திங்கள், 26 டிசம்பர், 2011

அறநெறி அறிவுநொடி




கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

இசைக் கலை

8846. தன்னை மறக்கச் செய்வது எது? கலை.

8847. தன்னை மறப்பது எது? இன்பம்

8848. தன்னை மறந்து இறைவனை நினைப்பது எது? பேரின்பம்.

8849. கவின் கலைகளுள் மிக நுட்பமானது எது? இசைக்கலை.

8850. இசை கலைக்கு ‘இசை’ என்ற பெயர் எவ்வாறு வந்தது?

உள்ளத்தோடு பொருந்துவதாலும் உயிர்களை வயப்படுத்துவதாலும்.

8851. இசைக் கலையை வேறு எவ்வாறு அழைப்பர்?
நாதயோகம்.

8852. காந்தருவ வேதம் என்று அழைப்பது எதனை?
இசைக்கலையை.

8853. தமிழை எந்த சுபாவத்தின் மொழி என்பர்?
இரக்க.

8854. மனமுருகுவதலால் தோன்றுவன எவை?
இரக்கமும் பக்தியும்.

8855. இசையறிந்து இசைபாடி இறைநாடும் இயக்கம் எப்போது வேரூன்றப்பட்டது?
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு.

8856. அன்போடு உருகி அகம்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே என்று பாடியவர் யார்? திருமூலர்

8857. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புரு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றிய என்று பாடியவர் யார்? பூதத் தாழ்வார்.

8858. மனத்தைப் பண்படுத்தும் இசை வகைகளுக்கு என்னவென்று பெயரிட்டனர்? பண்.

8859. பண் என்பது என்ன? பாடலின் ஒலி

8860. பாடல் வகைகளுக்கும் சீர் அமைப்புகளுக்கும் ஏற்ப அமைவது எது? பண்.

8861. ‘பண்’ என்பதற்கு பண் என்று பெயர் வரக் காரணம் என்ன?
எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தூக்கு ஆகிய
எட்டுவகைக் கிரியைகளால் பண்ணப்பட்டமையால்.

8862. ஐவகை நிலங்களும் எவை? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

8863. ஐவகை நிலங்களுக்கும் ஐவகை பண்கள் அமைந்தது எந்த காலத்தில்? சங்க காலத்தில்.

8864. குறிஞ்சி நிலத்திற்கு உரிய பண் எது? குறிஞ்சிப் பண்.

8865. முல்லைக்குரிய பண் எது? சாதாரி.

8865. மருதத்திற்கு உரிய பண் எது? மருதப் பண்.

8866. நெய்தலுக்கு உரிய பண் எது? செவ்வழி.

8867. பாலைக்கு உரிய பண் எது? பஞ்சரம்.

8868. பண்களை ஓதி வளர்த்தவர்கள் யார்? பாணர்.

8869. பண்முறையால் தொகுக்கப்பெற்று உரிய பண்களுடன் பாடப் பெற்றது எது?
பரிபாடல் நூற்பாக்கள்.

திங்கள், 19 டிசம்பர், 2011



கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

(மார்கழி)

8834. மார்கழி மாதத்தில் பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது எது?

மார்கழி நோன்பு

8835. மார்கழி நோன்பு என்று இதற்கு ஏன் பெயர் வந்தது?

மார்கழியில் நோற்பதால்

8836. மார்கழி நோன்புக்கு ‘பாவை நோன்பு’ என்று பெயர் ஏன் வந்தது?

கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதாலும் பாவை அமைத்து நோற்கப்படுவதாலும் ஆகும்.

8837. திருவெம்பாவை பாடியவர் யார்?

மணிவாசகப் பெருமான்

8838. திருப்பாவை அருளியவர் யார்?

ஆண்டாள்

8839. திருவெம்பாவையும் திருப்பாவையும் எந்த நோன்பை அடிப்படையாகக் கொண்டவை?

மார்கழி நோன்பை

8840. மார்கழி நோன்பை தமிழர்கள் எந்த காலத்திலிருந்து அனுஷ்டித்து வருகின்றனர்?

சங்க காலத்திலிருந்து

8841. மார்கழி நோன்பை பற்றி கூறும் சங்க கால நூல்கள் எவை?

பரிபாடல், நற்றிணை, ஐந்குறுநூறு, கலித்தொகை.

8842. பாவை நோன்பை அனுஷ்டிப்பதால் ஏற்படும் பலன் என்ன?

விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர்.

8843. திருவெம்பாவை நோன்பு எத்தனை நாட்கள் நோற்கப்படும்?

பத்து நாட்கள்

8844. தோழியர் ஒருவரை ஒருவர் துயில் நீங்கி எழுமாறு அழைக்கும் பாடல்கள் எவை?

திருவெம்பாவைப் பாடல்கள்

8845. திருவெம்பாவை காலம் எது?

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும்

8846. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் யாருக்கு இராக்காலம்?

தேவர்களுக்கு.

பஞ்சாங்க நாட்காட்டிகள்

மனதிற்கு இதம் அளிக்கும் மாதமாகவும், பக்தி பூர்வமான மாதமாகவும், திகழ்வது மார்கழி மாதமாகும். ஸ்ரீ ஆஞ்சநேய பகவான் அவதரித்த மாதமாகவும் ஆண்டாளின் அருமை பெருமைகளையும் எடுத்து இயம்பும் மாதமாகவும் திகழ்வது மார்கழி மாதமாகும்.

மார்கழி மாதத்திலே பக்தர்கள் தினசரிக் கலண்டர்களையும், மாதாந்த கலண்டர்களையும் பஞ்சாங்க கலண்டர்களையும் வாங்குவதற்காக தயாராகும் மாதமாகவும் மார்கழி மாதம் திகழ்கிறது. இலங்கையிலேயே கொழும்பு நகரினிலே தனிமனிதனாக நின்று தமிழ் இந்து பஞ்சாக கலண்டர்களை வருடாந்தம் அச்சிட்டு வெளியிட்டு வருபவர் வே. பாலேந்திரா. இவர் அச்சிட்டு வெளியீடும் பஞ்சாங்க கலண்டர்கள், நாட்காட்டிகள் இந்து விரத நாட்களையும், இந்து மத பண்டிகைகளையும், குருபூஜை தினங்களையும் ஷஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், சதுர்த்தி, ஏகாதசி, அமாவாசை, சங்கடஹரசதுர்த்தி போன்ற தினங்களையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டு வெளிவருவது இதன் சிறப்பம்சமாகும். காலத்திற்கு ஏற்ற விதத்திலே இந்து மத மற்றும் ஏனைய மதத் தெய்வங்களின் திருவுருவப் படங்களை, இந்த நாட்காட்டிகளில் பஞ்ச வர்ணங்களில் கண்களை கவரும் விதத்திலே மனங்களை இறைவனை நெஞ்சுருகி கைக்கூப்பி வணங்க வைக்கும் விதத்திலே தத்ரூபமாக தருவதில் யுனிலங்காஸ் கலண்டர்களுக்கு நிகரான நாட்காட்டிகள் இல்லை என்றே கூறலாம். இலங்கை முழுவதிலும் உள்ள பிரபல்யமான ஆலயங்களினதும் அதேபோன்று தமிழகத்திலுள்ள பிரபல்யமான ஆலயங்களினதும் உற்சவ தினங்களை ஆணித்தரமாக இந்த கலண்டர்களில் குறிப்பிட்டிருப்பதை காணலாம். 2012ம் ஆண்டு நாட்காட்டிகளில் சுபமுகூர்த்தங்களையும் கணித்து வெளியிட்டிருப்பது ஜோதிடரை நாடாமல் முகூர்த்த தினங்களை பக்தர்கள் தாங்களாகவே நிர்ணயித்து கொள்ளக் கூடியதாக உள்ளது. தமிழகத்திலே பிரபல்யமான ஜோதிட விற்பன்னர் முருகு பாலமுருகன் இந்த பஞ்சாங்க கலண்டர்களுக்கான முகூர்த்த தினங்களை கணித்து தந்திருப்பதிலிருந்து இந்த நாட்காட்டிகளின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மொத்தத்தில் ஒரு சிறிய தொகையை செலுத்தி வருடத்திற்கு ஒரு முறை வாங்குகின்ற இந்த நாட்காட்டிகள் வருடத்தில் 365 நாட்களும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது அதன் பெருமைக்கு நற்சான்றாகும். ராகுகாலம், எமகண்டம் சித்தம், அமிர்த்தம், மரணயோகம், கரிநாள் போன்ற இன்னோரன்ன விடயங்களையும் இந்த நாட்காட்டிகளில் நாம் கண்டு கொள்ளலாம். தங்கள் தங்கள் இஷ்ட்ட தெய்வங்களின் திருவுருவப் படங்களை பொறித்த இந்த நாட்காட்டிகளை இவர் வெறுமனே வர்த்தக ரீதியாக மட்டுமன்றி சேவை மனப்பான்மையுடனும் வெளியிட்டு வருவதால் இந்த நாட்காட்டி கொள்வனவு செய்வதன் மூலம் அவரது சேவை தொடர வழியமைத்து கொடுக்க எங்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

திங்கள், 12 டிசம்பர், 2011


கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8824. மாரியம்மனாக வழிபடும் ரிஷிபத்தினி யார்?

ஜமதக்னி ரிஷியின் மனைவியான ரேணுகாதேவி.

8825. கண்ணன் எந்த பாம்பின் மீது நடனம் ஆடினார்?

காளிங்கன்.

8826. தேவர்களின் குருவாக இருப்பவர் யார்?

பிருகஸ்பதி (வியாழன்)

8827. குதிரை முகம் கொண்ட பெருமாள் யார்?

ஹயக்ரீவ மூர்த்தி

8828. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் யார்?

நடராஜர் (கூத்து என்றால் நடனம்)

8829. விநாயகர் மீது சங்கரர் பாடிய பாடல் என்ன?

கணேச பஞ்சரத்னம்.

8830. வள்ளலாருக்கு அண்ணியாக வந்து சோறிட்ட அம்மன் யார்?

திருவொற்றியூர் அம்மன்

8831. சூரியனின் அம்சமாக குந்திக்கு பிறந்த பிள்ளை யார்?

கர்ணன்

8832. குடத்தில் இருந்து பிறந்ததால் அகத்தியரை என்ன என்று அழைப்பர்?

கும்பமுனிவர் (கும்பம் என்றால் குடம்)

8833. பாற்கடலைக் கடைந்த மலையைத் தாங்க விஷ்ணு எடுத்த அவதாரம் என்ன?

கூர்மாவதாரம் (ஆமையாகி மலையைத் தாங்கினார்)

தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய தேர்த்திருவிழா 23ஆம் திகதி




கொழும்பு - தெஹிவளை அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஸ்ரீமத் சந்திரசேரக சுவாமிகளின் தலைமையில் ஆரம்பமாக வுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஹோமத்துடன் கிரியாகால உற்சவம் ஆரம்பமாகும். இவ்வாலயத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9 மணிக்கு நவக்கிரஹ ஹோமமும் 15 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ நாகபூசனி, ஸ்ரீ வைரவர், ஸ்ரீ மஹாகாளி ஹோமம் என்பனவும் 16ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ துர்க்கா ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ குபேரன் பூஜை என்பன வும் 17 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஸ்ரீ முருகன், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை பூஜை என்பனவும் 18 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு சிவபூஜையும் 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீ தனவந்திரி ஹோமமும் 20 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஸ்ரீ மஹா விஷ்ணு ஹோமமும், சனி பெயர் ச்சி, 21 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ இராமர், ஸ்ரீ இலட்சுமணர், ஸ்ரீ சீதா, ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜை என்பனவும், 22 ஆம் திகதி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் பூஜையும் நடைபெறும். இங்கு எதிர் வரும் 23 ஆம் திகதி காலை 7.00 மணி க்கு தேர்த்திருவிழா நடைபெறும்.

அன்று விசேட மலர் அலங்காரத்து டன் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஆகிய மூர்த்திகளுடன் பக்தர்கள் வடம்பிடித்து வர திருத்தேர் பவனி ஆரம்பமாகும். இத்திருக்கோயிலில் இருந்து ஆரம்பமாகும் தேர்பவனி, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில வீதி, காலி வீதி, வழியாக பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயம் சென்று அங்கிருந்து காலி வீதிவழியாக டபிள்யூ. ஏ சில்வா மாவத்தை, ஹம்டன் ஒழுங்கை, கனல் வீதி, போதிருந்தராம வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும். அதனைத் தொடர் ந்து பச்சை சாத்தி பிராயச்சித்த அபிஷேகம் நடை பெறும்.

எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி விழா கடல் தீர்த்தத்துடன் ஆரம்ப மாகும்.

