வியாழன், 25 ஜூலை, 2019

அறநெறி அறிவு நொடி

16228) ஆதித்தனுடைய புத்திரர்கள் எத்தனை பேர்? ஏழு பேர்

16229) அந்த ஏழு புத்திரர்களும் யார்?

1. கர்ணன், 2. காளந்தி, 3. சுக்ரீவன், 4. தத்திய மகன், 5. சனி, 6. நாதன், 7. மனு

16230) நந்தியின் அருள் பெற்றவர்கள் எத்தனை பேர்? எட்டுப் பேர்

16231) அந்த எட்டுப்பேரும் யார்?

1. சனகர், 2. சனாதனர், 3. சனந்தகர், 4. சனத்குமாரர், 5. வியாக்கிரபாதர், 6. பதஞ்சலி, 7. சிவயோக முனிவர், 8. திருமூலர்

16232) பர்வதங்கள் எத்தனை ? எட்டு

16233) அந்த அஷ்ட பர்வதங்களும் எவை?

1. கயிலை, 2. இமயம், 3. ஏமகூடம், 4. கந்தமாதனம், 5. நீலகிரி

6. நிமிடதம், 7. மந்தரம், 8. விந்தியமலை

16234) ஆத்ம குணங்கள் எத்தனை? எட்டு

16235) அந்த எட்டு ஆத்ம குணங்களையும் தருக

1. கருணை, 2. பொறுமை, 3. பேராசையின்மை, 4. பொறாமையின்மை

5. நல்லனவற்றில் பற்று [உறுதி], 6. உலோபத்தன்மையின்மை

7. மனமகிழ்வு, 8. தூய்மை

16236) மங்கலங்கள் எத்தனை வகை? எட்டு

16237) எண்வகை மங்கலங்களும் எவை?

1. கண்ணாடி, 2. கொடி, 3. சாமரம், 4. நிறைகுடம்

5. விளக்கு, 6. முரசு, 7. ராஜசின்னம், 8. இணைக்கயல்

வாசனைப் பொருட்கள் எத்தனை வகை? எட்டு

16238) எண்வகை வாசனைப் பொருட்களும் எவை?

1. சந்தனம், 2. கோட்டம், 3. கஸ்தூரி, 4. கற்பூரம், 5. குங்குமம்,

6. பச்சிலை, 7. அகில், 8. விளாமிச்சை வேர்

16239) பிறப்புக்கள் எத்தனை வகை ? ஏழு

16240) ஏழுவகைப் பிறப்புக்களும் எவை?

1. தேவர், 2. மனிதர், 3. விலங்குகள், 4. பறப்பவை, 5. ஊர்பவை,

6. நீர்வாழ்பவை, 7. தாவரம்

16241) உலகங்கள் எத்தனை? பதினான்கு

16242) இதில் மேல் உலகங்கள் எத்தனை? ஏழு,

16243) இதில் கீழ் உலகங்கள் எத்தனை? ஏழு

16244) ஈரேழு உலகங்களும் எவை?

மேல் உலகங்கள்

1. பூமி, 2. புவர்லோகம், 3. தபோலோகம், 4. சத்யலோகம், 5. ஜனோலோகம்,

6. மஹர்லோகம், 7. சுவர்க்கலோகம்

கீழ் உலகங்கள்:

1. அதலம், 2. கிதலம், 3. சுதலம், 4. இரசாதலம், 5. தவாதலம், 6. மகாதலம்,

7. பாதாலம்.

16245) குபேரனிடம் இருக்கும் நிதிகள் எத்தனை? ஒன்பது

16246) அந்த நவநிதிகள் எவை?

1. சங்கநிதி, 2. பதுமநிதி, 3. கற்பநிதி, 4. கச்சபநிதி, 5. நந்தநிதி, 6. நீலநிதி,

7. மஹாநிதி, 8. மஹாபதுமநிதி, 9. முகுந்த நிதி

16247) ஐஸ்வர்யங்கள் எத்தனை? எட்டு

16248) அஷ்ட ஐஸ்வர்யங்கள் எவை?

1. தனம், 2. தான்யம், 3. பசு, 4. அரசு, 5. புத்திரர், 6. தைரியம், 7. வாகனம்,

8. சுற்றம்

16248) நாகங்கள் எத்தனை? ஒன்பது

16249) அந்த நவ நாகங்கள் எவை?

1.ஆதிசேஷன், 2. கார்க்கோடகன், 3. அனந்தன், 4. குளிகன், 5. தஷன் , 6. சங்கபாலன், 7. பதுமன், 8. மகாபதுமன், 9. வாசுகி

16250) நன்மை தரக்கூடிய தானங்கள் எத்தனை? பத்து

16251) நன்மை தரக்கூடிய தச தானங்கள் எவை?

1. நெல், 2. எள், 3. உப்பு, 4. தீபம், 5. மணி, 6. வெள்ளி,

7. வஸ்திரம், 8. சந்தனக்கட்டை, 9. தங்கம், 10. நீர்ப்பாத்திரம்

அருமருந்தாகும் ஆடிக்கூழ்!



நமது முன்னோர்கள் ஆடிமுதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் தை முதல் ஆனி வரை உத்தராயனம் என்றும் ஓர் ஆண்டினை இரண்டு பாகமாக வகுத்தார்கள்.

சூரியன் தை மாதத்தில் வடக்கு திசை நோக்கி பயணத்தைச் செலுத்துவான். ஆடிமாதம் ஆரம்பித்ததும் தன் பயணத் திசையை மாற்றிக் கொண்டு தென் திசை நோக்கி திரும்புவான். இதைத்தான் உத்தராயனம் என்றும் தட்சிணாயனம் என்றும் சொல்வர்.

தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம். இம்மாதத்தில் வரும் பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் போற்றப்படுகின்றன.

