புதன், 19 ஜூலை, 2017




வீட்டில் ஏன் துளசி செடியை வைக்க வேண்டும்?

இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படுவது துளசி செடி. நம்மில் யாவர் வீட்டிலும் துளசி செடியை ஒரு மாடத்தில் வளர்த்து அதற்குச் சுற்றிலும் கோலமிட்டு, மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து தினமும் வழிபடுவதென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்தப் பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவைப் பிரதிபலிக்கும் சாலகிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள். வீட்டில் ஏன் துளசி செடியை வைத்து வணங்க வேண்டும்? அதன் பயன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

துளசி உருவான கதை:
ஜலந்தரா என்ற ஒரு அசுரன் இருந்தான். இந்திரன் மீது சிவபெருமான் கோபப்பட்டதால், அந்தக் கோபத்தில் பிறந்தவர் ஜலந்தரா. இவர், சிவனைப் போன்று சக்திவாய்ந்தவராக இருந்தார். அவர் அழகிய வெந்தாவை மணந்தார். வெந்தா விஷ்ணுவின் பெரும் பக்தை. அவளது பக்தி காரணமாக ஜலந்தரா அதிகப்படியான யோக சக்திகளை பெற்றார். ஒவ்வொரு முறையும் ஜலந்தரா போருக்குச் செல்லும்போது, வெந்தா விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்வாள்.

இது அசுரரின் வெற்றியை உறுதி செய்யும். ஒருமுறை ஜலந்தரா தேவர்களுடன் தலைவராக இருந்தார். ஜலந்தராவை தோற்கடிக்க இயலாதது என்று கடவுள்கள் அறிந்திருந்தனர். ஏனென்றால் வெந்தா கடுமையான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தாள். எனவே, விஷ்ணு ஜலந்தாரின் உருவில் வெந்தாவிடம் சென்றார். வெந்தா உன் தொழுகைகளை நிறுத்து, நான் சிவனை தோற்கடித்துவிட்டேன். இப்போது உலகம் முழுவதிலும் என்னைப்போன்று சக்திவாய்ந்தவர் எவரும் இல்லை என்று சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவள் பிரார்த்தனையை நிறுத்திவிட்டு, தன் ஆசனத்தில் இருந்து எழுந்தாள்.

ஆனால் அவள் அவ்வாறு செய்தபோது, ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தாள். அந்த நேரத்தில், சிவபெருமான் ஜலந்தராவை கொன்றுவிட்டார். வெந்தா இதை உணர்ந்து விஷ்ணுதான் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று அறிந்துகொண்டாள். அவள் விஷ்ணுவிடம், நீங்கள் என் கணவரையும் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் என் கணவர் கொல்லப்படும்போது ஒரு கல்லைப்போல நின்று கொண்டு இருந்தீர்கள். உங்கள் பாவங்களைக் குறித்து ஒரு கல்லில் சிக்க வைக்கப்படுவீர்கள் என்று அவள் விஷ்ணுவை சபித்தாள். விஷ்ணுவை சபித்துவிட்டு வெந்தா இறந்து போனாள்.

வெந்தாவின் சாபத்தின் படி, விஷ்ணு சாலகிராமத்தில் சிக்கிக் கொண்டு, துளசி ஆலை என்ற பெயரில் மறுபடியும் பிறந்தார். துளசியின் இலைகள் விஷ்ணுவின் வடிவம் ஆகும். அதனால் வீட்டில் துளசி செடி வைத்து வழிபட்டால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்வில் ஏற்றம் உண்டாகும். மேலும் மருத்துவ ரீதியாக துளசிச் செடி இலையானது காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல நோய்களைக் குணப்படுவதாக அறியப்படுகிறது. ஆகையால் துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது உண்மை.



பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

உலக வாழ்வு, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வாழ்வு என்ற இரு பகுதிகளைக் கொண்ட நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக அறக்கல்வி உள்ளது. உலக வாழ்வுக்குக் கைப்பொருள் (பணம்) சம்பாதிக்க வேண்டும்; பிறவிப் பயன் அடைய மெய்ப்பொருள் சம்பாதிக்க வேண்டும். இவ்விரண்டையும் தருவதே முழுமைக் கல்வியாகும்.

கல்வி என்றாலே பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்றாகிவிட்டது; இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ, குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோர் நலத்தைப் பேணுவதற்குப் பணம் அவசியம்தான். அந்தப் பணத்தைச் சம்பாதிக்கவும், சம்பாதித்ததைப் பொன்னாகவும், சொத்தாகவும், பணமாகவும் சேமித்துப் பாதுகாக்கவும், பொருட்களைப் பெருக்கவுமே வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்துவிடுகிறோம்; அதனால் மெய்ப் பொருளைச் சம்பாதிக்க வேண்டிய காலம் சுருங்கிக்கொண்டே வருகிறது. ‘பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்’ என்று தம் நிலைமையை இறைவனிடம் சொல்லி வருந்துகிறார் மணிவாசகர்.