அன்று மு. ப. 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு 409 வலம்புரிச் சங்குகளினால் சங்காபி ஷேகமும் விசேட பூஜையும் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விஷேட வடைமாலை அலங்காரம், குருபாத பூஜை, திருவூஞ்ச லுடன் உற்சவ அருட்காட்சி நடைபெறும். எதிர்வரும் 27 ஆம் திகதி வைரவர் மடை நடை பெறும்.

உற்சவ தினங்களில் பகலில் அன்னதானம் வழங்கப் படும். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஸ்ரீ ஹனுமன், ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ வராஹிஸ்வரர், ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய பஞ்சமுகங்களினால் தெஹிவளை அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதன், 7 டிசம்பர், 2011

அறநெறி அறிவுநொடி


கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

கார்த்திகை தீபம்

8805. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர பெளர்ணமியன்று கொண்டாடப்படும் விழா எது?

கார்த்திகை தீபத் திருநாள்

8806. கார்த்திகை தீபத்திருநாள் எங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்?

திருவண்ணாமலையில்.

8807. ‘தொல்கார்த்திகைத் திருநாள்’ என்று கார்த்திகை திருநாளின் தொன்மையை தேவாரப்பதிகத்தில் பாடியவர் யார்?

ஞானசம்பந்தர்.

8808. கார்த்திகை விழாவின் சிறப்பை போற்றுகின்ற மிகப் பழைய இலக்கியங்கள் எவை?

அகநானூறு, நற்றிணை போன்ற நூல்களில்.

8809. சம்பந்தர் எத்தனையாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

ஆறாம்.

8810. இதனையும் பிற இலக்கியங்களையும் வைத்து பார்க்கும்போது கார்த்திகை தீபத்திருவிழா எவ்வளவு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது?

2500 ஆண்டுகளாக

8811. பன்னிரு ஆழ்வார்களில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் யார்?

திருமங்கையாழ்வார்.

8812. திருமங்கையாழ்வார் எதன் அம்சமாகத் தோன்றினார்?

வில்லின்.

8813. இந்த வில்லின் பெயர் என்ன?

சாரங்கம்.

8814. இந்த சாரங்கம் என்னும் வில் யாருடைய கையில் இருக்கும்?

திருமாலின்.

8815. திருமங்கையாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர் என்ன?

நீலன்.

8816. நீலன் யாரிடம் படைத் தலைவராக இருந்தார்?

சோழ மன்னனிடம்.

8817. நீலனின் வீரத்தைப் பாராட்டி சோழ மன்னன் என்ன செய்தார்?

ஆலிநாடு என்னும் பகுதியை கொடுத்து அரசனாக்கினான்.

8818. நீலனுக்கு திருமங்கையாழ்வார் என்ற பெயர் எவ்வாறு வந்தது?

திருமங்கை என்னும் தலைநகரை அமைத்து அதில் அரசாட்சி செய்ததால்.

8819. இவர் அடியார்களுக்கு அமுதிட்டது எவ்வாறு?

வழிப்பறி செய்து

8820. பெருமாள் எந்த கோலத்தில் வந்து இவரை ஆட்கொண்டார்?

மணமகன் கோலத்தில்

8821. ஆழ்வார்களில் அதிகமான பிரசுரங்களை பாடியவர் யார்?

திருமங்கை ஆழ்வார். பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம் திருநெடுத்தான்டகம்,

8822. திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறையும் என்னவென்று கூறுவர்?

பிரபந்தங்கள்.

8823. இந்த ஆறு பிரபந்தங்களையும் பாடியவர் யார்?

திருமங்கை ஆழ்வார்.

திங்கள், 28 நவம்பர், 2011



கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


8788) தாரம் என்ற சொல்லின் பொருள் என்ன?

மகிழ்ச்சி

8789) தாய்க்குப் பின் மனைவி என்று சொல்லாமல், தாய்க்கு பின் தாரம் என்று ஏன் சொல்லி இருக்கிறார்கள்?

தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதனால்தான்.

8790) ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது, அது என்ன தெரியுமா?

மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை ‘தாரம்’ என அழைப்பர்.

8791) இந்த மந்திரத்தை உச்சரிப்போர் அடையும் பயன் என்ன?

பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர்.

8792) ஆன்மிகத்தில் உயர்ந்த சந்தோஷம் எது?

முத்தியை அடைவது

8793) காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வதை என்னவென்று கூறுவார்கள்?

சூரிய நமஸ்காரம்

8794) இயற்கை வழிபாட்டில் முதல் வழிபாடு எது?

சூரிய வழிபாடு.

8795) உலகின் முதல் வழிபாடு எது?

சூரிய வழிபாடுதான். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது. பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப் பெருக்கில் வணங்கி நின்றான். இதுவே சூரிய வழிபாட்டின் தொடக்கமாகும்.

(கிரகங்கள்)

8796) வியாழன் என்ற குரு கிரகம் மனித உடலில் எதனை கட்டுப்படுத்துகிறது?

மூளையை

8797) மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும் வீணாவதற்கும் காரணமாக இருப்பது எந்த கிரகம்? சுக்கிரன்

8798) நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் கிரகம் எது?

சனி

8799) சுவாசத்தை கட்டுப்படுத்துவது எது?

புதன்

8800) செவ்வாய் கிரகம் நமது உடலில் எதனை ஆட்சி செய்கிறது?

இரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும்

8801) ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு எது குறைவாக இருக்கும்?

சிவப்பு அணுக்கள்

8802) இவ்வாறு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும் நபர் சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரை திருமணம் முடித்தால் என்ன நடக்கும்?

பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் சரியாக இருக்காது.

8803) லக்னத்தில் எந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் என கூறப்படுகிறது?

பொதுவாக லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால்

8804) செவ்வாயின் நட்புக் கிரகங்கள் எவை?

சூரியன், சந்திரன், குரு.

சனிப்பெயர்க்சி சிலன கூறும் இதழ்



வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் எதிர்வரும் 2011.12.21 ஆம் திகதி காலை 7.24 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

துலா ராசிக்கு இடம்பெயரும் சனி பகவான் 2012.03.26 ஆம் திகதி பின்னோக்கி மீண்டும் கன்னி ராசிக்குச் சென்று 2012.12.16 ஆம் திகதி பிற்பகல் 2.44 வரை துலா ராசியிலிலேயே சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி துலா ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில்,
மேஷ ராசிக்கு கண்ட சனியும்.
கடக ராசிக்கு அர்த்தாஷ்டமி சனியும்
கன்னி ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்
துலா ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்
விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்
மகர ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும்
மீன ராசிக்கு அஷ்டம சனியும்
டைபெறவுள்ளது.

இந்த சனிப் பெயர்ச்சியின் காரணமாக ரிஷபம், சிம்மம், தனுசு நேயர்கள் அனுகூலமான பலன்களை அடைவார்கள்.

மிதுனம், கும்பம் ராசி நேயர்களுக்கு மத்தியமமான பலன்கள் ஏற்படும்.

இவ்வாறு சனிப் பெயர்ச்சி பலன்கள் அக்கு வேறாக கணித்து திறம்பட தந்துள்ளார் தமிழ்நாடு, சென்னை, வட பழனி முருகு ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளரும் தமிழகத்தில் ‘நலம் தரும் ஜோதிடம்’ எனும் மாத இதழை வெளியிட்டு வரும் ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்.

இவர் கணித்துக் கூறியுள்ளதை தொகுத்து மாதாந்த, நாளாந்த பஞ்சாங்கக் கலண்டர்களை (நாட்கட்டிகளை) தனி மனிதனாக நின்று வருடாந்தம் வெளியிட்டு வரும் யுனிலங்காஸ் வே. பாலேந்திரா ‘சனிப் பெயர்ச்சி’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் மாதாந்த இதழ்களுக்கு சற்றும் சளைக்காத வண்ணம் அழகுற, சிறப்புற இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழகத்திலிருந்து கொண்டு வரும் பொருளொன்றை இலங்கையில் வாங்குவதாக இருந்தால் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் விலையில் மும்முடங்கு பெறுமதியான விலையை கொடுத்துத்தான் வாங்க வேண்டுமாம். ஆனால் இந்த சனிப் பெயர்ச்சி இதழ் 80 ரூபா என்ற மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆலயமொன்றின் மூலஸ்தானத்தில் கொலு இருக்கும் சனீஸ்வரனின் திருவுருவச் சிலையுடன் இராமர், லெட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் திருவுருப் படங்கள் இந்த இதழின் முன் அட்டையை அலங்கரித்திருக்கிறது.

சனி பகவானைப் பற்றியும் அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, ஜீவன சனி, ஏழரை சனி, விரய சனி, ஜென்ம சனி, பாத சனி என சனியின் வகைகளைப் பற்றியும் இவ்வாறான சனிகளின் பலாபலன்களையும் இவர் விரிவாக இந்த இதழில் கூறியுள்ளார். அதுபோல் சனி மாற்றத்தால் ஒவ்வொரு ராசிகாரருக்கும் ஏற்படக்கூடிய பலாபலன்களையும் இவர் கணித்துள்ளார். உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் என சகல பிரிவினருக்கும் இந்த சனிப் பெயர்ச்சியினால் ஏற்படும் பலாபலன்கள் இதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 21 நவம்பர், 2011

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்






(சந்திரன்)

8777) நவக்கிரகங்களில் தயிர், நுங்கு, பனி போன்று வெண்மையானவன் சந்திரன்

8778) சந்திரன் எதிலிருந்து தோன்றியவன்? பாற்கடலில்

8779) சந்திரனின் சின்னம் எது? முயல்

8780) சந்திரன் வேதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறான் ஸோமன்

8781) ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு ஜாதகருக்கு மூல பாலமாவது எது? சந்திர பலம்

8782) உடலுக்கு காரகனாவான் யார்? சந்திரன்

8783) ஜனன லக்னத்தைந் கொண்டு பலன்கள் சொல்லும் போது எந்த லகுன த்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது?

சந்திர சலக்னத்தை

8784) உலக வாழ்வுக்கு எது முக்கியம்? சரீரபலம் சரீர பலத்திற்கு எது அடிப்படை? மனவளம்

8785) சரீரபலம், மனவளம் இரண்டையும் அடைய தேவையானது எது? சந்திரன் பலன்

8786) நம் சுபீட்சங்களுக்கு தாயகமாக விளங்குபவன் யார்? சந்திரன்

8787) சந்திரன் எதற்கெல்லாம் காரகனாகின்றான்? கடல் கடந்த பயணத்திற்கு, கலை சுவை நிறைந்த ரசணைக்கு, அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு, நடுநிலைமை, நறுமணம், சுகபோகம்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூ'ணி அம்பாள் ஆலய திருப்பணிக்கு உதவி கோரல்

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் வேண்டுவார் வேண்டுவதை மெய்யன்பர்களுக்கு வாரி வழங்கும் திருத்தலமாகவும் சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுவதுமான நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் ஆகஸ்ட் மாதம் 29, 30, 31 ஆம் திகதிகளில் பாலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று திருப்பணி வேலைகள் பாரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகம முறைப்படி இவ்வாலய கும்பாபிஷேகம் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்திருப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தின் உட்பிரகார ஓட்டுக்கூரை பழுதடைந்துள்ளமையால் நிரந்தர சீமெந்துக் கூரையிட்டு ஓட்டினால் மேற்கூரை அமைத்தல்.

இந்த சீமெந்து கூரை திராவிடச் சிற்ப வேலைப்பாடுகளுடன் நவீனமயப்படுத்தப்படுவதுடன் பூவேலைப்பாடுகளுடனான தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

அம்பாளின் அற்புத அலங்காரத் தோற்றம் கொண்ட 80 திருவுருவச்சிலைகளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. ஆலய சுற்றுமதில் புதுப்பிக்கப்பட்டு 4 அடி உயரமும் 550 அடி நீலமும் கொண்ட கர்ணகூடு சாலகரதும் அமைக்கப்படும்.

ஆலய உட்பிரகாரத்துக்குள் நுழைந்து அண்ணாந்து பார்த்ததும் அம்பாளின் அருள் மகிமையும் அன்பும் அமைதியும் அனைவர் உள்ளங்களிலும் நிறைந்தோடும் வண்ணம் சித்திரவேலைப்பாடுகளுடன் 25 கமலங்கள் அமைக்கப்படவுள்ளன.

மணிமண்டபம் இளைப்பாற்று மண்டபம் என ஆலயத்தின் பெருமைகளை புலப்படுத்தும் வண்ணம் மண்டபங்கள் பலவும் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு பல்வேறு திருப்பணிகள் கூடிய விரையில் ஓரிரு மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டி இருப்பதால், இதற்கு உதவ விரும்புவோரிடமிருந்து உதவிகள் கோரப்படுகின்றன. இத் திருப்பணிகளை முடிக்க 5 கோடி ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. உதவிகளை பொருளாளர், ஸ்ரீ நாகபூசுணி- அம்மன் கோயில், நயினாதீவு” என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். அல்லது யாழ்ப்பாண இலங்கை வர்த்தக வங்கி (கணக்கு இல: 1060012330), கொழும்பு வர்த்தக வங்கி (01242628501), ஊர்காவற்றுறை இலங்கை வங்கி (007687860) வைப்புச் செய்யலாம்.