தட்சிணாயனம் மழைக்காலத்தின் ஆரம்பம். சூரியன் தன் பயணப்பாதையை ஆடியில் மாற்றிக் கொள்வதால் இயற்கையின் சூழ்நிலை மாறும். மழைக்கால ஆரம்ப மாதமான இந்த ஆடிமாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள் என்று புராணம் கூறுகிறது. அதனால் பூமாதேவியான அம்மனுக்கு விழா எடுத்து நல்ல மழை பொழிந்து நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றி வளமான வாழ்வு தரவேண்டும் என்று அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அம்மனுக்கு உகந்த ஆடிச்செவ்வாய், ஆடிவெள்ளி, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பதினெட்டு, ஆடி அமாவாசை, பௌர்ணமி என விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. இம் மாதத்தில் காவேரியானவள் மசக்கையாக இருப்பதாகக் கருதப்படுவதால், ஆண்டாள் ஜென்ம நட்சத்திரமான பூரத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை வரம், திருமணவரம், வேண்டும் பெண்கள் உட்பட சுமங்கலி பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பல சிறப்புகள் பெற்ற இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ்வார்க்கும் விழா நடைபெறுவது மிகவும் சிறப்பான நிகழ்வாகும். நம் உடல் நலத்தின் வளம் கருதியே ஆடிக்கூழ் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆன்மிகமும் அறிவியலும் சொல்கின்றன.

ஆடிமாதம் மழைக்கால ஆரம்ப மாதமாக இருப்பதால் இதற்குமுன் வெப்பத்தின் சூழ்நிலையில் இருந்த நம் உடல், பருவமாற்றம், காற்று, திடீர்மழை இவற்றினால் பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதைத் தவிர்க்க, நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தேவை.

அம்மனுக்கு படைக்கப்படும் கூழ் பெரும்பாலும் கேழ்வரகு, கம்பு போன்ற சிறு தானியங்களின் மாவினால் தயார் செய்யப்படுவதால், அவை நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதுடன் உடலுக்குத் தேவையான வலிமையையும் தருகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் சக்தி இந்தக் கூழுக்கு உண்டு. கூழ் எளிதில் ஜீரணமாவதுடன் குடலுக்குத் தொந்தரவு அளிக்காது. வாயு போன்ற உபத்திரவங்களும் ஏற்படாது.

புதுப்பானையில் கூழ் காய்ச்சப்பட்டு, அந்தப்பானையின் வாய்ப்பகுதியில் வேப்பிலைக் காப்பிட்டு, அம்மனுக்குப் படைக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேப்பிலையின் சக்தி அதில் கலக்கிறது. மேலும் அம்மனின் அருள் பார்வையால் அதன் சக்தி பல மடங்கு பெருகுகிறது. இந்தக் கூழ் பிரசாதத்தினை விரதமிருந்து அருந்துகையில், நோய் எதிர்ப்பாற்றல் தரும் அருமருந்தாகிறது.

தெய்வப்பிரசாதமான ஆடிக்கூழ் மக்களை நோய்நொடிகள் இல்லாமல் நலமுடன் வாழ வழிவகுக்கிறது.

தன்னைத்தானே திருத்திக் கொள்ளாதவன், பிறரைத் திருத்த அருகதை அற்றவன்


கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும்.


நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலு பேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுய புத்தி வேண்டும்.

அறநெறி அறிவு நொடி

11093) மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன் ?

திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது "மாங்கல்ய தந்துனானேன" என்று மந்திரம் சொல்லுவார்கள்.

'தந்து" என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் 'மங்களம்". வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.

கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜp ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜp எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினாலான தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.
11094) ஆலயங்களில் பெரிய மணி எந்தெந்த நேரங்களில் அடிக்க வேண்டும்?

அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உற்சவத்தில் ஆரம்பம், உற்சவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு - இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும்.
11095) கை மணி எந்தெந்த நேரங்களில் அடிக்க வேண்டும்?

கர்ணம் முதலான கிரியைகளின் ஆரம்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்;. தூப - தீபம் காட்டும்போதும், பலி காலத்திலும் இடைவிடாமல் கைமணி ஒலிக்க வேண்டும்.

அவிசாவளை குடகம ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்


மலையகத்தின் நுழைவாயில் என கூறப்படும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அவிசாவளை நகரின் குடகம வீதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்த அலங்கார உற்சவம் 31.07.2019 புதன்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூலமூர்த்திபூசை, வசந்த மண்டப பூசை இடம்பெற்ற பின்பு இரவு 7.30 மணிக்கு தீச்சட்டியுடன் ஸ்ரீவிநாயப் பெருமானும், ஸ்ரீமுத்துமாரியம்மனும் வெளிவீதி உலாவருதல் இடம்பெறும்.

01.08.2019 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு புவக்பிட்டிய திருவருள் மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட பவனி ஆரம்பமாகி அந்த பால்குட பவனி கோவிலை வந்தடைந்த பின்பு 108 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூலமூர்த்தி பூசை, வசந்த மண்டப பூசை நடைபெற்று அதன் பின்பு வேட்டைத் திருவிழா இடம்பெறும்.

02.08.2019 மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்பட்டு விநாயகர் வழிபாட்டுடன் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் இடம்பெறும். அதன் பின் மாலை 6 மணிக்கு மூலமூர்த்தி பூசை, வசந்த மண்டப பூசை இடம்பெற்று அதன் பின்பு இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.

03.08.2019 நான்காம் நாள் சனிக்கிழமை தேர் கோவிலை வந்தடைந்ததும் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெற்று அதன் பின்பு பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெற்ற பின்பு தீ மதிப்பு இடம்பெறும். அதன் பின்பு மாலை 6 மணிக்கு மூல மூர்த்தி பூசை, மாவிளக்கு பூசை, திருவூஞ்சல் பூசை ஆகியன இடம்பெறும்.

04.08.2019 இறுதி நாளான ஐந்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வைரவர் பூசையுடன் படையல பூசை இடம்பெற்று மகோற்சவ கிரியைகள் நிறைவுபெறும்.

அவிசாவளை, குடகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்



கொழும்பு மாவட்டத்தின் இறுதியில் அமைந்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் ஒரே ஒரு தொகுதியாகவும் விளங்கி வருவது அவிசாவளை தொகுதியாகும்.

