வியாழன், 26 டிசம்பர், 2013

இராமாயணம

கே. ஈஸ்வரலிங்கம் 10487) கும்பகர்ணனின் மகன் யார்? கும்பன் 10488) ஜனகரின் தம்பி யார்? குசத்வஜன் 10489) மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை யார்? குசத்வஜன் 10490) பரத் சத்ருக்கனின் மாமனார் யார்? குசத்வஜன் 10491) தசரதரின் பட்டத்தரசியர் யார்? கெளசல்யா, கைகேயி, சுமித்திரை 10492) ஜனகரின் மனைவி யார்? சுநைனா 10493) சீதையின் தாயாரின் பெயர் என்ன? சுநைனா 10494) அகல்யையின் கணவர் யார்? கெளதமர் 10495) அகல்யையின் மகன் யார்? சதானந்தர் 10496) சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர் யார்? சதானந்தர் 10497) மதங்க முனிவரின் மாண வன் யார்? சபரி 10498) ராமனை தரிசித்தவர் யார்? சபரி 10499) போரில் தசரதர் தேவர்களுக்கு உதவியவர் யார்? சிம்பராசுரன் 10500) வடக்கு திசையில் சீதையை தேடச் சென்றவர் யார்? சதபலி 10501) கழுகரசன் ஜடாயுவின் அண்ணன் யார்? சமபாதி 10502)சீதையைக் காண அங்கதனின் படைக்கு வந்தவர் யார்? சமபாதி 10503) ராமனின் மனைவி யார்? சீதா 10504) சீதாவுக்குரிய வேறு பெயர்கள் என்ன? ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனக்குமாரி, மைதிலி.

திங்கள், 16 டிசம்பர், 2013

திருநீறு

கே. ஈஸ்வரலிங்கம் 10473) திருநீறு என்பது என்ன? திருநீறு சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். 10474) திருநீறு வேறு எவ்வாறு அழைக்கப்படும்? விபூதி, ஐசுவரியம் என்றும் கூறப்படும். 10475) திருநீறு உணர்த்தும் தத்துவம் என்ன? எத்தகையினராக இருந்தாலும் மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவார் எனும் தத்துவத்தை இது உணர்த்துகிறது. 10476) மனித உடலில் மிக அதிகமாக சக்தி வெளிப்படும் பாகம் எது? மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கி யமான பாகம்.அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும். அதேபோல் உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸ்தானம் ஆகும். 10477) திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? திருநீறு அணிவதால் தடையற்ற இறை சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல் வாக்கு, நல்லோர் நட்பு போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலமும் இரத்த ஓட்டமும் சீர்படும். 10478) நெற்றியில் திருநீறு பூசுவது ஏன்? சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழி யாக கடத்தும் வேலையை திருநீறு செவ்வனே செய்யும். அதனால் தான் நெற்றியில் திருநீறு பூசு கிறார்கள். இதனால்தான் ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பார்கள். 10479) சைவ சமய மக்களுக்கு மிக முக்கியமான மூன்றும் எவை? சைவ சமய பெருமக்களுக்கு திருநீறு, உருத் திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமை யாதவையாகும். 10480) விபூதி என்பது என்ன? பசுவின் சாணத்தை எடுத்து அத னை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். 10481 விபூதி தரிப்பதால் விளை யும் வேறு நன்மைகள் என்ன? விபூதி தரிப்பதால ஆன்மீக சம்பந்தமான நன்மைகள் விளை வதுடன், உடல் நலம் சார்ந்த நன்மைகளும் உண்டா கும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினி யும் கூட. அதனை உடல் முழுவதிலும் பூசுவதால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறு கிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர் க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது. 10481) திருநீறின் பெருமையை பாடியவர் யார்? திருஞானசம்பந்தர் 10482) திருநீறின் பெருமையை திருஞான சம்பந்தர் எந்த பதிகத்தில் பாடினார்? தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். 10483) திருநீறு அணியும் போது கூற வேண்டிய மந்திரம் எது? சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்ற ஏதாவ தொரு பஞ்சாட்சர மந்திரம் 10484) திருநீறை எவ்வாறு அணிய வேண்டும்? பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி நெற்றி முழுவதும் அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடு களாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். 10485) திரிபுண்டரிகமாக திருநீற்றினை அணிய பயன்படும் விரல்கள் மூன்றும் எவை? ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும், 10486) திருநீறை எந்த திசையை நோக்கியபடி அணிதல் வேண்டும். முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். உடலுக்கும் உயிரிற்கும் இம்மை யிற்கும் மறுமைக்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாமும் அணிந்து உயர்வடைவோம்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இராமாயணம்

கே. ஈஸ்வரலிங்கம் 10452) இராமனின் அருளால் சாபம் நீங்கப் பெற்றவர் யார்? அகல்யை 10453) இராமனுக்கு போர் களத்தில் ஆதித்ய ஹருதயம் உபதேசித்த மாமுனிவர் யார்? அகத்தியர் 10454) இராவணனிடம் இராமனைப் பற்றி கோள் சொன்னவன் யார்? அகம்பனன் 10455) இராமனின் அம்புக்கு தப்பிப் பிழைத்த அதிசய இராட்சஷன் யார்? அகம்பனன் 10456) வாலி, தாரையின் மகன் யார்? அங்கதன் 10457) கிஷகிந்தையின் இளவரசன் யார்? அங்கதன் 10458) அனுசூயா என்ற பத்தினியின் கணவர் யார்? அத்திரி 10459) இராம தரிசனம் பெற்றவர் யார்? அத்திரி 10460) இராவணன் மகன் யார்? இந்திரஜித் 10461) இந்திரஜித் யாரால் அழிந்தான்? லட்சுமணனால் 10462) மேகநாதன் என்ற பெயரை உடையவன் யார்? இந்திரஜித் 10463) இராவணனின் தம்பிகள் யார்? கரன், தூஷணன் 10464) இராமனின் கையால் அழிந்தவர்கள் யார்? கரன், தூஷணன் 10465) ஜனஸ்தானம் என்ற இடத்துக்கு அதிபதிகள் யார்? கரன், தூஷணன் 10466) தலையும் காலும் இல்லாத அரக்கன் யார்? கயந்தன் 10467) இராமனால் வதைக்கப்பட்டவன் யார்? கயந்தன் 10468) கந்தவர் வடிவம் பெற்று இராம லட்சுமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவர் யார்? கயந்தன் 10469) வேடர் தலைவன் யார்? குகன் 10470) படகோட்டி யார்? குகன் 10471) இராவணனின் தம்பி யார்? கும்பகர்ணன் 10472) எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன் யார்? கும்பகர்ணன்

செவ்வாய், 3 டிசம்பர், 2013

காலியில் அருள்பாலிக்கும் கதிர்வேலாயுத சுவாமி

தென் மாகாணத்தின் எழில் அழகை இன்னும் மெருகூட்ட அதன் தலைமை நகராக காணப்படும் காலியூரில் அற்புதமான கடல் பார்க்கும் சுவாமியான எம் பொருமான் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். ஜாதி, மத பேதமின்றி குறிப்பாக பெளத்த மதத்தவர் விரும்பி வணங்கும் அளவிற்கு அனைத்து மக்களுக்கும் நாமிருக்க பயமேன் என நிமிர்ந்து நிற்கும் எம் பெருமான் அருள்பாலிக்கின்றார். 1790 ஆம் ஆண்டு தேவகோட்டை செட்டியார் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் கோவில் இந்த ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலாகும். இக்கோவில் மட்டுமல்லாது உனவட்டுன பிள்ளையார் கோவிலும் இதன் பின் அமைக்கப்பட்டது. இலங்கையில் மேலும் பல கோவில்கள் அமைக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட செட்டிமார் தமது வியாபாரத்தை இந்த காலி ஊரிலேயே முதன் முறையாக ஆரம்பித்தார்கள். இவர்கள் பர்மா ஊரிலிருந்தே அரிசி இறக்குமதி செய்தார்கள். இவர்கள் இறக்குமதி செய்யும் அரிசியை கிட்டங்கி என்ற இடத்திலும், டெல்பட்டவுன் வோட்ஸ் வீதி என்ற இடத்திலும் களஞ்சியப்படுத்தி வியாபாரிகளிடையே விநியோகித்தார்கள். இக்காலகட்டத்திலேயே இவர்கள் பர்மாவில் பர்மா டீக் எனப்படும் தேக்க மரக்கட்டைகளை கொண்டு வந்து ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலை நிர்மாணித்தார்கள். இதன் பின் இவர்கள் தமது வருவாயை கொண்டு வங்கித் தொழில், நகை அடகு பிடிக்கும் தொழில் என்பன மேற்கொண்டார்கள். செட்டியார்களாலேயே நிர்வகிக்கப்பட்ட இக்கோவில் 1956 இதற்கு முன் வைரவன் செட்டியார், லெட்சுமணன் செட்டியார், சொக்கலிங்கம் செட்டியார், பழனியப்பச் செட்டியார், ராமசாமி செட்டியார் ஆகியோரால் சிறப்பாக பரிபாலிக்கப்பட்டது. 1956 இதிலிருந்து 1981 வரை பெரிஸ்டர் சோமசுந்தரம் செட்டியாரால் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் 1981 இதிலிருந்து கோவிலை நிர்வாகிக்கும் பொறுப்பு தற்போது உள்ள பிரிபாலன சபையான கருப்பன் செட்டியார் அண்ணாமலை செட்டியார் ஏ. எஸ். சீ. முத்தப்பச் செட்டியார் (ஜே.பி.), கே. மாணிக்கம் செட்டியார் (ஜே.பி.) சின்னையா ராமனாதன் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலில் ஆடிமாதம் நடக்கும் ஆடிவேல் திருவிழா தான் தென் மாகாணத்திற்கே முதன்மை வகிக்கிறது. இத்திருவிழாவில் சுவாமி வீதி வலம் வரும் ரதமே இலங்கையிலேயே பெரிய ரதமாக காணப்படுகிறது. 1973 ஆம் ஆண்டின் பின் இந்த ரதம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 1983 இல் நடந்த இனக் கலவரத்தில் இந்த ரதம் தீக்கிரையாகி சேதமடைந்தது. இன்று வரை அதை மீள்திருத்தம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.இக்கோவிலில் நகராத்திரி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பூஜைகள் என்பன விமர்சையாக நடைபெறுகின்றன. கதிர்காமத்திற்கு பயணிக்கும் யாத்திரிகள் தென் மாகாணத்தில் அமைந்துள்ள முதல் முருகன் கோவிலான இக்கோவிலை தரிசித்து விட்டே அவர்களது பயணத்தை தொடர்வர். புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட வியக்குமளவிற்கு இக்கோவிலின் உட்புறமாக வரையப்பட்டுள்ள வண்ணச் சித்திரங்களும் அற்புதமான தேக்கு மர வேலைப்பாடுகளும் முருகனை தரிசிக்க வருபவரை மெய்மறக்கச் செய்கின்றன. இவை இக்கோவிலின் ஒரு விசேட அம்சமாகும். இக்கோவில் நம்மவர்களால் மட்டுமன்றி வெளிநாட்டவர்களாலும் போற்றப்படுகிறது.

கே. ஈஸ்வரலிங்கம்

(10440) இரவில் உணவில் சேர்க்கக் கூடாதவை யாவை? இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் (10441) உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் சாதத்தைப் பரிமாறலாமா? கூடாது. (10442) முதலில் என்ன பரிமாற வேண்டும்? காய்கறிகளையோ, அப்பளத்தையோ அல்லது உப்பையோ பரிமாறலாம். மூக்குத்தி (10443) மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் ஏற்படும் நன்மைகள் எவை? உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. (10444) தங்கத்துக்கு உள்ள ஆற்றல்கள் என்ன? உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக்கூடிய ஆற்றல் உண்டு. (10445) ஏன் பெண்கள் மட்டும் மூக்குக் குத்திக்கொள்கிறார்கள்? ஆண்களின் மூச்சுக் காற்றைவிட பெண்களின் மூச்சுக் காற்றுக்கே சக்தி அதிகம் என்பதால் (10446) மூக்குக் குத்துவதால் உண்டான வேறு நன்மைகள் யாவை? சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்த ரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத் தடுமாற்றம் போன்றவற் றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. பொது (10447) விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்? மாலைநேரம் வழிபாட்டிற்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பாள் என்பது ஐதீகம். அந்தச் சமயத்தில் பெண்கள் விரித்த கூந்தலுடன் நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் தலைவாரி, பூ வைத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள் வது சிறப்பைத் தருமென்பது சான்றோர் வாக்கு. (10448) கோயில்களில் மணி அடிப்பது எதற்காக? மணிச் சத்தம் அதிம்ம் போது ‘ஓம்’ என்ற பிரணவம் எழுகிறது. ஆத்மார்த்த சிந்தனையுடன் இறைவனுடன் கருத் தொருமித்துக் கேட்டால் இந்த நாதத் தைக் கேட்கலாம். இதற்கு ‘எல்லாம் நானே’ என்பது பொருள். இருப்பவை யாவும் இறைவனே என்ற பொருளை உணர்த்து வதே மணியோசை. (10449) திருமணமான பெண்களை ‘திருமதி’ என அழைப்பது ஏன்? திருமணத்திற்கு முன் ஆண்கள் பொறுப்பற்றவர்களாக வீண் செலவுகள் செய்பவர்களாக இருப்பார்கள். திருமணத்தின் பின் அவள் அவர்களைத் திருத்திவிடுகிறாள். கணவனின் வரம்புமீறிய செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இல்லத்தில் லட்சுமிகடாட்சம் ஏற்படுகிறது. இவ்வாறு திருவையும் மதியையும் இணைத்து அவள் திருமதி என அறியப்படுகிறாள். (10450) கோயிலுக்குச் சென்றால் நேராக வீட்டுக்குத் தான் வரவேண்டுமென்பது ஏன்? நாம் கோயிலுக்குச் சென்று மனத்தின் மாசுக்களைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால் நமது புனிதத் தன்மை பாதிப்பிற்குள்ளாகாத இடங்களுக்குச் செல்வது தவறில்லை. ஆலயத்திற்குச் செல்லும் முன் ஆண்ட வனுக்குப் படைக்கப்படுகின்றனவற்றை ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே நன்மை பயக்கும். (10451) புதுமனைகளின் திருஷ்டி பூசணிக்காய் தொங்க விடுவதன் நோக்கம் என்ன? கண்ணூறு கழித்தல் என்பது எமது பண்டைய மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநலமும் உல்நலமும் பாதிக்கப்படுகின்றனவென்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. திருஷ்டிதோஷம் என்பது இதுவே, இவ்வளவு அழகாக வீடு கட்டியுள்ளார்களே என யாராவது பொறாமையோடு பார்த்தால் திருஷ்டிதோஷம் ஏற்படும். தொங்கவிடப்படும் பூசணிக்காயும் அதில் வரையப்பட்டிருக்கும் வடிவமும் பார்ப்போர் கவனத்தைத் திசைதிருப்பும் புது வீட்டை முழுமையாகப் பார்ப்பதிலி ருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டி தோஷம் குறையும்.