கிராண்ட்பாஸ், டிவாஸ்லேனில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மகரஜோதி பூiஜ



கொழும்பு, கிராண்ட்பாஸ், டிவாஸ்லேன் அருள்மிகு ஸ்ரீஞான வைரவர் சுவாமி தேவஸ்தானத்தின் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மகரஜோதி மண்டல பூஜைப் பெருவிழா கார்த்திகை மாதம் முதலாம் நாளன்று ஆரம்பமானது. இவ்வாலயத்தில் எதிர்வரும் 2011-01-15 ஆம் திகதி வரை 60 தினங்களுக்கு மண்டலபூஜை நடைபெறும்.

மண்டலபூஜை காலத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு இவ்வாலயத்தில் 18 விதமான விசேட பூஜைகள் நடைபெறும். இவ்வாலயத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி பம்பா கன்னிமூல கணபதி பூஜையும் 26ம் திகதி விஷேடதான்ய அலங்கார பூஜையும், 27ஆம் திகதி மாலை 5 மணிக்கு பால் அபிஷேகமும், 2011-12- 02 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு விஷேட த்ரவிய மஹா யாகமும் 2011-12-03 ஆம் திகதி மாலை 4 மணிக்கு விஷேட 108 சங்காபிஷேகமும் 2011-12-04ஆம் திகதி மணிகண்ட அலங்காரமும் 09ஆம் திகதி இராஜ அலங்காரமாக சமய சமூக சேவையாளர் கெளரவமும் இடம்பெறும். 10ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு அஷ்டோத்திதரசத (108) சங்காபிஷேகமும் 14 ஆம் திகதி புஷ்பாலங்கார பூஜையும் 17 ஆம் திகதி விஷேட விஷ¤க்கனி அலங்கார பூஜையும் இடம்பெறும்.

23 ஆம் திகதி தன அலங்கார பூஜை நடத்தப்பட்டு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். 24ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு சம்ஹார வேட்டைத்திருவிழாவும் 25 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு நெய் அபிஷேகமும் 30 ஆம் திகதி கற்பூர ஆழி ஜோதி பூஜையும் 2012-01- 01 ஆம் திகதி மாளிகைப்புரத்து மஞ்சமாதா பூஜையும் 04ம் திகதி பாதபூஜையும் 06 ஆந் திகதி கருப்பண்ணசாமி கருத்தசாமி பூஜையும் 07ம் திகதி ஸ்ரீ ஆஞ்சநேய பூஜையும் 15ஆம் திகதி மாலை 6.42க்கு மகரஜோதி பூஜையும் 16ஆம் திகதி ஸ்ரீ ஞான பைரவ மடையும் இடம்பெறும்.

2012- 01-28 ஆம் திகதி மாலை 7 மணிக்கு விசேட பூஜையின் நிறைவில் சபரிமலை பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாலயத்திலிருந்து எதிர்வரும் 2012-12-11ஆம் திகதி திருகோணமலைக்கும் 18 ஆம் திகதி ரம்பொடைக்கும் திருத்தல யாத்திரை மேற்கொள்ளப்படும். வியாகரண சிரோண்மணி சாகித்ய வியாகரணச்சாரிய பிரதம ஆதீன கர்த்தா பிரம்மஸ்ரீ இரா.

பால கிருஷ்ண ஐயர் சுந்தராம்பாள் தம்பதிகளின் நல்லாசியுடன் சர்வதேச இந்துமத பீடத்தலைவரும் ஜனாதிபதியின் இந்துமத இணைப்பாளருமான தேசபந்து சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார் ஜேபி தலைமையில் பூஜைகள் யாவும் இடம்பெறும்., இவ்வாலயத்தில் 2012-12-05 ஆம் திகதி வரை விரத முத்திரை, மணி மாலை அணிவிக்கப்படும். இது 25வது வருட சபரிமலை யாத்திரை என்பதால் உபயங்கள் செய்பவர்களுக்கு விசேட ஞாபகார்த்த சின்னங்களும் கெளரவங்களும் அளிக்கப்படும்

கொழும்பு, ஆமர்வீதி, பெரடைஸ் பிளேஸ்ஸ்ரீ மஹா காளியம்மன் கான அருள் மழை கீதம்






கொழும்பு மாநகரில் வர்த்தக நிலையங்களும் தொழிலகங்களும் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்புமிக்க ஆமர் வீதியில், பெரடைஸ் பிளேஸில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருபவள் ஸ்ரீ மஹா காளியம்பாள். மிகவும் பழமையான சின்னஞ்சிறு மடாலயமாக இருந்த இந்த ஆலயம், இன்று ஆகம விதிகளுக்கமைய அமைக்கப்பட்டவர் பெரும் ஆலயமாகத் திகழ்கிறது.

இங்குள்ள அம்பாளின் அருள் மகிமை உணர்ந்து இவ்வாலயத்தை நாடி வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து இவ்வாலயத்தை விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 02ஆம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன், ஆலய திருப்பணி வேலைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.

இங்குள்ள பக்தர்களினதும் இவ்வாலயத்தை நாடி வருகின்ற பக்தர்களினதும் உதவியுடன் சுமார் மூன்று கோடி ரூபா செலவில் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ரவி சங்கர் ஸ்தபதி பக்தியும் கலைவண்ணமும் மிளிரும் வண்ணம் இவ்வாலயத்தை அமைத்து வருகிறார். இவ்வாலயத்தில் திரிதள இராஜ கோபுரம் அமைக்கப்படுவதுடன், விசாலமான மண்டபமும் அமைக்கப்படுகிறது.

ஆகம விதிப்படி, மத ஆசாரப்படி கலை அலங்காரத்துடன் நவீன வசதிகளோடு தாராளமான இடவசதி கொண்டதாக அமைக்கப்பட்டு வரும் ஆமர் வீதி பெரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 2012-03-25ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

2012-03-23ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகும். 24ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.

2011-05-11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகப் பூர்த்தி நடைபெற்று 12ஆம் திகதி முத்தேர்த்திருவிழாவும் 13ஆம் திகதி பால்குட பவனியும் 14ஆம் திகதி வைரவர் மடையும் நடைபெறும்.

ஆலய முன்னாள் போஷகர் பிரதிஷ்டை சிரோன்மணி நவாலியூர் சாமி விஸ்வநாத குருக்களின் ஆசியுடன் அவரது புதல்வர் பிரதிஷ்டா பூஷணம் வெங்கட சுப்பிரமணியம் கும்பாபிஷேக கிரியைகளை நடத்திவைப்பார். ஆலய பிரதம குரு சுசீந்திர குருக்களும் இதில் கலந்துகொண்டு கிரியைகளை நடத்துவார்.

இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் 1996ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு “ஸ்ரீ மஹா காளியம்மன் கான அருள் மழை கீதம்” என்ற இறுவட்டு (விளி) ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் பின்னணிப் பாடகர்களான டி. எம். எஸ். பால்ராஜ், ஸ்ருதி, முகேஸ் ஆகியோருடன் சாம்பசிவமணிக் குருக்களும் இந்த இறுவட்டில் காளி அம்பாளின் அருள் மகிமையை உணர்த்தும் திருப்பாடல்களை பாடியுள்ளார். இந்த இறுவட்டில் அம்பாளின் புகழ்மணக்கும் ஏழு திருப்பாடல்கள் உள்ளன. ஜெய்ச்சா என அழைக்கப்படும் ஜெயச்சந்திரன் இதற்கு இசை அமைத்துள்ளார்.

கிராமத்து மண்வாசனை கமழும் வண்ணம் தென்னிந்திய பக்தி திரையிசைப் பாடல்களுக்கு ஒப்பானதாக இப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இறுவட்டு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு 200 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது.

அம்பாளின் புகழ் மணக்கும் இந்த இறுவட்டின் வெளியீட்டு விழா கடந்த 10ஆம் திகதி கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட்டில் நடைபெற்றது. கொழும்பு வரதராஜ விநாயகர் ஆலய அறங்காவலரும் தொழிலதிபருமான ஈஸ்வரன், கொழும்பு, முகத்துவாரம் ஸ்ரீ விஷ்ணு ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் தொழிலதிபருமான தேசமான்ய துரைசாமி, தொழிலதிபர் சுப்புராமன், பிரைட்டன் ரெஸ்ட் உரிமையாளர் செல்வராஜ் அருள் ஜுவலர்ஸ் உரிமையாளர் கணேச பெருமாள் ஆகியோர் இந்த இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறும் போது எல்லாம் வல்ல ஸ்ரீ மகா காளி அம்மனின் அருள் மணக்கும் மேலும் இரண்டு இறுவட்டுகளை (விளிக்களை) வெளியிடவுள்ளதாகவும் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார்.

இதுவரை ஆமர் வீதியெங்கும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருந்த ஸ்ரீ அம்பாளின் அருள்மகிமை இந்த இறுவட்டு மூலம் எல்லோரது உள்ளங்களில் மட்டுமன்றி இல்லங்களிலும் ஒலிக்க வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இறுவட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் அம்பாளின் அருள்மகிமையை பரப்ப உதவுவதுடன், ஆலய கும்பாபிஷேகத்துக்கும் உதவி செய்தவர்களாவீர்கள்.

திங்கள், 14 நவம்பர், 2011

அறநெறி அறிவுநொடி

(தீபம்)

8759) ஒளி எதனை குறிக்கிறது?

அறிவையும் ஞானத்தையும்.


8760) இருள் எதனை குறிக்கிறது?

அறியாமையையும் அஞ்ஞானத்தையும்.


8761) எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும் ஒளிமயமானவனாகவும் விளங்குபவன் யார்?

இறைவன்.


8762) தினசரி வீட்டில் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?

நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது.


8763) பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக விளங்கும் அதிகாலை, மாலை நேரங்களை என்ன காலம் என்று கூறுவார்கள்?

சந்தியா காலங்கள்.


8764) ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாக கருதப்படுபவை எவை?

எண்ணெயும் திரியும்.


8765) தீபம் மூலம் உணர்த்தப்படும் தத்துவம் என்ன?

தீபம் ஒளிரும் போது எண்ணெயும் திரியும் சிறிது சிறிதாக அழிவது போல் ஞானத்தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும் ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்பதையும் தீபம் மூலம் உணர்த்தப்படுகிறது.


8766) மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தீபம் ஏற்றிவிட்டு தொடங்குவது ஏன்?

ஞானாக்கினியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள்புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.


8767) இறைவன் ஒளிமயமானவன் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள நடத்தப்படும் திருவிழா எது?

திருக்கார்த்திகைத் திருவிழா.


8768) ஒளிதரும் சுடரைத் தாங்கும் பொருளை என்னவென்பர்?

விளக்கு


8769) நமது குறிக்கோள் தெளிந்த அறிவு கிடைக்க நம் முன்னோர் ஏற்பாடு செய்த வழிமுறைகளில் ஒன்று எது?

ஒளி வழிபாடு.


8770) ‘விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும்’ என்று கூறியவர்? திருமூலர்


8771) ‘தவராஜ சிங்கம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

திருமூலர்


8772) விளக்கினை ஏற்றிப் பிறவி வேதனையை அறுத்தவர் யார்?

கணம்புல்ல நாயனார்.


8773) தன் வீட்டுப் பொருட்களை எல்லாம் விற்றும் விளக்கேற்றுவதை தவறாமல் செய்துவந்தவர் யார்?

கணம்புல்ல நாயனார்.


8774) விற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இவர் என்ன செய்தார்?

வீடுகளில் கூரை போடுவதற்கு உதவும் கணம்புல்லை விற்று விளக்கேற்றி வந்தார்.


8775) ஒருநாள் கணம்புல் ஒன்றும் விற்கப்படாததால் இவர் எதனைக் கொண்டு விளக்கேற்றினார்?

கணம்புல்லைக் கொண்டு.


8776) கணம்புல் நீண்ட நேரம் எரியாமல் அணைந்துவிடும் என்ற எண்ணத்தில் இவர் என்ன செய்தார்?

தன் தலைமுடியை அவிழ்த்து எரித்தார்.