இந்தியத் தமிழர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் அவர்கள் கோயில் அமைத்து வழிபாட்டு முறையைப் பின்பற்றி தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக மாரியம்மன் மீதே நம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளனர். அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை தொகுதியின் அவிசாவளை நகர் மற்றும் நகரைச் சூழவுள்ள மக்கள் மேற்கொண்டு வந்த வழிபாட்டுத்தலங்களில் புவக்பிட்டிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் குடகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய இவ்விரண்டு ஆலயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவிசாவளை குடகம வீதி சீத்தாவக்கபுர கைத்தொழில் பேட்டை அமையப் பெற்றுள்ள ஒரு பிரதேசமாகும். இங்கு அமையப் பெற்றுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் சுமார் நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும். அக்காலத்தில் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தவர்களில் நல்லு நாயுடு என்பவர் 1930 இல் தென்னிந்தியாவிலிருந்து கருங்கல்லினாலான அம்மன் சிலையொன்றைத் தருவித்து, அதனை அப்பிரதேசத்தில் உள்ள ஒரு மரத்தடியில் வைத்து தகரத்தினாலான கூரையமைத்து மாரியம்மன் வழிபாட்டுக்கு வழிவகுத்து மக்கள் வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறு நடந்து வந்த போது, இந்த ஆலயத்துக்கு அருகாமையில் சீதாகம எனும் பெயரில் மாதிரிக்கிராமம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனால் ஆலயத்துக்கு ஏற்பட்ட நிலை குறித்து உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இந்து சமய கலாசார

அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு மடாலயம் எனக்கூறும் வகையில் ஆலயம் அமைக்கப்பட்டு பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டு ஆலயத்தை பரிபாலனம் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

1986 இல் இந்த ஆலயத்தின் முதலாவது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நல்லுசாமி என்பவர் தலைமையில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வந்த வேளையில் ஆலயத்தின் கலசம் சரிந்ததையடுத்து எழுத்தாளரான சி. பக்தசீலனுடன் கலந்தாலோசித்து தலைமைத்துவம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஆகம முறைப்படி அங்க சம்பூரணமான ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் ஆலயம் அமையப்பெற்றிருந்த இடம் போதிய இடவசதியைக் கொண்டிராத காரணத்தால் ஆலய நிர்வாக சபையினர் அப்போதைய அமைச்சராக இருந்த இந்திக்க குணவர்த்தனவைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கமைய ஆலயம் அமையப் பெற்றிருந்த காணிக்கு எதிர் புறத்தே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 40 பேர்ச் காணி 1999 இல் பெற்றுக்கொடுக்கப்பட்டது. எனினும் ஆலயத்தை இடமாற்றி அமைப்பது பொருந்தாது எனக் கொண்டு பழைய இடத்திலேயே ஆலயம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வேளையில் ஏற்பட்ட பல எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு நிர்வாக சபையினர் நீதிமன்றம் வரையில் சென்று புதிய ஆலயம் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

பெண்களுக்கும் கோயில் நிர்வாகத்தில் பங்குகொள்ள இடமளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த தலைவர் சி. பக்தசீலனின் கருத்துக்கு அமைய பெண்களும் இணைத்துக் கொள்ளப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு 2002.06.06 இல் அருள் ஜோதி ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் பாலஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டு 2002.11.15 இல் ராமகிருஷ்ண மிஷன் ராஜேஸ்வரானந்த சுவாமியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அவிசாவளையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான கே.என். ஞானசம்பந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர்களான திருமாவளவன், முருகதாஸ். நலன் விரும்பிகள், தனவந்தர்கள் மற்றும் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் ஆலய நிர்மாணப் பணிகள் செவ்வனே பூர்த்தி செய்யப்பட்டு புதியதோர் ஆலயம் எழுப்பப்பட்டு 2011.06.12 இல் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பாலகுகேஷ்வர குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. கொழும்பு 5ம் குறுக்குத்தெரு ஞானம் இம்போட்டர்ஸ் பிரைவேட் லமிட்டட் நிறுவனத்தார் பிரபல வர்த்தகரான ஆர். ராதாகிருஷ்ணன், மற்றும் ஞா. இராஜேந்திரன் ஆகியோர் மகா கும்பாபிஷேகத்துக்கு வழங்கிய சேவை அளப்பரியதாகும். மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று 01.08.2011 இல் தேர்த்திருவிழா நடைபெற்றது.

ஆலயத்துக்கென ஒதுக்கப்பட்ட 40 பேர்ச் காணியில் அப்போதைய அமைச்சரான இந்திக்க குணவர்தன தலைமையில் 1999.12.05 இல் கலாசார மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இ.தொ.கா.வைச் சேர்ந்த ஆர். யோகராஜன் 12 இலட்சம் ரூபாவும், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 50 இலட்சம் ரூபாவும் நிதி உதவி பெற்றுக்கொடுக்கப்பட்டு மண்டபம் பூர்த்தி செய்யப்பட்டது. மண்டபத்தைச் சுற்றி மதில் அமைக்க மனோ கணேசன், பிரபாகணேசன், கலாநிதி குமர குருபரன் சீ.வை. ராம் ஆகியோர் நிதி உதவி பெற்றுக்கொடுத்தனர். மண்டபம் அமைந்துள்ள காணியில் கோயில் குழுக்களுக்கான இல்லம், படப்பள்ளி என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கென சுமார் 50 இலட்சம் ரூபா செலவில் 17 அடி உயரத்திலான கலையம்சம் பொருந்திய சித்திரத் தேர் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு கடந்த 22.07.2014 வெள்ளோட்டம் விடப்பட்டது.