திங்கள், 25 நவம்பர், 2013

தாய்நாட்டில் மட்டுமன்றி தமிழகத்துக்கும் சென்று சைவத்துக்கும் தமிழுக்கும் பணியாற்றியவர் நாவலர்

அன்னாரின் குருபூசை தினம் நாளை 24ம் திகதி அனுஷ்டிப்பு கே. ஈஸ்வரலிங்கம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18ஆம் திகதி பிறந்தார். இவர் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு கடைசி புத்திரனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஆறுமுகப்பிள்ளை என்பதாகும். இவரது தந்தையாரான ப. கந்தப்பிள்ளை, பேரனாகிய பரமானந்தர், பூட்டனான இலங்கைகாவல் முதலியார் ஆகியோர் தமிழ் அறிஞர்களாவார்கள். நாவலருடன் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர். சகோதரர்கள் நான்கு பேர், சகோதரிகள் மூன்று பேர். சகோதரர்கள் அரசாங்க உத்தியோகம் செய்து வந்தார்கள். ஆறுமுகநாவலருக்கு பெற்றோர் ஐந்து வயதில் வித்தியாரம்பம் செய்து வைத்தனர். இவர் நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றுக்கொண்டார் ஒன்பதாவது வயதில் தனது தந்தையை இழந்த இவர், சரவணமுத்து புலவரிடம் உயர் கல்வி கற்றார். முதலில் சரவணமுத்து புலவரிடம் உயர் கல்வி கற்றவர், பின்பு சரவணமுத்துப் புலவரின் குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்றார். ஆறுமுகநாவலரை அவரது மூத்த சகோதரரே உயர்கல்வி கற்க வைத்தார். ஆறுமுகநாவலர் தனது பன்னிரண்டாவது வயதில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்று பாண்டித்தியம் பெற்றார். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் முன்னணி ஆங்கிலப் பாடசாலையாக இருந்தது மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையாகும். இது இப்போது யாழ்ப்பாண மத்திய கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. இவர் இக்கல்லூரியில் கல்வி கற்று ஆங்கில மொழியிலும் பாண்டித்தியம் பெற்றார். இவர் இருபதாவது வயதில் இப்பாடசாலையின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் இக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அந்தப் பாடசாலையின் ஸ்தாபகராகவும் அதிபராகவும் இருந்தவர் பேர்சிவல் என்ற பாதிரியாராவார். அப்போது இந்த பாதிரியார் கிறிஸ்தவ விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க் கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது அந்த மொழி பெயர்க்கும் பணிக்கு உதவியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கியவர் ஆறுமுகநாவலராவார். ஆறுமுகநாவலர் பேர்சிவல் பாதிரியாருடன் சென்னைக்கு சென்று அதனை அச்சிடும் பணிக்கும் உதவியாக நின்று அவருடனேயே யாழ்ப்பாணத்துக்கு வந்தார். தமிழும் சைவமும் தனது இரு கண்கள் என போற்றிவந்த ஆறுமுக நாவலர் தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக பணி புரியத் தொட ங்கினார். சைவ சமயத்தை வளர்ப்ப தற்காக பிரசங்கம் செய்யத் தொடங் கினார். இவரது முதலாவது பிரசங் கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ் வரன் கோவிலில் 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 37ஆம் திகதி இடம் பெற்றது. இந்தப் பிரசங்கத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பிரசங்கம் செய்து வந்தார். இவர் செய்த இந்த பிரசங்கங்களின் பயனாக மக்களிடையே பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. இவ்வாறு சமயப் பிரசங்கங்களை செய்து வந்த ஆறுமுகநாவலர் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார். இவர் இந்தப் பாடசாலையை ஆரம்பிக்கும் வரையில் அதாவது 1848ஆம் ஆண்டு வரை மத்திய கல்லூரியில் ஆசிரியராகவே பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு மாதாந்தம் மூன்று பவுண் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 1848 இல் அவர் அந்த ஆசிரியர் பதவியையும் துறந்து சைவசமய வளர்ச்சிக்காக தன் வாழ்வின் முழு நேரத்தையும் செலவிட்டார். சைவப் பிள்ளைகளுக்கான பாட நூல்களை அச்சிடுவ தற்காக அச்சியந்திரம் வாங்கத் திட்டமிட்டார். இதற்காக இவர் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் 1849 ஆம் ஆண்டு ஆடிமாதம் சென் னைக்குச் சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதினத் தில் சைவப்பிரசங்கம் செய் தார். இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் தமது புலமையை வெளிப்படுத்தியதால் திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்ற பட்டத்தை வழங்கியது. இவர் சென் னையில் சிலகாலம் தங்கி இருந்து சூடாமணி நிகண்டு உரையையும் செளந்தர்யலங்கரி உரையையும் அச்சிட்டு வெளியிட்டார். அதன்பின் ஒரு அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். அதன்பின் தனது இல்லத்தில் 'வித்தியானுபாலன இயந்திரசாலை' என்னும் பெயரில் அச்சுக்கூட மொன்றை நிறுவினார். அங்கு அவர் பாலர் பாடம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவசமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படை உரை போன்ற நூல்களை அச்சிட்டார். இவ்வாறு சைவத்துக்கு தொண்டாற்றிவரும் இவரது சேவையைப் பாராட்டி இலங்கை அரசாங்கம் முத்திரையொ ன்றை வெளியிட்டது. இவ்வாறு இலங்கையில் சேவையாற்றி வந்தவரின் பணி தமிழ் நாட்டிலும் வியாபித்து இருந்தது. 1859 வைகாசி மாதம் திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை சென்னையில் வெளியிட்டார். இலங்கையில் அச்சுகூடம் நிறுவியது போல பெரியதொரு அச்சியந்திரம் வாங்கி சென்னை தங்கசாலைத் தெருவில் அச்சுக் கூடமொன்றை அமைத்தார். இவ்வாறு சென்னையில் அச்சுகூடம் நிறுவியவர் அங்கு பல நூல்களை வெளியிட்டார். இவர் சென்னையில் தங்கி இருந்த காலத்தில் சென்னையிலும், திருவாவடுதுறையிலும் திருநாகைத் தோரணத்திலும் சைவப் பிரசங்கங்களை செய்து வந்தார். 1882 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இவர் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினார். ஆறுமுகநாவலர் 1863 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தமிழகத்துக்குச் சென்று தமிழகத்திலுள்ள இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்து வந்தார். இடையிடையே மதுரைக்கு சென்று மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதானத்திலும் பிரசங்கம் செய்து வந்தார். இதன் விளைவாக அங்கு பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இவர் குன்றக்குடியிலுள்ள திருவண் ணாமலை ஆதீனத்தில் செய்த பிரசங்கத்தைப் பார்த்து பலரும் பாராட்டினர். தம்பிரான்களும் ஓதுவார்களும் சூழ்ந்து வர பல்லக்கில் ஏற்றி மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டணப்பிரவேசம் செய்வித்தார்கள். இவ்வாறாக நாவலர் பெருமான் அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளி இருக்குவேரு, சீர்காழி ஆகிய இடங்களிலுள்ள திருத்தலங்களை தரிசித்தார். இராமலிங்கப்பிள்ளை தாம் பாடிய பாடல்களை திருமுறைகளுடன் ஒப்பிட்டு சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாக தமது பாடல்களைப் பாடுவதை நாவலர் பெருமான் கண்டார். இதனைத் தொடர்ந்து 'போலி அருட்பா மறுப்பு" எனும் நூலை வெளியிட்டார். தமிழகத்தில் இருந்து கொண்டே தமிழுக்கும் சைவத்திற்கும் அரும் தொண்டாற்றிக் கொண்டிருந்த ஆறுமுக நாவலர் பெருமான். 1859ம் ஆண்டு ஆணிமாதம் மீண்டும் சிதம்பரத்திற்கு சென்றார். அங்கு சைவ ஆகம விடயம் தொடர்பாகவும் சில தீட்சைகள் தொடர்பாகவும் ஆறுமுக நாவலர் பெருமான் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்த கருத்துக்களால் மனம் தடுமாறி இருந்த சிலர் வள்ளலார் இராமலிங்கப் பெருமானைக் கொண்டு சிதம்பரத்திலுள்ள திருத் தலத்திலே 1869ம் ஆண்டு ஆனி உத்திரத்தன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். அங்கு நாவலர் பெருமானை பல்வேறு நிந்தனை செய்ததுடன் நாவலர் பெருமான் தம்மை அடித்ததாக மஞ்சத்குப்பத்திலுள்ள நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கிலே வழக்காளிகளுக்குத்தான் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சிதம்பரத்திலே இவ்வாறு நீதிமன்ற வழக்குகளை சந்தித்த பின்னர் நாவலர் பெருமான் தர்மபுரி திருவிடை மருதூர், திருவேட்டைக்கும், காரைக் கால், கோடிக்கரை ஆகிய இடங்களிலுள்ள திருத்தல ங்களுக்குச் சென்று வணங்கி விட்டு 1870ம் ஆண்டு பங்குனி மாதம் மீண்டும் யாழ்ப் பாணத்திற்கு வந்தார். அதன் பின்னர் இவர் சைவப்பாடசாலை நிறுவிய துடன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் மணி மண்டபம் ஒன்றையும் அமைத்தார். 1870ம் ஆண்டு கோப்பாயில் ஒரு வித்திய சாலையை ஆரம்பித்து தமது செலவிலேயே நடத்தி வந்தார். 1871ம் ஆண்டு வண்ணார் பண்ணையில் "ஜோன் கில்னா" என்பவர் 'லெசூ லியன்" ஆங்கில பாட சாலையை நடாத்திவந்தார். இந்த பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் விபூதி தரித்து செல்வது வழக்கமாகும். அவ்வாறு தரித்துச் சென்ற மாணவர்கள் ஒருநாள் விபூதி தரித்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்டார்கள். இதனைக் கண்ட நாவலர் பெருமான் வண் ணார்பண்ணையில் 1872ம் ஆண்டு தைமாதம் ஆங்கில பாடசாலையொன்றை ஆரம்பித்து வைத்தார். நாவலர் ஆரம்பித்த இந்த பாடசாலை போதிய நிதி இன்மையால் நான்கு ஆண்டுகள்தான் இயங்கியது. ஆறுமுக நாவலர் பெருமான் தாம் இதுவரை பெற்ற அனுபவங்களையும் தாம் கண்டறிந்த உண்மைகளையும் வைத்து 'யாழ்ப்பாண சமய நிலை' என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் பல நூல்களை வெளியிட்டார். 1879 ஆம் ஆண்டு ஆடிச்சுவாதி அன்று நாவலரது கடைசிப் பிரசங்கம் இடம்பெற்றது. ஆடிச் சுவாதி, சுந்தரமூர்த்தி சுவாமிகளது குரு பூசை தினமாகும். அன்று ஆறுமுக நாவலரது கடைசி பிரசங்கம் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18 நாள் ஆறுமுகநாவலரது உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. 1879-12-05 ஆம் திகதி இரவு 9 மணி அளவில் ஆறுமுகநாவலர் இவ்வுலகை விட்டு மறைத்தார்.

உயிர்கள் மீதான அன்புதான் உண்மையான மதமென்று உலகுக்கு நிரூபித்தவர் பகவான் பகவான் சத்யசாயிபாபாவின் ஜனனதினம் நாளை உலகெங்குமுள்ள பக்தர்களால் அனுஷ்டிப்பு