அகில இலங்கை சபரிமலை சாஸ்தாபீட மகரNஜhதி விழா



அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடம் நடத்தும் 29வது ஆண்டு 48 நாட்கள் மண்டல பூஜை மகரஜோதிப் பெருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் ஆரம்பமாகும். அன்றுகாலை 6 மணி முதல் மஹா கணபதி ஹோமந் தொடர்ந்து, விரத முத்திரை மாலை அணிதல் இடம்பெறும். அன்று முதல் தினமும் காலை 6 மணி முதல் திருப்பள்ளியெழுச்சி, ஐயப்பன் கவச பாராயணம், ருத்ரபாராயணம் என்பன நடைபெறும். மாலை 6 மணி முதல் ஸ்ரீ ஐயப்பன் திருவிளக்குப் பூஜை, ஸ்ரீ ஐயப்பன் கவச பாராயணம், விஷேட ஐயப்பன் பஜனை 18 படி விசேட தீபாராதனை, ஹரிவராசனம், நடை சாத்துதல், அருட் பிரசாதங்கள் வழங்கல் என்பன இடம்பெறும்.

பிரதி புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் விசேட நவோத்தர ஸஹஸ்ர (1008) மஹா சங்காபிஷேகம், விஷேட மலையாள பூஜை, அன்னதான பூஜை இடம்பெறும். புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணக்கு ஹரிவராசனம் இடம்பெறும்.

இவ்வாலயத்தில் 2011.12.04 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மஹிஷ சம்காரம் வேட்டைத் திருவிழாவும் எதிர்வரும் 09 ஆம் திகதி மாலை 5 மணிக்கு (உயிருள்ள) நாகராஜானுக்கு பூஜையும், 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு தீபஜோதி – தீச்சட்டி வழிபாடும், 18 ஆம் திகதி காலை 6 மணிக்கு பால் காவடிப் பெருவிழாவும் பால்குட பவனியும், 24 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மஹா யாகாரம்பமும் இடம்பெறும். இந்த மஹா யாகம் 24 ஆம் திகதி முதல் 9 நாட்களுக்கு இடம்பெறும்.

2011.01.01 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மஹாயாக பூர்த்தி, மஹா பூர்ணாகுதி, 02 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஐயப்ப சுவாமி ரதபவனிப் பெருவிழாவும் 2011.01.03 ஆம் திகதி மாலை 5.30 மணி முதல் தீர்த்தத் திருவிழாவும் 2011.01.05 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கருப்பண்ண சுவாமி பூஜையும் இடம்பெறும்.

கப்பித்தாவத்தை பிரம்மஸ்ரீ பா. ஷண்முகரெத்ன சர்மா, கனடா சாம்பசிவ சோமாஸ்கந்த சிவாச்சாரியார், இணுவில் சிவஸ்ரீ தானு மஹாதேவக் குருக்கள், அவுஸ்திரேலிய சிவஸ்ரீ இராமச்சந்திரன் குரு, திருகோணமலை சிவஸ்ரீ ரவிச்சந்திரக் குருக்கள் ஆகியோரின் ஆசியுடன் கிரியைகள் நடைபெறும்.

தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன 23வது குரு மஹா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை ஆதீன 2வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோரின் அருளுரைகளும் இங்கு இடம்பெறும்.

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையில் சாம்பசிவ ஸ்ரீ மணி கண்ட சர்மா பூஜைகளை நடத்துவார்.

ஆலய குரு சிவஸ்ரீ இ. சபாரெத்தினக் குருக்களும் இதில் கலந்து கொள்வார். பிரம்மஸ்ரீக்களான நித்தியானந்த சுதானந்த சர்மா, ந. ஜெகதீஸ்வர சர்மா, சி. பாலசுப்பிரமணிய சர்மா, மோகன காந்த சர்மா ஆகியோர் கா. சாதகாசிரியார்களாக விளங்குவார்கள். 2012.01.04 ஆம் திகதி மாலை 6 மணிக்கு குரு பீடாதிபதியின் 29 வது ஆண்டு பீடரோஹண விழா (குருபூஜை) நடைபெறும்.

ஸ்ரீ சாஸ்தா பீட ஆஸ்தான வித்துவான்களான இராஜமாணிக்கம் ரவிச்சங்கர் குழுவினரும் விமல் – சிவா குழுவினரும் என். புண்ணியமூர்த்தியும் மங்கள இசை வழங்குவார்கள்.

திங்கள், 31 அக்டோபர், 2011

கம்போடியாவில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில்








“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்ற வாக்கிற்கிணங்க உலகம் முழுவதும் நம்முடைய சமயம், கலை, பண்பாடு பரவியிருந்ததன் வெளிப்பாடே திருக்கோவில்கள்.

கம்போடியா நகரில் 1200க்கு மேற்பட்ட கோவில்கள் இந்து சமயக் கலாசாரத்தின் வெளிப்பாடாக ஓங்கி நிற்கின்றன.

உலகின் மிகப் பெரிய கோவிலாக விளங்குகிறது அங்கோர்வாட் (தினிமிறிலிஞி- தீதிஹி) கோவில் மேரு.

ஐந்நூறு ஏக்கர் சுற்றளவு நிலப்பரப்பில் 3 ஆயிரம் கோடி தொன் கருங்கல்லால், 10 இலட்சம் பணியாளர்களால் 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட திருக்கோவில் இது.

இரண்டாம் ஜெயவர்மன் (790 – 835) முதல் ஜெயவர்மன் பரமேஸ்வரா (1327) வரை உள்ள பல மன்னர்களால் கட்டப்பட்டவை.

திருக்கோவிலைச் சுற்றியும் அகழி. அடுத்து பிரகார மண்டபம். அதனுள் திருக்குளம். 60 படிகள் மேல் ஏறினால் அட்டதிக்கிலும், திக்குபாலகர்கள். மேலே 60 படிகள் ஏறினால் நான்கு மூலையிலும் சிவலிங்கங்கள், மையத்தில் அற்புதமான சிவலிங்கம் (தற்போது நூதனசாலையில் உள்ளது) 60 அடி விமானம், 500 ஏக்கரில் திருக்கோவில் அமைக்க எத்தனை ஆழம், அகலம் கொண்டு அஸ்திவாரம் செய்திருப்பார்கள். வெளவால் நெற்றி மண்டபத்தில் இராமாயணம், பாரதப் போர்கள், பீஷ்மர் அம்புப் படுக்கை, திருப்பாற்கடல் கடைதல், அப்ஸரஸ் பெண்களின் நடனம், மனித வாழ்வியல் நெறிகள் என கருங்கல் புடைப்புச் சிற்பங்கள் சமஸ்கிருத எழுத்து, கல்வெட்டு ஆகியவற்றை நினைத்துப் பார்க்கவே மனம் அதிசயிக்கிறது. மன்னனின் மனம் போல உயர்ந்து நின்ற திருக்கோவில் 200 ஆண்டுகளாக வழிபாடின்றி இருக்கிறது.

ஜப்பான், ஜெர்மன்காரர்கள் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பகிரஹத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் காட்சியகத்தில் இருக்கின்றன.

யாமும் சிவஸ்ரீ சிவக்குமார் பட்டர் (மதுரை சொக்கநாதப் பெருமானைத் தீண்டிப் பூசிக்கும் பேறு பெற்றவர்.

மலேசியா கோர்ட் மலைப்பிள்ளையார் கோவில் தலைமை அர்ச்சகராக உள்ளார்.)

இந்த அதிசய, அற்புத ஆலயத்தை நாமும் கண்டு தரிசித்து வந்தால் மேருவை வலம் வந்த புண்ணியம் கிட்டும்.

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8727) இலக்கியங்களில் முக்கியமானது எது?

வேதநூல்

8728)வாழ்க்கைக்கு மிக அவசியமான அனைத்தும் எதில் சொல்லப்பட்டுள்ளது.

வேதநூலில்

8729)இன்று மக்களிடையே வேதத்தைவிட செல்வாக்கு பெற்றுள்ளவை எவை?

புராணங்கள்

8730) கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், வானவியல், திருத்தலங்கள், விரதச் சிறப்புக்கள், பக்தியின் மேன்மை, வாழ்வின் ரகசியம் முதலியவற்றை உள்ளடக்கிய தத்துவ வடிவம் எது?

புராணங்கள்

8731) இந்த தத்துவ வடிவங்களை நிரம்பவே சொல்லி அழகு தமிழில் வடிவமைக்கப்பட்ட நூல் எது?

கந்தபுராணம்.

8732) முருகப்பெருமானின் பெருமையையும் ஆறுமுகக் கடவுளின் அருளின் அருமையையும் கூறும் நூல் எது?

கந்தபுராணம்

8733) மனிதன் செய்கின்ற குற்றங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

இரண்டு

8734 )இரண்டு வகையான குற்றங்களையும் தருக

கிரிமினல், சிவில்

8735) இராமாயணம் எதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது

கிரிமினல்

8736) இராமாயணத்தில் வரும் கிரிமினல் குற்றம் எது?

ஒருவனது மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்தி சிறை வைத்தது.

8737) மகாபாரத்தில் நடந்தது என்ன?

ஒருவன் சொத்தை இன்னொருவன் அபகரித்துக்கொண்டு ஏமாற்றியது

8738) இந்த இரண்டு குற்றங்களையும் சொல்லி நீதி புகட்டும் நூல் எது?

கந்தபுராணம்

8739) வேதங்களின் விழுமிய கருத்துக்களை விளக்கத் தோன்ற இதிகாசங்களில் புராணங்களில் முதன்மையானது எது?

கந்தபுராணம்.

இந்தோனேசியாவில் ஆயிரத்துநூறு ஆண்டு பழைமையான இந்துக் கோயில் கண்டுபிடிப்பு






இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரண்டு இந்துக் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தோனேசியாவில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் கட்டுவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது இக்கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் உள்ள இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் தொடங்கின. அத்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரச தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு சிறிய கோவில்கள் வெளிப்பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இந்துக் கோவிலில் இந்து மத வழிபாட்டுச் சின்னங்களும் உள்ளன.

விநாயகர் சிலை, லிங்கம், யோனி பீடம், பலிபீடம் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் சேதம் அதிகமில்லாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ. தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக்கிறது.

இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால்தான் இந்தக் கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சிலைகள் அனைத்தும் தொல்பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆய்வாளர்களின் தகவல்களின்படி ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, “கடாரம் கொண்டான்” என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டான்; மேலும் அவன் முன்னேறி இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு.

திங்கள், 24 அக்டோபர், 2011



கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


(இசை)


8717) வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறந்த நிலையை என்ன வென்று கூறுவார்கள்?

ஆலாபனை

8718) இசை என்பது இறைவனின் வடிவம் என்று எது கூறுகிறது?

மாண்டூக்ய உபநிஷத்

8719) நாதம் என பொருள்பட கூறுவது எதனை?

இசையை

8720) இறைவனின் நாத வடிவம் எது? ப்ரணவம்

8721) சன்னியாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விளக்கப்பட்டு இருப்பது என்ன?

இசை என்ற பாடல் வடிவம்

8722) சன்னியாசிகள் எவற்றில் மூழ்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது?

பாடல், நடனம், நாடகம் ஆகியவற்றில்

8723) சன்னியாசிகள் ஏன் இவற்றில் ஈடுபடக் கூடாது என கூறப்பட்டுள்ளது?

இவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

8724) மதங்களையும் உருவங்களையும் கடந்த இறை நிலையை என்ன வென்பர்?

முழு முதற் கடவுளான பிரம்ம நிலை

8725) இவ்வாறு கூறியவர் யார்?

திருமூலர்

8726) தச அவதாரங்களில் இசைக் கருவியை கையில் வைத்திருக்கும் அவதாரம் எது?

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

திங்கள், 10 அக்டோபர், 2011

ஸ்ரீ ஞான பைரவர் ஆலயத்தில் சனீஸ்வர கிரகதோஷ நிவர்த்தி



கொழும்பு கிராண்ட்பாஸ், டவாஸ் லேன் அருள்மிகு ஸ்ரீ ஞான பைரவ சுவாமி தேவஸ்தானத்தில் புரட்டாதி மாத கடைசிச் சனிக்கிழமையாகிய எதிர்வரும் 2011.10.15ஆம் திகதி மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை சனீஸ்வர கிரகதோஷ நிவர்த்திக்காக விசேட மஹாயாகம் நடாத்தப்படவுள்ளது.

சாகித்திய வியாகரணாச்சார்ய பிரம்மஸ்ரீ ச. சிரா பாலகிருஷ்ண ஐயரின் நல்லாசியுடன் ஸ்ரீ ஐயப்ப சேவாபீட பீடாதிபதி தேசபந்து சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் தலைமையில் இந்த யாகம் நடத்தப்படும். சனி திசை, சனி புத்தி, சனி பார்வை உள்ளோர் அனைவரும் தங்கள் பெயராலும் குடும்பத்தவர் வியாபார, ஸ்தாபன பெயராலும் சங்கற் பஞ் செய்து பவித்திரம்) தர்ப்பை அணிந்து இந்த முழுமையான யாகத்தில் கலந்து கொண்டு சனீஸ்வர தோஷ நிவர்த்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறநெறி அறிவு நொடி



கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8701) சைவம், வைணவம், பெளத்தம், சமணம் என அனைத்து சமயங்களுமே போற்றிக் கொண்டாடும் வழிபாடு எது?

