வியாழன், 26 செப்டம்பர், 2019

தினக்குரல் பத்திாிகைக்கு நன்றி

கலைஞருக்கு ஓர் கண்ணீர் துளி

இலங்கையில் 40 ஆண்டு காலம் கலை சேவையாற்றிய கலைஞர் கே. மோகன்குமார் நினைவாக தமிழர் நற்பணி மன்றம் கொழும்பு புறக்கோட்டை பழைய நகர சபை மண்டத்தில் 2019.09.08ஆம் திகதி நடத்திய "கலைஞருக்கு ஓர் கண்ணீர் துளி" என்ற நிகழ்வின்போது பிடிக்கப்பட்ட படம். தமிழர் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஸ்தாபகருமாகிய கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம் நடத்திய இந்நிகழ்வை அவருடன் இணைந்து கலைஞர் எஸ். சரவணாவும் ஏற்பாடு செய்திருந்தாா். கலைஞர் வி.டீ. பாலனின் இரங்கல் செய்தியை தமிழகத்தின் சாா்பில் மணவை அசோகன் இந்நிகழ்வில் வாசித்தது குறிப்பிடத்தக்கது.

கலைஞர்களுக்கான அரச விருது விழா



தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழா-2019 கொழும்பு தாமரைத் தடாகத்தில் 2ந் திகதி இடம்பெற்றது. இதில் கொழும்பைச் சேர்ந்த கே. ஈஸ்வரலிங்கம் "கலைச்சுடர்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனை தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார்.

வியாழன், 12 செப்டம்பர், 2019

சமய சமூகத் தொண்டர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம்



சமூகத்தில் ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக நான்கு நாட்கள் வதிவிட பயிற்சி நெறியொன்று தொண்டமானாற்றில் அமைந்துள்ள செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடத்தப்படவுள்ளது.

அப்பயிற்சி நெறிக்கு 21 வயதிற்குமேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இலங்கையில் எல்லாப் பாகத்திலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் சமய தீட்சை பெறுவதற்கும் வசதி செய்து கொடுக்கப்படும் . தீட்சை பெற்ற அன்றிலிருந்து தொடர்ந்து 21 நாட்களுக்கு சைவ உணவு மட்டுமே அருந்துவதற்கு உறுதி கொண்டவர்களாகயிருத்தல் வேண்டும்

இப்பயிற்சிகள் ஆகஸ்ட் மாதம் 23 ஆம்திகதி காலை 6மணிக்கு ஆரம்பமாகும். தூர இடத்திலிருந்து 22ஆம் திகதி இரவு8 மணிக்குள் சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு வரவேண்டும். தங்குமிடமும் உணவும் பயிற்சியும்இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் 15ரூபா முத்திரை ஒட்டி , சுய முகவரியிட்டநீள தபால் உறையில் சிவன் மானிடமேம்பாட்டு நிறுவனம்,48, புனித மரியாள் வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடித்த்தில் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு அனுப்பி விண்ணப்பத்தைபெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தினம் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி யாகும்.

பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெறுபவர்கள் சமயம், சமூகம் சார்ந்ததொண்டுச் செயற்பாடுகளில் தத்தம் மாவட்டங்களில் ஈடுபடலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் யாழ். குடாநாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு தல யாத்திரையாக அழைத்துச் செல்லப்படுவார்கள். தலயாத்திரை உட்பட பயிற்சி செயற்பாட்டிற்குரிய நாட்கள் மொத்தம்4 ஆகும்.

கலாதீனி பா.முருகானந்தன் உடப்பு.

அறநெறி அறிவு நொடி



‘சனாதன தர்மம்’ என்ற அழைப்பது எந்த சமயத்தை?

இந்து சமயத்தை

சனாதன தர்மம் என்பதன் பொருள் என்ன?

‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்பதாகும்.

இதனை இன்னும் விவரமாக கூறுவதாக இருந்தால் எப்படி கூறலாம்?

அதாவது எந்த வழியில் அணுகினாலும் இறைவனை அடையலாம் என்பது இதன் அடிப்படையாகும்.

இந்து சமய வாழ்க்கை என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டது?

அன்பு, அறிவு, ஆற்றல், செல்வம், ஒழுக்கம், ஒற்றுமை, செயல், தியாகம், நம்பிக்கை ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

இதற்கு மேலும் உதவும் வகையில் 8 வகை குணங்களை இந்து சமயம் வரையறுத்துள்ளது. அவை எவை?

1. உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது. இதை வலியுறுத்தவே ‘அன்பே சிவம் அதுவே நலம்’ என்றனர்.

2. பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.

3. மற்றவர்களை நினைத்து பொறாமைப்படக்கூடாது.

4. உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.

5. தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும்.

6. எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இறுக்கமற்று இருக்க வேண்டும்.

7. எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.

8. எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.

இந்த எட்டு வகை குணங்கள் மூலம் எவற்றை பெறலாம்?

அறம், பொருள், இன்பம், வீடு அகிய நான்கையும் பெற முடியும்.

இவை எதற்கு உதவும்? இறைவனை எளிதில் காண உதவும்.

இந்து சமயத்தின் முக்கிய அம்சம் என்ன?

அது வேதங்கள் உபநிஷத்துக்ள், தத்துவங்கள், ஆகமங்கள், புராணங்கள், தர்மங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக அடிப்படையில் தங்கி இருப்பதுதான்.

இந்து சமயத்தின் தனித்துவமான சிறப்பு என்ன?

எந்த நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்வது

மனிதனுக்கும் அவனது கொள்கை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளது எது?

இந்து சமயம்

அவ்வாறு சுதந்திரத்தை கொடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள நன்மை என்ன?

எத்தனையோ சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்துக்கள் தம் இறைவழிபாட்டை வாழ்வியலோடு ஒருங்கிணைந்த ஒன்றாக எளிமையானதாக வைத்துள்ளனர்.

இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எப்படி கூறலாம்?

மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றும் இந்து சமய இறைவழி பாட்டில் எதிரொலித்தப்படி உள்ளது.

ஆதி காலத்தில் காதல் எவ்வாறானதாக கருதப்பட்டது?

புனிதமாக

அந்த புனிதம் இந்து இந்து மதத்தில் எவ்வாறு உணர்த்தப்பட்டது?

தெய்வங்களின் லீலைகள் மூலம்

சத்தியபாமாவை காதலித்து கரம்பிடித்தவர் யார்? கிருஷ்ண பரமாத்மா

தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியை காதலித்து திருமணம் செய்தவர் யார்?

முருகப்பெருமான்

அது போல கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஊடல் ஏற்படுவதையும்

இந்து மத இறைவழிபாட்டில் காணலாமா?

ஆம்.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் என்ன?

சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்ற ஊடல்

இறுதியில் யாருக்கு வெற்றி கிட்டியது? இதில் என்ன உணர்த்தப்படுகிறது?

சக்தி இல்லாமல் சிவன் இல்லை. சிவன் இல்லாமல் சக்தி இல்லை என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது.

ஆண், பெண் இருவரில் யார் உயர்வு, யார் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவரும் சமம் என்பது ஆலய வழிபாட்டில் பல்வேறு வகைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து மத தெய்வக் கோட்பாட்டில் சிவலிங்கம் உணர்த்தும் தத்துவம் என்ன?

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்து மத தெய்வக் கோட்பாட்டில் சிவலிங்கத்தின் தத்துவமே இதுதான்.

ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வேறுயொரு வழிபாடு என்ன?

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு

விநாயகர் சதுர்த்தி



முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார தினமாக விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று கோவில்கள், வீடுகளில் உள்ள விநாயகருக்கு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல்பொரி, சுண்டல், விளாம்பழம், கொழுக்கட்டை, அப்பம் ஆகியவை படைக்கப்படுகின்றன.

அருகம்புல், வெள்ளெருக்கு, செம்பருத்தி உள்ளிட்டவை விநாயகருக்கு அணிவிக்கப்படுகின்றன.

விநாயகர் பொம்மைகள் செய்து விநாயக சதுர்த்தியிலிருந்து பத்து நாட்கள் பொது இடத்தில் வைத்திருந்து வழிபாடு மேற்கொண்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதனால் இவ்விழாவினை சமுதாயத் திருவிழா என்றே கூறலாம்.

விநாயக சதுர்த்தி அன்று விரத முறை கடைப்பிடிக்கப்படுகிறது. சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயக சதுர்த்தியில் இருந்து விரதத்தைத் தொடங்கி பின் வரும் மாதங்களிலும் சதுர்த்தி அன்று விரதத்தைத் தொடர்கின்றனர்.

இவ்விரதத்தை மேற்கொள்வதால் செல்வச் செழிப்பு, காரிய வெற்றி, புத்திக்கூர்மை, நன்மக்கட்பேறு, தொழில்வளம் ஆகியன பெருகும். உள்ள மேன்மை, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

அறநெறி அறிவு நொடி

திருவிழாவாவது யாது?

ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.

மகோத்ஸவம் என்பதன் பொருள் என்ன?

மஹா - பெரிய

உத் - உயர்வான

ஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.

கொடியேற்று எவ்வாறு நடைபெறுகிறது?

நந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயிற்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாம்.

திருவிழாவில் பவனி வரும் பஞ்சமூர்த்திகள் யாவர்?

விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (சிவபெருமான்), பார்வதி, சண்டீசர்

சைவ சமயிகள் ஓதவேண்டிய தமிழ் வேதங்கள் எவை?

தேவாரம், திருவாசகம் இரண்டுமாம்.

தேவாரம் செய்தருளினவர் யாவர்?

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.

திருவாசகம் செய்தருளியவர் யாவர்?

மாணிக்கவாசக சுவாமிகள்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

சோழ நாட்டில் உள்ள சீர்காழியிலே திருவவதாரம் செய்தருளினார்.திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?

சைவசமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

யாது காரணத்தினால் இவர்கள் சைவ சமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?