உலகிலுள்ள பலகோடி பக்தர்களால் நேசிக்கப்படும் பகவான் சத்திய சாய்பாபா அவர்கள் 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் சத்ய நாராயண ராஜு ஆகும். இவரின் தாயார் ஈஸ்வரம்மாள். தந்தையார் ராஜு ரட்னகரம் ஆவார். பகவான் சத்திய சாயி பாபா அவர்கள் இளமைக் காலத்தில் இருந்தே ஒரு அதிசயக் குழந்தையாகத் திகழ்ந்ததாக அவரது தாயார் தெரிவித்திருந்தார். பாபா அவர்கள் 14 வயதாக இருக்கும் போது 1944 மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு சம்பவம் நடந்ததாகப் பதிவாகியுள்ளது. கொடிய விஷமுடைய கொடுக்கான் அவரைத் தீண்டியுள்ளது. பல மணிநேரமாக அவர் நினைவிழந்து இருந்திருக்கிறார். இனி மீண்டு எழமாட்டார் என நாட்டுப்புற வைத்தியர்கள் தெரிவித்த வேளை, அவர் சில மணிநேரங்களில் எழுந்து பேச ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் எழுந்து பேச ஆரம்பித்த பாஷையைப் புரிந்துகொள்ள முடியாத மக்கள் தேள் கடித்ததால் அவருக்கு புத்தி பேதலித்ததாக நம்பினர். ஆனால் அவர் பேசிய பாஷை சமஸ்கிருதம் என்று பின்னர் அறியப்பட்டது. அவர் சமஸ்கிருதத்தை அதற்கு முன்னர் கற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அப்படி இருக்கும் போது அதை அவர் எவ்வாறு பேசினார் என மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் 1940ம் ஆண்டு மே 23ந் திகதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார். அதன் மூலமே அவரை முதல் முதல் ஒரு தெய்வப்பிறவி என மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சீரடி என்னும் இடத்தில் 1838 ஆம் ஆண்டு பிறந்தவர் சீரடி பாபா ஆவார். இவர் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்கள் குறைகளை நீக்கினார். சீரடியில் பல கோயில்கள், மடங்களை உருவாக்கிய சீரடி பாபா அவர்களை பல லட்சக்கணக்கான மக்கள் போற்றி வணங்கினர். மக்களின் குறைகளைத் தீர்த்த அவர், தீராத வியாதிகளையும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளையும் குணமாக்கினார். அவர் 1918ம் ஆண்டு தனது 80வது வயதில் இறைபதம் எய்தினார். அதற்கு முன்னர் தாம் இறைபதம் எய்யவிருக்கும் நாளை அவர் மக்களுக்குச் சொன்னதோடு, இன்னுமோர் விடயத்தையும் தெரிவித்தார். அது தான் மறுபிறவியாகும். இந்துக்களால் நம்பப்படும் ஒரு விடயம் மறு பிறவியாகும். 1918ம் ஆண்டு அவர் இறக்க முன் தான் மீண்டும் பிறந்து வருவேன் என்றும் அதிசயங்களை நிகழ்த்துவேன் என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னரே சத்திய சாயி பாபா அவர்கள் அவதரித்தார். புட்டப்பர்த்தி சென்ற அவர் 40களில் பல அற்புதங்களைப் புரிந்து சீரடி பாபாவின் மறு அவதாரம் தானே என மக்களுக்குக் கூறினார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அவருக்கு பக்தர்கள் பெருகினர். வெளிநாட்டவரும் வேற்றின மக்களும் அவரை நாடி, நன்மைகளைப் பெற்றனர். பிள்ளை யில்லாத பலர் பிள்ளை வரங்களையும், தீராத நோயால் பீடிக்கப் பட்டவர்கள் அதிலிருந்து விடுதலையும் கண்பார்வை இழந்தோர் கண் பார்வை யையும் திரும்பப் பெற்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனை நாம் ஏன் வணங்குகிறோம் என்று எழும் கேள்விகளுக்கு கீழே பதில்கள் உள்ளன. குறிப்பாக சத்ய சாயி பாபா அவர்களுக்கு வெளி நாட்டு பக்தர்கள் அதிகரித்ததால் அவர்கள் நன்கொடையாகக் கொடுக்கும் பணம் கோடிக் கணக்கில் சேர ஆரம்பித்தது. புட்டப்பர்த்தி என்னும் மிகவும் பின் தங்கிய கிராமத்தை அப்பணம் கொண்டு அவர் நவீன நகரமாக மாற்றினார். மலைகள் சூழ அடிவாரத்தில் இருந்த அக் குக்கிராமத்தை ஒரு நகரமாக்கிய பெருமை அவரையே சாரும். விமான நிலையம், மருத்துவக் கல்லூரி, இலவசப் படிப்பு, பாடசாலை, பல்கலைக்கழகம், இலவச மருத்துவமனை, இலவச இருதய அறுவை சிகிச்சை என பல திட்டங்களை நிறைவேற்றினார் பாபா. பாபா இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனை, இதுவரை பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமா, குடிக்கும் நீர் என்றால் அது ஒரு கனவு என்று நினைத்திருந்த கிராம மக்களுக்கு நீர் வசதி செய்து கொடுத்துள்ளார். ஆந்திர அரசாங்கமே செய்ய தயங்கிய காரியம் ஒன்றை எந்த எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை என அவரே முன் நின்று செய்து முடித்தார். பல கோடி ரூபா செலவில் சுமார் 3500 கி. மீட்டர் நீளமான குழாய்களை அமைத்தார். அதனூடாக நீரை எடுத்து வந்து வறண்ட பல கிராமங்களைச் செழிப்புறச் செய்தார். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் நீர் கிடைத்ததால் விவசாயம் செய்தனர். தமது வாழ்வாதாரத்தை வளப்படுத்தினர். சுமார் 5 இலட்சம் மக்கள் பல குக்கிராமங்களில் இன்று விவசாயம் செய்வது பாபாவின் நீர்ப்பாசனத் திட்டத்தினால் என்பது யாவரும் அறிந்ததே. இத் திட்டம் தொடர்பாக பல சர்வதேச தொலைக் காட்சிகள், பாபாவை புகழ்ந்து பாராட்டின. இலட்சக்கணக்கான மக்கள் உயிர்வாழ, இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர்கள் நினைத்துப்பார்க்க முடியாத சத்திர சிகிச்சைகளை இலவசமாகச் செய்துகொள்ள வசதி செய்து கொடுத்தார். இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவசக் கவ்வி கொடுத்து, இலட்சக்கணக்கான மக்களுக்கு குடிக்கவும், விவசாயத்துக்கும் தண்ணீர் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்களை வாழவைத்த ஒரு நல்ல மனிதராக பகவான் சத்ய சாயிபாபா திகழ்ந்தார். பாபா புரிந்த அற்புதங்களை எவர் வேண்டும் என்றாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவர் புரிந்துள்ள மனித நேயத் தொண்டையோ இல்லை மனிதநேய உதவிகளையோ எவராலும் மறுக்கவோ இல்லை விமர்சிக்கவோ முடியாது. ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்கிறேன் என்றான் கவி ஞன். அதனையே பாபா செய்திருக்கிறார் எனலாம். தனி ஒருவனுக்கு உண வில்லையேல் இந்த ஜெகத்தினை அழிப்போம் என்றான் புரட்சிக்கவி பாரதி. பாபா மக்களுக்கு உணவை வழங்கியதோடு நின்று விடாது விவசாயத்தைச் செய்ய உதவியுள்ளார். இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா 1944 ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு பிரிந்து புட்டபர்த்தி அருகே கட்டப்பட்டுள்ள கோயிலில் வசிக்கத் தொடங்கினார். இவ்வாறு இங்கு வசித்த வேளையில் ஆன்மீகப் பயணமாக பெங்களூருக்குச் சென்றார். அதுவரை அவர் தூய வெள்ளை நிறத்தில் நீண்ட சட்டையும் அணிந்து வந்தார். பின்னர் காவி உடைக்கு மாறினார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் என்ற பிரமாண்டமான ஆசிரமத்தை கட்டி அவருடைய 28வது பிறந்த நாளில் திறந்து வைத்தார். 1957 ஆம் ஆண்டு பிரசாந்தி நிலைய வளாகத்தில் இலவச மருத்துவ மனையை திறந்து வைத்தார். பகவான் சத்ய சாயிபாபா 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி முதன் முதலாக வெளிநாட்டு பயணமாக நமிபியா, உகண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1968 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனந்தபூரில் மகளிர் கல்லூரி ஒன்றை திறந்து வைத்தார். 1968 ஆம் ஆண்டும் மும்பையில் ஆன்மீகம் மற்றும் சமூக சேவைக்காக தர்மஷேத்ரா என்ற சத்ய மந்திரை நிறுவினார். 1972 ஆம் ஆண்டு ஆன்மீக மற்றும் சமூக பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டை நிறுவினார். இவ்வாறாக 1973 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சிவம் மந்திரையும் 1981 ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகத்தையும் தொடங்கினார். இவ்வாறாக அவர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது பணிகளை செய்துகொண்டே வந்தார். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினுள் இருக்கும் ஆன்மாவுக்குள்ளும் கடவுளின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்பதை அவர்களை உணர்ந்து வைத்து கடவுளை சென்றடையும் வழியின் மூலம் அவர்களை சகோ தரத்துவம் என்ற பிணைப்பின் கீழ் ஒரே குடும்பமாக இணைப்பதே என் குறிக்கோள் அதற்காக நான் வருகை தந்துள்ளேன் என்று கூறிய பகவான் அவர்கள், உண்மை, நேர்மை, அமைதி அன்பு மற்றும் அஹிம்சை ஆகிய ஐந்தும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான வழி கட வுளிடம் அன்பு செலுத்துதல், தவறு செய்ய அஞ்சுதல் மற்றும் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுபோல தன்னலமற்ற சேவை செய்வதன் மூலம் பாவங்களில் இருந்து விடுபட முடியும் என்று அவர் கூறியுள்ளார். மனிதனுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்றும் அவர் கூறியுள்ளார். எல்லா மதங்களும் சிறு சிறு நதிகளாகும் எல்லா நதிகளும் போய்ச் சேருவது கடலில்தான். கடலில் சேர்ந்துவிட்டால் பின்பு அது நதியல்ல. இந்த நியதிதான் ஸ்நானம்!இது எல்லா மதங்களையும் ஆட்கொள்கிறது. ஆகவே இவ்வுலகில் ஒரே ஒரு மதம். அது தான் அன்பு மதம். இது என்று கூறி இக்கோட்பாட்டை உலகறியச் செய்து உலகில் உள்ள எல்லா இன மக்களையும் அரவணைக்க வந்தவர் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாவா அவர்கள். 1999 ஆம் ஆண்டு மதுரையில் ஆனந்த நிலைய மந்திரை அமைத்தார். 2001 ஆம் ஆண்டு ஏழைகள் இலவசமாக சிகிச்சை பெறும் விதத்தில் பெங்களூரில் நவீன பல்நோக்கு கூட்டுறவு ஆஸ்பத்தி ரியை அமைத்தார். 2006 ஆம் ஆண்டு இருப்பு நாற்காலி ஒன்று விழுந்ததில் சாய் பாபாவின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி மூச்சுத் திணறல் காரணமாக புட்டபர்த்தியில் உள்ள நவீன மருத்துவமனையில் சத்யசாயி பாபா சேர்க்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பகவான் சத்ய சாயி பாபா ஜீவ சமாதி அடைந்தார். அவர் ஜீவ சமாதி அடைந்து விட்டாலும் அவரது பெயரால் அமைக்கப்பட்ட சமய சமூக சேவை நிறுவனங்களின் சேவைகள் தொடரப்பட்டு வருகின்றன. அவரது திருநாமத்தால் அமைக்கப்பட்டு ள்ள பகவான் சத்ய சாயி பாபா நிலையங்களில் நாளை 23 ஆம் திகதி அவரது ஜனன தினத்தையொட்டி பூஜைகளும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பூஜைகள் நடத்தப் படுவதுடன் அன்னதானமும் வழங்கப் படும். கொழும்பு 13, புதுச் செட்டித் தெருவில் அமைந்துள்ள பகவான் சத்ய சாயி மத்திய நிலையத்திலும் கொழும்பு 7 பான் பிளேஸில் அமை ந்துள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா வின் நிலையத்திலும் நாளை சனிக் கிழமை இவ்வாறான விசேட பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நாளை காலை முதல் மாலை வரை இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அட்லாண்டா சுவாமி நாராயண மந்திர்

அமெரிக்காவில் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் சுவாமி நாராயணனுக்கு புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வேலைப்பாடு அமைந்த இந்துக் கோயில்கள் பத்தில் இதுவும் ஒன்று. கோயில் அமைப்பு 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் இது. கட்டட அளவு 22 ஆயிரத்து 442 சதுர அடி கோயிலின் வெளிப்புறம் துருக்கி லிம்ரா சுண்ணாம்புக் கல்லால் ஆனது தரைத் தளம் இத்தாலிய கராரா மார்பிளால் உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தளம் இந்திய மணற் பாறைகளால் அமைந்தது. 15 கிலோ எடையுள்ள சிறிய கல்லில் இருந்து 5.2 தொன் எடையுள்ள பெரிய கல்வரை, 8430 தொன் எடையுள்ள கற்கள் இக்கோயில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் 40 ஆயிரம் கற் துண்டுகள் உள்ளன. கோயிலின் நீளம் 213 அடி. அகலம் 122 அடி. விதானம் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பரிக்ரமா (வலம் வருதல்) செய்ய வசதியுள்ளது. ஐந்து பெரிய கலசங்களும், நான்கு சிறிய கலசங்களும், ஒரு பெரிய மாடமும், ஆறு சிறிய மாடங்களும், 129 வளைவுகளும், நான்கு பால்கனிகளும், 14 ஜன்னல்களும், 151 தூண்களும், 75 விதானங்களும் இக்கோயிலில் உள்ளன. 39 வகையான டிசைன்கள் கோயிலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. கோயிலின் உள்ள மண்டபத்தில் கடைசல் வேலைப்பாடுடன் கூடிய தூண்களும், ஜன்னல்களும் அருமையாக உள்ளன. படிக்கற்கள் மார்பிளாலானவை. கீழ் தளம் முழுவதும் ஜெல் டியூபால். உஷ்ணமாக்கப்பட்டுள்ளது. பைபா ஒப்டிக் முறையில் ஒளியூட்டப்பட்டுள்ளது. கோயில் கட்ட 19 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சம்: தூண்களில், வேத, புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் சித்திர வேலைப்பாடுகள் கண்களைக் கவரும் முழு கட்டமைப்பும் சிற்ப சாஸ்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மார்பிள், சுண்ணாம்புக்கல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, குறுகலான கூம்பு அமைப்பு, ரோஜாமலர் சிற்பங்கள், இலை போன்ற 500 க்கு மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அவை அட்லாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆலய வரலாறு: 1980 களில் இப்பகுதியில் வாழ்ந்த சுவாமி நாராயண பக்தர்களால் இந்துக்கள் கூடும் இடமாக இக்கோயில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு பழைய பாழடைந்த மண்டபம் ஒன்று வாங்கப்பட்டு அதில் தற்காலிக கோயில் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பாழடைந்த மண்டபம் சீரமைக்கப்பட்டு தற்போது உள்ள பிரம்மாண்ட கோயிலாக உருப்பெற துவங்கியது. 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இக்கோயிலின் விரிவாக்கப் பணிகள் நடத்தப்பட்டன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலுக்கென சொந்தமாக நிலம் வாங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுவாமி நாராயண மந்திர் முழுமை பெற்ற ஆலயமாகவும், பக்தர்கள் கூடும் இடமாகவும் செயல்படத் தொடங்கியது.

இந்து முறைப்படியான உணவு

கே. ஈஸ்வரலிங்கம் (10423) அளவுக்கு அதிகமாக உண்டால் என்ன நடக்கும்? நோய் வரும், ஆயுள் குறையும். (10424) உணவில் மிளகு சேர்ப்பதால் ஏற்படும் நன்மை யாது? உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலிலுள்ள விஷமும் முறிகிறது. (10425) வெந்தயம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை யாது? உஷ்ணம் குறையும். (10426) வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகிவந்தால் என்ன நடக்கும்? உடம்பிலுள்ள உஷ்ணம் குறையும். (10427 உணவில் கடுகு சேர்க்கப்படுவதால் உண்டாகும் நன்மை யாது? உடலிலுள்ள உஷ்ணத்தை ஒரேயளவில் வைத்திருக்கும். (10428) இஞ்சியை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? பித்தம், தலைசுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வராது. (10429) உணவு உண்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் நீர் உலர்வதற்கு முன்பே உணவை உண்ணத் தொடங்க வேண்டும். (10430) உணவு உண்ணும்போது செய்யத் தகாதவை எவை? பேசக்கூடாது, கதை படிக்கக்கூடாது, இடது கையைக் கீழே ஊன்றக் கூடாது, தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. (10431) வீட்டில் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணலாமா? கூடாது. (10432) காலணி அணிந்துகொண்டு உண்ணலாமா? கூடாது (10433) சூரியோதயத்திலும் மறையும் போதும் உண்ணலாமா? கூடாது (10434) இருட்டிலோ நிழல்படும் இடங்களிலோ உண்ணலாமா? கூடாது (10435) சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக்கொண்டு உண்ணலாமா? கூடாது (10436) தட்டை மடியில் வைத்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் உண்ண லாமா? கூடாது (10437) எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணலாமா? கூடாது (10438) புரச இலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன? புத்தி வளரும் (10439) வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை யாவை? நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை

திங்கள், 11 நவம்பர், 2013

அமெரிக்காவிலுள்ள ஆலயம்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்திலுள்ள போவாடு கன்ட்ரியில் 1996 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கணபதி ஸ்தபதி தலைமையில் திராவிட கலாசாரத்துடன் ஒரு கோயில் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறையான அனுமதி பெறப்பட்டு 2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின் மாமல்ல புரத்திலிருந்து 12 சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இந்திய முறைப்படி திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு புதிய கட்டடங்களுடன் கூடிய இக்கோயிலில், இரண்டு ராஜகோரங்களும் சிவன் மற்றும் விஷ்ணு கர்ப்பகிரங்களின் மேல் இரண்டு விமான கோபுரங்களும் உள்ளன. சுமார் 6200 சதுர அடி பரப்பளவில் அமைந்த இக்கோயிலில், சிவன்சன்னதி, சோழ மற்றும் பல்லவ பேரரசுகளின் கலாசாரப்படியும் விஷ்ணு சன்னதி, விஜயநகர பேரரசின் கலாசாரப்படியும் ஐயப்பன் சன்னதி, கேரள முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. சமுதாயக்கூடத்தின் பின்புறமாக அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தின் கும்பாபிஷேகம் 2001 ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. முன்னூறு இருக்கைகளைக் கொண்ட இக்கட்டடம் திருமணம் போன்ற வைபவங்களுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகிறது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் 2001 ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் 25ம்திகதி வரை நடத்தப்பட்டது. தினமும் சிவ மந்திரமும் பஞ்சாட்சர மந்திரமும் நான்கு அர்ச்சகர்களைக் கொண்டு ஓதப்படுகிறது. சிவன், வெங்கடேஸ்வரர், ஐயப்பன், சரஸ்வதி, முருகன், லட்சுமி, ஆண்டாள், காமாட்சி, கிருஷ்ணன், ராமர், கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கே. ஈஸ்வரலிங்கம்

(10396) வேதங்களை வகுத்துக் கொடுத்தவர் யார்? வேதவியாசர் (10397) பதினெட்டுப் புரானங்களை உபகரித்தவர் யார்? வேதவியாசர். (10398) சத்தியலோகத் தில் உள்ள மண்டப த்தின் பெயர் என்ன? சபா மண்டபம் (10399) ஈரேழு லோகங்களையும் படைத்தருளியர் யார்? பிரம்மதேவன் (10400) சரஸ்வதியின் மறு பெயர் என்ன? நாமகள், கலைமகள் (10401) பிரம்மதேவனின் மறு பெயர்கள் என்ன? நான்முகன், கமலோற்பவன், வேதமுதல்வன், சதுர்முகன், திருசடைப்பிரான், மலரோன், (10402) பற்றற்ற பரமன் என்பது யாரைக் குறிக்கும்? சிவபெருமானைக் குறிக்கும். (10403) பிரம்மதேவன் அருந்தவசியர்களுக்காக படைத்தருளிய தபோவனத்தின் பெயர் என்ன? நைமிசாரணியம், (10404) சந்திரவேள்வி என்பது ஒரு பிரம்மாண்டமான வேள்வி. இது எவ்வளவு காலம் நடைபெற்றது? 12 ஆண்டுகள். (10405)ஆதி காலத்தில் சிவபெருமான் நந்தி பெருமானுக்கு எத்தனை புராணங்களை உபதேசித்து அருளினார்? 18 புராணங்களை (10406) 18 புராணங்களையும் சனத் குமார முனிவரிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொண்டவர் யார்? வியாச பகவன். (10407)வியாச பகவான் அந்த 18 புராணங்களையும் என்ன செய்தார்? சுலோகங்களாக்கி உலகம் உய்ய அச் சுலோகங்களை வழங்கினார். (10408)வியாச பகவன் 18 புராணங்களையும் சுலோகங்கள் ஆக்கிய பின்னர் வேறு பற்பல முனிவர்கள் அப்புராணங்களை என்ன செய்தார்கள்? வேறு வேறு பரம்பரை வழியாக உபதேசம் பெற்று, அம்மகா புராணங்களுக்கு 18 உப புராணங்கள் இயற்றி அருளினார்கள். (10409)சிவபெருமானின் மறு பெயர்கள் சில தருக. கயிலை மலைவாசன், முக்கண்ணப் பெருமான், ஸ்ரீ பரமேஸ்வரன்