சரஸ்வதி வழிபாடு


8702) தேவிபக்தர்கள் சரஸ்வதியை எதன் அம்சம் என்று வழிபடுகின்றனர்?

திரிபுரசுந்தரியின்


8703) சீவகசிந்தாமணி எந்த மதத்தின் இலக்கியம்?

சமண மத இலக்கியம்


8704) சீவகசிந்தாமணியில் முதல் தொகுதி யாரின் புகழை பாடுகிறது?

சரஸ்வதியின் புகழை


8705) சீவக சிந்தாமணியில் யாரின் கல்விச் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது?

சீவகனின்


8706) இதில் யாரின் நலத்தை எல்லாம் சீவன் பெற்றதாக கூறப்பட்டள்ளது?

நாமகளின்


8707) சீவக சிந்தமாணியின் நாமகளின் அருளை சீவன் பெற்றதாக யார் கூறியுள்ளார்?

திருதக்கத் தேவர்


8708)மணிமேகலை எந்த மதத்தின் காவியம்?

பெளத்த மதத்தின்


8709)மணிமேகலையின் ஆசிரியர் யார்? சீத்தலைச் சாத்தனார்


8710)மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார் சரஸ்வதியை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? சிந்தாதேவி

திங்கள், 26 செப்டம்பர், 2011

தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய நவராத்திரி விழா

தெஹிவளை, களுபோவில, ஸ்ரீ போதிருக்காராம வீதி, 3/1/1 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி எதிர்வரும் 28 ஆம் 29 ஆம் திகதிகளில் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கும் 30 ஆம், 01 ஆம், 02 ஆம் திகதிகளில் ஸ்ரீ இலட்சுமி அம்மனுக்கும் 03 ஆம் 04 ஆம், 05 ஆம் திகதிகளில் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள் நடைபெறும்.

எதிர்வரும் 06 ஆம் திகதி காலை 8 மணிக்கு விசேட பூஜை வழிபாடும் 10 மணிக்கு மானம்பூ விழாவும் 10.30 மணிக்கு வித்தியாரம்பமும் (ஏடு தொடக்குதல்) இடம்பெறும்.

அன்று பி. ப. 2.30 விசேட பூஜை நடத்தப்படுவதுடன் சகல தெய்வங்களுக்கும் தீபாராதனை செய்யப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் ஸ்ரீ துர்க்கா, ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி நகர வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த மஞ்சத் திருவிழா ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீ சரணங்கர வீதி வழியாக சென்று ஆஸ்பத்திரி வீதி, வில்லியம் மில் சந்தி வரை சென்று காலி வீதியூடாக ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோயிலுக்கு சென்று பின் காலி வீதி வழியாக டபிள்யூ. ஏ சில்வா மாவத்தை, ஹம்டன் ஒழுங்கை, கனல் ஒழுங்கை வழியாக ஆலயத்தை வந்தடையும்.

எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வைரவர் மடை நடைபெறும். இவை யாவும் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகளின் ஆசியுடன் இடம்பெறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

பிள்ளையார் கதை
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடு




இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆற்றும் பல்வேறு செயற்திட்டங்களுள் பல்துறை சார்ந்த நூற் பதிப்புக்களும் அடங்குகின்றன. அண்மையில் இத்திணைக்களத்தின் மூலம் “பிள்ளையார் கதை” எனும் சிறுகைநூலொன்று வெளியிடப்பட்டுள்ளதோடு இந்து ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள், இந்துப்பொது மக்கள் ஆகியோருக்கு இலவசமாக விறியோகிக்கப்படுகின்றது.

அழகிய நால்வர்ண விநாயகப் பெருமானின் அட்டைப் படத்துடன் இப்புத்தகம் அமைந்துள்ளது. நூலில் பிள்ளையார் கதை, கதைப் பொழிப்பு, போற்றித் திருவகவல், விநாயகர் அகவல், வருகைக் கோவை, காரிய சித்தி மாலை என்பன அடங்கியுள்ளன. திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் இந்நூலுக்கு வழங்கியுள்ள வெளியீட்டுரையில் இந்நூல் பரவலாகக் கிடைப்பதில்லை என்ற இந்து மக்களின் கோரிக்கைக்கு அமையவே திணைக்களத்தால் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பூரணையும் கார்த்திகை நட்சத்திரமும் கழிந்த மறுநாள் பிரதமை முதல் மார்கழி மாதச் சுக்ல பட்ச ஷஷ்டி ஈறாக இருபத்தியொரு நாட்கள் பிள்ளையார் கதைக் காப்பு இந்து ஆலயங்களில் விரதமாக அநுட்டிக்கப்படுவதாகும். இக்காலங்களில் பிள்ளையார் கதை ஆலயங்களில் படிக்கப்படுவதோடு பொருள் சொல்லி விளங்கப்படுத்தப்படும்.

பக்தர்கள் பிள்ளையார் கதையைப் பக்தி சிரத்தையோடு கேட்டு மகிழ்வர். இந்நூலில் அடங்கும் பிள்ளையார் கதையின் பாடல் வரிகளுக்குரிய பொழிப்பினை மிகவும் எளிய தமிழ் நடையில் சைவப் புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எழுதி வழங்கியுள்ளார்.

விநாயகப் பெருமானின் பக்தர்கள் பயன் பெறும் பொருட்டு திணைக்களம் இந்நூலை இலவசமாக விநியோகிக்கின்றது. இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் திணைக்களத்திற்கு நேரிற் சமுகமளித்து பெற்றுக்கொள்ளலாம்.

தபால் மூலம் பெற விரும்புவோர் 10 x 7 அங்குல அளவுள்ள கடிதவுறையில் தமது சுய முகவரியை


எழுதி முப்பது ரூபா (30/=) பெறுமதியுடைய முத்திரையை ஒட்டி அதனை வேறொரு கடிதவுறையில் வைத்து,

பணிப்பாளர்,

இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,

248, 1/1, காலி வீதி, கொழும்பு - 04

என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இக்கடிதவுறையின் இடது பக்க மேல் மூலையில் “பிள்ளையார் கதை - இலவச வெளியீடு” என எழுதப்பட்டிருத்தல் வேண்டும்

கே. ஈஸ்வரலிங்கம்,
(தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்)


(புரட்டாதி சனி)

8674) ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இருவர்

8675) ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவரின் பெயர்களையும் தருக. இராவணேஸ்வரன், சனீஸ்வரன்.

8676) அவரவர் வினைக்கேற்ப பலன்களை வழங்குவதில் நீதி தவறாதவர் யார்?
சனீஸ்வரன்

8677) சனீஸ்வரனின் தினம் எது?
சனிக்கிழமை

8678) சூரியபகவானின் மனைவி யார்?
சாயாதேவி

8689) சாயாதேவியிடம் தோன்றியவர் யார்?
சனீஸ்வரன்

8680) சனீஸ்வரன் எப்போது தோன்றினார்?
புரட்டாதி மாத முதற்சனி வாரத்தன்று.

8081) சனிபகவானை வேறு எவ்வாறு அழைப்பர்?
சாயாபுத்திரன்

8682) சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு என்ன பலன் கிடைக்கும்?
நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும்

8683) சாயாபுத்திரனின் உடன்பிறப்புக்கள் யார்?
சாவர்ணிமனு, பத்திரை

8684) சனிக்கு அதிபதி யார்?
மகாவிஷ்ணு

8685) சனிக்கிழமைகளில் என்ன பாராயணம் செய்யலாம்?
விஷ்ணு சகஸ்ரநாமம்

8686) சனி பகவானுக்குரிய தானியம் எது?
கறுப்பு எள்.

8687) சனீஸ்வரன் பெற்ற பதவி என்ன?
கிரகபதவி

8688) சனீஸ்வரர் யாரை வழிபட்டு கிரக பதவி பெற்றார்.
காசிக்குச் சென்று விசுவாதிரை

8689) எந்த கோயில்களில் சனி வழிபாடு செய்வது நல்லது?
சிவன் கோயில்களில்

8690) சிவன் கோயில்களில் சென்று சனி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது என்று ஏன் கூறப்படுகிறது?
சனீஸ்வரன் தாசி விசுவாதிரை வழிபட்டு கிரகபதவி பெற்றதால்

8691) சனிதோஷம் உள்ளவர் கள் புரட்டாதி மாதத்து சனிக்கிழமைகளில் என்ன செய்ய வேண் டும்?
காலையில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டலமாகக் கட்டி எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) விட்டு விளக்கேற்றி அசர்ச்சனை செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

8692) சனீஸ்வரனை வழிபட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
சிவ விஷ்ணுக்களை வழிபட்டு பிரார்த்தித்து கோளாறு பதிகம், தேவாரம் ஓடி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்க வேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும்.

8693) சனீஸ்வரனின் வாகனம் எது?
காகம்

திங்கள், 19 செப்டம்பர், 2011

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் ...

கொழும்பு - 15, மட்டக்குளி, கதிரான வத்த, எக்கமுத்துபுர ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் அண்மையில் நடைபெற்றது. இவ் உற்சவம் கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அன்று தொடக்கம் உற்சவகாலம் முடியும் வரை தினமும் அம்பாளுக்கு ஸ்நபன அபிஷேகமும் வசந்த பூஜையும் நடைபெற்றதுடன் வேட்டைத் திருவிழா, சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை, தேர்த்திருவிழா, தீ மிதிப்பு தீர்த்த உற்சவம் திருவூஞ்சல் திருவிழா, வைரவர் மடை என்பன நடைபெற்றன.

வைரவர் மடையின் போது இவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உதவி நல்கி வருபவர்களும் ஆலய உற்சவத்தை சிறப்பு நடத்த உதவியவர்களும் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பா பாடி, வாழ்த்து மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய நிர்வாக சபையின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆலய பிரதமகுரு ரவீந்திர குருக்கள், சோமசுந்தர தியாகராஜா குருக்கள், கலாநிதி ஸ்ரீ ரங்குநாதன், சந்திரகுமாரன், அன்டனி, கே. பத்மராஜா, முருகையா, தர்மராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

அமரசேகரன் பஞ்சலிங்கம், யோகேந்ரன், மயில்வாகனம் திருமதி ரமேஸ், ராதாகிருஷ்ணன், ஸ்ரீதரன், பூசாமி கமலேஸ்வரன் ஆகியோர் சந்தன மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

இவ்வாலயத்தில் அறநெறி பாடசாலையை நடத்தி வரும் வள்ளுவர் அறநெறி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவருமாகிய கே. பத்மராஜா தலைமையில் ஆலய நிர்வாக சபையினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ஆலய நிர்வாக சபையினர் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக சேவையாற்றி வருவதால் இங்கு கெளரவிக்கப்பட்ட
கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8670. இறைவனை பூஜிக்க பூக்களை பயன்படுத்துவது ஏன்?

மலர்கள் அழகானவை பல வண்ணங்களில் பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் அவற்றின் வாழ்க்கையோ மிகவும் குறுகியது. அவை தம்மிடமுள்ள தேனை வண்டுகளுக்கு கொடுத்து விடுகின்றன. மலர்கள் குறுகிய கால வாழ்விலும் பிறருக்கு இனிமை தந்து தியாக உணர்வுடன் சேவை செய்கின்றன.


8671. ஆண்டவனுக்கு பழங்களை படைப்பதன் தத்துவம் என்ன?

பழங்கள் தம்மிடமுள்ள சத்துகளை மனிதனும் பறவைகளும் விலங்குகளும் வாழ உணவாகக் கொடுக்கின்றன. பழத்தை பறிக்காமல் விட்டுவிட்டாலும் அது கனிந்து உதிர்ந்து மண்ணுடன் கலந்து தனது சதையை புழுபூச்சிகளுக்கும் வித்தை மண்ணில் மீண்டும் உயிர்ப்பிக்கவும் கொடுத்து உதவுகிறது.

இயற்கையின் வடிவங்களில் தியாக உணர்வைக் காட்டும் அற்புதமான சின்னங்களாக மலர்களும் கனிகளும் விளங்குவதால்தான் ஆண்டவனுக்கு மிகவும் உகந்தவையாக கருதப்படுகின்றன.


8672. ஹோமம் என்பது என்ன?

நமக்கு மழையைக் கொடுத்து வெப்பத்தையும் தந்து வளமையும் செழுமையும் அருளும். தேவர்களுக்கு நாம் அந்த அருளை வேண்டிச் செய்யும் பிரார்த்தனை தான் ஹோமம்.


8673. ஹோம அக்னியில் பட்டுப்புடவை, ரத்தினம், நெல் போன்றவற்றைப் போடுவது விரயமாகாதா?

