வெள்ளி, 18 அக்டோபர், 2013

கே. ஈஸ்வரலிங்கம் விரதங்கள் (10361) புராணங்களில் எத்தனை வகையான உபவாச விரதங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன? 27, (10362) அந்த 27 வகையான உபவாச விரதங்களையும் தருக 1. உமிழ் நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம். 2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல். 6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 8. மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 10. மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் அருந்தி உபவாசம் இருத்தல். 16. ஒருநாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 17. ஒருநாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல். 18. ஒருநாள் முழுவதும் பொரிமாவு புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடி செய்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்து மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 19. ஒருநாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல். 21. ஒருநாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல். 22. ஒருநாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல். 23. ஒருநாள் முழுவதும், அத்தி இளந்தளிகைகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 24. இருவேளை உணவுடன் உபவாசம் இருத்தல். 25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல். 26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக்கொள்ளாமல் உபவாசம் இருத்தல். உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கொடிமரம்

கே.ஈஸ்வரலிங்கம் (10323) கோயிலுக்கு கொடி மரம் அமைப்பது ஏன்? தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டு இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும். கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும். (10324) கொடி மரம் அமைப்பதால் ஏற்படும் வேறு நன்மை என்ன? கோயிலுக்கு அழகு தரும். (10325) கொடி மரத்தின் தண்டு எப்படி பட்டதாக இருக்க வேண்டும்? வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். (10326) கொடி மரம் எந்த மரங்களில் செய்வது உத்தமம்? சந்தனம், தேதாரு, செண்பகம், வில்வம், மகிழம். (10327) பலா, மா ஆகிய மரங்களில் கொடி மரம் செய்வதால் கிடைக்கும் பயன் எவ்வளவாக இருக்கும்? குறைந்த நன்மையை தருவதால் மத்திம பலன். (10328) கமுகு, பனை, தென்னை முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பதால் எந்தளவு பலன் கிடைக்கும்? மிக மிகக் குறைந்த நன்மையே கிடைக்கும். (10329) கொடி மரம் எத்தனை கணுக்கள் உள்ளதாய் அமைப்பது நல்லது? முப்பத்து மூன்று கணுக்கள் (10330) கொடிக் கம்பத்தின் எத்தனை பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர்? ஐந்தில் ஒரு பாகம். (10331) இதன் அடியிலிருந்து உச்சி வரை எத்தனை பாகமாக்குவார்கள்? ஏழு (10332) கொடி மரத்தை எந்தெந்த வடிவங்களில் அமைப்பர்? சதுர, கோண விருத்த (10333) கொடி மரத்தின் அடிப்பாகம் எந்த வடிவில் இருக்கும்? சதுரமாக (10334) இது எதனை உணர்த்துகிறது? இறைவனின் படைப்புத் தொழிலை (10335) இந்த பாகத்தை என்ன பாகம் என்று கூறுவார்கள்? பிரம்ம பாகம் (10336) பிரம்ம பாகத்துக்கு மேலுள்ள பாகம் எப்படி பட்டதாய் இருக்கும்? எண் கோணமாயிருக்கும் (10337) இது எதனை குறிக்கும்? இறைவனின் காத்தல் தொழிலை (10338) இதனை என்ன பாகம் என்று கூறுவர்? விஷ்ணு (10339) அதற்கு மேல் உள்ள பாகம் எந்த வடிவினதாக இருக்கும்? உருண்ட நீண்டதாக இருக்கும். (10340) இந்த உருண்ட நீண்ட பாகம் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? உருத்திரனை (10341) இது இறைவனின் எந்த தொழிலைக் குறிக்கும்? சங்காரத் தொழிலை (10342) ஆலயத்தில் மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது எது? கொடி மரம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812