சைவத்தின் வழி உய்வு பெற வழியினைத் தம் பாடல்கள் மூலம் அருளிப் பல அற்புதங்களைக் கொண்டு சைவ சமயமே மெய்ச் சமயம் என்று நிலைநாட்டியமையால் சைவ சமயக் குரவர்கள் (குருமார்கள்) எனப் பெயர் பெறுவார்கள்.

சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்ல விரதம் சங்கடஹர சதுர்த்தி



நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சதுர்த்தியின் மகிமை :

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

அறநெறி அறிவு நொடி

பிணங்களின் மூக்கில் பஞ்சு வைப்பது ஏன்?

இறந்தவர்களின் உடல் என்பது பக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.

விளக்கேற்றுவது ஏன்?

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.

ஏன் ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும் ?

ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

கால்கள் சேர்த்து கட்டப்படுவது ஏன்?

இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.

மண்பானை ஏன்?

இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை என்பதால் ஆகும்.

கோயில்களில் நிவேதனம் செய்த பின்பு அந்தப் பிரசாதத்தை எதிரில் உள்ள பலிபீடத்தில் வைத்துப் பிறகு காக்கைக்குப் போடுகிறார்கள். இது ஏன்?

பூஜையை வீட்டில் செய்தாலும் கோயிலில் செய்தாலும் பூஜையின் முடிவில் தாழ்ந்த உயிர்களுக்குச் சிறிதாவது உணவளிக்க வேண்டும். அதுதான் பலி. அதற்குத்தான் பலிபீடம். கோயிலுக்குச் சென்றால், மூன்று தடவை பிரதட்சணம் வரவேண்டும்' என்று சிலர் சொல்கிறார்கள். அவ்விதம் சொல்வதற்கு என்ன காரணம்?

கோயிலுக்குச் செல்லும் நாம் சொல், செயல், சிந்தனை மூன்றினாலும் இறைவனிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும். இந்தக் கருத்தில் அமைந்த ஒரு வழக்கத்தையொட்டி, நாம் ஆலய வழிபாட்டில் மூன்று தடவைகள் பிரதட்சணம் செய்கிறோம்.

காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது?

மன்னர் காலத்திற்கு முன்பாகவே காலில் விழுந்து வணங்கும் முறை நடைமுறையில் இருந்ததாக பழங்கால நூல்கள் கூறுகின்றன. பெரியவர்களின் ஆசியை பெறுவதற்கும், இறைவன் அருளைப் பெறுவதற்கும் காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.ஒரு சில மனிதர்களை கடவுளுக்கு நிகராக வழிபடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

ஒவ்வொரு மதத்திலும் குறிப்பிட்ட சில மகான்கள், சித்தர்கள் கடவுளாக மதிக்கப்பட்டுள்ளனர். மனிதப்பிறவி எடுத்து தங்களின் ஒழுக்கம், ஜீவகாருண்யம், இறைநெறி ஆகியவற்றால் தெய்வநிலையை அடைந்தவர்கள் பல‌‌ர் உ‌ண்டு. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், காஞ்சி மகா பெரியவர், அரவிந்தர், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் மனிதப்பிறவியில் இருந்து தெய்வநிலையை அடைந்தவர்கள். அந்தவகையில் அவர்கள் வணங்கத்தக்கவர்கள்.

நீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும்



தந்தை சொல் கேட்காமல் தண்ணீரை அசுத்தம் செய்த முனிவரின் குழந்தைகள் ஆறு பேர் மீன்களாக சாபம் பெற்ற கதையை இந்த வைகாசி விசாகம் நாளில் தெரிந்து கொள்வது அவசியம். தூய்மையாக ஓடும் ஆறுகளையும், சுத்தமான குளங்களையும் சீரழித்து தண்ணீர் பஞ்சத்தில் தடுமாறுகிறோம். தண்ணீரை சுத்தமாக பாதுகாத்தால் அந்த முருகப்பெருமானின் அருள் கிடைக்கும். வைகாசி விசாகம் இன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பால்குடங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த நாளில் திருச்செந்தூரில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இதுவாகும்.

பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக திருநாளின் முக்கிய அம்சமாக இன்றைக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. வைகாசி விசாகம் புராண கதை பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார். அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார். மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது. சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

அறநெறி அறிவு நொடி

வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது ?

பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.

அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?

அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் ""பிதுர் தினம்'' என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.

கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?

பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் "கோமாதா' என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?

திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது ""என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்,'' என்று தான் கூறுவோமே தவிர, ""மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்,'' என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.

"ஷர்மிளாவின் இதய ராகத்தின்" இரண்டாவது நாயகன் மோகன்குமார்



1958 இல் பிறந்த கிருஷ்னண் மோகன்குமார் கலை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறு வயது முதல் மேடை நாடங்களில் ஆர்வம் செலுத்தினார். 40 வருடங்கள் கலை உலகிற்காக தனது வாழ்வினை அர்ப்பணித்த அவர்

வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள் என பல துறைகளிலும் சிறந்த நடிகராக விளங்கினார். இலங்கையின் மூத்த கலைஞர் கே.மோகன்குமார் தனது 59 வது வயதில் ஜாஎலயில் காலமானார்.

பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள மோகன் குமார் சக்தி சின்னத்திரையின் உதவி இயக்குனராக கடமையாற்றியுள்ளார். எழுத்தாளர், தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு பரிணாமங்கள் ஊடாக மோகன்குமார் கலைத்துறைக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் வெற்றிகொண்டிருந்தார்.

கடந்த 40 ஆண்டுகளாக கலைத்துறையில் கொடிகட்டிப் பறந்த கலைஞர் கே. மோகன்குமார் இவர் சர்மிளாவின் இதய ராகம் என்ற திரைப்படத்திலே நடித்த ஒரு கலைஞராவார். உயிரே , 13 பீ , முட்டை, ஒத்தல்லோ, ஆஸ்திகமா நாஸ்திகமா, சிவாஜி கண்ட இந்து ராஜ்சியம், மகரந்தம் ஆகிய நாடகங்களை நடித்துள்ளார். மகரந்த ஒரு வீடியோ எல்பமாம். சர்மிளாவின் இதய ராகம் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் இவர். 42 சிங்களப் படங்களுக்கு நடனக்காட்சிகளை திரையிடுவதற்கு பயிற்சி அளித்தவர்.

அந்தனி ஜீவாவின் அக்னி பூக்கள் நாடகத்தின் மூலம் நடிகனாக அறிமுகமாகிய இவர் இறுதியாக்கம், நெறியாள்கை போன்றவற்றிலும் பணியாற்றியவர். சிறிக்கியும் பொறுக்கியும் என்ற நாடகத்தில் உலகப் புகழ்பெற்ற நாடகமேதை சேக்கிஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் ஒத்தல்லோவின் தளபதி கேசியோவாக நடித்தவர். பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்த ராஜ்சியத்தின் சிவாஜியின் தளபதி சந்திரமோகரான நடித்தவர்.

கிருஷ்ண கலாலாயம் என்ற நாடகமன்றத்தை உருவாக்கி பல நாடகங்களை மேடையேற்றியவர். கலைஞர்களை பாராட்டி கௌரவித்தவர். இவ்வாறு 40 ஆண்டு காலமாக கலைத்துறையில் சேவையாற்றிய கலைஞர் இவர். முரண்பாடுகளும் முற்றுப்புள்ளிகளும் இவர் நடித்த இன்னுமொரு நாடகமாகும். சிதைந்த மலர் இவர் நடித்த மற்றுமொரு நாடகமாகும். சலங்கை நாதம், மௌத்திரை ஆகியவை இவர் நடித்த மற்றும் பல நாடகங்களாகும். பாவக்கரை, மௌனத்திரை, அவள் மீண்டும் வருகிறாள் போன்ற நாடகங்கள் நடித்த இவர் இலங்கையில் கலைஞர்கள் இறந்தபோதும் அவர்களது நனவாக தொடர்ந்து நினைவஞ்சலி கூட்டங்கள் நடத்தி வந்த ஒரு கலைஞர் இவராவார். இப்படி எல்லாக் கலைஞர்களுக்கும் அனுதாபக் கூட்டம் நடத்துகின்றீர்களே ஒரு நாளைக்கு நீங்கள் இறந்தால் உங்களுக்கு யார் அனுதாபம் கூட்டம் நடத்துவார் என்று ஒருவர் கேட்டபோது, எனக்காக அனுதாபம் கூட்டம் நடத்த இதோ இந்த கலைஞர் சரவணா இருக்கிறார் என்று அவரை காட்டிக்கூறியவர். அந்த கூற்றுக்கமைய இந்த நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும். உரிமைக்குரல், புயலில் ஒரு மலர், பைத்தியங்கள் பலவிதம், மனிதன் என்னும் தீர்வு என்று இவர் நடித்த நாடங்களின் பெயர்களை விரித்துக்கொண்டு போகலாம்.

கலைஞர் கே. மோகன் குமார் நினைவாக தமிழர் நற்பணி மன்றம் எதிர்வரும் 2019.09.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் கலைஞனுக்கோர் கண்ணீர் துளி என்ற இந்த நிகழ்வை நடாத்தவுள்ளது. இதில் இவருடன் நடித்தவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழர் நற்பணி மன்றத்தின் சார்பில் கலைஞர்களான கே. ஈஸ்வரலிங்கம், எஸ். சரவணா ஆகியோர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர். 18 வருடங்களுக்கு மேலாக மார்கழி மாதமானதும் மாலை அணிந்து ஐயப்ப விரதமிருந்து ஒவ்வொரு வருடமும் சபரி மலைசென்று தரிசனம் செய்து வந்த இவர். சபரிமலை சாஸ்தா பீடத்தின் செயலாளராகவும் நீண்டகாலம் சேவையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகம் கலைத்துறை என இவரது சேவைகள் நீண்டுகொண்டே சென்றது.

அறநெறி அறிவு நொடி

கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சம் பழத்தை ஊறுகாய், ஜூஸ் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்துகிறார்களே... இது சரியா

தங்களது விருப்பப்படி தாராளமாகப் பயன்படுத்தலாம். பிரசாதப் பொருட்களை விரயமாக்காமல், பயன்படுத்த வேண்டும். அதுவே முக்கியம்!