வயலில் நெல் விதையை அள்ளி வீசி விதைப்பதன் தத்துவம் புரியாத ஒருவரை அருமையான நெல் மணிகளை சேற்றில் வீசி வீணடிக்கிறார்கள் என்றுதான் சொல்வான். விவசாயி செய்யும் செயலால் ஒவ்வொரு நெல்லும் பலநூறு நெல் மணிகளைக் கொடுக்கும். அதனால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது அந்த விவசாயிக்கும் விஷயம் புரிந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்.

ஹோமத்தில் நாம் வேண்டிக் கொள்ளும் செல்வங்களை பாவனையாக இடும் போது அதுபல மடங்காக நமக்கு பிரதிபலனை அளிக்கிறது. எனவே அது வீணாவதும் இல்லை விரயமாவதும் இல்லை.

திங்கள், 5 செப்டம்பர், 2011


கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர், ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

8653) திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் வாழை மரம் கட்டுவது ஏன்?

மனிதன் தலைமை பெற வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு பல வழிகளிலும் பயன்தர வேண்டும் என்றும் அவன் குலம் வழியாக தழைக்கவும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் சுபகாரியப் பந்தலில் வாழை மரம் கட்டுகின்றனர்.

8654) முக்கனிகளுள் எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடிய கனி எது?

வாழை

8655) வாழையின் சிறப்பியல்பு என்ன?

வாழை தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு கனி தரும்.

8656) மணமக்களை வாழ்த்தும் போது எவ்வாறு வாழ்த்துவார்கள்?

ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும்.

8657) நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை எவை?

உப்பு, மஞ்சள் தூள், அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம்.

8658) உப்பு எந்த தெய்வத்தின் அம்சம்?

மகாலட்சுமியின்

8659) மஞ்சள் எந்த தெய்வத்தின் அம்சம்?

அம்மனின்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011


கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8643) இறைவனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

நீடிய வாழ்வு

8644) இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஆயுள் விருத்தி

8645) இறைவனுக்கு மாம்பழ அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

சந்தான பாக்யம்

8646) இறைவனுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஐஸ்வர்யம்/ இலட்சுமி கடாக்ஷம்

8647) இறைவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

வாழ்வில் ஒளி/ நன்மை ஏற்படும்.

8648) இறைவனுக்கு வெண்தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

மனசஞ்சலம் தீரும், கல்வி கேள்வி பெருகும்.

8649) இறைவனுக்கு அரலிப் பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

திருமணம் நடைபெறும்

8650) இறைவனுக்கு மருக்கொழுந்து பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

சுகபோகம் தரும், கல்வி, செல்வம் பெருகும்

8651) விபூதி எத்தனை வகைப்படும்?

விபூதி 4 வகைப்படும்

8652) அவை என்னென்ன?

கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம்

தெமட்டகொடை மாவில ஒழுங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்


இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்குவதும் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டதுமான ஸ்ரீலங்காபுரியின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகரின் தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் மஹாவெல ஒழுங்கையில் 150 ம் இலக்கத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் சுமார் 20 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.

இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரம்பத்தில் ஒரு பெரிய மரநிழலின் அடியில் கல்லை நாட்டி வணங்கி வந்தனர். காலப்போக்கில் அவ்விடம் பலகைக் கொட்டகையாக மாறியது.

காலங்கள் செல்லச் செல்ல 1990 இல் இக் கொட்டகை மடாலயமாக மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு விநாயகர், சிவலிங்கம், அம்பாள், வைரவர் ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நித்திய, நைமித்திய பூஜைகளும் விரதங்களும் விழாக்களும் சீராக நடந்து வந்தன.

இவ்வாலயத்தில் 2000 ம் ஆண்டு “வாணி வித்தியா” என்னும் பெயரில் அறநெறி பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறநெறி பாடசாலையில் தற்போது 75 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஒரே ஒரு பொறுப்பாசிரியருடனும் ஒரே ஒரு ஆசிரியருடனும் இப்பாடசாலை சிறப்பாக இயங்குகிறது.

2005 ஆம் ஆண்டு இப்பகுதியின் சுற்றுப் புறச் சூழல் அபிவிருத்தி செய்யப்பட்டது. குறிப்பாக வீதி அபிவிருத்தி, மேம்பாலம் அமைப்பு, மாடி வீடமைப்பு திட்டங்கள் ஆகியன ஆரம்பிக்கப்பட்டன. இதனால், சேரிப்புற நிலங்கள் சதுப்பு நிலங்களாக மாறின. குடியேற்றங்கள் அதிகரிக்கப்பட்டன. இதனால் ஆலய அமைவிடம் பள்ளத்தாக்கானது.

கூரைகள், கட்டிட மதில்கள் வழியாக மழைநீர் ஒழுகும் அவல நிலை காணப்பட்டது. இந்த அவல நிலையைக் கண்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் ஒன்றுகூடி இவ்விடயத்தி இவ் ஆகம நியதிகளுக்கு ஏற்ப இராஜகோபுரத்துடன் விஸ்தீரமான ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். சுமார் 75 இலட்சம் ரூபா செலவில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

2006-2-3 ம் திகதி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயம் அமைக்கப்பட்டிருந்த இடம் முழுமையாக உடைக்கப்பட்டு இடத்தை விஸ்திரமாக்கப்பட்ட 2006-2-11 ம் திகதி தைப்பூசத் திருநாளில் அத்திபாரக் கல் நடப்பட்டது. ஆஞ்சநேயர் ஆலய ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமி பிரதான கல்லை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மூலஸ்தானம், அர்த்தமண்டபம், கட்டுமானப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதனோடு சுற்று புற சுவரும் கட்டப்பட்டதுடன் பொருளாதார பற்றாக்குறையால் வேலைகள் காலதாமதமாகின. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி வாயிற்கோபுரம் அமைக்க அடிக்கல் நடப்பட்டது.

இவ் விழாவில் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷணன் பிரதான கல்லை நாட்டி வைத்தார்.

இவ்விழாவில் கலந்து சிறப்பித்த அன்பர் ஒருவர் முழு கோவிலுக்கும் மேல் கொங்கிரீட் சிலப் செய்வதற்கு நிதி உதவி வழங்கினார்.

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், முன்னாள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி, மேல் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு கிழக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் தயாகாந்த பெரேரா ஆகியோரின் சிபாரிசுகளின்படி இப்பாரிய திருப்பணியை சகோதர மொழி சகோதரர்கள், ஆலய அறங்காவலர்கள், நலன்விரும்புகள் ஆகியோரின் உண்டியல், டிக்கட் விற்பனை, நிதி வசூல் மூலமும் பொருள் உதவி மூலமும் திருப்பணி வேலைகள் நடைபெற்றுவந்தன.

இவ்வாலய பரிபாலன சபையினருக்கு நல் வழிகாட்டியாக இருந்த கிராண்ட்பாஸ், ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சிவாசாரியார் சிவஸ்ரீ பாலரவி சங்கரின் (ஜனாதிபதியின் இந்து மத அமைப்பாளர்) நல்லாசியுடன் நடைபெற்று வந்தன. இராஜகோபுரம் இல்லாமல் சிறு சிறு வேலைகள் பொருளாதார பிரச்சினையால் செய்ய முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 5 வருட இடை வெளியில் சுற்றுப்புற சூழல் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு புதிய மாடி மனை வீடுகள், எஸ்கோன் ரெசிடன்ஸ், கனிய வள பெற்றோலிய அமைச்சு, உயரமான கட்டிடங்கள், மேம்பாலம் என பல கட்டிடங்கள் தோற்றம் பெற்றன. மஹாவெல ஒழுங்கையில் சுமார் 200 அடி தூரத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் பரப்பளவு 1300 சதுர அடியாகும்.

இவ்வாலய திருப்பணி வேலைகளை தமிழ் நாட்டைச் சேர்ந்த சிற்பாசிரியரான விஸ்வஸ்ரீ செ. ச. சந்திரகுமார் தலைமையிலான குழுவினர் திருப்பணி வேலைகளை செய்தனர். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக ஸ்ரீ சித்தி விநாயகர் மூலஸ்தானத்தை அலங்கரித்துக் கொண்டு இருந்த அம்பாள், விஷ்ணு, துர்க்கை, நவக்கிரகம், வைரவர், காளியம்மன் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் இங்கு திருக்கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேக கிரியைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. 25 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். 26 ஆம் திகதி காலை 7.15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் இடம்பெறும். கும்பாபிஷேக கிரியைகள் யாவும் பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ பா. ஷண்முககேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெறும்.

கே. ஈஸ்வரலிங்கம்

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

தேங்காய்


8634) ஆலயத்தினுள் அர்ச்சனை செய்தபின் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்கலாமா?

பார்க்க வேண்டாம்

8635) பூஜைக்கு கொடுக்கும் தேங்காய், பழம் மாறி வந்தால் அபசகுனமாக எடுக்கலாமா?

அபசகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

8636) சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது அதில் சகுனம் பார்க்கலாமா?

வேண்டியதில்லை

8637) சகுனத்திற்காக தேங்காய் உடைக்கும் பொழுது தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைந்தால் விளையும் பலன் என்ன?

இதுவரை குடும்பத்தில் இருந்த மனக் கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

8638) தேங்காயின் மேல் பகுதி (கண் உள்ள பாகம்) பெரியதாகவும் அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் விளையும் பலன் என்ன?

அதிஷ்டம் செல்வம் பெருகும்.

8639) தேங்காயின் கண் பாகம் சிறியதாகவும் கீழ்ப் பகுதி பெரியதாகவும் உடைந்தால் விளையும் பலன் என்ன?

பிரச்சினைக்குரிய விஷயங்கள் தீர்ந்து குடும்ப அமைதி பெருகும்

8640) தேங்காய் உடைக்கும் பொழுது அதில் ஒரு சிறு பகுதி தானாகவே விழுந்தால்

விளையும் பலன் என்ன?

அதிஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்

8641) தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் விளையும் பலன் என்ன?

பிரச்சினைகள் உருவாகும்.

8642) தேங்காய் அழுகிச் இருந்தால் என்ன?

நினைத்த காரியங்கள் தள்ளிப் போகும்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆடிவேல் ரதம் இன்று புறக்கோட்டையை வலம் வரும்



நகரம் என்பது வான் உயர்ந்த கட்டிடங்களையும் வண்ணமயமான வர்த்தக நிலையங்களையும் அனைத்து வசதிகளையும், வளங்களையும் கொண்ட ஒரு சுறுசுறுப்பான இடமாகும். எமக்குத் தேவையான அனைத்தையும் தேவையான நேரங்களில் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் நகர வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையாகத் தான் இருக்கும். இது ஓர் இயந்திரமயமான வாழ்க்கையாகத் தான் இருக்கும்.

இந்த இறுக்கமான வாழ்வுக்குள்ளும் இதயத்துக்கு இதமூட்டக் கூடியவையாக விளங்குபவை ஆலய திருவிழாக்கள். அதுவும் கடந்த 137 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் கொழும்பு நகரை மண்வாசனை கமழும் அழகிய கிராமமாக மாற்றி வந்தது ஆடிவேல் விழா. கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆடி மாதத்தில் கொழும்பில் ஆடிவேல் விழா என்றால் ஒரே ஊர்த்திருவிழா வாகத்தான் இருக்கும்.

கொழும்பு முதலாம் குறுக்குத்தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து அல்லது செட்டியார் தெரு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திற்கு ஸ்ரீ முருகப் பெருமானின் வேல் திருவிழாவின் தேர்த்திருவிழா சென்றடைந்து அவ் வாலயத்தில் இருக்கும் வரை ஆடிவேல் விழா பூசைகள் நடைபெறும்.

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆடிவேலின் தேர்த்திருவிழா இரவில் புறப்பட்டு ஆலயத்திற்கு திரும்பும் தினத்தன்று கொழும்பில் ஆங்காங்கே வாழ்கின்ற இந்துக்கள் மாட்டு வண்டிகளில் குடும்பம் குடும்பமாக ஏறி ஜல் ஜல் என்று சவாரியாக பம்பலப்பிட்டி ஆலயத்திற்கு வந்து ஆடி வேல் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு மீண்டும் மாட்டு வண்டிகளில் ஏறி கொழும்பு காலிமுகத்திடலுக்கு (மிallலீ பிaணீலீ) சவாரியாக வந்து சேருவார்கள். அன்று காலி முகத்திடல் முழுவதும் மாட்டு வண்டிகளால் மட்டுமல்ல பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும். காலிமுகத்திடலே ஒரு கிராமமாக உருமாறி இருக்கும்.