திங்கள், 4 நவம்பர், 2013

கே. ஈஸ்வரலிங்கம்

10385) நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் எதன் வடிவம்? ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவம் 10386)) இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு எதை குறிக்கும்? சாம வேதத்தை 10387) நடுவிரல் எதை குறிக்கும்? யஜுர் வேதத்தை 10388) மோதிர விரல் எதை குறிக்கும் சாம வேதத்தை 10389) நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் எதை குறிக்கும்? மூன்று வேதங்களை 10390) இந்த மூன்று பட்டைகளும் வேறு எவற்றை குறிக்கும்? பிரம்மா, விஷ்ணு, சிவன், சிவன், சக்தி, ஸ்கந்தர் அறம், பொருள், இன்பம் குரு, லிங்கம், சங்கமம் படைத்தல், காத்தல், அழித்தல் 10391) கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் எத்தனை உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன? மூன்று 10392) அந்த மூன்று வழிமுறைகளையும் தருக. உத்தம நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் 10393) மனிதனின் ஆத்ம இருப்பிடம் எது? இதயம் 10394) நமது இரண்டு கரங்களும் எத்தன்மை வாய்ந்தவை? லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்தது. 10395) நமது இரண்டு கரங்களை இணைத்து இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒரு நொடியேனும் மனதார வணங்குவதை என்னவென்று கூறுவார்கள்? உத்தம நமஸ்காரம்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

பிஜி நாட்டில் உள்ள மிகப் பழைமையான கோயில்

பிஜி நாட்டில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி ஆலயம் நாடீ நகரின் வட பகுதி எல்லையில் அமைந்துள்ள மிகப் பழைமையான ஆலயமாகும். பிஜி நாட்டில் உள்ள மிகப் பழைமையான கோயிலாகவும் இது கருதப்படுகிறது. நீண்ட காலமாக பக்தர்கள் மனதில் இருந்த தீராத தாகத்தினாலும் ஆதரவாளர்களின் ஓயாத முயற்சியினாலும் இப்புனிதமான ஆலயம் உருவாக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலாக பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கின்றனர். இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பல்வேறு இன மக்களும் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். தங்களுக்கென தனிப்பட்ட கோயில் அமைக்க வேண்டும் என்பது பிஜி நாட்டு இந்துக்களின் ஆவலாகும். இந்த ஆவல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நிறைவேறியது. பல சோதனைகளுக்கு பிறகு பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் கூட்டு முயற்சியின் காரணமாக 1991ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இக்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான பொறியியலாளர் பணிகளை இலவசமாக செய்து தர கட்டிடப் பொறியியலாளர் நவீன் மொரார்ஜி ஒப்புக் கொண்டார். அதே ஆண்டில் கோயில் நிர்வாகத் தலைவர் நாராயண் ரெட்டி, அஸ்திரேலியா, நியூசிலாந்து கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று நிதி திரட்டி கோயிலின் முன்னேற்ற பணிகளை மேற்கொண்டார். 1992ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இக்கோயிலின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தன. இதற்காக திறமை வாய்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். இங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும் காண்போரின் உள்ளத்தை கவரும் வண்ணம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. 1994ஆம் ஆண்டு ஜுலை மாதம் இக்கோயிலில் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென சிறப்பு ஏற்பாடுகளாக சிவாச்சாரியார்களும் குருக்களும் இந்தியாவிலிருந்து வரவரழைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இப்புதிய கோயிலின் கும்பாபிஷேகம் 1994ம்ஆண்டு ஜுலை 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை சிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்புமிகு கும்பாபிஷேக விழா அமெரிக்காவின் ஹவாய் தீவின் குருதேவ் சிவாய சுப்ரமணிய சுவாமிகளால் நடத்தப்பட்டது. இக்கோயிலில் காலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை பூஜை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கே. ஈஸ்வரலிங்கம்

(10379) வெள்ளிக்கிழமையில் பெண்கள் விரதம் இருப்பது ஏன்? விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம் இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை. (10380) கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்? கிரகண வேளையில் நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது. (10381) பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்? அவசரமாக ஒரு செயலைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிற நேரத்தில், புதன்கிழமை அமைந்து விட்டால் வேறு எதையும் பார்க்காமல் செய்து விடலாம். பொன்னைக் கூட (தங்கம்) விலை கொடுத்து வாங்கி விடலாம். நமக்குப் பொருத்தமாக புதன் கிடைப்பது அரிது என்பது இதன் பொருள். (10382) அனுமானுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்? அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசிர்வதித்து வழி அனுப்பி வைத்தார். இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது. (10383) குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்? நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள் கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு. ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது? நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துக்கள் மறைந்துள்ளன. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பும் சேர்த்து கலக்க வேண்டும் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம் ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு பிறருக்கும் அந்த விஷ கிருமிகள் பரவாது தடுக்கிறது

வெள்ளி, 18 அக்டோபர், 2013

கே. ஈஸ்வரலிங்கம் விரதங்கள் (10361) புராணங்களில் எத்தனை வகையான உபவாச விரதங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன? 27, (10362) அந்த 27 வகையான உபவாச விரதங்களையும் தருக 1. உமிழ் நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம். 2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல். 6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 8. மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 10. மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் அருந்தி உபவாசம் இருத்தல். 16. ஒருநாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 17. ஒருநாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல். 18. ஒருநாள் முழுவதும் பொரிமாவு புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடி செய்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்து மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 19. ஒருநாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல். 21. ஒருநாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல். 22. ஒருநாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல். 23. ஒருநாள் முழுவதும், அத்தி இளந்தளிகைகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். 24. இருவேளை உணவுடன் உபவாசம் இருத்தல். 25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல். 26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல். 27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக்கொள்ளாமல் உபவாசம் இருத்தல். உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கொடிமரம்

கே.ஈஸ்வரலிங்கம் (10323) கோயிலுக்கு கொடி மரம் அமைப்பது ஏன்? தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டு இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும். கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும். (10324) கொடி மரம் அமைப்பதால் ஏற்படும் வேறு நன்மை என்ன? கோயிலுக்கு அழகு தரும். (10325) கொடி மரத்தின் தண்டு எப்படி பட்டதாக இருக்க வேண்டும்? வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். (10326) கொடி மரம் எந்த மரங்களில் செய்வது உத்தமம்? சந்தனம், தேதாரு, செண்பகம், வில்வம், மகிழம். (10327) பலா, மா ஆகிய மரங்களில் கொடி மரம் செய்வதால் கிடைக்கும் பயன் எவ்வளவாக இருக்கும்? குறைந்த நன்மையை தருவதால் மத்திம பலன். (10328) கமுகு, பனை, தென்னை முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பதால் எந்தளவு பலன் கிடைக்கும்? மிக மிகக் குறைந்த நன்மையே கிடைக்கும். (10329) கொடி மரம் எத்தனை கணுக்கள் உள்ளதாய் அமைப்பது நல்லது? முப்பத்து மூன்று கணுக்கள் (10330) கொடிக் கம்பத்தின் எத்தனை பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர்? ஐந்தில் ஒரு பாகம். (10331) இதன் அடியிலிருந்து உச்சி வரை எத்தனை பாகமாக்குவார்கள்? ஏழு (10332) கொடி மரத்தை எந்தெந்த வடிவங்களில் அமைப்பர்? சதுர, கோண விருத்த (10333) கொடி மரத்தின் அடிப்பாகம் எந்த வடிவில் இருக்கும்? சதுரமாக (10334) இது எதனை உணர்த்துகிறது? இறைவனின் படைப்புத் தொழிலை (10335) இந்த பாகத்தை என்ன பாகம் என்று கூறுவார்கள்? பிரம்ம பாகம் (10336) பிரம்ம பாகத்துக்கு மேலுள்ள பாகம் எப்படி பட்டதாய் இருக்கும்? எண் கோணமாயிருக்கும் (10337) இது எதனை குறிக்கும்? இறைவனின் காத்தல் தொழிலை (10338) இதனை என்ன பாகம் என்று கூறுவர்? விஷ்ணு (10339) அதற்கு மேல் உள்ள பாகம் எந்த வடிவினதாக இருக்கும்? உருண்ட நீண்டதாக இருக்கும். (10340) இந்த உருண்ட நீண்ட பாகம் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? உருத்திரனை (10341) இது இறைவனின் எந்த தொழிலைக் குறிக்கும்? சங்காரத் தொழிலை (10342) ஆலயத்தில் மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது எது? கொடி மரம்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

(10316) உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்பது ஏன்? உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில், பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு. (10317) நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பது ஏன்? பண்டைக் காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் ‘என் சிற்பம் எப்படி? என்று, அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.’ கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை. (10318) பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது ஏன்? அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. (10319) பாக்கத்தவனுக்கு போலிஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழியின் பொருள் என்ன? இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலிஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும். (10320) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும், என்ற பழமொழியின் பொருள் என்ன? இதன் அர்த்தம் ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்துக் கொண்டால், அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும். (10321) சேலை கட்டிய மாதரை நம்பாதே, என்ற பழமொழியின் பொருள் என்ன? சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மைப் பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும் போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மைப் பொருள். (10322) மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே, என்ற பழமொழியின் பொருள் என்ன? மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதுதான் உண்மை. அதாவது ஆற்றுப் படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

திங்கள், 9 செப்டம்பர், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10292) அனுமானுடைய தாய் யார்? அஞ்சனாதேவி 10293) அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க என்ன செய்து கொடுத்துள்ளார்? உளுந்து வடை 10294) உளுந்தினால் போஷாக்கு கிடைப்பது உடலின் எந்த பகுதிகளுக்கு? எலும்பு 10295) ராம ராவண யுத்தம் நடைபெற்ற போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றவர் யார்? அனுமான், 10296) ராவணன் அம்பு தொடுக்க அம்பால் தாக்கப்பட்ட அனுமான் அந்த காயத்திற்கு மருந்தாக என்ன செய்தார்? தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டார். 10297) வெண்ணெய் சார்த்தும் பழக்கம் எப்படி உருவானது? வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையால் 10298) மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன் னால் கோலம் போடுவார்கள். மணக் கோலம் காணவேண்டிய பெண்கள் கோலம் போடும்போது என்ன செய்ய வேண்டும்? கோலத்தின் நடுவில் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப் பூவை பதிக்க வேண்டும். 10299) இவ்வாறு வைப்பதால் என்ன நடக்கும்? இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். 10300) மாட்டுச் சாணத்தால் ஏற்படும் தன்மை என்ன? கிருமிநாசினி 10301) இவ்வாறு பூவைப்பதற்குரிய வேறு காரணங்கள் ஏதாவது உண்டா? பூ மலர்ந்திருப்பது போல வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு திகழ்வார்கள் என்பது நம்பிக்கை 10302) புஷ்பவதி ஆகாத பெண்கள் இவ்வாறு மார்கழியில் பூ வைத்து கோலமிட்டால் என்ன நடக்கும்? புஷ்பதிவாகும் வாய்ப்பு உருவாகும். 10303) இறைவன் உருவாக்கிய ஏழு உலகங்களும் எவை? சத்திய லோகம், தபோ லோகம், ஜனோ லோகம், சொர்க்கம், மஹர் லோகம், புனர் லோகம், பூலோகம். 10304) சத்தியலோகத்தில் இருப்பது யார்? பிரம்மன் 10305) தபோலோகத்தில் இருப்பது யார்? தேவதைகள் 10306 ஜனோ லோகத்தில் இருப்பது யார்? பித்ருக்கள் 10307) சொர்க்கத்தில் இருப்பது யார்? இந்திரன் முதலான தேவர்கள் 10308) புனர்லோகத்தில் இருப்பது யார்? கிரகங்கள், நட்சத்திர தேவதைகள் 10309) பூலோகத்தில் இருப்பது யார்? மனிதர்கள், விலங்குகள் 10400) இந்த ஏழு உலகங்களும் எங்கு உள்ளன? பூமிக்கு மேலே.

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா

ஆஸ்திரேலியா: மேற்கு ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 03ம் தேதியன்று தமிழ் கலாச்சார இரவு நிகழச்சி நடைபெற்றது. மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் உள்ள ஆக்டகோன் தியேட்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இவ்விழாவில் பல்வேறு வகையான நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பெர்த் பகுதிக்கான இந்திய கன்சல் ஜெனரல் எம்.சுப்பராயுடு மற்றும் பெர்த் பகுதி தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 2 தலைமை ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதன், 28 ஆகஸ்ட், 2013

சுப்ரபாதம்

கே.ஈஸ்வரலிங்கம் 10244) சுப்ரபாதம் என்பதில் ‘பா’ என்றால் என்ன? வெளிச்சம் 10245) சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன? இனிய காலைப்பொழுது 10246) பாVதம் என்றால் என்ன? வார்த்தைகள் 10247) சுபாக்ஷதம் என்றால் என்ன? நல்வார்த்தைகள் 10248) கன்யா என்றால் என்ன பொருள்? பெண் 10249) சுகன்யா என்றால் என்ன பொருள்? நல்ல பெண் 10250) தாரம் என்றால் என்ன? மகிழ்ச்சி 10251) சாத்திரத்தில் தாரம் என அழைப்பது எதனை? ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை 10252) இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் என்ன? பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். 10253) ஆன்மீகத்தில் எது உயர்ந்த சந்தோசம்? முக்தி 10254) பிரணவம் என்பதற்குரிய அர்த்தம் என்ன? புதியது 10255) விரதம் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன? கஷ்டப்பட்டு இருத்தல். 10256) உபவாசம் என்பதன் பொருள் என்ன? இறைவனுக்கு அருகில் இருத்தல் 10257) விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக் கூடாது என்பது ஏன்? அரிசி, வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 10258) சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் எந்த நிற ஆடை அணிவது ஏற்றது? கருப்பு 10259) கருப்பு நிற ஆடை அணிவதால் ஏற்படும் நன்மை என்ன? தீங்கு விளைவிக்கக்கூடிய மிருகங்கள் நெருங்காது 10260) கருப்பு ஆடைக்கு அடுத்தபடியாக தெரிவு செய்யக்கூடிய நிறம் எது? காவி 10261) காவி உடை அணிவதால் ஏற்படும் பலன் என்ன? தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிட்ட வரவே வராது. 10262) மஞ்சள் நிறத்தின் மகிமை என்ன? பக்தியின் அடையாளம் 10263) மஞ்சள் ஆடைக்கு உள்ள சக்தி என்ன? திருவிழா காலங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு. அந்த கிருமிகள் தாக்குதலை தடுக்கும் சக்தி மஞ்சள் ஆடைக்கு உண்டு. 10264) சாஸ்திரங்களில் எத்தனை விஷயங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது? ஒன்பது 10265) அந்த ஒன்பது விஷயங்களும் எவை? ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டு சச்சரவு, மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன் – மனைவி அனுபவங்கள், செய்த தானம், கிடைக்கும் புகழ், சந்தித்த அவமானம், பயன்படுத்திய மந்திரம்.