பித்ரு தினமான அமாவாசையன்று கடவுள் ஸ்லோகங்களைச் சொல்லலாமா ?

அமாவாசை அன்று முன்னோர் ஆராதனை முடிந்த பிறகு ஸ்லோகம் சொல்லி வழிபடலாம். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோருக்கான வழிபாடுகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டி வந்தால், முதலில் முன்னோர்களையே வழிபட வேண்டும். பிறகு தேவர்களை வணங்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

அறநெறி அறிவு நொடி

** பஞ்சாங்கத்தில் இஷ்டி என்று குறிப்பிடுகிறார்களே அது என்ன?

"இஷ்டி' என்றால் பூஜை. அன்று சஷ்டி, சந்திர தரிசனம் போன்றவை கூடியிருக்கும். அதற்கான பூஜையைச் செய்யலாம் என்பதற்கு அடையாளமாக அப்படி போடுவார்கள்.

* திருநீறு பூசும்போது எத்திசை நோக்கி இருந்தால் நல்லது?

காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பூசிக் கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது. கோயிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக் கொள்ள வேண்டும்.

* தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை இதில் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாள் எது?

எல்லா அமாவாசைகளுமே முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்தவை தான். அன்று அவசியம் வழிபாடு செய்து தான் ஆகவேண்டும். ஒன்று சிறந்தது என்றால் கண்டிப்பாக மற்றதை விட்டு விட வேண்டிய சூழல் வரும். உத்தராயணத்தில் முதலில் வருவதால் தை அமாவாசையும், தக்ஷிணாயனத்தில் முதலில் வருவதால் ஆடி அமாவாசை என்பது அந்த அமாவாசைக்கு முன்னதான பிரதமையிலிருந்து விரதம் இருந்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். இது மற்ற திதிகளில் விடுபடும் பிதுர்க்களையும் திருப்திபடுத்த செய்யப்படுகிறது. எனவே அமாவாசை தர்ப்பணத்தைப் பொறுத்த வரை ஒன்று சிறந்தது. மற்றது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

* பூஜை அறையில் கடவுள் திருஉருவப்படங்களை எத்திசை நோக்கி வைப்பது சிறந்தது?

கிழக்கு நோக்கி வைப்பது சிறந்தது. மேற்கு நோக்கியும் வைக்கலாம்.

* இறந்த பெற்றோருக்கு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்கள் கொடுக்கும் சிரார்த்தம் ஏற்புடையதுதானா? விளக்கம் தேவை.

பெண்கள் நேரடியாக இதை செய்யக்கூடாது. யாராவது ஒரு ஆணிடம் தர்ப்பையைக் கொடுத்து அவர் மூலமாக செய்ய வைக்கலாம். திருமணமான பெண்கள் கணவன் வீட்டைச் சார்ந்து விடுவதால், பெற்றோருக்காக தர்ப்பை கொடுக்கக் கூட அதிகாரம் கிடையாது. பெற்றோரின் பங்காளிகளைச் செய்யச் சொல்லி பொருளுதவி மட்டும் செய்யலாம்.

* பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

* ஹோமம் நடத்தும் போது குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று சொல்கிறார்களே? விளக்கம் அளிக்கவும்.

ஹோமம் முடிந்து அதில் போட்ட எல்லா திரவியங்களும் சாம்பலாகும் வரை குண்டத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. சில இடங்களில் ஹோமம் முடிந்து, யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பட்டவுடனேயே மக்கள் உள்ளே புகுந்து குண்டங்களை அணைத்தும், கலைத்தும் நாணயங்களையும் சாம்பல் பிரசாதமும் எடுக்கிறார்கள். இது மிகவும் பாவம். எல்லாம் சாம்பல் ஆன பிறகு நாணயங்களையும், சாம்பல் விபூதி பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

மலர்களை துண்டு துண்டாக்கி பூஜைக்கு பயண்படுத்தலாமா?



அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது, கொண்டுவரப்பட்டது, தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது, அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. பறித்த பிறகு மலர்ந்த பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூக்கள், உடல் உறுப்புகளில் பட்ட பூக்கள், கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள், ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள். தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது. பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.

தியானம் செய்வது எப்படி?



***

மனக்கட்டுப்பாட்டையும் மன ஒருமைப்பாட்டையும் மன அமைதியையும் பெற தியானமும் ஜபமும் பெற உதவுகின்றன. ஆழ்ந்த தியானம் செய்யும் போது அதன் பலனை நாம் உணர முடியும். சரி தியானம் செய்வது எப்படி என்பது பலரின் கேள்வி? தியானம் செய்ய எளிய வழிகளை தற்போது பார்க்கலாம். முதலில் உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தை தேர்தெடுக்கின்றோமோ அதே நேரத்தில் தொடர்ந்து தியானம் செய்ய அமர வேண்டும். வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமர்ந்து தலை, கழுத்து, மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடி சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும். இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும். பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும். இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.

கே. ஈஸ்வரலிங்கத்துக்கு "கலைச்சுடர்" எனும் விருது

தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழா-2019 கொழும்பு தாமரைத் தடாகத்தில் 2ந் திகதி இடம்பெற்றது. இதில் கொழும்பைச் சேர்ந்த கே. ஈஸ்வரலிங்கம் "கலைச்சுடர்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனை தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

ஹெலன் குமாரி


இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் இடமான ஜெயந்தி நகர் என்று அழைக்கப்படும் ஜிந்துப்பிட்டியில் அருள் பெர்னாண்டோ, திரேசம்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். இவர், இவரது வீட்டுக்கருகில் மேட்டுத் தெருவிலுள்ள புனித அன்னம்மாள் பெண்கள் பாடசாலையில் படித்தார். பாடசாலையில் படிக்கும் போதே நடனத்தில் தேர்ச்சி பெற்றார். பாடசாலையில் நடைபெறும் விழாக்களில் நடனமாடிக் கலந்து கொண்டார்.

இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது, "மனோரஞ்சித கான சபா" ராஜேந்திரா மாஸ்டர் இவரை கலை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மனோரஞ்சித கான சபாவில் கலை நிகழ்ச்சிகளை அளித்து வந்தார். பின்னர் பிரபல சிங்களத் திரைப்பட நடன இயக்குநர் ரொனால்ட் பெர்னாண்டோவிடம் மேற்கத்தைய நடனத்தையும் கற்று வந்தார். சிங்கள திரைப்பட இயக்குநர் எம்.வி.பாலனின் வழிகாட்டலில் 1970 ஆம் ஆண்டு ‘ஒக்கம ஹரி’ என்ற சிங்களத் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் எம். வி. பாலனுடன் இணைந்து நடனமாடினார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 36 சிங்களத் திரைப்படங்களில் நடனமாடியுள்ளதோடு நடன இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரடக்சன்சின் உதவியுடன் எம்.வி.பாலன் தயாரித்த மஞ்சள் குங்குமம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இலங்கையில் தயாரான முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான லெனின் மொராயசின் "நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனாலும், இத்திரைப்படம் திரைக்கு வரும் முன்னரே இதன் திரைப்படச்சுருள் 83 ஜுலை கலவரத்தில் தீக்கிரையானது. அதே போன்று காமினி பொன்சேகாவுடன் இவர் இணைந்து நடித்த "இளைய நிலா" திரைப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்திருந்தார். அதுவும் ஜூலைக் கலவரத்தில் எரிந்து போனது.
பிரபல எழுத்தாளர் மானா மக்கீன் தயாரிப்பில் உருவான "டயல் எம்-போர்-மேடர்" என்ற நாடகமே இவரது முதல் தமிழ் மேடை நாடகமாகும். அவர் தயாரித்த விட்னஸ்-போர்-த பிரசிகியூசன் என்ற நாடகத்திலும் நடித்துப் பார்ராட்டைப் பெற்றார்.
கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரடக்சன்சு தயாரித்த பல நாடகங்களில் ஹெலன்குமாரி நடித்திருக்கிறார். அவரது தயாரிப்பில் உதயகுமார் கதை வசனத்தில் தயாரான ‘தாலிக்கொடி’, நீர்கொழும்பு முத்துலிங்கம் மாஸ்டரின் உண்மை பேசும், உதயகுமாரின் ராம் ரஹீம் ரீட்டா, போன்ற நாடகங்கள் கொழும்பின் டவர், லும்பினி, கதிரேசன் மண்டபங்களில் பல முறை மேடையேறியன.

ஆர்.ராஜசேகரனுடன் இணைந்து ‘வெள்ளி நிலா காலாலயம்’ என்ற அமைப்பை ஏற்று நடத்தினார். "முக்கோணத்தில் மூவர்" கலாலயத்தின் முதல் நாடகமாக மேடையேறியது. அதைத் தொடர்ந்து "ஒன்று எங்கள் ஜாதியே", "கெரி ஒன் டிரக்டர்" போன்ற நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. "கெரி ஒன் டிரக்டர்" என்ற நகைச்சுவை நாடகம் ரூபவாகினியில் பல முறை ஒளிபரப்பப்பட்டது.

வெள்ளி நிலா கலாலயத்தின் நிறுவனர் ஆர். ராஜசேகரையே இவர் 1985 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு விக்ரம், கார்த்திகா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

புதன், 7 ஆகஸ்ட், 2019

ஆடி என்னும் பெயா் எப்படி வந்தது?



ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள், பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுடையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது.

தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது; குளிர்ச்சியானது. அதன் காற்று உடல்நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும். வேப்ப இலையின் கொழுந்தில் நம் உடலுக்குத் தேவையான சக்தி(புரோட்டின்) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை வேளையில் மூன்று, நான்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் மென்று சுவைத்தால் மருத்தவரிடம் செல்லு<ம் நிலை ஏற்படாது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. அதேசமயம், கசப்புச் சுவையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ரத்தத்தின் வீரியம் குறைந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சித்த மருத்துவர் ஆலோசனைப்படி வேப்பங் கொழுந்தினைப் பயன்படுத்த வேண்டும்.