வேல் விழாவின் ரதபவனி மறுநாள் விடியற் காலை காலி முகத்திடலை வந்தடையும். அந்த ரத பவனி வரும் வரை மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்தவர்கள் முருகப் பெருமானை கண்டு திருவருளைப் பெற காத்திருப்பார்கள். அந்த ரதபவனியைக் கண்டபின் தான் வீடுகளுக்கு திரும்புவார்கள்.

அதன் பின் திருமுருகப் பெருமானின் ரதம் கொழும்பு புறக்கோட்டை எங்கும் பவனி வந்து புறப்பட்ட ஆலயத்தை சென்றடையும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை போன்று கொழும்பில் மீண்டும் ஆடிவேல் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அன்று இருந்த மாட்டு வண்டிகளை தவிர அனைத்தும் வழமை போல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நேற்று மாலை ஆடிவேல் விழா ரதம் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் காலிமுகத்திடலை வந்தடைந்தது. அங்கிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட ரத பவனி இன்று காலை முழுவதும் புறக்கோட்டை எங்கும் வலம் வந்து ஆலயத்தை அடையும்.

இன்று காலை 6 மணிக்கு காலிமுகத்திடலிலிருந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கார புருஷராக சித்திரத் தேரில் ஆரோகணித்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மாணிக்கூட்டு கோபுர சுறுற்றுவட்டம், மெயின் வீதி, சைனா வீதி, ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, மெயின் வீதி, நான்காம் குறுக்குத் தெரு, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு, கெயிசர் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு, ஒல்கொட் மாவத்தை, முதலாம் குறுக்குத் தெரு, பேங்ஷால் வீதி வழியாக தேவஸ்தானத்தை வந்தடைவார்.


கே. ஈஸ்வரலிங்கம்



ஆடிவேல் விழாவில் இன்று தீர்த்தோற்சவம் எல். ஆர். ஈஸ்வரியின் இன்னிசை கச்சேரி




ஆறுமுகனின் பன்னிரு திருக்கரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும் தனிச் சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்து வருவது சிலப்பதிகாரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. வேல் ஞானத்தின் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப்பெருமானை ஞானவேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி குருபரா உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கியுள்ளோம் எனக் கூறி அவரது நாவில் ஞானவேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் கந்தர் கலிவெண்பாவை பாடினார்.

வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலுக்கு விழா எடுப்பது வருடாந்தம் கொழும்பில் நடந்து வரும் ஒரு கைங்கரியமாகும்.

இது இன்று, நேற்று ஒன்று ஆரம்பித்தது இல்லை. 137 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடந்து வரும் ஒரு விழாவாகும். வருடாந்தம் ஆடி மாதத்தில் நடைபெறும் கதிர்காம உற்சவத்துடன் ஒட்டியதாக இவ்விழா நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. இலங்கைத் திருநாட்டின் தலை நகராம் கொழும்பு மாநகரிலே செல்வம் தழைத்தோங்கும் வர்த்தகர்கள் நிறைமிகு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம். இந்த தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா இவ்வாண்டு கடந்த 10 ஆம் திகதி காலை 7 மணியளவில் ஆரம்பமானது.

இவ்வாலயத்தில் கடந்த 11 ஆம் திகதி காலை 8.05 மணியளவில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துகுமார சுவாமிக்கும் விசேட பூஜைகள் நடத்தப்பட்டபின் உள்வீதி வலம் வருதல் இடம்பெற்றது.

அதன்பின் முதலாம் குறுக்குத்தெரு தேவஸ்தானத்திலிருந்து சித்திரத் தேர் ரத பவனி ஆரம்பமாகியது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட முருகப் பெருமான் மெயின் வீதி, கோட்டை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தார்.

நேற்று (12.08.2011) பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வேல் விழா சுவாமி வீற்றிருக்க ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு நவகலச அபிஷேகம் நடத்தப்பட்டதுடன் நேற்று மு. ப. 11.30 மணிக்கு வேல் விழாவுக்கு விசேட பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலை விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் விசேட சமய சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டன.

இன்று (13.08.2011) காலை 7 மணிக்கு வழமையான பூஜையுடன் கதிர்காம பதியின் மாணிக்க கங்கை யில் இருந்து எடுத்துவரப்பட்ட புண்ணிய நீரினால் தீர்த்தோற்சவம் நடத்தப்படும். இதன்போது ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சுவாமி மயில் வாகனக் காட்சி, ஆடிவேல் அர்ச்சனை என்பன நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகமும் சாயரட்சை பூஜையும் வேல் விழா அர்ச்சனையும் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் இடம்பெறும். இன்று மாலை 7 மணி முதல் திரைப்படப் புகழ் கலைஞர்கள் கலைமாமணி டாக்டர் எல். ஆர். ஈஸ்வரி, இளைய குன்னக்குடி வயலின் மணிபாரதி, டிரம்ஸ் ராஜா கலந்துகொள்ளும் இன்னிசைக் கச்சேரி இடம்பெறும்.

இலங்கைக் கலை வல்லுனர், மிருதங்க வித்துவான், லயஞானபூபதி க. சுவாமிநாதனுடன் இன்னிசை நாயகன் எம். மோஹன்ராஜின் அப்சராஸ் இசைக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் இதில் இடம்பெறவுள்ளது.

இவ்வாலயத்தில் நாளை 14 ஆம் திகதி காலை முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் விழா அர்ச்சனை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து திருவமுது போஜனம் வழங்கப்படும்.

நாளை மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு காலி வீதி ஊடாக பம்பலப்பிட்டி சந்தி கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக பின்னிரவு 12 மணிக்கு காலி முகத்திடலை அடைந்து பக்தர்களுக்கு அருட்காட்சி புரிவார்.

15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கார புருஷராக சித்திரத் தேரில் ஆரோகணித்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மாணிக்கூட்டு கோபுர சுறுற்றுவட்டம் , மெயின் வீதி, சைனா வீதி, ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, மெயின் வீதி, நான்காம் குறுக்குத் தெரு, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு, கெயிசர் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு, ஒல்கொட் மாவத்தை, முதலாம் குறுக்குத் தெரு, பேங்ஷால் வீதி வழியாக தேவஸ்தானத்தை வந்தடைவார்.



கே. ஈஸ்வரலிங்கம்


அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8626) ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கோயில்கள் எவற்றால் கட்டப்பட்டன?

செங்கல், மரத்தால்


8627) முதல் கற்கோயிலை எடுத்தவர் யார்?

மகேந்திரவர்ம பல்லவர்


8628) மகேந்திரவர்ம பல்லவர் எவ்வாறு கோயில்களைக் கட்டினார்?

மலையைக் குடைந்து செதுக்கி கோயிலாக்கினார்


8629) பாறைகளை துண்டுகளாக்கி கோயில் கட்டியவர் யார்?

இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்ம பல்லவன்.


8630) பாறைகளை துண்டுகளாக்க்கி எழுப்பப்பட்ட முதல் கோயில் எது?

காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயில்


8631) குன்றுகளைக் குடைந்து எழுப்பப்படும் கோயில்களை எவ்வாறு அழைப்பர்?

குடைவரைக் கோயில்


8632) பாறைகளை துண்டுகளாக்கி எழுப்பப்படும் கோயில்களை எவ்வாறு அழைப்பர்?

கட்டடக் கோயில்

8633) கட்டடக் கோயிலை வேறு எவ்வாறு அழைப்பர்?

கல்தளி, கற்றளி

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்


கொழும்பு -9 தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை, 150ம் இலக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 2011-08-26ம் திகதி காலை 6.15 மணிக்கு நடாத்த திருவருள்; கூடியுள்ளது.

எதிர்வரும் 2011.08.23ம் திகதி நடைபெறும் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆம்பமாகும். எதிர்வரும் 2011.08.25ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

சிவஸ்ரீ பா. சண்முகேஸ்வர குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெறும். கும்பாபிஷேக நிகழ்வுகளை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தன்று அன்னதானமும் வழங்கப்படும். விஷ்வஸ்ரீ சே.ச. சந்தணகுமார் ஸ்தபதி தலைமையில் ஆலயத் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தில் சித்தி விநாயகர் பெருமானுடன் சிவன், அம்மன், முருகன், மகா விஷ்ணு, தட்சணாமூர்த்தி, நவக்கிரகங்கள் ஆகிய பரிவார மூர்த்திகளின் திருவுருவட் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011


கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8619) ‘மங்கல விளக்கேற்றல்’ என்னும் சொற்தொடரில் மங்கலம் என்பதன் பொருள் என்ன?

நன்மை, நலம், காரியசித்தி, பொலிவு, அறம்.

8620) மங்கல விளக்கேற்றல் என்பதன் பொருள் என்ன?

மங்கலத்தைத் தரும் விளக்கை ஏற்றி வணங்குதல்.

8621) மங்கல விளக்கு ஏற்றுவதற்கு வைக்கப்படும் குத்துவிளக்கை எந்தப் புறமாக வைக்க வேண்டும்?

கிழக்குப் புறமாக

8622) விளக்கின் சுடர் ஒளியில் தென்படுவது யாருடைய வடிவம்?

சிவத்தின் வடிவம்

8623) மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து பின் உலர வைத்து தூள் செய்தால் கிடைப்பது என்ன?

குங்குமம்.

8624) மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பைக் கலந்தால் அது என்ன நிறமாக மாறும்?

சிவப்பு

இதனை என்னவென்பார்கள்?

ஆர்த்தி

8625) இவ்வாறு கரைத்த ஆர்த்தியை என்ன செய்வார்கள்?

அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் முன்பு அல்லது மங்கல நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றியபின் ஆரத்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள்.



திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8615) பூஜை ஆரம்பிப்பதற்கு முன் மணி அடிப்பது ஏன்?

அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர்தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம். எனவே ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டிவிட்டு பூஜையை ஆரம்பிப்பர்.

8616) ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி மணி அடிக்க வேண்டும்?

ஓடிப்போன துர் தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறு நாள் மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும்.


8617) துர்தேவதைகள் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று இருந்தால் என்ன?

அவை இருக்குமிடத்தில் தேவதைகள் இருக்க மாட்டார்கள்.


8618) கிராமங்களில் மார்கழி மாதம் அதிகாலையில் மணி அடித்து சங்கு ஊதி செல்வதால் ஏற்படும் நன்மை என்ன?

கிராமத்தில் உள்ள துர்தேவதைகள் ஓடிவிடும்.

திங்கள், 25 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8613 விட்டகுறை தொட்ட குறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?


பூர்வ ஜென்மத் தொடர்பையே விட்டகுறை தொட்ட குறை என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு அங்கு அநாதையாக விட்டு விட்டால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விடும் என்றும் கூறுகின்றனர்.

இது தவறான அர்த்தமாகும். தொட்டு வந்த துறை விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தக் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தாற்போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்ட குறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருளாகும்.


8614 ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்பதன் பொருள் என்ன?

ஆயிரம் முறை பொய் சொல்லி திருமணம் செய் என்பதே உண்மையான பழமொழியாகும். காலப் போக்கில் ‘போய்சொல்லி’ என்ற வார்த்தை பொய் சொல்லி என மாற்றப்பட்டுவிட்டது.

பழங்காலத்தில் சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர் அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள் பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று நல்ல வரன்தான். நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம் என சொல்லி வலியுறுத்துவர். இதைத்தான் ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய் என்று குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழி மருவி ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் எனக் கூறப்படுவதால் பலர் மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வருகின்றனர்.

திங்கள், 18 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(மண்டலம்)

8605) ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்?

48 நாட்கள்

8606) ஒரு தெய்வத்தை பூஜிப்பதாக இருந்தால் அதனைத் தொடர்ந்து எத்தனை நாட்கள் பூஜிக்க வேண்டும் என்பார்கள்?

48 நாட்கள்

8607) ஒரு தெய்வத்தை ஒரு மண்டலம் பூஜிக்க வேண்டும் என்று கூறுவதேன்?

சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள் ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும். அச்சுவினி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும். இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத் தொகையான 48 ஐ வழிபாட்டில் ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும் ராசிநாதர்களும் நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே மண்டல வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

(திரிபுண்டரம்)

8608) இறைவனை தியானித்து தண்ணீருடன் சேர்த்து குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக் கொள்வார்கள் இதற்கு என்ன பெயர்?

திரிபுண்டரம்

8609) இந்த மூன்று கோடுகளும் எத்தகைய பலனை அளிக்கக் கூடியது?

மூன்று வகை பாவங்களைப் போக்கவல்லது

8610) முதல் கோட்டில் அமைந்துள்ளவை எவை?

அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, கிரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை, மஹா தேவன்.

8611) இரண்டாவது கோட்டில் அமைந்துள்ளவை எவை?

உகாரம், தட்சிண அக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திர தேவதை, இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன்.

8612) மூன்றாவது கோட்டில் அமைந்துள்ளவை எவை?