கே.ஈஸ்வரலிங்கம்

10266) பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதா? நல்லது, லாபம் 10267) ஆண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன நடக்கும்? கேடு 10268) இடது கண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என எதில் கூறப்பட்டுள்ளது? இராமாயணத்தில் 10269) இராமாயணத்தில் எத்தனை பேருக்கு இடது கண்கள் துடித்தன? மூவருக்கு. 10270) யார் யாருக்கு இடது கண்கள் துடித்தன? சீதை, வாலி, இராவணன் 10271) சீதைக்கு எப்போது இடது கண் துடித்தது? விடுதலைக்கான நேரம் நெருங்கிய போது 10272) வாலிக்கும் இராவணனுக்கும் எப்போது இடது கண்கள் துடித்தன? அவர்களது அழிவு நெருங்கிய போது. 10273) பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடது கண் துடித்தால் என்ன அர்த்தம்? அவனது முடிவு காலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். 10274) வாசலில் கோலமிடக்கூடாதது எப்போது? திதியன்றும் அமாவாசை நாளிலும் 10275) முன்னோரது ஆசி பெற உகந்த நாட்கள் எவை? அமாவாசை, வருஷ திதி, மகாளய பட்சம் 10276) சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் எது? அமாவாசை 10277) ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்ற பழமொழி முதன் முதலில் எப்போது சொல்லப்பட்டது? இந்த பழமொழிக்கு உரிய பொருள் என்ன? குருசேத்திர போரில் போருக்கு முன் தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கெளரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார். அதில் தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன். இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். 10278) இத்தகைய கர்ணனை எதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார்கள்? கொடைத்தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கு. 10278) நமது உடல் எதனால் ஆனது? தசையால் 10279) தசை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாவது எது? உளுந்து 10280 உளுந்து உணவு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன? சதைப்பிடிப்பு ஏற்படும் 10281) ஆஞ்சநேயருக்கு உளுந்து வடை மாலை அணிவிப்பது ஏன்? சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்து வடை மாலை அணிவிக்கிறோம்.

புதன், 14 ஆகஸ்ட், 2013

கே.ஈஸ்வரலிங்கம் (10234) புண்யாக வாசனம் யாருக்கு, எதற்கு செய்யப்படுகிறது? வருண பகவானை இடம் சுத்தமடைய வேண்டுவதே புண்யாக வாசனம் (10235) புண்யாகம் என்றால் என்ன? புனிதம் வாசனம் என்றால் மங்களகரமான வாக்கியங்கள் என்று பொருள். (10234) பஞ்சகவ்யம் எவை? அனைத்து தெய்வங்களும் உறைந்திருப்பதாகக் கருதப்படுகிற பசுவிடத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஐவகைப் பொருட்களாகிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் (10235) பஞ்சகவ்யம் எவ்வாறு செய்யப்படும்? பஞ்சகவ்யங்களை தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாய்க் கலந்து பஞ்சகவ்யமாக்கி அதை யக்ஞத்தில் கலந்து விடுவர். (10236) கணபதி ஹோமம் என்பது என்ன? பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகா கணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்விதான் மகா கணபதி ஹோமம். (10237) நவகிரஹ ஹோமம் என்பது என்ன? கிரகங்கள் நன்மையே செய்யவேண்டி ஒன்பது கிரகங்களுக்குமுரிய ரத்தினம், வஸ்திரம், தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தல். (10238) மகாசங்கல்பம் என்பது என்ன? எல்லாவிதமான தெய்வ கார்யங்களும் ஒரு குறிக்கோளோடுதான் செய்யப்படுகின்றன. அப்படி இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். மனதிலுள்ள விருப்பங்கள் நிறைவேறட்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணைபுரியட்டும் என்று நல் வாக்கியம் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படுகிறது. (10239) தனபூஜை எவ்வாறு செய்யப்படும்? கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காகச் செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது (10240) தனபூஜை செய்வதால் ஏற்படும் பலன் என்ன? இந்த தன பூஜையைப் செய்வதால், வீட்டில் தனம் சேரும். (10241 சகல தெய்வங்களும் உறையும் தெய்வமாக போற்றப்படுவது எது? கோமாதா என்ற பசு (10242) கோபூஜை எவ்வாறு செய்யப்படுகிறது? பசுவை அலங்கரித்து பூஜை செய்யப்படும். (10243) இந்த பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன? தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கே.ஈஸ்வரலிங்கம் (10219) கோயிலுக்குச் செல்வதால் பிரச்சினைகள் பல எளிதில் தீர்கின்றன என்பது நிதர்சனமான உண்மை, அப்படி நிகழ என்ன காரணம்? மந்திரங்கள் பல உறைந்து நிறைந்து உள்ள இறைவனின் உறைவிடம் அது என்பதால் நமக்கு பிரச்சினை தீர நல்வழி காட்டுகிறது. அதோடு அக்கோயிலில் சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய யந்திரங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பது ஒரு காரணம். (10220) மந்திரம் என்பதற்கு என்ன பொருள்? சொல்பவனைக் காப்பது என்று பொருள். (10221) குடமுழுக்கு என்பதற்கு என்ன பொருள்? மந்திரங்களை ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு, குடமுழுக்கு என்று பெயர். (10222) கும்பாபிஷேகத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? வைணவத்தில் சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் அழைப்பர், (10223) கும்பாபிஷேகத்திற்கான விதிகளை எழுதியவர் யார்? வாமதேவ என்கிற வடமொழி நூலாசிரியர். வாமதேவர் (102224) இது பற்றி எதில் எழுதியுள்ளார்? வாமதேச பத்ததியில், (10225) இதில் யார் யாருக்கு கூறுவதாக எழுதப்பட்டுள்ளது? சிவபெருமான் முருகனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. (10226) இதைப்படித்து அறிந்துகொண்டால் என்ன பலன் கிட்டும்? குடமுழுக்கு விழாவினை நேரில் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம். (10227) கும்பாபிஷேக வகைகள் எவை? ஆவர்த்தம், அநாவர்த்தம், அந்தரிதம் (10228) ஆவர்த்தம் என்பது என்ன? இயற்கைச் சீற்றங்களால் சிதிலமடைந்துவிட்ட ஆலய மூர்த்தங்களை சரிசெய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இப்பெயர். (10229) அநாவர்த்தம் என்பது என்ன? தவசிகள், ரிஷிகள், முனிவர்களால் மலைப் பகுதிகளிலிருந்து கல் கொண்டு வரப்பட்டு தெய்வச்சிலை செய்து வழிபடுவது. (10230) அந்தரிதம் என்பது எதனை? பாவிகள், திருடர்கள், உலோபிகளால் சேதப்படுத்தப்பட்ட கோயிலைப் புதிதாக்கி கும்பாபிஷேகத்தை நடத்துவதை. (10231) குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பு யாரை பிரார்த்திக்க வேண்டும்? மகா கணபதியை (10232) விக்னேஸ்வர பூஜை ஏன் செய்யப்படுகிறது? கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படு வதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க. (10233) விக்னேஸ்வர பூஜை என்பது எதனை? மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து பூஜை செய்வதே விக்னேஸ்வர பூஜை

ஆடி அமாவாசை நாளை

ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள். அது என்ன கதை தெரியுமா? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக் கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதி வேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒரு நாள் காளி கோயில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒரு நாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்த பின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள். அரற்றினாள், தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழுச் செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடி மாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள். சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப் புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால், நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. கிராமக் கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.

திங்கள், 29 ஜூலை, 2013

Exabition

le="text-align: left;" trbidi="on">

கதிர்காமம்

கே.ஈஸ்வரலிங்கம் (10200) முருக வழிபாட்டுக்குரிய திருப்பதிகளுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மும்மையாலும் புகழ் பெற்றுத் திகழும் ஆலயம் எது? கதிர்காமம் (10201) கதிர்காமத்துக்கு பல நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள பெயர்கள் எவை? ஏமகூடம், பூலோக, கந்தபுரி, காரிகாப்பு, வரபுரி, பஞ்சமூர்த்தி வாசம், விஸ்வகானனம், சகல சித்திரகரம், அகத்தீயப்பிரியம், பிரமசித்தி, அவ்வியர்த்த மூர்த்தம், சித்தகேத்திரம், கதிரை, ஜோதிஷ்காமம். (10202) கதிர்காமக் கடவுளுக்கு வழங்கப்பட்டுள்ள திருநாமங்கள் எவை? கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்தக் கடவுள், ஆறுமுகப் பெருமான், பரஞ்சோதிப் பெருமான், சிதாகாயநாதன், அவ்வியர்த்த மூர்த்தி. (10203) முருகவேள் சூரபன்மனைச் சங்கரிக்கும் நோக்கோடு எழுந்தருளியபொழுது எந்த இடத்தை அடைந்தார்? கதிர்காமத்தை (10204) அவர் பாசறை அமைத்து வீற்றிருந்தது எந்த இடத்தில்? மாணிக்க கங்கை அருகில் (10205) கதிர்காம, மாணிக்க கங்கை அருகில் பாசறை அமைத்து வீற்றிருந்ததால் அவ்விடம் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது? ஏமகூடம் (10206) வள்ளி நாயகியாரைக் கண்டு காதலித்து மண முடித்த இடம் எது? கதிர்காமம் (10207) முருகப் பெருமான் முதலில் யாரை வணங்கினார்? தெய்வானை (10208) முருகன் வள்ளியை மணமுடித்து எங்கு என்று கைலாச புராணம் கூறுகின்றது? திருத்தணி மலைக்கருகிலுள்ள வள்ளி மலையில் (10209) முருகன் தாம் விரும்பும் தலமாக எதனை வள்ளி, தெய்வானையிடம் கூறினார்? கதிர்காமத்தை (10210) கதிரைமலையிலுள்ள ஏனைய மலைகள் எவை? பிள்ளையார் மலை, வீரவாகுமலை, தெய்வயானையம்மன் மலை. (10211) இந்த மலைகளின் நடுவே முச்சுடர்களின் பேரொளியாய் விளங்குவது எவை? சோமன், சூரியன், அக்கினி (10212) கதிர்காமக் கோயிலில் வருடந்தோறும் எத்தனை திருவிழாக்கள் நடைபெறும்? நான்கு (10213) கதிர்காமத்தில் முதற்றிருவிழா எப்பொழுது நடைபெறும்? சித்திரை வருடப் பிறப்புத் தினத்தன்று (10214) இரண்டாவது திருவிழா எப்பொழுது நடைபெறும்? ஆனி அல்லது ஆடியில் (10215) ஆனி அல்லது ஆடியில் நடைபெறுவது என்ன திருவிழா? பந்தற்கால் நடும் திருவிழா (10216) கந்தசுவாமியார் வள்ளி நாச்சியாரை மணமுடித்தற்கு வேண்டிய பந்தல் அமைப்பதற்கு நடைபெறும் திருவிழா எது? கன்னிக்கால் நடும் திருவிழா (10217) கன்னிக்கால் நடும் திருவிழா எப்போது நடைபெறும்? ஆடி அல்லது ஆவணியில் நடைபெறவிருக்கும் திருவிழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன். (10218) கதிர்காமத்தில் நான்காவதாக நடைபெறும் திருவிழா எது? திருக்கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா.

திங்கள், 22 ஜூலை, 2013

தானம்

10184) அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? வறுமையும் கடன்களும் நீங்கும் 10185) பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிப்பது என்ன தானம்? பூமிதானம் 10186) ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக் கடன் ஆகியவற்றைப் போக்கக் கூடிய தானம் என்ன? கோதானம் 10187) வஸ்திரதானத்தால் ஏற்படும் பலன் என்ன? ஆயுளை விருத்தியாக்கும். 10188) கண்பார்வையை தீர்க்கமாக்கும் தானம் எது? தீபதானம் 10189) தீபதானம் செய்வதால் வேறு என்ன நன்மை ஏற்படும்? பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும் 10190) தேன் தானம் வழங்கினால் ஏற்படும் பலன் என்ன? புத்திரபாக்கியம் உண்டாகும். 10191) அரிசி தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? பாவங்கள் தீரும் 10192) தயிர் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? இந்திரிய விருத்தி 10193) நெய் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? நோய் நிவர்த்தி 10194) நெல்லிக்கனி தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஞானம் உண்டாகும் 10195) பால் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? துக்கம் நீங்கும் 10196) தேங்காய் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? பூரண நலன் உண்டாகும், நினைத்த காரியம் வெற்றி பெறும் 10197) தங்கம் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? குடும்ப தோஷ நிவர்த்தி 10198) வெள்ளி தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? மனக்கவலை நீங்கும் 10199 பழங்கள் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? புத்தியும் சித்தியும் உண்டாகும்

திங்கள், 15 ஜூலை, 2013

அமெரிக்க ஐலாந்திலுள்ள பிரமாண்டமான ஆலயம் அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாகாணத்தில் ராக்ஸ் ஐலாந்து பகுதியில் உள்ள பிரமாண்டமான ஆலயம் குவார்டு சிட்டி இந்துக் கோயிலாகும். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குவார்டு சிட்டி பகுதியில் உள்ள லோகநாதன் குமிட்யாலா என்பவரது இல்லத்தில் இந்துக்கள் சிலர் ஒன்று கூடி இப் பகுதியில் இந்துக் கோயில் அமைக்க தீர்மானித்தனர். 2002 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி குவார்டு சிட்டி பகுதியில் இந்துக் கோயில்கள் அமைக்கும் பணியில் அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் ஈடுபட துவங்கினர். இந்த இந்து மதக் கூட்டங்களின் விளைவாக சுமார் 8000 சதுரடி நிலப்பரப்பில் வழிபாட்டுத்தலம் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான இடம் நவீனமயமாக உருவாக்கப் பட்டது. பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக இக்கோயிலின் பணிகள் உருப்பெறத் துவங்கின. இப் பகுதியில் வாழ்ந்த இந்துக்களின் பெருத்த ஆதரவுடன் நிலைத்த கட்டிடமாக இக் கோயில் வடிவமைக்கப்பட்டது. இதற்காக இந்துக்கள் பலர் பல வழிகளிலும் பொருள் உதவி செய்தனர். சுமார் 7294 சதுரடி பரப்பளவில் பாலாஜி, ராதா கிருஷ்ணன், சீதா ராமா, நரசிம்மா, சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் போன்ற தெய்வங்களையும் உள்ளடக்கிய பிரமாண்ட ஆலயமாக குவார்ட்டு சிட்டி இந்துக் கோயில் உருவானது. 2007 ம் ஆண்டு ஏப்ரல் 27 முதல் 29 ஆம் திகதி வரை கொண்டாட்டப்பட்ட நூதன உற்சவ மூர்த்தி சம்ப்ரோஷன விழாவின் போது ஏப்ரல் 28 ஆம் திகதி இக்கோயிலின் மிகப் பெரிய அளவில் இக்கோயிலின் திறப்பு விழா நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான இந்துக்களின் நன்கொடைகளைக் கொண்டு இக்கோவில் வளர்ச்சி அடைந்தது. இக்கோயிலுக்கான கட்டுமானப் பணிகள், நிதி திரட்டும் பணிகள், வடிவமைத்தல் போன்ற பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டனர். இல்லினோய்ஸ் மாகாணத்தில் லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கொழும்பில் ஆடிவேல் விழா