அவிசாவளை, மாணிக்கவத்த, ஹொனிட்டன், கொட்டபொட வத்தை, உக்வத்தை, உசேனி ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் இந்துக்கள் தமது வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வசதியாகவும், கிரியைகள், சாந்தி மற்றும் நேர்த்திக்கடன்களை சிரமமின்றி இலகுவாகவும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையில் சிறப்புப் பெற்றதோர் ஆலயமாக இவ்வாலயம் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

1999.11.28 முதல் இங்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் என்ற பெயரில் அறநெறிப் பாடசாலையொன்று இயங்கி வருகின்றது. மாணவர்கள் மத்தியில் சமய அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்க்கும் பொருட்டு பல ஆசிரியர்களின் உதவியுடன் இயங்கி வருவதுடன், சிவராத்திரி, நவராத்திரி மற்றும் விசேட தினங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று வருவதுடன், மாணவர்களிடையே இந்து சமயம் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு மாணவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வியாழன், 18 ஜூலை, 2019

பஞ்சாமிர்தம்



காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.

இன்றைய உடல் சிக்கல்களை தீர்க்கவல்லது என போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தத்தை கூறலாம். இதனை வெறும் பூஜைப் பொருளாக பார்ப்பது முறையா?

வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவுமுறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல், தைராய்டு என பல உடல் சிக்கல்களை தோற்றுவிக்க அடிப்படை காரணம்.

மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறையினை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். பழனியில் நவபாஷான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்துள்ளார். ஆம், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அன்று வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.

காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம். இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றி கூறக் காரணம் இன்றும் பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம்.

இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப்படுகின்றன. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது. ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்குமாம். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.

தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப்பண்டங்கள், பானங்கள் இருந்தும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் உள்ளது. இது ஒன்றின் மூலமே அதன் சிறப்பை புரிந்துகொள்ள முடியும்.

விரதம்



ஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்க நவசக்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.

ஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது வேண்டுதல்கள் இருந்தால், விரதம் இருந்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவம் உள்ளோர்களின் கருத்து.

சிலர் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உண்பார்கள். இதே போல், நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருந்து ஜெபிப்பவர்களும் உள்ளார்கள். இவையனைத்தும் அவரவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாரு மாறுபடும். ஒருவர் நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் இருந்தால், மற்றவர்களும் அப்படி இருக்கவேணடும எனறு எண்ணுவது தவறு. இறைநிலை மட்டும் மனதில் கொண்டாலே போதும்.

அந்த வகையில, இந்துக்கள் நவகிரக விரதம், நவராத்திரி விரதம், வரலெட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம் போன்றவை கடைபிடிக்கப்படுகிறது. இவைகளில் எந்த விரதத்தை கடைபிடித்தாலும், நம் எண்ணத்தில் உறுதியாக இருந்து நவக்கிரகங்கள் மற்றும் இறைநிலை பரப்பிரம்மத்தை மனதில் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே, நாம் நினைத்த காரியம் கைகூடும்.

ஆயுள்காரகன்


நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகள் உகந்த நாட்கள்.

சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமே நாராயணாய ” என்று உச்சரித்து விரத்தை ஆரம்பிக்கலாம். அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். அசைவம் கூடாது. அதன் பின் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடுதம் அவசியம்.

அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிப்பாட்டை செய்யலாம். சனிக்கிழமை இருக்கும் விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.

மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம். கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு வரவும்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்திவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.

இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். அன்று விரதம் இருக்கும்போது தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, அவர்களும் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்



மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் சந்திராஷ்டமம்.

சந்திரன் என்ற கிரகத்தை ‘மனதுகாரகன்’ என்று அழைக்கிறோம். மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் சந்திராஷ்டமம்.

இறைவனை வழிபட்டு இனிமை காண வேண்டிய நாள் அது. அந்த நாளில் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவதுதான் நல்லது. 8-ல் சந்திரன் வரும்பொழுது ஒருவருடைய அறிவுத்திறனும், மனோபலமும் குறையும். அந்த நேரத்தில் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது. அதனால்தான் சந்திராஷ்டமம் வரும் நாளில் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள்.

மேலும் அன்றைய தினம் பயணங்களை தள்ளிவைத்துக் கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது. சிறிய பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக மாறும். ஒவ்வொரு ராசியிலும் குறைந்தது 21/4 நாள் சந்திரன் உலாவரும். அந்த நாட்களில் எல்லாம் அதிக விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

பிள்ளையார் சுழி



நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கி விட்டே ஆரம்பிக்கிறோம். அதே போல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும் போது முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம். பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக் கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.

விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.

ஆடலரசனுக்கு ஆனித் திருமஞ்சனம்



'வேனிற் காலம், ஆனி இலை அசங்க' என்பதற்கு ஏற்ப அவ்வப்போது மழை பொழியும் இதமான நாட்கள் தொடங்கும் மாதமாகத்தான் ஆனி மாதத்தை நமது முன்னோர்கள் வர்ணிப்பார்கள். ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம். இந்த ஆனி உத்திரமே, ஆடலசரனுக்கான ஆனி திருமஞ்சனமாக கொண்டாடப்படுகிறது. இப்படியான மகிமை பொருந்திய ஆனி திருமஞ்சனத்தின் சிறப்புகளை விவரிக்கிறார் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்.

"திருமஞ்சனம் என்றால், மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப் பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி என்று ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பை பெறுகிறது. இப்படியான சிறப்புகளில், சந்தியா காலங்களாக விளங்கும் ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகதந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.

பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறையே விசேசமாக அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இந்த 2 விசேச நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே, அதிகாலையில் சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள், பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவே ஆனி திருமஞ்சனமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனி திருமஞ்சனத்தை ஆடலரசனான நடராஜ பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், எல்லாச் சிவ ஆலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதைக் கண்டத்தில் நிறுத்தியதால், நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. அத்துடன் வெம்மையுள்ள சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால், சிவபெருமான் பொன்னார் மேனியாய் காட்சி அளிக்கிறார். அபிசேக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என 36 வகையான பொருட்களைக்கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் அதிகாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பிற சிவ ஆலயங்களைக் காட்டிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்னும் விசேசமாகச் சிறப்பிக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி.