அம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேப்ப மரங்கள் வளக்கப்பட்டால் தூய்மையான காற்று கிடைக்கும்

நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?



நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?

சிவன் கோயில்களில்

“நம:பார்வதீபதயே’ என ஒருவர் சொல்ல, “ஹரஹர மகாதேவா’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இவ்வாறு சொல்ல வேண்டியது எந்த ஆலயங்களில்?

சிவன் கோயில்களில்

"நம: பார்வதீ பதயே" என்பதற்கு என்ன விளக்கம்?

பார்வதிதேவிக்கு பதியாக இருப்பவர் என்று அர்த்தம்.

இதில் பதி என்பதற்குரிய பொருள் என்ன?

கணவர்

பார்வதி தேவியின் கணவராக இருப்பவர் யார்?

பரமசிவன்.

பார்வதியின் அதிபதி யார்? பரமசிவன்

இவரை ஏன் “பார்வதீபதி’ என்கிறார்கள்?

அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால்

தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் இவரை எப்படி அழைப்பார்கள்?

நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?

“திருஞானசம்பந்தர்” ஊர் ஊராக “ஹர ஹர” நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து ஜனங்களும் “அரோஹரா” என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும் உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. “என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும்! அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்” என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார்.

இப்போது “நம: பார்வதீபதயே!” என்று ஒரு பெரியவர் சொல்ல, உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு “”ஹர ஹர மகாதேவா” என்று சொல்கிறார்கள்.

அறநெறி பாடசாலை ஆசிரியருக்குரியது



16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன?

“கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே”

16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன?

சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலர வைத்து அவர்களின் ஆளுமைகளையும் திறமைகளையும் விரிவடைய வைக்கும் கல்வியை வழங்குவதே ஆகும்.

16260) அறநெறிக் கல்வியின் “குறிக்கோள் வாசகம்” என்ன?

சிறார்களின் மனம் ஏற்றுக்கொள்கின்ற பருவத்திலேயே உயர்வான வாழ்வின் மதிப்பீடுகளை நன்கு தெரிந்துகொள்ளவும் ஒழுக்கந்தரும் பழக்கங்களை வளர்ந்துக்கொள்ளவும் மனதிலும் உணர்விலும் அறிவிலும் நீதிநெறி வழியிலும் ஆன்மீகத்திலும் மலர்ந்து விரிந்து முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்கவும் பயிற்சி யளித்து வழிகாட்டி ஒழுக்கநெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதே ஆகும்.

16261) அறநெறிக் கல்வியின் குறிக்கோள்கள் எத்தனை? பத்து

16262) அந்த பத்து குறிக்கோள்களும் எவை?

1.இந்து வாழ்ககை முறைகளை கற்கவும் அதன்படி வாழவும் சிறுவர்களுக்கு உதவுதல்,

2. கடமை, பக்தி, ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்தை பதிய வைத்தல்

3. உள்ளார்ந்த மனித மதிப்புகளின் புரிதலுக்கும் நடைமுறைக்கும் ஊக்கமளித்தல்

4. ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அடக்கியாளவும் ஒழுக்கத்தை பேணவும் பயிற்சியளித்தல்

5. சிறார்களின் எண்ணம், சொல், செயலில் தூய்மையும் ஒற்றுமையும் இருக்க வழிகாட்டுதல்,

6. சரியானதற்கும் தவறானதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை காண்பதற்காக உள்ளிருக்கும் தெய்வீகத்தை பின்பற்ற பயிற்சியளித்தல்,

7. கடவுளுக்குச் சேவை செய்வதற்கான வழிமுறைகளையும் அருளாளர்களது வாழ்க்கையையும் போதனைகளையும் பின்பற்றி சுயநலமற்ற சேவையை வழங்க பயிற்சி அளித்தல்

8. இந்து கலாசாரப் பண்பாட்டுக் கூறுகளில் அறிவு மற்றும் ஆளுமை விருத்திக்கு பயிற்சியளித்தல்,

9. நம்பிக்கைகளுக்கும் மனித குலங்களுக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து சிறார்கள் நன்கு அறிந்திருக்க உதவுதல்,

10. நேர் விளைவான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்கால தலைவர்களாக வளர்வதற்குத் தேவையான தலைமைத்துவத் திறன்களை வளர்க்க உதவுதல்

16263) அறநெறிக் கல்வி மாணவர்களின் முழுமையான ஒருங்கிணைந்த ஆளுமைகளை எத்தனை நிலையங்களில் மலரச் செய்கிறது?

ஐந்து

16264) அந்த ஐந்து நிலைகளையும் தருக

1. புத்தி சார்ந்த நிலை

2. உடல் சார்ந்த நிலை

3. உள்ளம் சார்ந்த நிலை

4. மனம் சார்ந்த நிலை

5. ஆன்மீக நிலை

16265) அறநெறிக் கல்வி வழங்குகின்ற அடிப்படைக் கற்பித்தல் நுட்பங்கள் எத்தனை?

ஐந்து

16266) அந்த ஐந்து அடிப்படைக் கற்பித்தல் நுட்பங்களும் எவை?

1. அமைதியாக அமர்தல்

2. பிரார்த்தனை

3. இசை மற்றும் குழுவாகப் பாடுதல்

4. கதை கூறல

5. குழுச் செயற்பாடுகள்

16267) உயர் கற்பித்தல் நுட்பங்கள் எத்தனை?

ஐந்து

16268) அந்த ஐந்து உயர் கற்பித்தல் நுட்பங்களையும் தருக

1. தியானம்

2. யோகா (சூரிய நமஸ்காரம்)

3. தலைமைத்துவப் பயிற்சி

4. சேவைத் திட்டங்கள்

5. கருத்தரங்குகள்

16269) அறநெறி பாடசாலை எத்தனை பிரிவுகளாக இயங்குகிறது?

நான்கு

16270) அந்த நான்கு பிரிவுகளும் எவை?

பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, இளைஞர் பிரிவு

16271) பாலர் பிரிவுக்குள் அடங்குகின்ற வகுப்புகள் என்னென்ன? 1,2

16272) எத்தனை வயது பிள்ளைகள்? 5,6,7

16273) கீழ்ப்பிரிவுக்குள் அடங்குகின்ற வகுப்புகள் என்னென்ன? 3,4,5

16274) எத்தனை வயது பிள்ளைகள்? 8,9,10

16275) மத்திய பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னென்ன? 6,7,8

16276) என்னென்ன வயது பிள்ளைகள்? 11,12,13

16277) மேற்பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னென்ன?9,10,11

16278) என்னென்ன வயது பிள்ளைகள்?14,15,16

16279) இளைஞர் பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னெனன? 12,13

16280 ) என்னென்ன வயது பிள்ளைகள்? 17,18,19

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

MGR and Pattakkannu Thiyagarajah

பட்டக்கண்ணு நகை மாளிகையின் அதிபர் எஸ். ஏ. தியாகராஜா காலமானார். 1967 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜீ. ஆர் இலங்கைக்கு வந்தார். அவரையும் அவருடன் சரோஜாதேவியையும் இலங்கைக்கு வரவழைத்த பெருமை அவரையே சாரும். அதுபற்றி தியாகராஜா கூறியதை மீட்டிப் பார்க்க வேண்டிய தருணம் இதுவென்று எ ண்ணுகின்றேன்.
சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். இவர்களை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புது செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தோம். எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே

முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது. ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.

அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

வியாழன், 25 ஜூலை, 2019

அறநெறி அறிவு நொடி

16228) ஆதித்தனுடைய புத்திரர்கள் எத்தனை பேர்? ஏழு பேர்

16229) அந்த ஏழு புத்திரர்களும் யார்?

1. கர்ணன், 2. காளந்தி, 3. சுக்ரீவன், 4. தத்திய மகன், 5. சனி, 6. நாதன், 7. மனு

16230) நந்தியின் அருள் பெற்றவர்கள் எத்தனை பேர்? எட்டுப் பேர்

16231) அந்த எட்டுப்பேரும் யார்?

1. சனகர், 2. சனாதனர், 3. சனந்தகர், 4. சனத்குமாரர், 5. வியாக்கிரபாதர், 6. பதஞ்சலி, 7. சிவயோக முனிவர், 8. திருமூலர்

16232) பர்வதங்கள் எத்தனை ? எட்டு

16233) அந்த அஷ்ட பர்வதங்களும் எவை?

1. கயிலை, 2. இமயம், 3. ஏமகூடம், 4. கந்தமாதனம், 5. நீலகிரி

6. நிமிடதம், 7. மந்தரம், 8. விந்தியமலை

16234) ஆத்ம குணங்கள் எத்தனை? எட்டு

16235) அந்த எட்டு ஆத்ம குணங்களையும் தருக

1. கருணை, 2. பொறுமை, 3. பேராசையின்மை, 4. பொறாமையின்மை

5. நல்லனவற்றில் பற்று [உறுதி], 6. உலோபத்தன்மையின்மை

7. மனமகிழ்வு, 8. தூய்மை

16236) மங்கலங்கள் எத்தனை வகை? எட்டு

16237) எண்வகை மங்கலங்களும் எவை?

1. கண்ணாடி, 2. கொடி, 3. சாமரம், 4. நிறைகுடம்

5. விளக்கு, 6. முரசு, 7. ராஜசின்னம், 8. இணைக்கயல்

வாசனைப் பொருட்கள் எத்தனை வகை? எட்டு

16238) எண்வகை வாசனைப் பொருட்களும் எவை?

1. சந்தனம், 2. கோட்டம், 3. கஸ்தூரி, 4. கற்பூரம், 5. குங்குமம்,

6. பச்சிலை, 7. அகில், 8. விளாமிச்சை வேர்

16239) பிறப்புக்கள் எத்தனை வகை ? ஏழு

16240) ஏழுவகைப் பிறப்புக்களும் எவை?

