞ்சலா, சபலா என்று அழைக்க காரணம் என்ன?
ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள் என்பதாலாகும்.

15618. லட்சுமி யாருடன் பிறந்தவள்?
பிரம்மனுடன்

15619. இருவர் நிறமும் என்ன?
செம்பொன் நிறமாகும்.

15620. லட்சுமிக்கு உாிய வாகனம் எது?
உலூகம்

15621. உலூகம் என்பது என்ன?
ஆந்தை

15622. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது எது?
சுக்கிர வாரம்

15623. சுக்கிர வாரம் என்பது என்ன?
வெள்ளிக்கிழமை

15624. சுக்கிரனின் அதிதேவதை யார்?
மகாலட்சுமி

15625. லட்சுமிக்கு ஏற்ற நாள் எது?
வியாழக்கிழமை மாலை

15626. வியாழக்கிழமை மாலையை என்னவென்று அழைப்பார்கள்?
குபேர காலம்

15627. லட்சுமியின் திருக்கரங்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது?
ஸ்வர்ண ஹஸ்தம்

15628. எல்லா லட்சுமிகளும் எந்த திஶக்கரங்களுடன் அருள்புரிகின்றார்கள்?
அபய வரத ஹஸ்தத்துடன்

15629. லட்சுமியின் பெருமையை விளக்குபவை எவை?
ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவையாகும்.

15630. செல்வத்தின் அதிபதி யார்? லட்சுமி

15631. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
செல்வம் இரட்டிப்பாக பெருகும்.

மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்


வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பால் குட பவனி இன்று திங்கட்கிழமை (13.08.2018) இடம்பெற்றது. ஆடிப்பூரத் தினமான இன்றைய தினம், பம்பலப்பிட்டி ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் காலை 6 மணி தொடக்கம் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று, பால் குட பவனி காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை காலை 8 மணிக்கு வந்தடைந்தது. பக்தர்களால் தலையில் சுமந்து வந்த பால் கொண்டு அன்னைக்கு பாலாபிஷேகம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் ஆகியன தொடர்ந்து இடம்பெற்றன. காலை 11 மணிக்கு மயூரபதி அன்னைக்கு ருதுசாந்தி வைபவம் என அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டுவிழா இடம்பெற்றது. அதன்போது புட்டு, களி, அடை மற்றும் வளையல்கள் முதலியன சுத்தி, நெய்வேத்தியம் படைத்து, சோடோபசார பூசைகள் மயூரபதி அம்பாளுக்கு இடம்பெற்றது.







செவ்வாய், 31 ஜூலை, 2018

அட்சய திரிதியை



அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் என்ன?
எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது,


இதற்கு உண்மையான அர்த்தம் என்ன? இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.


பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் எது? திரிதியை.


திரிதியை “அட்சய திரிதியை” ஆனது எப்படி?
அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் “அட்சய பாத்திரம்” போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை “அட்சய திரிதியை” என்று சொல்லும் வழக்கம் வந்தது.


“அட்சயம்” என்ற சொல்லுக்குாிய பொருள் என்ன?
இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல் அல்லது என்றுமே குறையாதது” என்னும் பொருளே “அட்சயம்”,


பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது எப்போது?
அக்ஷய திருதியை அன்று


பரசுராமர் அவதரித்தது எப்போது?
அட்சய திருதியையன்றுதான்.


அக்ஷய திருதியை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
நவன்ன பர்வம்


அக்ஷய திருதியை எந்த நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது?
ரோஹிணி நட்சத்திரத்துடன்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812