ஆனி மாதத்தில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்றும், திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளதுபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. இந்த இரு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தரிசிப்பதாக ஐதீகம். சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் காட்டுவது போலவே, ஆடல் வல்லானின் திருநடனம் தலத்திற்குத் தலம் மாறுபடுகிறது.

ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும், என்பது அருளாளர்களின் சொல் வாக்கு. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்பது இறை நம்பிக்கையாக உள்ளது. அதனால், அபிசேகத்திற்கு செல்லும்போது, நம்மாள் முடிந்த அபிசேக பொருட்களைச் கொண்டு செல்வது சிறப்பு. ஆனித் திருமஞ்சன வைபவங்களில் சுமங்கலிகள் கலந்துகொள்ளும்போது, நீடுழி வாழ்கின்ற சுமங்கலி பாக்கியத்தை அவர்கள் பெறுகிறார்கள். அத்துடன் இளம் வயதினருக்கு நல்ல இடத்தில் வரன் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆனி மாதம் நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தன்றுதான் வசந்த பஞ்சமி, சமீகௌரி விரதம் ஆகியவையும் அனுசரிக்கப்படுகிறது. இந்த உன்னத திருநாளில் முறைப்படி விரதம் இருந்து, மனமுருக வேண்டி.. ஆடலரசனின் அருளை நாமும் பெறுவோம்!

சாய் பாபா அருள்


சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு.

சிட்டுக்குருவியின் காலில் கயிற்றை கட்டி இழுப்பது போல பக்தர்களை என் பக்கம் இழுப்பேன் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வதுண்டு. அதை உறுதிபடுத்துவது போல சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு. சிலருக்கு பாபாவை பற்றி துளி அளவு கூட எந்த விஷயமும் தெரிந்திருக்காது. ஆனால் அவர்களை மிகக்குறுகிய காலத்தில் சாய்பாபா தனது அதிதீவிர பக்தனாக மாற்றி இருக்கிறார்.

அவர்களில் சீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைத்து தி.நகரில் ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான -பிரார்த்தனை மையம் நடத்தி வரும் பேராசிரியர் திருவள்ளுவன் வித்தியாசமானவர்.

இதுபற்றி பேராசிரியர் திருவள்ளுவன் கூறியதாவது:-

2001ம் ஆண்டு கல்லூரியில் என்னுடன் பணிபுரிந்த சாய்ராம் என்பவர் என்னை சீரடிக்கு அழைத்தார். அவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர். சாய்பாபா மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அவருடன் நானும் எனது மனைவியும் சீரடிக்கு சென்றோம்.

சீரடியில் பாபாவின் சமாதி மந்திருக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு நிறைய பேர் அமர்ந்து பாபாவை புகழ்ந்து பாட்டுபாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்தேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. பாபா சமாதியில் வழிபட்ட பிறகு சென்னைக்கு திரும்பிவிட்டோம். அதன் பிறகு நான் பாபாவை சுத்தமாக மறந்து விட்டேன்.

நானும் அதை ஏற்றுக் கொண்டேன். சீரடி சாய்பாபா பற்றிய புத்தகங்களை தேடி தேடி சேகரித்தேன். பாபாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்க படிக்க ஆச்சரியமாக இருந்தது. அவர் மெல்ல மெல்ல என் மனதுக்குள் ஊடுருவினார். அந்த சமயத்தில் கல்லூரி முதல்வர் நான் சீரடி சென்று பாபா ஆலயத்தில் உள்ள நூலகத்தில் புத்தகங்கள் பெறுவதற்கு அனுமதி வழங்கினார். அதன் பேரில் நான் சீரடி செல்ல முடிவு செய்தேன். அப்போது பாபா ஒரு அதிசயம் நிகழ்த்தினார்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நான் சீரடி செல்வதை அறிந்து என்னை பார்க்க வந்தார். அவர் என்னிடம், “சீரடியில் இருந்து ஷிண்டே என்பவர் வந்திருக்கிறார். அவருடன் சீரடிக்கு செல்லுங்கள். உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அவர் பார்த்துக் கொள்வார்” என்று கூறினார். அதன்படி ஷிண்டேவுடன் நானும் நண்பர் பல்லவ ராஜாவும் சீரடிக்கு சென்றோம். அங்கு சாய்பாபா ஆலயத்தின் பி.ஆர்.ஒ. லட்சுமன் சகானே எனக்கு அறிமுகமானார்.

லட்சுமன் சகானே என்னை அவரது வீட்டுக்கும் அழைத்து சென்று பாபா பற்றிய புத்தகங்கள் கொடுத்தார். பிறகு சமாதி மந்திருக்குள் சென்று சாய்பாபாவை வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்தார். சமாதி மந்திரில் பாபா சிலை அருகே வெள்ளித்தூண் பகுதியில் நின்று நான் பாபாவை வழிபட்டேன். அப்போது பாபாவுக்கு நடந்த ஆரத்தி பூஜையில் மெய் மறந்தேன்.

அன்று இரவு என் வாழ்க்கையில் மேலும் ஒரு அதிசயத்தை பாபா நிகழ்த்தினார். என்னுடன் வந்திருந்த பல்லவராஜா தான் கொண்டு வந்திருந்த பாபா படத்தை காண்பித்து இதே போன்று இன்னொரு படம் வேண்டும் என்று சீரடி முழுக்க தேடினார். நாங்கள் அப்துல் பாபா காட்டேஜுக்கு சென்று விசாரித்தோம். அப்போது அங்கு இருந்த அப்துல் பாபாவின் கொள்ளு பேரன் “இரவு 10 மணிக்கு வாருங்கள் தருகிறேன்” என்று கூறினார்.