கொழும்பு, புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வரலாற்று பெருமைமிக்க ஆடிவேல் விழா எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று உள் வீதி உலாவுடன் சுவாமி காலை 7.05 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி பவனி வந்து அருள்பாலிப்பார். கொழும்பு, புறக்கோட்டை, முதலாம் குறுக்குத்தெரு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து புறப்படும் சித்திரத்தேர், பிரதான வீதி, கோட்டை ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். அங்கு பக்தர்களுக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும். அதன்பின் பி. ப. 1.30 மணிக்கு காலி முகத்திடலிலிருந்து புறப்படும் சித்திரத் தேர் காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததும் அமுது அளிக்கப்படும். எதிர்வரும் 21 ஆம் திகதி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சுவாமிக்கு காலை 5 மணி முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு வேல் விழா விசேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதம் வழங்கப்பட்டு 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் கிராமிய இசை பேரரசர் நாட்டுப்புற பாடல் நல்லிசை நாயகன் கலைமாமணி டொக்டர் புஷ்பவனம் குப்புசாமியுடன் கிராமிய பாடல் இசை, குயில் மக்கள் இசை மாதரசி அனிதா குப்புசாமி வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். பெளர்ணமி தினமான எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சுவாமி மயில் வாகனக் காட்சி, ஆடிவேல் விழா அர்ச்சனை நடத்தப்பட்டு விபூதிப் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்படும். அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகமும் வேல் விழா அர்ச்சனையும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு கலைமாமணி டொக்டர் புஷ்பவனம் குப்புசாமி இசை மாதரசி அனிதா குப்புசாமி தம்பதிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 7 மணி முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் விழா அர்ச்சனை நடத்தப்பட்டு திருவமுது போஜனம் வழங்கப்படும். எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து காலி வீதியூடாக பம்பலப்பிட்டி சந்தி, கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக பின்னிரவு 12 மணிக்கு காலிமுகத்திடலை வந்தடைந்து அருட்காட்சி புரிவார். எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அலங்கார புருஷராக சித்திரத் தேரில் கொலுவிருக்கும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி காலிமுகத்திடலிருந்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டம், பிரதான வீதி வழியாக இரண்டாம் குறுக்குத் தெருவில் திரும்பி, ஒல்கொட் மாவத்தை, சந்தி வரை சென்று திரும்பி, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு வழியாக பிரதான வீதி சென்று நான்காம் குறுக்குத்தெரு, கெயிசர் வீதி சந்தி வழியாக முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் திரும்பி மீண்டும் பிரதான வீதி, கான் மணிக் கூட்டுகோபுர சுற்று வட்டம், பேங்ஷால் வீதி வழியாக முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள தேவஸ்தானத்தை வந்தடைவார். சுவாமிகள் எழுந்தருளி நகர்பவனி வரும் போது சித்திரத் தேரை சுற்றியோ அல்லது தேருக்கு முன்னால் பன்னீர் தெளிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெளிக்க விரும்பும் பன்னீரை அபிஷேகம் செய்ய ஆலயத்திற்கு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சித்திரத் தேர் நகர் பவனி நாட்களில் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு விடுமுறை வழங்கி வேல் விழாவில் பங்கேற்குமாறும் வேல் விழா பவனி வரும்போது தங்களது வர்த்தக நிலையங்களிலும் இல்லங்களிலும் வாசலில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டி, புஷ்பங்களால் அலங்கரித்து பூரண கும்பம் வைத்து பூஜை தட்டுடன் பட்டு சாத்தி, மலர் சொரிந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமியை வரவேற்று உபசரிக்கும்படியும் ஆலய அறங்காவலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கே.ஈஸ்வரலிங்கம்

10180) சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகு சிறப்பாக போற்றிக் கொண்டாடப்படும் திருத்தலம் எது? எல்லா வைணவ ஆலயங்களிலும் சொர்க்க வாசல் வைபவம் நிகழும் என்றாலும், அவற்றுள் முதலிடம் பெறுவது திருவரங்கமேயாகும். எம்பெருமானுடன் போராடியே அப்பெருமானின் அருள்பெற்ற அரக்கர்கள் இருவர், தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகத்தார் யாவரும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்கு வாசல் வழியாக பெருமாள் அர்ச்சாவதாரமாக வெளிவரும்போது அவரை தரிசிக்கும் யாவரும், அவரைப் பின்தொடர்ந்து வருவோர்களும் தங்கள் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று முக்திப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் இன்றும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் திருவரங்கத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று திருவரங்கம் சொர்க்கவாசல் வைபவத்தைக் காண்போரும், பெருமானை தரிசிப்போரும் பிறப்பில்லா பெருநிலை அடைவர். 10181) வைகுண்ட ஏகாதசியன்று அடியவர்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் என்ன? உண்ணாமல் நோன்பிருப்பது, பேசாமல் மெளனிப்பது, உறங்காமல் பகவானின் நாமங்களை தியானிப்பது, தவறாமல் திருமாலை தரிசிப்பது. இவை யாவும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியன. ஏகாதசியன்று பாகவதக் கதைகளை படிப்பதும், கேட்பதும் மிக நன்று. 10182) ஏகாதசியன்று சிரார்த்தம் செய்யலாமா? ஏகாதசியில் சிரார்த்தம் வந்தால் திதி கொடுப்பவரும், அவர் மனைவியும் மக்களும் அவசியம் சிரார்த்த உணவை (அதாவது வழக்கப்படி திதி கொடுத்த அன்று தயாரிக்கப்படும் உணவை) சாப்பிடவேண்டும். மாதம் இருமுறை வரும் ஏகாதசியைவிட வருடத்திற்கொரு முறை வரும் திதி மிகவும் சிறப்பானது. ஏகாதசி அன்று வரும் திதி ஏகாதசி விரதப் பலனையும் தரும். 10183) துவாதசியன்று சேர்க்க வேண்டியவை? விலக்க வேண்டியவை என்ன? ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்று விரதத்தை பூர்த்தி செய்வர். அன்று சமையலில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்துக்கொள்வது மிக விசேஷம். துவாதசியன்று புடலங்காய், பகல் தூக்கம், இரு வேளை சாப்பாடு பாலுணர்வு ஆகியவை விலக்கப்பட வேண்டும்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10172) விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன? பூர்வ ஜென்மத் தொடர்பையே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு விட்டு, அநாதையாக விட்டுவிட்டதால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். இது தவறான அர்த்தம் கற்பிக்கிறது. தொட்டு வந்த துறை விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தப் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தார் போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்ட குறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவியில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருள். 10173) திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன? திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும். ஆனால் திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும் பிரச்சினைகளை சமாளித்து மகசூ கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக மகசூல் அளிக்கக் கூடிய ஒன்று. கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர். 10174) கரி நாளின் முக்கியத்துவம் என்ன? கரி நாளைப் பற்றி அறிந்துகொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பான கணக்கு பற்றி அறிந்துகொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர். இதில் குறிப்பிட்ட திதி, நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனைக் கரி நாளாக கணக்கிடுகிறார்கள். பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் துவக்கினால் அது விருத்திக்கு வராது என்று கூறுவர். எனவே விருத்திக்கு வரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம் உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது. 10175) தர்மம் ஏன் கர்ணனைக் காக்கவில்லை? உயர்ந்த சர்க்கரைப் பொங்கலாய் இருந்தால் கூட அடுத்தவர் சாப்பிட்ட தட்டில் வைத்துக் கொடுத்தால் நாம் அதை உண்ண மாட்டோம். நல்லவர்களாய் இருந்தால்கூட நல்ல செயலைச் செய்தால் கூட அதர்மத்தின் பக்கம் நின்றால் மரணம்தான் பரிசு. கர்ணன் தானம் செய்தது உயர்ந்ததாய் இருந்தாலும்கூட, அவன் அதர்மத்தின் சொரூபமான துரியோதனின் பக்கத்தில் இருந்ததால் தர்மம் அவனைக் காக்கவில்லை. 10176) சகுனம் பார்க்கலாமா, கூடாதா? சகுனம் கட்டாயம் பார்க்க வேண்டும். ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் பூனை நமக்கு குறுக்கே வரும் போது சகுனம் பார்ப்பது மூடத் தனமாகும். இதய வலி என்று அவசரமாக ஆஸ்பத்திரி செல்ல வேண்டி இருக்கையில், பிரசவ காலத்தில் சகுனம் பார்த்துக்கொண்டிருப்பது மூடத்தனமாகும். ஒரு நல்ல செயலை நிறுத்தி நிதானமாகச் செய்யும் போது சகுனம் பார்க்கலாம். அவசர காலத்தில் சகுனம் பார்ப்பது தவறு என்று கூறப்படுகிறது. 10177) ஏழைகளையே கடவுள் அதிகம் சோதனைக்குள்ளாக்குவது ஏன்? ஏழைகளை மட்டும் கடவுள் அதிகம் சோதனைக்குள்ளாக்குவார் என்று எண்ண வேண்டாம். பணம் உள்ளவர்களுக்கும் வசதி உள்ளவர்களுக்கும் வியாதி வருகிறது; வழக்கு வருகிறது; பிரிவு வருகிறது. கடவுள் எல்லோருக்கும் சோதனையைக் கொடுக்கத்தான் செய்கிறார். பலருக்கு வெளியே தெரிவதில்லை. சிலருக்கு வெளியே தெரிகிறது. 10177) எந்த விரதம் வலிமை வாய்ந்தது? ஏகாதசி விரதம் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. 10178) வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு வைபவம் எதற்காக? வைகுண்ட ஏகாதசியன்று திருமால் பாற்கடலில் பக்தர்களுக்கு பள்ளி கொண்டிருப்பது போன்று காட்சியளிப்பதுடன், சொர்க்கத்துக்குச் செல்லும் வழியையும் காட்டுகிறார். கலியுகத்தின் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு செல்வார் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் கதவுகள் மூடியே இருந்தனவாம். ஆழ்வார் மோனநிலையில் வீடுபேறு பெற்ற அன்றே அது திறக்கப்பட்டது. இந்த வரலாற்றை நினைவூட்டவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் நடைபெறுகிறது. 10179) சொர்க்கவாசல் வைபவம் உணர்த்தும் தத்துவம் என்ன? பல வடிவங்களில் எம்பெருமான் அவதரித்து பலரையும் காத்தது போன்றே அர்ச்சாவதாரத்தில் உருவ வழிபாட்டு முறையில்தானே முக்தி அடையும் ஒருவனாக நடித்து, அவ்வாறு முக்தி பெறுபவன் தன் முக்திப் பயணத்தில் என்னென்ன மாற்றங்களையும், வரவேற்புகளையும் பெறுவானோ அவற்றை நிகழ்த்திக் காட்டும் முறையில் பெருமாளின் வைகுண்ட ஏகாதசி புறப்பாடும், திருவுலாவும் நடைபெறுகிறது. ஆம் அன்று பெருமாள் எல்லோருக்கும் முன்னோடியாக தாமே முதலில் வைகுண்டம் நுழைந்து, தம் அடியவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்கிறார்.

திங்கள், 1 ஜூலை, 2013

வைரவர்

கே.ஈஸ்வரலிங்கம் 10153) காவல் தெய்வமாகவும் காத்தல் கடவுளுமாக விளங்குபவர் யார்? வைரவர் 10154) வைரவர் எவற்றை காவல் காப்பவராக விளங்குகிறார்? இவ்வுலகையும் உலகில் உள்ள திருக்கோயில்கள், தீர்த்தங்களையும் 10155) வைரவரை வேறு எப்பெயர்களில் அழைப்பார்கள்? §க்ஷத்ர பாலகன், தீர்த்த பாலகன் 10156) §க்ஷத்ர பாலகன் என்று அழைப்பது ஏன்? திருத்தலங்கள் எனப்படும் §க்ஷத்திரங்களை காவல்புரிவதால் 10157) தீர்த்த பாலகன் என்று அழைப்பது ஏன்? கடல் பொங்கி எழுந்து பூமியை அழிக்காமல் காப்பதற்காக 10158) உலகில் படைக்கும் உயிர்களைக் காக்கும் உரிமை யாருக்கு உண்டு? சிவனுக்கு 10159) அவ்வுயிர்களைக் காக்க சிவன் என்ன உருவில் வெளிப்படுகிறார்? வைரவர் 10160) படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஆற்றும் இறைவனுக்கு என்ன பெயர்? வைரவர் 10161) படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் வேறு எவ்வாறு அழைப்பர்? பரணம், ரமணம், வமணம் 10162) பரணம் என்பது எதனை? உலகில் உயிர்களை தோற்றுவித்து நிரப்பும் படைத்தொழில் செய்தலை 10163) ரமணம் என்பது எதனை? உயிர்களைக் காக்கும் தொழிலை 10164) நெடுங்காலம் வாழ்ந்து சோர்ந்த உயிர்களை அழித்து தன்னுள் அடக்கி கொள்ளும் அழித்தல் தொழிலை என்னவென்று சொல்வார்கள்? வமணம் 10165) ப+ரணம், ர+மணம், வ+மணம் ஆகிய மூன்றும் சேர்ந்தது எது? (பைரவம் (பை+ர+வ+ம்) 10166) பைரவரின் வலக்கரத்தில் இருப்பது என்ன? டமருகம் 10167) இந்த டமருகம் எதனை குறிக்கிறது? படைத்தலை 10168) கபாலம் எதனை குறிக்கிறது? காத்தலை 10169) மேனியில் பூசிய விபூதி எதனை குறிக்கிறது? அழித்தலை 10170) பைரவர் முத்தொழில்களையும் ஆற்றும் போது எவ்வாறு அழைக்கப்படுகிறார்? விரிஞ்சி வடுகர், முகுந்த வடுகர், உருத்திர வடுகர் 10171) இவர்களுக்கு தேவிகளாக விளங்குபவர்கள் யார்? வாக்தேவி, வைஷ்ண சக்தி, கெளரிகை

திங்கள், 24 ஜூன், 2013

இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தைப் போக்கும் முதல் தெய்வம்

இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தைப் போக்கும் முதல் தெய்வம் எதற்கெடுத்தாலும் டென்ஷன்-டென்ஷன் என்கிறோமே, எனக்கு தெரிந்து டென்ஷன் ஆகாத தெய்வம் விநாயகர் மட்டும்தான். அன்பே சிவம் என்றாலும் சிவபெருமான் கோபக்காரர். காக்கும் கடவுள் என்று மகா விஷ்ணுவை சொன்னாலும், அவதாரம் எடுத்து வந்து அழிப்பார். முருகப்பெருமான் யுத்த கடவுள் இப்படி எந்த கடவுளை நீங்கள் கவனித்தாலும் அவர்கள் ஒருவிதத்தில் கோபம்கொண்டவர்கள்தான். ஆனால் விநாயகப்பெருமான் ‘டேக் இட் ஈசி’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல, எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். அவருக்கும் கோபம் வரும். ஆனால் அதை அவர் கோபமாக செய்யமாட்டார். வேடிக்கையாக செய்து முடிப்பார். எதை எப்படி செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நமக்கெல்லாம் தெரிந்த ‘ஞானப் பழம்’ கதை சம்பவமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு இப்படி நிறைய இருக்கிறது. ஔவையின் வாழ்க்கையில் இப்படித்தான் ஒரு சம்பவம் அது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். தம் பூலோக கடமை முடிந்து கைலாயம் புறப்படுகிறார். அவரின் நண்பரான சேரமான் பெருமானும் உடன் வர, சுந்தரர் இறைவன் அனுப்பிய வெள்ளை யானையிலும், சேரமான் பெருமான் குதிரையிலும் ஆகாய மார்க்கமாக புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த சமயம் விநாயகர் வழிப்பாட்டில் இருந்த ஔவைக்கு இந்த காட்சி தெரிகிறது. உடனே சிவப்பெருமானை காண சுந்தரரையும், சேரமான் பெருமானையும் பின்தொடர்ந்து கைலாயம் அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால், விநாயகர் வழிப்பாட்டை அவசர அவசரமாக செய்கிறார். ஔவை. இதனை உணர்ந்த விநாயகப் பெருமான், ‘ஔவையே... பதறாதே. நான் இருக்கிறேன் அல்லவா நீ அமைதியாக பூஜை செய்’ என்றார். ஔவை தன் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் முறையாக வழிப்பாட்டை தொடங்கி செய்து நிறைவு செய்கிறார். விநாயகப் பெருமானும் ஔவைக்கு தந்த வாக்குக்கு ஏற்ப, கைலாயத்தை சுந்தரரும், சேரமான் பெருமானும் அடைவதற்கு முன்னதாகவே, சிவபெருமான் அன்னை பார்வதியின் முன்பாக ஔவையை அழைத்து வந்து சேர்க்கிறார் விநாயகப் பெருமான். ஔவை சிவபார்வதியை வணங்குகிறார் பிறகு சுந்தரரரையும் சேரமான் பெருமானையும் வரவேற்கிறார். ஔவை தங்களுக்கு முன்னதாகவே சிவகைலாயத்தில் ஔவை நிற்பதை கண்ட சுந்தரரும் - சேரமான் பெருமானும் இது விநாயகப் பெருமானின் திருவருள் என்று வியந்து போற்றுகிறார்கள். இப்படியாக நமக்கு இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தை தீர்க்கும் முதல் தெய்வம் விநாயகப் பெருமான்.