1. தேவர், 2. மனிதர், 3. விலங்குகள், 4. பறப்பவை, 5. ஊர்பவை,

6. நீர்வாழ்பவை, 7. தாவரம்

16241) உலகங்கள் எத்தனை? பதினான்கு

16242) இதில் மேல் உலகங்கள் எத்தனை? ஏழு,

16243) இதில் கீழ் உலகங்கள் எத்தனை? ஏழு

16244) ஈரேழு உலகங்களும் எவை?

மேல் உலகங்கள்

1. பூமி, 2. புவர்லோகம், 3. தபோலோகம், 4. சத்யலோகம், 5. ஜனோலோகம்,

6. மஹர்லோகம், 7. சுவர்க்கலோகம்

கீழ் உலகங்கள்:

1. அதலம், 2. கிதலம், 3. சுதலம், 4. இரசாதலம், 5. தவாதலம், 6. மகாதலம்,

7. பாதாலம்.

16245) குபேரனிடம் இருக்கும் நிதிகள் எத்தனை? ஒன்பது

16246) அந்த நவநிதிகள் எவை?

1. சங்கநிதி, 2. பதுமநிதி, 3. கற்பநிதி, 4. கச்சபநிதி, 5. நந்தநிதி, 6. நீலநிதி,

7. மஹாநிதி, 8. மஹாபதுமநிதி, 9. முகுந்த நிதி

16247) ஐஸ்வர்யங்கள் எத்தனை? எட்டு

16248) அஷ்ட ஐஸ்வர்யங்கள் எவை?

1. தனம், 2. தான்யம், 3. பசு, 4. அரசு, 5. புத்திரர், 6. தைரியம், 7. வாகனம்,

8. சுற்றம்

16248) நாகங்கள் எத்தனை? ஒன்பது

16249) அந்த நவ நாகங்கள் எவை?

1.ஆதிசேஷன், 2. கார்க்கோடகன், 3. அனந்தன், 4. குளிகன், 5. தஷன் , 6. சங்கபாலன், 7. பதுமன், 8. மகாபதுமன், 9. வாசுகி

16250) நன்மை தரக்கூடிய தானங்கள் எத்தனை? பத்து

16251) நன்மை தரக்கூடிய தச தானங்கள் எவை?

1. நெல், 2. எள், 3. உப்பு, 4. தீபம், 5. மணி, 6. வெள்ளி,

7. வஸ்திரம், 8. சந்தனக்கட்டை, 9. தங்கம், 10. நீர்ப்பாத்திரம்

அருமருந்தாகும் ஆடிக்கூழ்!



நமது முன்னோர்கள் ஆடிமுதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் தை முதல் ஆனி வரை உத்தராயனம் என்றும் ஓர் ஆண்டினை இரண்டு பாகமாக வகுத்தார்கள்.

சூரியன் தை மாதத்தில் வடக்கு திசை நோக்கி பயணத்தைச் செலுத்துவான். ஆடிமாதம் ஆரம்பித்ததும் தன் பயணத் திசையை மாற்றிக் கொண்டு தென் திசை நோக்கி திரும்புவான். இதைத்தான் உத்தராயனம் என்றும் தட்சிணாயனம் என்றும் சொல்வர்.

தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம். இம்மாதத்தில் வரும் பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் போற்றப்படுகின்றன.

தட்சிணாயனம் மழைக்காலத்தின் ஆரம்பம். சூரியன் தன் பயணப்பாதையை ஆடியில் மாற்றிக் கொள்வதால் இயற்கையின் சூழ்நிலை மாறும். மழைக்கால ஆரம்ப மாதமான இந்த ஆடிமாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள் என்று புராணம் கூறுகிறது. அதனால் பூமாதேவியான அம்மனுக்கு விழா எடுத்து நல்ல மழை பொழிந்து நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றி வளமான வாழ்வு தரவேண்டும் என்று அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அம்மனுக்கு உகந்த ஆடிச்செவ்வாய், ஆடிவெள்ளி, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பதினெட்டு, ஆடி அமாவாசை, பௌர்ணமி என விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. இம் மாதத்தில் காவேரியானவள் மசக்கையாக இருப்பதாகக் கருதப்படுவதால், ஆண்டாள் ஜென்ம நட்சத்திரமான பூரத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை வரம், திருமணவரம், வேண்டும் பெண்கள் உட்பட சுமங்கலி பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பல சிறப்புகள் பெற்ற இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ்வார்க்கும் விழா நடைபெறுவது மிகவும் சிறப்பான நிகழ்வாகும். நம் உடல் நலத்தின் வளம் கருதியே ஆடிக்கூழ் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆன்மிகமும் அறிவியலும் சொல்கின்றன.

ஆடிமாதம் மழைக்கால ஆரம்ப மாதமாக இருப்பதால் இதற்குமுன் வெப்பத்தின் சூழ்நிலையில் இருந்த நம் உடல், பருவமாற்றம், காற்று, திடீர்மழை இவற்றினால் பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதைத் தவிர்க்க, நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தேவை.

அம்மனுக்கு படைக்கப்படும் கூழ் பெரும்பாலும் கேழ்வரகு, கம்பு போன்ற சிறு தானியங்களின் மாவினால் தயார் செய்யப்படுவதால், அவை நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதுடன் உடலுக்குத் தேவையான வலிமையையும் தருகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் சக்தி இந்தக் கூழுக்கு உண்டு. கூழ் எளிதில் ஜீரணமாவதுடன் குடலுக்குத் தொந்தரவு அளிக்காது. வாயு போன்ற உபத்திரவங்களும் ஏற்படாது.

புதுப்பானையில் கூழ் காய்ச்சப்பட்டு, அந்தப்பானையின் வாய்ப்பகுதியில் வேப்பிலைக் காப்பிட்டு, அம்மனுக்குப் படைக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேப்பிலையின் சக்தி அதில் கலக்கிறது. மேலும் அம்மனின் அருள் பார்வையால் அதன் சக்தி பல மடங்கு பெருகுகிறது. இந்தக் கூழ் பிரசாதத்தினை விரதமிருந்து அருந்துகையில், நோய் எதிர்ப்பாற்றல் தரும் அருமருந்தாகிறது.

தெய்வப்பிரசாதமான ஆடிக்கூழ் மக்களை நோய்நொடிகள் இல்லாமல் நலமுடன் வாழ வழிவகுக்கிறது.

தன்னைத்தானே திருத்திக் கொள்ளாதவன், பிறரைத் திருத்த அருகதை அற்றவன்


கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும்.


நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலு பேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுய புத்தி வேண்டும்.

அறநெறி அறிவு நொடி

11093) மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன் ?

திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது "மாங்கல்ய தந்துனானேன" என்று மந்திரம் சொல்லுவார்கள்.

'தந்து" என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் 'மங்களம்". வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.

கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜp ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜp எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினாலான தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.
11094) ஆலயங்களில் பெரிய மணி எந்தெந்த நேரங்களில் அடிக்க வேண்டும்?

அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உற்சவத்தில் ஆரம்பம், உற்சவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு - இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும்.
11095) கை மணி எந்தெந்த நேரங்களில் அடிக்க வேண்டும்?

கர்ணம் முதலான கிரியைகளின் ஆரம்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்;. தூப - தீபம் காட்டும்போதும், பலி காலத்திலும் இடைவிடாமல் கைமணி ஒலிக்க வேண்டும்.

அவிசாவளை குடகம ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்


மலையகத்தின் நுழைவாயில் என கூறப்படும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அவிசாவளை நகரின் குடகம வீதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்த அலங்கார உற்சவம் 31.07.2019 புதன்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூலமூர்த்திபூசை, வசந்த மண்டப பூசை இடம்பெற்ற பின்பு இரவு 7.30 மணிக்கு தீச்சட்டியுடன் ஸ்ரீவிநாயப் பெருமானும், ஸ்ரீமுத்துமாரியம்மனும் வெளிவீதி உலாவருதல் இடம்பெறும்.

01.08.2019 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு புவக்பிட்டிய திருவருள் மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட பவனி ஆரம்பமாகி அந்த பால்குட பவனி கோவிலை வந்தடைந்த பின்பு 108 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூலமூர்த்தி பூசை, வசந்த மண்டப பூசை நடைபெற்று அதன் பின்பு வேட்டைத் திருவிழா இடம்பெறும்.

02.08.2019 மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்பட்டு விநாயகர் வழிபாட்டுடன் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின் மாலை 6 மணிக்கு மூலமூர்த்தி பூசை, வசந்த மண்டப பூசை இடம்பெற்று அதன் பின்பு இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.

03.08.2019 நான்காம் நாள் சனிக்கிழமை தேர் கோவிலை வந்தடைந்ததும் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெற்று அதன் பின்பு பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெற்ற பின்பு தீ மதிப்பு இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூல மூர்த்தி பூசை, மாவிளக்கு பூசை, திருவூஞ்சல் பூசை ஆகியன இடம்பெறும்.

04.08.2019 இறுதி நாளான ஐந்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வைரவர் பூசையுடன் படையல பூசை இடம்பெற்று மகோற்சவ கிரியைகள் நிறைவுபெறும்.

அவிசாவளை, குடகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்



கொழும்பு மாவட்டத்தின் இறுதியில் அமைந்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் ஒரே ஒரு தொகுதியாகவும் விளங்கி வருவது அவிசாவளை தொகுதியாகும்.