அவர் சொன்னபடி நானும், எனது நண்பரும் இரவு 10 மணிக்கு அப்துல் பாபா வாழ்ந்த வீட்டுக்கு சென்றோம். எங்களை கண்டதும் அவரது கொள்ளு பேரன் கனிபாய் உள்ளே அழைத்து சென்றார். ஒரு கதவை திறந்து பழைய இரும்புபெட்டியை எடுத்து வந்தார். அந்த பெட்டிக்குள் பாபா தினமும் 5 வீடுகளில் பிச்சை எடுக்க பயன்படுத்திய பாத்திரம், சட்கா ஆகியவை இருந்தன. அவற்றை தொட்டு வணங்க சொன்னார். எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. சாய்பாபா மகா சமாதி அடைந்ததும், அவர் பயன்படுத்திய பொருட்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற 7வது நபர் நீங்கள் என்றார்கள். நான் ஆடிப்போய் விட்டேன்.

ஆச்சரியத்தில் மூழ்கி இருந்த எனக்கு பாபா மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தார். அந்த சூட்கேசுக்குள் இருந்த பிச்சைப்பாத்திரத்துக்குள் கிடந்த ஒரு நாணயத்தை எடுத்து கனிபாய் எனக்கு கொடுத்தார். அது பாபா பயன்படுத்திய நாணயம் ஆகும். அந்த நாணயத்தை தொட்ட வினாடியே நான் பாபாவிடம் முழுமையாக என்னை ஒப்படைத்துவிட்டேன். பாபா என்னை தூண்டில் போட்டு இழுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

அறநெறி அறிவு நொடி

திங்கட்கிழமை யாருக்கு உகந்த நாள்?

சிவனுக்கு

திங்கட்கிழமைகளில் சிவனை வேண்டி என்ன ​ செய்யலாம்?

அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது சிறந்தது.

செவ்வாய்க்கிழமை யாக்கு உகந்த நாள்?

துர்க்கை, முருகன் மற்றும் அனுமனுக்கு

புதன் கிழமை யாருக்கு உகந்த நாள்

விநாயக பெருமானுக்கு

வியாழக்கிழமை யாருக்கு உகந்த நாள்?

விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும்.

வெள்ளிக்கிழமை யாருக்கு உகந்த நாள்?

துர்கை அம்மனுக்கு

சனிக்கிழமை ​​யாருக்கு உகந்த நாள் ?



நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதோடு ஆஞ்சநேயர், பெருமாள், காளி தேவி ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமை உகந்த நாளே.

ஞாயிற்றுக் கிழமை யாருக்கு உகந்த நாள் ?

நவக்கிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு ஞாயிறு என்று மற்றொரு பெயரும் உண்டு.

அறநெறி அறிவு நொடி


""மாங்கல்ய தந்துனா'' என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. இதில் "தந்து' என்றால் என்ன?

"மஞ்சள் கயிறு' என்று பொருள்.

மஞ்சள் கயிற்றைவேறு எவ்வாறு அழைப்பர்?"திருமாங்கல்ய சரடு'

கணவன் இல்லாதவரை "விதந்து'என்று அழைப்பது யாரை\?

கணவர் இல்லாதரை குறிப்பிடுவார்கள்.

கடைகளில்விற்கும்பலகாரங்களைசுவாமிக்குநைவேத்யம்செய்யலாமா?

சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?

பின்னப்பட்ட (உடைந்த) விக்ரகங்களைபூஜிக்கலாமா?

தெய்வ விக்ரஹங்களின் அமைப்பை அங்கம் (உடல்), உபாங்கம் (உறுப்புகள்), பிரத்யங்கம் (அணிகலன்) என்று மூன்று விதமாக பிரிப்பார்கள். விக்ரஹங்களில் பின்னம் ஏற்படுவது காலத்தாலும் நிகழலாம். தவறுதலாகவும் நிகழலாம். உடலில் பெரிய அளவில் பிளவு ஏற்படுமே யானால் அதனை மாற்றி வேறு விக்ரஹம் பிரதிஷ்டை செய்ய வேண்டும். உடல் உறுப்புகளில் சரிசெய்யக்கூடிய அளவிற்கு பின்னப்பட்டால் அஷ்டபந்த மருந்தினால் ஒட்டவைப்பது போன்ற பணிகளை செய்து சரி செய்து கொள்ளலாம். கை, கால், தலை ஆகிய உறுப்புகள் உடைந்திருந்தால் அந்த விக்ரஹத்தை மாற்ற வேண்டும். அணிகலன்கள், அலங்காரங்கள் ஆகியவற்றில் பின்னம் ஏற்பட்டிருந்தால் சரிசெய்து பூஜிக்க வேண்டுமே தவிர, விக்ரஹத்தை மாற்றக்கூடாது.

காயசித்திஎன்றால்என்ன?

"காயம்' என்பது உடலையும், "சித்தி' என்பது வெற்றியையும் குறிக்கும். காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே "காயசித்தி' என்பர்."உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறும் திருமந்திர ஆசிரியர் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்

லட்சுமிதேவிக்கு எந்த தினங்களில் விரதம் அனுஷ்டிக்கலாம்



வாழ்நாள் முழுவதும் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

லட்சுமி வழிபாடு முற்காலங்களில் பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது. அது ஓரிடத்திலேயே தங்காமல் தொடர்ந்து வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அதே போன்று தான் அந்த பணத்திற்கு அதிபதியாக இருக்கும் லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் ஒரே நபரிடத்தில் இல்லாமல், வேறு வேறு நபர்களுக்கு சென்றவாறே இருக்கும்.

அந்த லட்சுமி கடாட்சம் நமக்கு தொடர்ந்து கிடைத்திட நாம் லட்சுமி தேவியின் மனம் குளிரும் படி நடந்து கொள்வதும், லட்சுமி தேவியை முறையாக விரதம் இருந்து பூஜித்து வழிபாடுகள் செய்வதும் பலன் தரும். வாழ்நாள் முழுவதும் நமக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எனவே வாழ்நாள் முழுவதும் அந்தப் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

செல்வ மகளான ஸ்ரீ லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும், வாரந்தோறும் வருகிற வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதம், இவை எல்லாவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாக இருக்கின்றன.

இந்த தினங்களில் விரதம் இருந்து லட்சுமி தேவிக்கு படையல் வைத்து, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, லட்சுமி காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், உங்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கடாட்சம் கிடைக்க வழி வகை செய்கிறது.