உடைந்த ஊசியைக்கூட இவ்வுலகத்திலிருந்து யாரும் எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும், தேவைக்கும் அதிகமாகப் பணம் சேர்த்து, தேவையுள்ள சகமனிதர்களுக்கு அவை கிடைக்கவிடாமல் பெரும்பாவம் செய்து, வாழ்நாளையும் வீணடித்துவிடுகிறோம். இறுதியில் பிறவிப் பயனை அடையாமலேயே இறக்கிறோம்.

பொய்ப் பொருட்களைப் பெருக்குவதிலேயே வாழ்நாளைக் கழித்துவிட்டு, இறைவனை அறியும் மெய்யறிவு பெறுவதற்கான பொழுதைச் சுருக்கிவிடும் செயலானது, தீவினைகள் பெருகி, பிறவிகளில் உழலும் கொடிய நரகத்தில் நம்மைத் தள்ளிவிடும்.

வெள்ளி, 9 ஜூன், 2017

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மெய்ப்பொருள் காண் பதறிவு



 ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

 குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.

‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.

வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு - குறள் 423 (எப்பொருள்யார்)

இதன்பொருள்:
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;

அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.



குறள் கூறும் கதை

மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா

முற்றத்தில் சோறு ஊட்டுவதை மரத்தில் நின்று பார்த்த ஏராளமான காகங்கள் கூடிவிட்டன.


காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் மேகலா. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை.

அப்போது அடுப்பில் விசில்... சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் மேகலா.

அர்ச்சனாவின்  தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி தான்.

அம்மா உள்ளே போனதும், அர்ச்சனா கண்ணால் சிரித்தபடி தளிர்நடை நடந்தபடி, சோற்றை அள்ளி காக்காவை நோக்கி நீட்டினாள். காகங்கள் அவளை நெருங்கி வர, “காக்கா இந்த... காக்கா இந்தா...” என்று சோறு போட்டாள்.

உள்ளே சென்ற மேகலா  திரும்பி வர, அர்ச்சனாவை திட்டி விட்டு,

“அரிசி விக்கிற விலைக்கு இதுகளுக்கு வேற  சோறு போடணுமாக்கும். உன் சாப்பாட்டை காக்காவுக்கு தியானம் பன்றியா?” காக்கைகளை விரட்டினாள்

அர்ச்சனாவுக்கு நாய், பூனை, காக்கா, எறும்பு எல்லோருமே நண்பர்கள்தான். கையில் என்ன பண்டம் வைத்திருந்தாலும் போட்டு விடுவாள். அவளுக்கு என்ன தெரியும்...!?


அதட்டிக் கொண்டே சோறூட்டிய மேகலா , விளையாட்டுச் சாமான்களை அர்சனாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்க வீட்டுற்குள் சென்றுவிட்டாள்.

அர்ச்சனா முற்றத்தில் விளையாட்டு சாமான்களை பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென அர்ச்சனாவின் கூச்சலும், காக்காக்கள் கத்தும் சத்தமும் கேட்டு வெளியே ஓடி வந்தாள் மேகலா.

அங்கே குரங்கு ஒன்றை காக்கை கூட்டம் விரட்டி விரட்டி கொத்திக் கொண்டு இருந்தது.

“அம்மா என் டப்பா...” என்று அழுத அர்ச்சனா, அம்மாவை கட்டிக் கொண்டாள்.

ஒரு நொடியில் நடந்ததை புரிந்து கொண்டாள் மேகலா.

தன் மகள் விளையாடிய பாத்திரத்தில் ‘சாப்பிட ஏதேனும் இருக்குமோ?’ என எண்ணி குரங்கு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. இதைப் பார்த்த காகங்கள் குரங்கினை விரட்டி கொத்துகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள்.

மகள் மற்ற ஜீவன்களுடன் நட்பாக இருந்தது, அவளுக்கு ஒரு இடையூறு நேர்ந்தபோது உதவியாக அமைந்ததை எண்ணி ஆச்சிரியப்பட்டாள் மேகலா.

அன்று முதல் மகளுக்கு சோறூட்ட வரும்  மேகலா  முதலில் காகங்களை ‘க்கா...க்கா...’ எனக் கூப்பிட்டு சாதம் வைத்த பின்னரே மகளுக்கு உணவூட்டினாள்!

நாய் மட்டுமல்ல நாம் பாசம் காட்டும் எல்லா உயிரினங்களும் நன்றியுள்ளவையே.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.  "

 என்கின்ற குறள்  ஞாபகம் வருகிறது

குறள் விளக்கம்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812