இந்தியத் தமிழர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் அவர்கள் கோயில் அமைத்து வழிபாட்டு முறையைப் பின்பற்றி தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக மாரியம்மன் மீதே நம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளனர். அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை தொகுதியின் அவிசாவளை நகர் மற்றும் நகரைச் சூழவுள்ள மக்கள் மேற்கொண்டு வந்த வழிபாட்டுத்தலங்களில் புவக்பிட்டிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் குடகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய இவ்விரண்டு ஆலயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவிசாவளை குடகம வீதி சீத்தாவக்கபுர கைத்தொழில் பேட்டை அமையப் பெற்றுள்ள ஒரு பிரதேசமாகும். இங்கு அமையப் பெற்றுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் சுமார் நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும். அக்காலத்தில் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தவர்களில் நல்லு நாயுடு என்பவர் 1930 இல் தென்னிந்தியாவிலிருந்து கருங்கல்லினாலான அம்மன் சிலையொன்றைத் தருவித்து, அதனை அப்பிரதேசத்தில் உள்ள ஒரு மரத்தடியில் வைத்து தகரத்தினாலான கூரையமைத்து மாரியம்மன் வழிபாட்டுக்கு வழிவகுத்து மக்கள் வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறு நடந்து வந்த போது, இந்த ஆலயத்துக்கு அருகாமையில் சீதாகம எனும் பெயரில் மாதிரிக்கிராமம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனால் ஆலயத்துக்கு ஏற்பட்ட நிலை குறித்து உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இந்து சமய கலாசார

அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு மடாலயம் எனக்கூறும் வகையில் ஆலயம் அமைக்கப்பட்டு பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டு ஆலயத்தை பரிபாலனம் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

1986 இல் இந்த ஆலயத்தின் முதலாவது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நல்லுசாமி என்பவர் தலைமையில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வந்த வேளையில் ஆலயத்தின் கலசம் சரிந்ததையடுத்து எழுத்தாளரான சி. பக்தசீலனுடன் கலந்தாலோசித்து தலைமைத்துவம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஆகம முறைப்படி அங்க சம்பூரணமான ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் ஆலயம் அமையப்பெற்றிருந்த இடம் போதிய இடவசதியைக் கொண்டிராத காரணத்தால் ஆலய நிர்வாக சபையினர் அப்போதைய அமைச்சராக இருந்த இந்திக்க குணவர்த்தனவைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கமைய ஆலயம் அமையப் பெற்றிருந்த காணிக்கு எதிர் புறத்தே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 40 பேர்ச் காணி 1999 இல் பெற்றுக்கொடுக்கப்பட்டது. எனினும் ஆலயத்தை இடமாற்றி அமைப்பது பொருந்தாது எனக் கொண்டு பழைய இடத்திலேயே ஆலயம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வேளையில் ஏற்பட்ட பல எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு நிர்வாக சபையினர் நீதிமன்றம் வரையில் சென்று புதிய ஆலயம் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

பெண்களுக்கும் கோயில் நிர்வாகத்தில் பங்குகொள்ள இடமளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த தலைவர் சி. பக்தசீலனின் கருத்துக்கு அமைய பெண்களும் இணைத்துக் கொள்ளப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு 2002.06.06 இல் அருள் ஜோதி ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் பாலஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டு 2002.11.15 இல் ராமகிருஷ்ண மிஷன் ராஜேஸ்வரானந்த சுவாமியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அவிசாவளையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான கே.என். ஞானசம்பந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர்களான திருமாவளவன், முருகதாஸ். நலன் விரும்பிகள், தனவந்தர்கள் மற்றும் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் ஆலய நிர்மாணப் பணிகள் செவ்வனே பூர்த்தி செய்யப்பட்டு புதியதோர் ஆலயம் எழுப்பப்பட்டு 2011.06.12 இல் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பாலகுகேஷ்வர குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. கொழும்பு 5ம் குறுக்குத்தெரு ஞானம் இம்போட்டர்ஸ் பிரைவேட் லமிட்டட் நிறுவனத்தார் பிரபல வர்த்தகரான ஆர். ராதாகிருஷ்ணன், மற்றும் ஞா. இராஜேந்திரன் ஆகியோர் மகா கும்பாபிஷேகத்துக்கு வழங்கிய சேவை அளப்பரியதாகும். மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று 01.08.2011 இல் தேர்த்திருவிழா நடைபெற்றது.

ஆலயத்துக்கென ஒதுக்கப்பட்ட 40 பேர்ச் காணியில் அப்போதைய அமைச்சரான இந்திக்க குணவர்தன தலைமையில் 1999.12.05 இல் கலாசார மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இ.தொ.கா.வைச் சேர்ந்த ஆர். யோகராஜன் 12 இலட்சம் ரூபாவும், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 50 இலட்சம் ரூபாவும் நிதி உதவி பெற்றுக்கொடுக்கப்பட்டு மண்டபம் பூர்த்தி செய்யப்பட்டது. மண்டபத்தைச் சுற்றி மதில் அமைக்க மனோ கணேசன், பிரபாகணேசன், கலாநிதி குமர குருபரன் சீ.வை. ராம் ஆகியோர் நிதி உதவி பெற்றுக்கொடுத்தனர். மண்டபம் அமைந்துள்ள காணியில் கோயில் குழுக்களுக்கான இல்லம், படப்பள்ளி என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கென சுமார் 50 இலட்சம் ரூபா செலவில் 17 அடி உயரத்திலான கலையம்சம் பொருந்திய சித்திரத் தேர் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு கடந்த 22.07.2014 வெள்ளோட்டம் விடப்பட்டது.

அவிசாவளை, மாணிக்கவத்த, ஹொனிட்டன், கொட்டபொட வத்தை, உக்வத்தை, உசேனி ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் இந்துக்கள் தமது வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வசதியாகவும், கிரியைகள், சாந்தி மற்றும் நேர்த்திக்கடன்களை சிரமமின்றி இலகுவாகவும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையில் சிறப்புப் பெற்றதோர் ஆலயமாக இவ்வாலயம் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

1999.11.28 முதல் இங்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் என்ற பெயரில் அறநெறிப் பாடசாலையொன்று இயங்கி வருகின்றது. மாணவர்கள் மத்தியில் சமய அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்க்கும் பொருட்டு பல ஆசிரியர்களின் உதவியுடன் இயங்கி வருவதுடன், சிவராத்திரி, நவராத்திரி மற்றும் விசேட தினங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று வருவதுடன், மாணவர்களிடையே இந்து சமயம் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு மாணவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வியாழன், 18 ஜூலை, 2019

பஞ்சாமிர்தம்



காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.

இன்றைய உடல் சிக்கல்களை தீர்க்கவல்லது என போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தத்தை கூறலாம். இதனை வெறும் பூஜைப் பொருளாக பார்ப்பது முறையா?

வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவுமுறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல், தைராய்டு என பல உடல் சிக்கல்களை தோற்றுவிக்க அடிப்படை காரணம்.

மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறையினை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். பழனியில் நவபாஷான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்துள்ளார். ஆம், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அன்று வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.

காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம். இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றி கூறக் காரணம் இன்றும் பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம்.

இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப்படுகின்றன. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது. ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்குமாம். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.

தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப்பண்டங்கள், பானங்கள் இருந்தும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் உள்ளது. இது ஒன்றின் மூலமே அதன் சிறப்பை புரிந்துகொள்ள முடியும்.

விரதம்



ஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்க நவசக்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.

ஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது வேண்டுதல்கள் இருந்தால், விரதம் இருந்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவம் உள்ளோர்களின் கருத்து.

சிலர் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உண்பார்கள். இதே போல், நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருந்து ஜெபிப்பவர்களும் உள்ளார்கள். இவையனைத்தும் அவரவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாரு மாறுபடும். ஒருவர் நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் இருந்தால், மற்றவர்களும் அப்படி இருக்கவேணடும எனறு எண்ணுவது தவறு. இறைநிலை மட்டும் மனதில் கொண்டாலே போதும்.

அந்த வகையில, இந்துக்கள் நவகிரக விரதம், நவராத்திரி விரதம், வரலெட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம் போன்றவை கடைபிடிக்கப்படுகிறது. இவைகளில் எந்த விரதத்தை கடைபிடித்தாலும், நம் எண்ணத்தில் உறுதியாக இருந்து நவக்கிரகங்கள் மற்றும் இறைநிலை பரப்பிரம்மத்தை மனதில் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே, நாம் நினைத்த காரியம் கைகூடும்.

ஆயுள்காரகன்


நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகள் உகந்த நாட்கள்.

சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமே நாராயணாய ” என்று உச்சரித்து விரத்தை ஆரம்பிக்கலாம். அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். அசைவம் கூடாது. அதன் பின் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடுதம் அவசியம்.

அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிப்பாட்டை செய்யலாம். சனிக்கிழமை இருக்கும் விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.

மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம். கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு வரவும்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்திவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.

இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். அன்று விரதம் இருக்கும்போது தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, அவர்களும் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்



மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் சந்திராஷ்டமம்.

சந்திரன் என்ற கிரகத்தை ‘மனதுகாரகன்’ என்று அழைக்கிறோம். மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் சந்திராஷ்டமம்.

இறைவனை வழிபட்டு இனிமை காண வேண்டிய நாள் அது. அந்த நாளில் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவதுதான் நல்லது. 8-ல் சந்திரன் வரும்பொழுது ஒருவருடைய அறிவுத்திறனும், மனோபலமும் குறையும். அந்த நேரத்தில் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது. அதனால்தான் சந்திராஷ்டமம் வரும் நாளில் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள்.

மேலும் அன்றைய தினம் பயணங்களை தள்ளிவைத்துக் கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது. சிறிய பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக மாறும். ஒவ்வொரு ராசியிலும் குறைந்தது 21/4 நாள் சந்திரன் உலாவரும். அந்த நாட்களில் எல்லாம் அதிக விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

பிள்ளையார் சுழி



நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கி விட்டே ஆரம்பிக்கிறோம். அதே போல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும் போது முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம். பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக் கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.

விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.

ஆடலரசனுக்கு ஆனித் திருமஞ்சனம்



'வேனிற் காலம், ஆனி இலை அசங்க' என்பதற்கு ஏற்ப அவ்வப்போது மழை பொழியும் இதமான நாட்கள் தொடங்கும் மாதமாகத்தான் ஆனி மாதத்தை நமது முன்னோர்கள் வர்ணிப்பார்கள். ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம். இந்த ஆனி உத்திரமே, ஆடலசரனுக்கான ஆனி திருமஞ்சனமாக கொண்டாடப்படுகிறது. இப்படியான மகிமை பொருந்திய ஆனி திருமஞ்சனத்தின் சிறப்புகளை விவரிக்கிறார் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்.