முருகன் விரத வழிபாட்டு பலன்கள்





தினந்தோறும் முருகப் பெருமானை தினமும் வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு விரத வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன. ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.

முருகப்பெருமானின் முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

சரவணபவ மந்திரம் விளக்கம்

முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட இதில் ஆறு மந்திரங்களும் ஆறு விதமான பலன்களும் ஒளிந்துள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட இதில் ஆறு மந்திரங்களும் ஆறு விதமான பலன்களும் ஒளிந்துள்ளன. இதோ அந்த மந்திரம்

சரவணபவ மந்திரம் விளக்கம்

1. சரஹணபவ – என மனமுருகி ஜபித்து வந்தால் “சர்வ வசீகரம் உண்டாகும்”.

2. ரஹணபவச – என மனமுருகி ஜபித்து வந்தால் “செல்வமும் செல்வாக்கும் பெருகும்”.

3. ஹணபவசர – என மனமுருகி ஜபித்து வந்தால் “பகை,பிணி நோய்கள் பறந்தோடும்”.

4. ணபவசரஹ – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகளாக உண்டாகும் தொல்லைகள் நீங்கும்”.

5. பவசரஹண – என மனமுருகி ஜபித்து வந்தால் “இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நம்மை விரும்பும்”.

6. வசரஹணப – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்”.

இந்த ஆறு மந்திரங்களில் உள்ள பலன்களில் எதை நீங்கள் பெற விரும்புகிறீர்களோ அதற்கான மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்றோ அல்லது செவ்வாய் கிழமை அன்றோ சொல்ல துவங்கி பின் தினமும் ஜபித்து வர வேண்டும். தினமும் இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது ஜெபிக்கவேண்டும். மந்திரத்தை ஜெபிக்கும்போது சிந்தையில் முருகனை தவிர வேறெதுவும் இருக்க கூடாது.

பெண்களுக்கே உரித்தான மாதம் ஆடி



* ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் பெண்களுக்கான விரத நாள்கள்தான். இந்த நாளில் செய்யப்படும் விளக்கு பூஜைகள் சிறப்பானது. கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் பெண் தெய்வங்கள், குலதெய்வங்களாக இருக்கும் பெண் சக்திகளை இந்த மாதத்தில் வழிபடுவது சிறப்பானது. ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் பெண்களுக்கே உரித்தான திருநாளாகும்.

* ஆண்டாளும், பொறுமைக்கு இலக்கணமான பூமாதேவியும் பிறந்தது ஆடி மாதத்தில்தான். எனவே ஆடி மாத சுக்கிலபட்ச துவாதசி அன்று துளசியை வழிபட குடும்ப நலன் மேம்படும் என்பது பெண்களின் நம்பிக்கை.

* ஆடியில் வளர்பிறை நாளில் வரும் வெள்ளி, செவ்வாய்களில் அம்மன் பூஜை செய்தால் சிறப்பான பலன்களை தரும். கோலமிட்டு, குத்து விளக்கேற்றி, பூஜையின்போது ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் அம்மன் பாடல்களைப் பாடி சக்தியை வணங்குவது நல்லது. பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் போன்றவற்றைப் படைத்து பூஜையை நிறைவு செய்யலாம். அப்போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக அலங்கரித்து உணவளித்து, மங்கலப் பொருள்களை அளித்து அவர்களிடம் ஆசியைப் பெறலாம். இதனால் பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.

* ஆடிப்பெருக்கு பெண்களுக்கே உண்டான திருநாள். பெண்களின் வடிவாகக் கொண்டாடப்படும் ஆற்றினை கொண்டாடி வழிபடுவதே ஆடிப்பெருக்கு. அன்றைய நாளில் புதுத் தாலியை பெருக்கிப் போடுவதும், முளைப்பாரி எடுப்பதும், கருகமணி, கருவளையல்களை ஆற்று நீரில் படையல் அளிப்பதும் பெண்களின் புனிதமான சம்பிரதாயங்கள். புதிய பணிகளைத் தொடங்குவதும், சொத்துகள் வாங்குவதும்கூட அந்த நாளின் விசேஷம்தான்.

* இதே மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மணமான பெண்களின் முக்கிய விரத நாள். வரலட்சுமியை வணங்கி வீட்டிற்கு வருமாறு பாடல் பாடுவது இந்த நாளில் வழக்கம். பலவித நைவேத்தியங்கள் படைத்து மற்ற சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு, ரவிக்கைத்துணி, மங்கலப்பொருள்கள் அளித்து அவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம்.

* ஆடிப் பௌர்ணமி தினத்தில்தான் ஹயக்கிரீவர் அவதரித்தார் என்பதால், அன்றைய நாளில் பெண்கள் அவரை வணங்கி தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக விரதம் இருப்பார்கள். சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆடிப் பௌர்ணமியன்று புன்னை வனத்தில் இருந்த கடும் தவம்தான் அவளுக்கு சங்கரநாராயணரை தரிசிக்க வாய்ப்பு பெற்றுத் தந்தது. எனவே ஆடிப் பௌர்ணமி விழா அங்கு சிறப்பானது.

* ஆடி மாதத்தின் இறுதியில் வர இருக்கும் ஆடிக் கிருத்திகைத் திருநாளில் முருகப்பெருமானை வணங்கி குடும்ப நலனுக்காக விரதமிருந்து ஆசி பெறுவார்கள்.

* ஓர் ஆண்டில் வரும் நான்கு நவராத்திரிகளில் வாராஹி நவராத்திரி ஆடி மாதத்தில் வருகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வாராஹி இருக்கும் ஆலயங்களில் இது கொண்டாடப்படுகிறது. தருமபுரி கோட்டை ஸ்ரீகல்யாண காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் சூலினி துர்கையின் திவ்ய ரூபத்தை ஆடிமாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். ஆண்டின் மற்ற எல்லா நாள்களிலும் சூலினியின் முகதரிசனம் மட்டுமே கிடைக்கும் என்பதால் அன்று பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு இந்த மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஸ்ரீ வித்யா பூஜை பெண்களுக்கானது.