சிவன்

கே.ஈஸ்வரலிங்கம் 10115) நடராஜப் பெருமானுக்கு ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதை எண்ணவென்று அழைப்பார்கள்? ஆனித்திருமஞ்சனம் 10115) ஆனித்திருமஞ்சனம் விசேஷமாக எங்கு கொண்டாடப்படும்? சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் 10116) ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் யார்? பதஞ்சலி மகரிஷி 10117) பதஞ்சலி மகரிஷி யாரின் அம்சம்? ஆதிசேஷனின் 10118) பஞ்ச சபைகளும் எவை? ரத்தின சபை, கனக சபை, ரஜித சபை, தாமிர சபை, சித்திர சபை 10119) ரத்தின சபை எங்கு உள்ளது? திருவாலங்காட்டில் 10120) கனகசபை எங்கு உள்ளது? சிதம்பரத்தில் 10121) ரஜிதசபையை வேறு எவ்வாறு அழைப்பர்? வெள்ளி சபை 10122) வெள்ளிசபை எங்குள்ளது? மதுரையில் 10123) திருநெல்லியில் உள்ளது எது? தாமிரசபை 10124) திருக்குற்றாலத்தில் உள்ளது எது? சித்திரசபை 10125) பஞ்ச தாண்டவங்களும் எவை? ஆனந்த தாண்டவம், அஜபா தாண்டவம், 10126) சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம்? பிரம்ம தாண்டவம் 10127) ஆனந்த தாண்டவம் தலம் எங்குள்ளது? சிதம்பரம், பேரூர் 10128) அஜபா தாண்டவம் தலம் எங்குள்ளது? திருவாரூர் 10129) சுந்தரத் தாண்டவம் தலம் எங்குள்ளது? மதுரை 10130) ஊர்த்துவ தாண்டவம் தலம் எங்குள்ளது? அவிநாசி 10131) பிரம்ம தாண்டவம் தலம் எங்குள்ளது? திருமுருகன் பூண்டி 10132) சிவனின் தாண்டவங்கள் எத்தனை? ஐந்து 10133) இந்த ஐவகை தாண்டவங்களும்எதனை உணர்த்துகின்றன? ஐந்தொழில்களை 10134) ஐந்தொழில்களையும் தருக. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் 10135) ஐ வகை தாண்டவங்களையும் தருக. காளிகா, கவுரி, சங்கார, திரிபுர, ஊர்த்துவ 10136) படைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? காளிகா 10137) காத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? கவுரி 10138) அழித்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? சங்காரம் 10139) மறைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? திரிபுர 10140) அருளல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? ஊர்த்துவ 10141) தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது எது? மார்கழி 10142) காலைச் சந்திக்கு சமமானது எது? மாசி 10143) உச்சி காலத்திற்கு சமமானது எது? சித்திரை 10144) மாலைக் காலத்திற்கு சமமானது எது? ஆனி 10145) இரவுக்கு சமமானது எது? ஆவணி 10146) அர்த்த யாமத்துக்கு சமமானது எது? புரட்டாதி 10147) ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனத்தை எவ்வாறு அழைப்பார்கள்? ஆனி உத்திரம் 10148) ஆனி உத்திரத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்? ஆனித் திருமஞ்சனம் 10149) தில்லையில் எத்தனை சபைகள் உள்ளன? ஐந்து 10150) அந்த ஐந்து சபைகளையும் தருக சித்சபை, கனக சபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை. 10151) கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் என்ன? ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர். இதைத் தான் கல்லினால் அடிபட்டால் கூட அது விரைவில் ஆறிவிடும். ஒருவர் கண்ணடி (கண் திருஷ்டி) பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதை அறிந்த நம் முன்னோர்கள் கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் இப்போது புரிந்திருக்குமே! 10152) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா? சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன்கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.

திங்கள், 10 ஜூன், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10093) சிவபெருமானின் பஞ்ச குமாரர்கள் யார்? யார்? கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார், பைரவர் 10094) பைரவர் என்பது எந்த மொழி சொல்? வடமொழிச் சொல் 10095) பைரவர் என்பதற்குரிய பொருள் என்ன? மிகவும் பயங்கரமானவர் 10096) பைரவருக்கு இந்த பெயர் எவ்வாறு ஏற்பட்டது? எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைவர் என்பது பெயராயிற்று 10097) பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் எது? நள்ளிரவாகும் 10098) பைரவரின் வாகனம் எது? நாய் 10099) சனிபகவானுக்கு குரு யார்? பைரவர் 10100) கோயிலுக்குச் செல்வது ஏன்? கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால் யாராயிருந்தாலும் கோயிலுக்குப் போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் ஓம் என்ற பிரணவ மந்திரம் காற்று மண்டலத்தில் அதிர்வுறும் விதத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அந்த மந்திர ஒலி பெரிய அளவில் கலந்திருக்கும் கருவறையில் இருக்கும் விகரஹத்திற்கு ஆறுகால பூஜையும், அபிஷேகமும் நடத்தும் போது காற்று மண்டலத்தில் எதிர்மின்னோட்டம் அதிகரிப்பதோடு காற்றுமண்டலம் ஈரப்பதம் அடைகிறது. இந்த மின்னோட்டம் பிராணவாயுவுடன் கலக்கிறது. அதை சுவாசிக்கும் போது இதயத்துடிப்பு சீராகி ஆரோக்கியம் மேம்படுகிறது. இயற்கை வளம் மிக்க ஆறு, மலை, கடல், அருவி, வனம், சோலை ஆகிய பகுதிகளில் எதிர் மின்னோட்டம் அதிகமாக இருப்பதால்தான், அங்கு செல்லும் போது நமக்கு புத்துணர்வு உண்டாகிறது. அங்கு தரப்படும் பிரசாதம் மூலம், உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதை அனுசரித்துத்தான் ஒளவைப்பாட்டி ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று அழகாகச் சொல்லி வைத்தாள். 10102) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா? சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன்கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம். 10102) கோயிலில் செய்யக் கூடாதவை எவை? கோயிலில் இருக்கும் மரங்களிலிருந்து இலைகளையோ, பூக்களையோ வீட்டு வழிபாட்டிற்கோ, ஆத்மார்த்த பூஜைக்கோ பயன்படுத்தக் கூடாது, சுவாமிகளுக்கு அபிஷேகம், நிவேதனம் நடக்கும்போது வீழ்ந்து வணங்கக் கூடாது, பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில் ஆலயத்தில் வந்து சேவிப்பது, முதல் அபச்சாரம் பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது, வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்லலாகாது, ஒருவரைக் கெடுப்பதற்காகக் கோயிலுக்குச் செல்வதோ, அர்ச்சனை, அபிஷேகம் நடத்துவதோ அபச்சாரமாகும், பூஜை செய்யும்பொழுது பிறருடன் பேசுவது தவறு, இருட்டில் பகவானை வணங்குதல் ஆகாது, இருட்டில் பூஜை செய்யவும் கூடாது, குளிக்காமலோ, கால் கழுவாமலோ, பாதுகையுடனோ ஆலயம் செல்வது குற்றம், ஏதேனும் பழம், தேங்காய், புஷ்பம் முதலியவை இல்லாமல் கோயிலுக்குச் செல்லக் கூடாது, சாஸ்திரம் கூறாத இடத்தில் நமஸ்காரம் செய்தால் மற்ற மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டிய குற்றம் உண்டாகும், கோபத்துடன் ஆலயம் செல்வது கூடாது, முறைப்படி ஸ்நானம் செய்யாமலோ, முறைப்படி வஸ்திரம் அணியாமலோ, நெற்றிக்கு அணியாமலோ செல்வது குற்றமாகும். பொதுவாகவே வீட்டில் புசித்து விட்டு அதன் பிறகு ஆலயம் போகலாகாது.

திங்கள், 3 ஜூன், 2013

(ஆகாயம்)

கே.ஈஸ்வரலிங்கம் 10076) பஞ்ச பூதங்களும் எவை? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 10077) இந்த ஐந்து இயற்கை பூதங்களையும் எவ்வாறு அழைப்பர்? மஹா பூதங்கள் 10078) இந்த பஞ்ச பூதங்களில் வீட்டில் இருக்க §ண்டிய பூதங்கள் எவை? பஞ்ச பூதங்களும் 10079) பஞ்ச பூதங்களும் வீட்டில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்ன? நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும். 10080) நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களும் தடையின்றி வழங்குவதற்கு உதவும் பூதம் எது? ஆகாயம் 10081) மனிதனின் கேட்கும் திறமை எதைப் பொறுத்து உள்ளது? ஆகாயத்தை 10082) வீடு எப்படிப்பட்ட இடமாக இருக்க வேண்டும்? இனிய மென்மையாக ஒலிக்கின்ற அமைதியான இடமாக இருக்க வேண்டும். 10083) வீட்டின் எந்த திசையில் ஆகாயம் ஆட்சி புரிகிறது? வடகிழக்கு 10084) நன்மைகளை ஊக்குவிக்கும் கொஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் எவ்வாறானதாக இருக்க வேண்டும்? திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும். 10085) நிம்மதியாக தன்னைத்தானே அறிந்துகொள்வதற்கு வீட்டின் எந்த திசை சிறந்தது? வடக்கு 10086) தியானம், யோகா செய்வதற்கு வீட்டின் எந்தத் திசை சிறந்தது? வடகிழக்கு 10087) கல்வி, நற்காரியங்கள் செய்வதற்கும் வீட்டின் ஏற்ற திசை எது? வட கிழக்கு (வாயு) 10088) வாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு பஞ்சபூதங்களில் எந்த பூதத்துடன் கூட்டுறவு கொண்டது? அக்னியுடன் 10089) இவ்வாறு கூட்டுறவு கொண்டதற்கு காரணம் என்ன? காற்று நெருப்பை ஊக்குவிக்கும் என்பதாலாகும் 10090) வாயு, அக்னி ஆகிய இரண்டு பூதங்களுடைய குணம் என்ன? சதா அசைந்து கொண்டிருப்பது 10091) இது மனிதனால் எவ்வாறு அறியப்படுகிறது? தொடும் உணர்வினால் 10092) வீட்டின் வட மேற்கு பகுதியின் ஸ்தானதிபதி எது? ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர்

செவ்வாய், 14 மே, 2013

ஸ்ரீராம ஜெயம்

10025) ஸ்ரீராம ஜெயம் என்ற மந்திரத்தை எழுதுவதாலும் கூறுவதாலும் எமக்கு ஏற்படும் நன்மை என்ன? இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும் வெல்லும் பக்தியைத் தரும். 10026) ராம என்ற மந்திரத்திற்கு உரிய பொருள் என்ன? பாவங்களைப் போக்கடிப்பது 10027) ராம என்ற மந்திரத்தை வால்மீகி முதலில் என்னவென்று உச்சரித்தார்? மரா என்று 10028) மரா என்றால் என்ன பொருள்? பாவங்களை போக்கடிப்பதுதான் 10029) ராமனுக்குள் சீதை அடக்கம் என்பதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டவள் யார்? ரமா 10030) ரமா என்ற பெயர் யாருக்குரியது? சீதைக்கு 10031) ரமா என்ற பதத்திற்கு உரிய பொருள் என்ன? லட்சுமி 10032) ராம மந்திரம் எதை வழங்க்கூடியது? லட்சுமி கடாட்சத்தை 10033) ராம மந்திரம் எழுதுவோருக்கும் சொல்லுவோருக்கும் என்ன கிடைக்கும்? எங்கும் எதிலும் ஜெயம் 10034) ராமன் என்ற சொல்லில் ‘ரா’ என்றால் என்ன? இல்லை. 10035) ‘மன்’ என்றால் என்ன? தலைவன் 10036) ராமன் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன? இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பதுதான்

செவ்வாய், 7 மே, 2013

சுக்கிரன்

கே.ஈஸ்வரலிங்கம் சுக்கிரன் 10011) மனைவியை தரும் உரிமை பெற்றவர் யார்? சுக்கிரன் 10012) மனைவியை தரும் உரிமை உடையவர் என்பதால் சுக்கிரனை எவ்வாறு அழைப்பர்? களத்திரகாரகர் 10013) களத்திரகாரகர் என்பதன் பொருள் என்ன? மனைவியை தரும் உரிமை உடையவர் 10014) அழகான வீட்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவர் யார்? சுக்கிரன் 10015) ஒருவன் பிறந்தான், வாழ்ந்தான் என்றில்லாமல் அவன் பெயர், புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்? இசைப்பட வாழ்தல் 10016) அந்த புகழை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? சுக்கிரனிடம் 10017) சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குபவர் யார்? சுக்கிரன் 10018) சுக்கிரனுக்குரிய அதிதேவதை யார்? மகாலட்சுமி 10019) ஆடம்பரப் பொருட்கள், மலர்கள், சந்தனம், கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, சென்ட் போன்ற நறுமணப் பொருட்களை உபயோகிக்க வைப்பவர் யார்? சுக்கிரன் 10020) ஸ்ப்ரிங் கட்டில், வெல்வெட், மெத்தை, குஷன், கதிரை போன்ற சொகுசுப் பொருட்களை வாங்க காரணமாக இருப்பவர் யார்? சுக்கிரன் 10021) வாகனம், கப்பல், வியாபாரம், நவரத்தின வியாபாரம், கடல் வழி விமான பயணங்களை அனுபவிக்க செய்பவர் யார்? சுக்கிரன் 10022) நகைச்சுவை உணர்வுடன் விகட வினோதமாக பேச வைப்பவர் யார்? சுக்கிரன் 10023) தலைமைப் பதவி கிடைக்கச் செய்பவர் யார்? சுக்கிரன் 10024) நண்பர்களுடன் நல்லுறவு கொள்ளச் செய்பவர் யார்? சுக்கிரன்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான வழிபாட்டு முறைகளை மையமாக வைத்து ‘இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு’ என்ற நூல் ‘சைவசித்தாந்த பண்டிதர்’ ‘பிரசங்க பூஷணம்’ கலாநிதி பிரம்மஸ்ரீ காரை கு. சிவராஜ சர்மாவினால் எழுதி வெளியிட்டு வைக்கப்பட்டது. விழா கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ‘கிரியா கிரமஜோதி’ பிரம்மஸ்ரீ இலக்சுமி காந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமிஜீ சர்வரூபானந்த மகராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இதில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான தர்மகர்த்தா டி. எம். சுவாமிநாதனும் கலந்து கொண்டார். வெளியீட்டுரையை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் நிகழ்த்தினார். ஆய்வுரையை ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா நிகழ்த்த விதந்துரைகளை அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் சின்னத்துரை தனபாலா, கண்டி இந்து மாமன்ற உபசெயலாளர் பொன் இராஜநாதன், வங்கியாளர் மு. சதானந்தன், கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய ஆசிரியை திருமதி வளர்மதி சுமாதரன் ஆகியோரும் நிகழ்த்தினர். ‘இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு’ நூலில், முதல் வணக்கம் செலுத்தும் விநாயகர் தொடக்கம், சிவதரிசனபலனை தந்தருளுமாறு நாம் வேண்டும் சண்டேஸ்சுவரர் வரை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலை மையமாக வைத்து ஒவ்வொரு தெய்வங்கள் பற்றியும் மிக விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இறைவனுக்கு சாத்தும் பத்திரபுஸ்பங்கள் இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமது வாரிசுகளோடு இந்து மதத்தைப் பற்றி கூறுவதற்கேற்ற முறையில் விரதங்கள், உற்சவ தினங்கள், தோஷபரிகாரங்கள் என்பன எல்லாம் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. ஆன்மீகக் கருத்துக்கள், விஞ்ஞான விளக்கங்கள், சித்த மருத்துவம், இவை மூன்றும் ஒருசேர உள்ளடக்கப்பட்ட நூலாகவும் இது விளங்குகின்றது. இலங்கை வங்கியின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரியான ‘பிரசங்க பூஷணம்’ கலாநிதி பிரம்மஸ்ரீ காரை கு. சிவராஜ சர்மா இவரது ஆன்மீக வாழ்வில் பல அரிய சாதனைகளை புரிந்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஓர் அம்சம்தான் அவரது இந்த நூல் வெளியீடாகும். இந்நூலை அனைவரும் கற்று பயன் பெறுவதுடன் நூலாசிரியரது ஆன்மீக பயணம் இன்னும் தொடர வேண்டி அனைவரும் பிரார்த்திப்போமாக! திருமதி வளர்மதி சுமாதரன் ஆசிரியை - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்