"திருமஞ்சனம் என்றால், மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப் பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி என்று ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பை பெறுகிறது. இப்படியான சிறப்புகளில், சந்தியா காலங்களாக விளங்கும் ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகதந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.

பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறையே விசேசமாக அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இந்த 2 விசேச நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே, அதிகாலையில் சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள், பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவே ஆனி திருமஞ்சனமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனி திருமஞ்சனத்தை ஆடலரசனான நடராஜ பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், எல்லாச் சிவ ஆலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதைக் கண்டத்தில் நிறுத்தியதால், நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. அத்துடன் வெம்மையுள்ள சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால், சிவபெருமான் பொன்னார் மேனியாய் காட்சி அளிக்கிறார். அபிசேக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என 36 வகையான பொருட்களைக்கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் அதிகாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பிற சிவ ஆலயங்களைக் காட்டிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்னும் விசேசமாகச் சிறப்பிக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி.

ஆனி மாதத்தில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்றும், திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளதுபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. இந்த இரு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தரிசிப்பதாக ஐதீகம். சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் காட்டுவது போலவே, ஆடல் வல்லானின் திருநடனம் தலத்திற்குத் தலம் மாறுபடுகிறது.

ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும், என்பது அருளாளர்களின் சொல் வாக்கு. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்பது இறை நம்பிக்கையாக உள்ளது. அதனால், அபிசேகத்திற்கு செல்லும்போது, நம்மாள் முடிந்த அபிசேக பொருட்களைச் கொண்டு செல்வது சிறப்பு. ஆனித் திருமஞ்சன வைபவங்களில் சுமங்கலிகள் கலந்துகொள்ளும்போது, நீடுழி வாழ்கின்ற சுமங்கலி பாக்கியத்தை அவர்கள் பெறுகிறார்கள். அத்துடன் இளம் வயதினருக்கு நல்ல இடத்தில் வரன் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆனி மாதம் நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தன்றுதான் வசந்த பஞ்சமி, சமீகௌரி விரதம் ஆகியவையும் அனுசரிக்கப்படுகிறது. இந்த உன்னத திருநாளில் முறைப்படி விரதம் இருந்து, மனமுருக வேண்டி.. ஆடலரசனின் அருளை நாமும் பெறுவோம்!

சாய் பாபா அருள்


சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு.

சிட்டுக்குருவியின் காலில் கயிற்றை கட்டி இழுப்பது போல பக்தர்களை என் பக்கம் இழுப்பேன் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வதுண்டு. அதை உறுதிபடுத்துவது போல சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு. சிலருக்கு பாபாவை பற்றி துளி அளவு கூட எந்த விஷயமும் தெரிந்திருக்காது. ஆனால் அவர்களை மிகக்குறுகிய காலத்தில் சாய்பாபா தனது அதிதீவிர பக்தனாக மாற்றி இருக்கிறார்.

அவர்களில் சீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைத்து தி.நகரில் ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான -பிரார்த்தனை மையம் நடத்தி வரும் பேராசிரியர் திருவள்ளுவன் வித்தியாசமானவர்.

இதுபற்றி பேராசிரியர் திருவள்ளுவன் கூறியதாவது:-

2001ம் ஆண்டு கல்லூரியில் என்னுடன் பணிபுரிந்த சாய்ராம் என்பவர் என்னை சீரடிக்கு அழைத்தார். அவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர். சாய்பாபா மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அவருடன் நானும் எனது மனைவியும் சீரடிக்கு சென்றோம்.

சீரடியில் பாபாவின் சமாதி மந்திருக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு நிறைய பேர் அமர்ந்து பாபாவை புகழ்ந்து பாட்டுபாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்தேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. பாபா சமாதியில் வழிபட்ட பிறகு சென்னைக்கு திரும்பிவிட்டோம். அதன் பிறகு நான் பாபாவை சுத்தமாக மறந்து விட்டேன்.

நானும் அதை ஏற்றுக் கொண்டேன். சீரடி சாய்பாபா பற்றிய புத்தகங்களை தேடி தேடி சேகரித்தேன். பாபாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்க படிக்க ஆச்சரியமாக இருந்தது. அவர் மெல்ல மெல்ல என் மனதுக்குள் ஊடுருவினார். அந்த சமயத்தில் கல்லூரி முதல்வர் நான் சீரடி சென்று பாபா ஆலயத்தில் உள்ள நூலகத்தில் புத்தகங்கள் பெறுவதற்கு அனுமதி வழங்கினார். அதன் பேரில் நான் சீரடி செல்ல முடிவு செய்தேன். அப்போது பாபா ஒரு அதிசயம் நிகழ்த்தினார்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நான் சீரடி செல்வதை அறிந்து என்னை பார்க்க வந்தார். அவர் என்னிடம், “சீரடியில் இருந்து ஷிண்டே என்பவர் வந்திருக்கிறார். அவருடன் சீரடிக்கு செல்லுங்கள். உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அவர் பார்த்துக் கொள்வார்” என்று கூறினார். அதன்படி ஷிண்டேவுடன் நானும் நண்பர் பல்லவ ராஜாவும் சீரடிக்கு சென்றோம். அங்கு சாய்பாபா ஆலயத்தின் பி.ஆர்.ஒ. லட்சுமன் சகானே எனக்கு அறிமுகமானார்.

லட்சுமன் சகானே என்னை அவரது வீட்டுக்கும் அழைத்து சென்று பாபா பற்றிய புத்தகங்கள் கொடுத்தார். பிறகு சமாதி மந்திருக்குள் சென்று சாய்பாபாவை வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்தார். சமாதி மந்திரில் பாபா சிலை அருகே வெள்ளித்தூண் பகுதியில் நின்று நான் பாபாவை வழிபட்டேன். அப்போது பாபாவுக்கு நடந்த ஆரத்தி பூஜையில் மெய் மறந்தேன்.

அன்று இரவு என் வாழ்க்கையில் மேலும் ஒரு அதிசயத்தை பாபா நிகழ்த்தினார். என்னுடன் வந்திருந்த பல்லவராஜா தான் கொண்டு வந்திருந்த பாபா படத்தை காண்பித்து இதே போன்று இன்னொரு படம் வேண்டும் என்று சீரடி முழுக்க தேடினார். நாங்கள் அப்துல் பாபா காட்டேஜுக்கு சென்று விசாரித்தோம். அப்போது அங்கு இருந்த அப்துல் பாபாவின் கொள்ளு பேரன் “இரவு 10 மணிக்கு வாருங்கள் தருகிறேன்” என்று கூறினார்.

அவர் சொன்னபடி நானும், எனது நண்பரும் இரவு 10 மணிக்கு அப்துல் பாபா வாழ்ந்த வீட்டுக்கு சென்றோம். எங்களை கண்டதும் அவரது கொள்ளு பேரன் கனிபாய் உள்ளே அழைத்து சென்றார். ஒரு கதவை திறந்து பழைய இரும்புபெட்டியை எடுத்து வந்தார். அந்த பெட்டிக்குள் பாபா தினமும் 5 வீடுகளில் பிச்சை எடுக்க பயன்படுத்திய பாத்திரம், சட்கா ஆகியவை இருந்தன. அவற்றை தொட்டு வணங்க சொன்னார். எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. சாய்பாபா மகா சமாதி அடைந்ததும், அவர் பயன்படுத்திய பொருட்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற 7வது நபர் நீங்கள் என்றார்கள். நான் ஆடிப்போய் விட்டேன்.

ஆச்சரியத்தில் மூழ்கி இருந்த எனக்கு பாபா மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தார். அந்த சூட்கேசுக்குள் இருந்த பிச்சைப்பாத்திரத்துக்குள் கிடந்த ஒரு நாணயத்தை எடுத்து கனிபாய் எனக்கு கொடுத்தார். அது பாபா பயன்படுத்திய நாணயம் ஆகும். அந்த நாணயத்தை தொட்ட வினாடியே நான் பாபாவிடம் முழுமையாக என்னை ஒப்படைத்துவிட்டேன். பாபா என்னை தூண்டில் போட்டு இழுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

அறநெறி அறிவு நொடி

திங்கட்கிழமை யாருக்கு உகந்த நாள்?

சிவனுக்கு

திங்கட்கிழமைகளில் சிவனை வேண்டி என்ன ​ செய்யலாம்?

அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது சிறந்தது.

செவ்வாய்க்கிழமை யாக்கு உகந்த நாள்?

துர்க்கை, முருகன் மற்றும் அனுமனுக்கு

புதன் கிழமை யாருக்கு உகந்த நாள்

விநாயக பெருமானுக்கு

வியாழக்கிழமை யாருக்கு உகந்த நாள்?

விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும்.

வெள்ளிக்கிழமை யாருக்கு உகந்த நாள்?

துர்கை அம்மனுக்கு

சனிக்கிழமை ​​யாருக்கு உகந்த நாள் ?



நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதோடு ஆஞ்சநேயர், பெருமாள், காளி தேவி ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமை உகந்த நாளே.

ஞாயிற்றுக் கிழமை யாருக்கு உகந்த நாள் ?

நவக்கிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு ஞாயிறு என்று மற்றொரு பெயரும் உண்டு.

அறநெறி அறிவு நொடி


""மாங்கல்ய தந்துனா'' என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. இதில் "தந்து' என்றால் என்ன?

"மஞ்சள் கயிறு' என்று பொருள்.

மஞ்சள் கயிற்றைவேறு எவ்வாறு அழைப்பர்?"திருமாங்கல்ய சரடு'

கணவன் இல்லாதவரை "விதந்து'என்று அழைப்பது யாரை\?

கணவர் இல்லாதரை குறிப்பிடுவார்கள்.

கடைகளில்விற்கும்பலகாரங்களைசுவாமிக்குநைவேத்யம்செய்யலாமா?

சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?

பின்னப்பட்ட (உடைந்த) விக்ரகங்களைபூஜிக்கலாமா?