மகாரம், ஆலஹனீயம், பரமாத்மமா, தமோ குணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலை நேர மந்திர தேவதை, சிவன்

தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருப்பணி

அவன் இன்றி அணுவும் அசையாது என் பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த இந்துக்கள் ஆதிகாலம் தொட்டு இயற்கைக்கு மதிப்பளித்து இயற்கையை போற்றி வணங்கி வருகின்றனர். உலகெங்கும் வாழ்ந்த இந்துக்க ளைப் போல் கொழும்பு, தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி மாவில ஒழுங்கையில் வாழ்ந்த இந்துக்களும் 1980 ஆண்டுக்கு முன்பிருந்து ஒரு மரத்தின் கீழ் கல்லை வைத்து வழிபட்டு வந்தனர்.

1980ம் ஆண்டுக்கு முன் இங்கு 80 இந்து குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. 1983ம் ஆண்டுக்குப் பின் மேலும் பல குடும்பங்கள் இங்கு வந்து சேர்ந்தன் விளைவாக இங்கு பலகை யால் மடாலயம் அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு பலகையாக இருந்த மடாலயம் கல்லால் கட்டி 1987ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

2000ம் ஆண்டு பேஸ்லைன் வீதி பெருந் தெருவாக்கப்பட்டது. மேம்பாலமும் அமைக் கப்பட்டதுடன் மாடி வீடமைப்புத் திட்டங்களும் இங்கு உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக மேலும் பலர் இங்கு வந்து சேர 2005ம் ஆண்டு இங்குள்ள மக்கள் ஒன்றுகூடி இவ்வா லயத்தை விஸ்தரித்து அமைக்க தீர்மானித்தனர். இதற்கமைய 2005-02-10ம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன் ஆலயம் தரைமட்டமாக்கப் பட்டது. மறுநாளான 11ம் திகதி ஆலயத்தை புனரமைக்க அடிக்கல் நடப்பட்டது.

தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகளை சிற்ப சிந்தாமணி விஸ்வஸ்ரீ செ.ச. சந்தனகுமார் ஸ்தபதி மேற்கொண்டு வருகிறார். ஆலயத்தில் ஆரம்ப காலத்திலிருந்து வந்த விநயாகப் பெருமானின் திருவுருவச் சிலையும் அம்பாளின் திருவுருவச் சிலையும் பின்னப் பட்டிருப்பதால் இத்திருவுருவச் சிலைகளுக்கு பதிலாக புதிய திருவுருவச் சிலைகளை பிரதி ஷ்டை செய்ய ஆலய திருப்பச் சபையினர் திருவுளங்கொண்டனர்.

இவ்வாலயத்தில் சிவன், துர்க்கை, முருகன், மஹாவிஷ்ணு, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகிய பரிவார மூர்த்தங்களின் திருவுருவச் சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படு கின்றன. இவ்வாலயத்தின் திருப்பணிகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ். செல்லச்சாமி, பொ. இராதகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாரத லக்ஷ்மன் பிரேமச் சந்திர, மனோ கணே சன் ஆகியோர் உதவியுள்ளனர்.

இவ்வாலயத்தில் மூலஸ்தானத்தில் பிரதி ஷ்டை செய்யப்படவுள்ள 2 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலைக்கு மேல் மாகாண சபை உறுப்பினர் தயாகாந்த பெரேரா நிதியுதவி அளித்துள்ளார்.

ஆலய மூலஸ்தானம் அர்த்த மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் வசந்தமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு 60 பிள்ளைகளுடன் இவ் வாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாணிவித்தியா அறநெறி பாடசாலை இவ் வாலயம் புதுப்பொலி வுடன் விஸ்திரமாக்க உதவியது.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 2011.08.26ம் திகதி நடைபெறவுள்ளது. ஆலய பரிபாலன சபை தலைவர்: எம். முருகேசன் (பரமு), செயலாளர்: ஆர். விஜயகுமாரன் (விஜயன்), பொருளாளர்: ஆ. குமரன், உபசெயலாளர்: பீ. சிரஞ்ஜீவன், நிர்வாக சபை உறுப்பினர்கள்: கே. கணேஷ், பீ. முருகேசன், எம். சுரேஷ், கே. அசோக், எஸ். நேசன், எம். கணேஷ், ஆனந்தா.

திங்கள், 11 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8595) ‘ராம’ என்ற மந்திரத்தை வால்மிகி முதலில் எவ்வாறு உச்சரித்தார்?

மரா

8596) ராம அல்லது மரா என்பதன் பொருள் என்ன?

பாவங்களைப் போக்கடிப்பது

8597) ராமனுக்குள் சீதா அடக்கம் என்பதால் சீதை தனதாக்கிக் கொண்ட பெயர் என்ன?

ரமா

8598) ‘ரமா’ என்பதன் பொருள் என்ன?

லட்சுமி

ராம மந்திரம் எத்தகையது?

லட்சுமி கடாட்சத்தை வழங்கவல்லது.

8599) ராம மந்திரம் எது?

ஸ்ரீ ராம ஜெயம்

8600) ராம மந்திரத்தை எழுதுவதாலும் சொல்வதாலும் ஏற்படும் நன்மை என்ன?

எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.

8001) ராமன் என்ற சொல்லில் ‘ரா’ என்பதன் பொருள் என்ன?

இல்லை

8602) ‘மன்’ என்பதன் பொருள் என்ன?

இல்லை

8603) ‘ராமன்’ என்பதன் பொருள் என்ன?

இது போன்ற தலைவன் இதுவரை இல்லை.

8604) வெற்றிலைக்கு ஏன் வெற்றிலை என்பது பெயர் வந்தது?

எல்லாக் கொடிகளும் பூவிடும் காய் காய்க்கும். ஆனால் வெற்றிலை கொடி பூக்காது. காய்க்காது. உண்ணக் கூடிய வெறும் இலை மட்டும் தான் விடும் அதனால் தான் அது வெற்றிலை ஆயிற்று.

திங்கள், 4 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி





கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


தாம்பூலம்



8586) வெற்றிலையில் நுனியில் யார் இருப்பதாக கூறப்படுகிறது?

லட்சுமி

8587) வெற்றிலையின் நடுவில் யார் இருப்பதாக கூறப்படுகிறது?

சரஸ்வதி

8588) காம்பில் யார் வாசம் செய்வதாக கூறப்படும்?

பார்வதி தேவி

8589) சுபநிகழ்ச்சிகளில் விருந்துக்குப் பிறகு வெற்றிலை பாக்கு கொடுப்பது ஏன்?

வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இருப்பதால்

8590) தேவர்களும் அசுரர்களும் பாற் கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து எவை வெளிப்பட்டன?

ஐந்து பசுக்கள்

8591) அந்த ஐந்து பசுக்களின் பெயர்களையும் தருக?

நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை

8592) இந்த ஐந்து பசுக்களும் எந்த நிறங்களைக் கொண்டிருந்தன?

பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு

8593) பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து விதமான கவ்வியங்களும் தருக.

கோமயம் (சாணம்), கோமூத்திரம் (கோமியம்), பால், தயிர், வெண்ணெய்

8594) இந்த ஐந்து கவ்யங்களயும் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகத்தை என்னவென்பர்?

பஞ்சகவ்ய அபிஷேகம்.

திங்கள், 27 ஜூன், 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8573 மிருத் சங்கிரணத்தில் ‘மிருத்’ என்றால் என்ன?

மண்

8574 சங்கிரணம் என்றால் என்ன?

எடுத்தல்

8575 அங்குரம் என்பது என்ன?

முளைக்கின்ற விதை

8576 அர்ப்பணம் என்றால் என்ன?

போடுதல்

8577 யாக பூஜைகள் நல்ல பலன்கள் அளிக்கும் பொருட்டு முளைப் பயிரை இட்டு இந்த யாக சாலையில் பூஜைகள் நன்கு செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்?

பயிர்கள் வளர்வதைக் கொண்டு

8578 கும்பாபிஷேகத்தில் பங்கு பெறு கின்ற சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யார்கள் இந்த வைபவம் நிறைவு பெறும் வரை வேறு செயல்களில் ஈடுபடாமல் இருக் கவும் இடையூறுகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ளவும் என்ன செய் வார்கள்?

காப்பு கட்டிக் கொள்வார்கள்.

8579 இவ்வாறு கட்டிக் கொள்வதை என்னவென்று கூறுவார்கள்?

மந்திர வேலி

8580 மந்திர வேலி என்பதை வேறு எவ்வாறு அழைப்பர்?

ஆசார்ய ரட்சாபந்தனம்

8581 இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு என்ன செய்ய வேண்டும்?

மந்திரார்த்தமாக இந்தப் பூத உடலை சுத்தம் செய்தல் வேண்டும்.


8582 இவ்வாறு சுத்தமாக்குவதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடுதலை என்னவென்பர்?

பூதசுத்தி

8583 இடத் தூய்மையை என்னவென்பர்?

ஸ்தான சுத்தி

8584 பொருட் தூய்மையை என்னவென்பர்?

பூஜா திரவிய சுத்தி

8585 எச்சில் வருகின்ற வாய் சொல் லும் மந்திரத்தை எண்ணத்தினால் தூய்மைப்படுத்துதலை என்னவென்பர்?

மந்திர சுத்தி

திங்கள், 20 ஜூன், 2011

அறநெறி அறிவுநொடி


கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


கும்பாபிஷேகம்

8561) ஸ்ரீசூக்த ஹோமம் யாரை குறித்து செய்யப்படுகின்றது?

மகாலக்ஷ்மியை

8562) ஸ்ரீ சூக்த ஹோமத்தால் ஏற்படும் பலன் என்ன?

கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.

8563) ஸ்ரீ சூக்த ஹோமத்தின் போது எந்த மந்திரங்கள் சொல்லப்படும்?

ஸ்ரீ சூக்த மந்திரங்கள்

8564) ஸ்ரீ சூக்த மந்திரங்கள் எதில் உள்ளது?

ரிக்வேதத்தில்

8565) ஆலயக் கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின் கும்பாபிஷேகத்தின் போது அவற்றிற்கு பரிகாரமாக செய்வது என்ன?

சாந்தி ஹோமம்

8566) சாந்தி ஹோமம் செய்யப்படும் போது யாக குண்டங்களில் என்ன மந்திரங்கள் சொல்லப்படும்?

பாசுபஸ்திர மந்திரங்கள்

8567) பாசுபஸ்திர மந்திரங்களைக் கூறி என்ன செய்வர்?

கலசத்தில் ஆவாகனம் செய்வர்

8568) கலசத்தில் ஆவாகனம் செய்த பின் என்ன செய்யப்படும்?

ஹோமம் செய்யப்படும்

8569) ஹோமம் செய்த கலச நீரை என்ன செய்வர்?

அஸ்தி தேவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

8570) கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக செய்யப்படும் ஹோமத்தை என்னவென்று சொல்வர்?

மூர்த்தி ஹோமம்

8571) சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் யக்ஞம் என்ன?

சம்ஹிதா ஹோமம்

8572) சம்ஹிதா ஹோம யக்ஞத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

பரிகார யக்ஞம்

திங்கள், 13 ஜூன், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(கும்பாபிஷேகம்)


8553) கும்பாபிஷேக கிரியைகளை செய்யும் போது ரட்சோக்ண ஹோமம் செய்வார்கள். இதில் ‘ரட்சோ’ என்றால் என்ன?

அரக்கர்கள்


8554) இதில் க்ணம் என்றால் என்ன?

ஒடுக்குதல்


8555) ரட்சோக்ண ஹோமம் ஏன் செய்யப்படுகிறது?

அரக்கர்கள் தீங்கு செய்யாமல் இருக்க


8556) ரட்சோக்ண ஹோமம் எவ்வாறு செய்யப்படும்?

கலசங்கள் மேல் ஐந்து வகையான அஸ்திர மந்திரங்களையும் ஓதி அரிவாள், சுத்தி ஆகியவற்றில் ரட்சோக்ண தேவதைகளையும் தேங்காயில் ருத்ரனையும் ஆவாகணம் செய்து பூஜித்து ஆலயத்தை வலம் வரச் செய்து ஹோமம் முடிந்ததும் மங்கள வாழ்த்தியம் முழங்க வலம் வரவேண்டும்.


8557) எண் திசைக் காவலர்களும் யார்?

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.


8558) பிரவேச பலியின் போது முதலில் என்ன செய்யப்பம்?

சுற்றி எட்டுத் திசைகளிலும் உள்ள துர்தேவதைகளும் பூஜிக்கப்படும்


8559) இவ்வாறு பூஜிக்கப்பட்ட பின் என்ன செய்யப்படும்?

எண் திசைக் காவலர்களை அவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபாடு செய்யப்படும்

8560) பிரவேச பலி செய்யப்படுவது எதற்கு?

ஆலயத்தை காத்திடும்படி வேண்டுவதற்கு

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812