ஸ்ரீ துர்க்காதேவி

கே.ஈஸ்வரலிங்கம் 9972) துர்க்காதேவியின் தோற்றங்கள் எத்தனை? ஒன்பது 9973) துர்க்காதேவியின் ஒன்பது தோற்றங்களையும் தருக. வந்ஹி துர்கா, வனதுர்கா, ஜலதுர்கா, ஸ்தூல துர்கா, விஷ்ணுதுர்கா, பிரும்ம துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா 9974) வந்ஹி என்றால் என்ன? நெருப்பு 9975) நெருப்பின் வாதையைப் போக்கி நம்மை குளிர்விப்பவள் யார்? வந்ஹி துர்கா 9976) தேஜஸ¥ம் சக்தியும் தருபவள் யார்? வந்ஹி துர்கா 9977) காட்டில் வழி தெரியாமல் துன்புறுபவர்களுக்கு வழிகாட்டி பத்திரமாக வெளிக் கொணர்ந்து காப்பவள் யார்? வனதுர்கா 9978) நீரில் மூழ்கித் தத்தளிப்பவர்களை காப்பாற்றி கரை சேர்ப்பவள் யார்? ஜலதுர்கா 9979) ஜலதுர்காவை தாராதேவி என யார் வணங்குபவர்கள்? பெளத்தர்கள் 9980) நெருக்கடி நேரத்தில் பயத்தைப் போக்கி மங்கலம் தரும் தேவி யார்? விஷ்ணு துர்கா 9981) விஷ்ணு துர்காவை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? சாந்தி துர்கா 9982) திரிபுர சம்ஹார காலத்தில் சூலாயுதம் ஏந்தி நின்றவள் யார்? சூலினி துர்கா 9983) சூலினி துர்கா யாருக்கு துணையாக சூலாயுதம் ஏந்தி நின்றாள்? சிவனுக்குத் துணையாக 9984) அமிர்த மதன காலத்தில் அசுரர்களைத் தவிர்த்து தேவர்களுக்கே அமிர்தம் கிடைக்கும்படி செய்த மோகினி உருவம் தாங்கியவள் யார்? ஆசூரி துர்கா 9985) குண்டலினி யோகத்தில் ஈடுபட்டிருக்கும் யோகிகளுக்கு, இதய கமலத்தில் ஞான ஒளியாகத் திகழ்பவள் யார்? தீப துர்கா 9986) லவணாசுரனை அழிக்க இராமனுக்கு சக்தி கொடுத்தவள் யார்? லவண துர்கா

புதன், 10 ஏப்ரல், 2013

வாஸ்து சாஸ்திரம்

கே.ஈஸ்வரலிங்கம் 9953 கட்டடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும் சொல் எது? வாஸ்து 9954 ஒரு நிலத்தில் கட்டடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறை எது? வாஸ்து சாஸ்திரம் 9955 வாஸ்து சாஸ்திரம் பற்றி வேதங்களில் எத்தனையாவது வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது? நான்காவது வேதத்தில் நான்காவது வேதம் எது? அதர்வணவேதம் 9956 வேதத்தில் வாஸ்து சாஸ்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக் கூடும் என கருதப்படுகிறது? கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் 9957 வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம் என்ன? மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்வதுடன் கட்டப்படுகின்ற கட்டடம் மனிதன் இயற்கையுடனும் இப்பிரபஞ்சத்தின ஒழுங்குடனும் இணைந்து போவதற்கு உதவுவதுமாகும். 9958 வாஸ்து பூமி பூஜையின் அடிப்படை தத்துவம் என்ன? ஒரு கட்டடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே. 9959 அதர்வ வேதம் தவிர வேறு எந்த நூலில் வாஸ்து ஸ்திரம் பற்றி எழுதப்பட்டுள்ளது. பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலில் 9960 பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூல் யாரால் ஆக்கப்பட்டுள்ளது? வராஹமிஹிரரால் 9961 தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்கள் எவை? மயமதம், மானசாரம், விஸ்வகர் மீயம் 9962 மயமதம் யாரால் எழுதப்பட்டது? மயனால் 9963 மானவிரம் யாரால் எழுதப்பட்டது? மானசாரரால் 9964 விஸ்வகர் மீயம் யாரால் எழுதப்பட்டது? விஸ்வகர்மாவால் 9965 கட்டடம் கட்டுவதற்கான மனையில் கட்டடத்தின் அமைவிடம் நோக்கும் திசை மற்றும் கட்டடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எது? வாஸ்து புருஷ மண்டலம் 9966 வாஸ்து புருஷ மண்டலம் என்பது என்ன? ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவம். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு யார் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது? பல்வேறு தேவர்கள் 9967 இம்மண்டலத்தின் மையப்பகுதிக்கு யார் அதிபதியாக உள்ளார்? வேதகால முழுமுதற்கடவுள் 9968 வேதகால முழுமுதற் கடவுள் யார்? பிரம்ம தேவன் 9969 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் யாருக்கு உரியவை? பிரம்ம தேவனுக்கு 9970 முக்கியமான திசைகள் எத்தனை? எட்டு 9971 இந்த முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்களை என்னவென்று அழைப்பார்கள் அட்ட திக்கிப் பாலர்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

(9948) இல்லங்களில் பூஜைக்கு வைக்கக்கூடாத படங்கள் எவை? கோவணம் கட்டிய மொட்டைத் தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்த்தி இருக்கும் முருகன் படம், தனித்த காளி, சனீஸ்வர பகவானின் படம், நவ கிரகங்களின் படம், தலைவிரி கோலங்களில் உள்ள அம்பிகை படங்கள். (9949) சுபகாரியங்களை நடத்த ஏன் எல்லோரும் வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால் மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும் போது சுப நிகழ்ச்சிகள் குறைவின்றி – சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையை தேர்ந்தெடுக்கின்றனர். (9950) பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா? குத்து விளக்குகளை பூஜை நேரத்தில் ஏற்றினால் போதும். காமாட்சி விளக்கு எனப்படும் குலதெய்வ விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் நல்லது. (9951) சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்சி, மாலையும் துளசி மாலையும் அணிந்து செல்வது ஏன்? வனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர துளசியின் கரையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கின்றார். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. கார்த்திகை மாதம் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும் இந்த துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. ஐயப்ப பக்தர்கள் உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹா விஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர். (9952) ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்கக் கூடாத சந்தர்ப்பங்கள் எவை? நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது.

திங்கள், 25 மார்ச், 2013

திருபாற் கடல்

கே.ஈஸ்வரலிங்கம் 9924) அமுதம் எடுக்க திருப்பாற் கடலை கடைந்தவர்கள் யார்? அறுபத்தாறு முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும் 9925) இவர்கள் திருபாற் கடலை கடைய மத்தாக எடுத்தது எதனை? மந்திரமலையை 9926) கயிறாக எடுத்தது எதனை? பாம்பை 9927) அந்த பாம்பின் பெயர் என்ன? வாசுகி 9928) பாம்பு, மத்து இவற்றுடன் வேறு என்ன போட்டார்கள்? மூலிகைகளை 9929) இவர்கள் திருபாற்கடலை எப்போது கடைய ஆரம்பித்தார்கள்? கார்த்திகை மாத ஏகாதசி திதியில் 9930) இவர்கள் என்னென்ன மந்திரங்களைச் சொல்லி பாற்கடலை கடைந்தார்கள்? மகாலக்சுமி மந்திரமலை ஸ்ரீசுக்தம், ஸ்ரீமந்திரம் 9931) இவர்கள் பாற்கடலை கடைந்த போது என்ன நடந்தது? மந்திரமலை கடலிலே மூழ்கிச் சென்றது. 9932) மந்திரமலை கடலில் மூழ்கிச் செல்வதைக் கண்ட திருமால் என்ன செய்தார்? ஆமை உருவமாக மாறி அந்த மந்திர மலையை தாங்கினார். 9933) தேவர்களும் அசுரர்களும் மாறி மாறி இழுத்ததால் வாசுகிக்கு வலி பொறுக்க முடியாமல் என்ன நடந்தது? விஷத்தைக் கக்கியது. 9934) வாசுகி விஷத்தை கக்கியதும் என்ன நடந்தது? கடலிலே ஆலகால விஷம் தோன்றியது 9935) அந்த ஆலகால விஷம் என்ன செய்தது? அனைவரையும் தாக்கியது 9936) அந்த விஷத்தினால் தாக்கப்பட்ட அசுரர்களுக்கு என்ன நடந்தது? உடல் கறுப்பாகி மாறியது 9937) அதனை தாங்க முடியாத தேவர்கள் என்ன செய்தார்கள்? சிவபெருமானை வேண்டினார்கள். 9938) சிவபெருமான் என்ன செய்தார்? சுந்தரரை அழைத்து அந்த விஷத்தை எடுத்து வரும்படி கூறினார். 9939) சுந்தரர் அந்த விஷத்தை எடுத்து வந்ததால் அவருக்கு ஏற்பட்ட பெயர் என்ன? ஆலகால சுந்தரர் 9940) சுந்தர் எடுத்து வந்த விஷத்தை சிவபெருமான் என்ன செய்தார்? உண்டார் 9941) சிவபெருமான் அந்த விஷத்தை உண்டது எப்போது? சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் மாலை 4.30 - 6.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில் 9942) சிவபெருமான் விஷத்தை உண்டதை கண்ட பார்வதி என்ன செய்தார்? அதனை கண்டத்திலே நிறுத்தினார். 9943) இவர் இவ்வாறு கண்டத்திலே நிறுத்தியதால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? நீலகண்டேஸ்வரர். 9944) மீண்டும் திருப்பாற்கடலை கடைந்த போது என்ன வந்தது? காமதேனு 9945) அந்த காமதேனுவை யார் எடுத்துக் கொண்டது யார்? வசிட்டர் முனிவர் இதில் தோன்றிய வெள்ளைகுதிரையை யார் எடுத்துக்கொண்டது? சப்த சிரேஷ்சிலியில் ஒருவரான அசுர தலைவன் மகாவலி 9946)4 கொம்புகளுடன் என்ன தோன்றியது சிவப்பு மணி 9947)சிவப்பு மணியை யார் எடுத்தார்? மகாவிஷ்ணு எடுத்து மார்பிலே பத்திரமாக அணிந்து கொண்டார்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

கொழும்பு மாநகரிலே பொரளைக்கு அண்மித்ததாக கொழும்பு 7இல் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி கொழும்பு டி. எஸ். சேனாநாயக்கா கல்லூரி ஒரு கனிஷ்ட பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முதலாம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரைதான் வகுப்புக்கள் இருந்தன. இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது 120 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் மட்டுமே இருந்தனர். அதில் 28 பிள்ளைகள் தமிழ் மொழி மூல பிள்ளைகளும், ஒரேயொரு தமிழ் ஆசிரியரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது ஆசிரியராகக் கடமையாற்றிய ஒரேயொரு தமிழ் ஆசிரியர் சி. தாமோதரம்பிள்ளை என்பவராவார். காலப்போக்கில் இவர் தமிழ்ப் பிரிவின் தலைமை ஆசரியராக கடமையாற்றினார். இவரது தலைமையில் 1969 ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலையில் சரஸ்வதி பூஜை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறாக இயங்கிக்கொண்டிருந்த பாடசாலையில் காலப்போக்கில் (க. பொ. த. சா.தரம்) 10 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற தரமுயர்த்தப் பட்டதுடன் அதன் பின் உயர்தரம் வரை வகுப்புகள் நடைபெறும் வண்ணம் தரமுயர்த்தப்பட்டது. ஆர். ஐ. டீ. அலஸ் அதிபராக இருந்தபோது 1988 ஆம் 89 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலுள்ள நான்கு மதங்களுக்குமுரிய வணக்கஸ்தலங்கள் அமைக்க வேண்டுமென பேசப்பட்டது. இவ்வாறாகப் பேசப்பட்டு 1990 ஆம் 91 ஆம் ஆண்டுகளில் நான்கு மாதங்களையும் சேர்ந்த வணக்கஸ்தலங்களும் அமைக்கப்பட்டதுடன் 1992 ஆம் ஆண்டு இங்கு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு பிரதிஷ்ட கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மீண்டும் ஆலயத்தில் வர்ணப் பூச்சு வேலைகளைச் செய்து முதலாவது கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1967 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க தனது தந்தையின் திருநாமத்தால் ஒரு பாடசாலையை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த டி. எஸ். சேனநாயக்க கல்லூரியை ஸ்தாபித்தார். 1969 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக தாமோதரம்பிள்ளை தெரிவானது குறிப்பிடத்தக்கது. இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரை அங்கு ஆசிரியராக கடமையாற்றினார். 1976 ஆம் ஆண்டு இவர் ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து இ. க. குலசேகரம் என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் 1976 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். இந்தப் பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்களான திருமதி வேலய்யா, செல்வகுமார், இந்திரன் ஆகியோர் இந்தப் பாடசாலையில் இந்து மத வளர்ச்சிக்கும் ஆலய வளர்ச்சிக்கும் அரும் பணியாற்றியவர்களாவர். இவர்கள் கடமையாற்றிய பாலஸ்தாபனத்தின் போது அடிக்கல் நாட்டப்படுகிறது காலத்திலே யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலிருந்து தங்கம்மா அப்புக்குட்டி, புலவர் கீரன் போன்ற மதப் பெரியார்களை அழைத்துவந்து பிரசங்கங்கள் நடத்தப்பட்டன. செல்லையா இராஜதுரை, செளமியமூர்த்தி தொண்டமான், பி. பி. தேவராஜ். பெ. சந்திரசேகரன் ஆகிய அரசியல்வாதிகளையும் இந்தப் பாடசாலைக்கு அதிதிகளாக அழைத்து இந்து மதப் பணிக்கு ஒத்துழைப்புகள் பெறப்பட்டன. அது மாத்திரமன்றி முன்பு சிவராத்திரி வருகின்ற போது இந்தப் பாடசாலை மாணவர்களை முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாதர் தேவஸ்தானத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் கண் விழிக்க வைத்து விரதம் இருக்கச் செய்து மறுநாள் அழைத்து வருவதுமுண்டு என்று இந்தப் பாடசாலையின் பழைய மாணவரும் இந்தப் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய வருமான கணேசராஜா தெரிவித்தார். தற்பொழுது இந்தப் பாடசாலையின் அதிபராக டி. எம். டி. திசாநாயக்கவும், உப அதிபராக பரமேஸ்வரனும், உதவி அதிபராக திருமதி சிவபாலனும் கடமையாற்றிக் கொண்டிருப்பதுடன் இந்து மன்ற பொறுப்பாளராக ஆசிரியர் ஜெயரத்தினம் சேவையாற்றி வருகின்றனர். இப்பொழுது ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்து எதிர்வரும் 18 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. தற்பொழுது சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலையும் புதிதாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் அமைக்கப்பட்டதிலிருந்து ஆலயத்தில் ஆகம விதிகளுக்கு ஏற்ப பூஜை புனஸ்காரங்களை செய்யவும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விரதங்களுக்கு ஏற்ப பூஜைகளை செய்யவும் வழி அமைத்து கொடுக்கப்பட்டது. இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களும், உப, உதவி அதிபர்களும் ஏனைய மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இதற்கு மேலும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். கே.ஈஸ்வரலிங்கம்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812