தெய்வ விக்ரஹங்களின் அமைப்பை அங்கம் (உடல்), உபாங்கம் (உறுப்புகள்), பிரத்யங்கம் (அணிகலன்) என்று மூன்று விதமாக பிரிப்பார்கள். விக்ரஹங்களில் பின்னம் ஏற்படுவது காலத்தாலும் நிகழலாம். தவறுதலாகவும் நிகழலாம். உடலில் பெரிய அளவில் பிளவு ஏற்படுமே யானால் அதனை மாற்றி வேறு விக்ரஹம் பிரதிஷ்டை செய்ய வேண்டும். உடல் உறுப்புகளில் சரிசெய்யக்கூடிய அளவிற்கு பின்னப்பட்டால் அஷ்டபந்த மருந்தினால் ஒட்டவைப்பது போன்ற பணிகளை செய்து சரி செய்து கொள்ளலாம். கை, கால், தலை ஆகிய உறுப்புகள் உடைந்திருந்தால் அந்த விக்ரஹத்தை மாற்ற வேண்டும். அணிகலன்கள், அலங்காரங்கள் ஆகியவற்றில் பின்னம் ஏற்பட்டிருந்தால் சரிசெய்து பூஜிக்க வேண்டுமே தவிர, விக்ரஹத்தை மாற்றக்கூடாது.

காயசித்திஎன்றால்என்ன?

"காயம்' என்பது உடலையும், "சித்தி' என்பது வெற்றியையும் குறிக்கும். காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே "காயசித்தி' என்பர்."உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறும் திருமந்திர ஆசிரியர் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்

லட்சுமிதேவிக்கு எந்த தினங்களில் விரதம் அனுஷ்டிக்கலாம்



வாழ்நாள் முழுவதும் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

லட்சுமி வழிபாடு முற்காலங்களில் பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது. அது ஓரிடத்திலேயே தங்காமல் தொடர்ந்து வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அதே போன்று தான் அந்த பணத்திற்கு அதிபதியாக இருக்கும் லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் ஒரே நபரிடத்தில் இல்லாமல், வேறு வேறு நபர்களுக்கு சென்றவாறே இருக்கும்.

அந்த லட்சுமி கடாட்சம் நமக்கு தொடர்ந்து கிடைத்திட நாம் லட்சுமி தேவியின் மனம் குளிரும் படி நடந்து கொள்வதும், லட்சுமி தேவியை முறையாக விரதம் இருந்து பூஜித்து வழிபாடுகள் செய்வதும் பலன் தரும். வாழ்நாள் முழுவதும் நமக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எனவே வாழ்நாள் முழுவதும் அந்தப் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

செல்வ மகளான ஸ்ரீ லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும், வாரந்தோறும் வருகிற வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதம், இவை எல்லாவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாக இருக்கின்றன.

இந்த தினங்களில் விரதம் இருந்து லட்சுமி தேவிக்கு படையல் வைத்து, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, லட்சுமி காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், உங்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கடாட்சம் கிடைக்க வழி வகை செய்கிறது.

முருகன் விரத வழிபாட்டு பலன்கள்





தினந்தோறும் முருகப் பெருமானை தினமும் வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு விரத வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன. ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.

முருகப்பெருமானின் முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

சரவணபவ மந்திரம் விளக்கம்

முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட இதில் ஆறு மந்திரங்களும் ஆறு விதமான பலன்களும் ஒளிந்துள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட இதில் ஆறு மந்திரங்களும் ஆறு விதமான பலன்களும் ஒளிந்துள்ளன. இதோ அந்த மந்திரம்

சரவணபவ மந்திரம் விளக்கம்

1. சரஹணபவ – என மனமுருகி ஜபித்து வந்தால் “சர்வ வசீகரம் உண்டாகும்”.

2. ரஹணபவச – என மனமுருகி ஜபித்து வந்தால் “செல்வமும் செல்வாக்கும் பெருகும்”.

3. ஹணபவசர – என மனமுருகி ஜபித்து வந்தால் “பகை,பிணி நோய்கள் பறந்தோடும்”.

4. ணபவசரஹ – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகளாக உண்டாகும் தொல்லைகள் நீங்கும்”.

5. பவசரஹண – என மனமுருகி ஜபித்து வந்தால் “இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நம்மை விரும்பும்”.

6. வசரஹணப – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்”.

இந்த ஆறு மந்திரங்களில் உள்ள பலன்களில் எதை நீங்கள் பெற விரும்புகிறீர்களோ அதற்கான மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்றோ அல்லது செவ்வாய் கிழமை அன்றோ சொல்ல துவங்கி பின் தினமும் ஜபித்து வர வேண்டும். தினமும் இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது ஜெபிக்கவேண்டும். மந்திரத்தை ஜெபிக்கும்போது சிந்தையில் முருகனை தவிர வேறெதுவும் இருக்க கூடாது.

பெண்களுக்கே உரித்தான மாதம் ஆடி



* ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் பெண்களுக்கான விரத நாள்கள்தான். இந்த நாளில் செய்யப்படும் விளக்கு பூஜைகள் சிறப்பானது. கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் பெண் தெய்வங்கள், குலதெய்வங்களாக இருக்கும் பெண் சக்திகளை இந்த மாதத்தில் வழிபடுவது சிறப்பானது. ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் பெண்களுக்கே உரித்தான திருநாளாகும்.

* ஆண்டாளும், பொறுமைக்கு இலக்கணமான பூமாதேவியும் பிறந்தது ஆடி மாதத்தில்தான். எனவே ஆடி மாத சுக்கிலபட்ச துவாதசி அன்று துளசியை வழிபட குடும்ப நலன் மேம்படும் என்பது பெண்களின் நம்பிக்கை.

* ஆடியில் வளர்பிறை நாளில் வரும் வெள்ளி, செவ்வாய்களில் அம்மன் பூஜை செய்தால் சிறப்பான பலன்களை தரும். கோலமிட்டு, குத்து விளக்கேற்றி, பூஜையின்போது ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் அம்மன் பாடல்களைப் பாடி சக்தியை வணங்குவது நல்லது. பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் போன்றவற்றைப் படைத்து பூஜையை நிறைவு செய்யலாம். அப்போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக அலங்கரித்து உணவளித்து, மங்கலப் பொருள்களை அளித்து அவர்களிடம் ஆசியைப் பெறலாம். இதனால் பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.

* ஆடிப்பெருக்கு பெண்களுக்கே உண்டான திருநாள். பெண்களின் வடிவாகக் கொண்டாடப்படும் ஆற்றினை கொண்டாடி வழிபடுவதே ஆடிப்பெருக்கு. அன்றைய நாளில் புதுத் தாலியை பெருக்கிப் போடுவதும், முளைப்பாரி எடுப்பதும், கருகமணி, கருவளையல்களை ஆற்று நீரில் படையல் அளிப்பதும் பெண்களின் புனிதமான சம்பிரதாயங்கள். புதிய பணிகளைத் தொடங்குவதும், சொத்துகள் வாங்குவதும்கூட அந்த நாளின் விசேஷம்தான்.

* இதே மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மணமான பெண்களின் முக்கிய விரத நாள். வரலட்சுமியை வணங்கி வீட்டிற்கு வருமாறு பாடல் பாடுவது இந்த நாளில் வழக்கம். பலவித நைவேத்தியங்கள் படைத்து மற்ற சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு, ரவிக்கைத்துணி, மங்கலப்பொருள்கள் அளித்து அவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம்.

* ஆடிப் பௌர்ணமி தினத்தில்தான் ஹயக்கிரீவர் அவதரித்தார் என்பதால், அன்றைய நாளில் பெண்கள் அவரை வணங்கி தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக விரதம் இருப்பார்கள். சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆடிப் பௌர்ணமியன்று புன்னை வனத்தில் இருந்த கடும் தவம்தான் அவளுக்கு சங்கரநாராயணரை தரிசிக்க வாய்ப்பு பெற்றுத் தந்தது. எனவே ஆடிப் பௌர்ணமி விழா அங்கு சிறப்பானது.

* ஆடி மாதத்தின் இறுதியில் வர இருக்கும் ஆடிக் கிருத்திகைத் திருநாளில் முருகப்பெருமானை வணங்கி குடும்ப நலனுக்காக விரதமிருந்து ஆசி பெறுவார்கள்.

* ஓர் ஆண்டில் வரும் நான்கு நவராத்திரிகளில் வாராஹி நவராத்திரி ஆடி மாதத்தில் வருகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வாராஹி இருக்கும் ஆலயங்களில் இது கொண்டாடப்படுகிறது. தருமபுரி கோட்டை ஸ்ரீகல்யாண காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் சூலினி துர்கையின் திவ்ய ரூபத்தை ஆடிமாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். ஆண்டின் மற்ற எல்லா நாள்களிலும் சூலினியின் முகதரிசனம் மட்டுமே கிடைக்கும் என்பதால் அன்று பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு இந்த மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஸ்ரீ வித்யா பூஜை பெண்களுக்கானது.

* ஆடி மாதத்தில் ஈசனின் சக்தியை விட பராசக்தியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஆடி மாதம் சுக்ல தசமி அன்று திக் தேவதா விரதம் இருக்கிறார்கள். திக் தேவதைகளை அந்தந்தத் திக்குகளில் வணங்கி அவர்களுக்கான துதியை ஜபித்து எல்லா தடைகளையும் நீக்க வேண்டிக்கொள்கிறார்கள்.

* ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவது நல்லது. இதனால் பயங்கள் நீங்கி செழிப்பு உண்டாகும். ஆனால், எலுமிச்சம் பழ விளக்குகளை ஒருபோதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

கண்ணகி கலாலயத்தின் 15 வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை 2019.06.29ஆம் திகதி கொழும்பு பழைய நகர மண்டபத்தில் தலைமையில் நடைபெற்ற போது கே. ஈஸ்வரலிங்கம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



நாவலப்பிட்டி நகரத்தின் அருகாமையில் அமைந்துள்ள சொய்சாகலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812