* ஆடி மாதத்தில் ஈசனின் சக்தியை விட பராசக்தியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஆடி மாதம் சுக்ல தசமி அன்று திக் தேவதா விரதம் இருக்கிறார்கள். திக் தேவதைகளை அந்தந்தத் திக்குகளில் வணங்கி அவர்களுக்கான துதியை ஜபித்து எல்லா தடைகளையும் நீக்க வேண்டிக்கொள்கிறார்கள்.

* ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவது நல்லது. இதனால் பயங்கள் நீங்கி செழிப்பு உண்டாகும். ஆனால், எலுமிச்சம் பழ விளக்குகளை ஒருபோதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

கண்ணகி கலாலயத்தின் 15 வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை 2019.06.29ஆம் திகதி கொழும்பு பழைய நகர மண்டபத்தில் தலைமையில் நடைபெற்ற போது கே. ஈஸ்வரலிங்கம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



நாவலப்பிட்டி நகரத்தின் அருகாமையில் அமைந்துள்ள சொய்சாகலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

ஆடி அமாவாசை விரதம்



சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் பெயர்ச்சியாகும் ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினம் ஒரு சிறந்த தினமாகும். ஜோதிட ரீதியாக பார்க்கையில் சூரியன் ஒரு மனிதனின் தந்தைக்கு காரகனாகிறார். சந்திரன் தாய்க்கு காரகனாகிறார். இந்த இருகிரகங்களும் கூடி வருகிற இம்மாதத்தில் மறைந்த நம் பித்ருக்கள் அல்லது முன்னோர்களை வழிபடுவதற்கான தினம் ஆடி அமாவாசை ஆகும். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொள்ளும் முறைகளை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணியளவில் துயிலெழுந்து குடும்பத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தலைக்கு ஊற்றி குளித்து விடவேண்டும். பின்பு உணவு மற்றும் வேறு பானங்கள் ஏதும் அருந்தாமல் வீட்டின் பெண்கள் மறைந்த முன்னோர்களுக்கு விருப்பமான உணவு பண்டங்களை தயாரிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து அரிசி மாவு கோலமிடவேண்டும். பின்பு ஒரு மர பீடத்தை வைத்து அதன் மீது ஒரு வெள்ளை துணியை விரித்து, நமது முன்னோர்களில் ஆண் மற்றும் பெண்ணை குறிக்கும் வகையில் ஒரு வேட்டியையும் ஒரு புடவையையும் வைக்க வேண்டும். - - அந்த பீடத்திற்கு இரு புறமும் குத்துவிளக்கில் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, பழங்கள் மற்றும் தயாரிக்க பட்ட உணவுகளை படையலாக வைத்து, முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கி பீடத்தில் வைக்கப்பட்ட துணிகளை நம் முன்னோர்களாக பாவித்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களின் முன்னோர்களை இம்முறையில் பூஜிக்க வேண்டும். இந்த பூஜையின் போது ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். அமாவாசை தா்ப்பணம் பூஜையை முடித்த பின்பு படையலில் சிறிதை எடுத்து நமது முன்னோர்களின் அம்சமாக கருதப்படும் காகங்களுக்கு உண்ண வைக்க வேண்டும். பின்பு நீங்கள் வணங்கும் இறைவனை குறித்த மந்திரங்கள், பாடல்களை பாடி. தியான நிலையில் இருக்க வேண்டும். மதியம் ஆன உடன் முன்னோர்களின் விருப்பமாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்டு உங்களின் விரதத்தை முடிக்க வேண்டும். இன்றைய தினத்தில் உணவு, ஆடை மற்றும் பிற எந்த வகையான தான தர்ம காரியங்களை செய்வது இறந்த முன்னோர்களது ஆசிகள் என்றென்றும் அக்குடும்பத்தின் சந்ததியினருக்கு பெற்று தரும். பரம்பரையில் ஏற்பட்டிருக்கும் தேவ மற்றும் பித்ரு சாபங்களை போக்கும். துர்மரணம் அடைந்து நற்கதி அடையாமல் இருக்கும் முன்னோர்களின் ஆன்மா சாந்தமடையும். குடும்பம் மற்றும் தொழிலில் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும். துயரங்கள் அனைத்தும் விலகும்.

முந்தல் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம்


புத்தளம் மாவட்டத்தில் இந்து மக்களின் சிறப்புக்களையும் பாரம்பரியங்களையும் அதன் இருப்பையும் கோடிட்டுக் காட்டும் அடையாளமாக துலங்கி நிற்பதே ஆலயங்களாகும்.

இவ்வாலயங்களிளே இந்துக்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் இப்பிரதேசங்களை நல்லாட்ச்சி புரிந்ததாகவும் ஆலய வரலாறுகளும் கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு அமைந்த ஆலயங்களில் ஒன்றாக மிளிர்வதே புத்தளம் மாவட்டத்தில் முத்தாக அமைந்து முச்சிறப்புக்கள் பெற்று முன்னுதாரனமாக அமைந்த ஆலயமே முந்தல் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயமாகும்.

இவ்வாலயத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 30ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவ்வாலய உற்சவங்களுக்கெல்லாம் சுடராய் சுடர்விடும் வைபவமாக திகழ்வதே தீமிதிப்பு நிகழ்வாகும். பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட முந்தலில் பார் போற்றும் பாஞ்சாலிக்கு ஆலயமமைத்த இந்துக்களின் சிறப்பையும், சமய நெறிகளை அப்பழுக்கற்ற முறைமைகளில் கடைப்பிடித்து அதன்படி வழிபட்டு வரும் முந்தல் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் சிறப்புக்கள் பெருமைகள் வரலாற்று தொன்மைகளை பரைசாற்றி நிற்கின்றன.

முந்தல் மேற்கே சீரிப்பாயும் சில்லென்ற உப்புக்காத்தும் பச்சை பசேலென சலசலக்கும் நெல்வயல் சூழலும் கற்பகத்தருவென போற்றி நிற்கும் தென்னை மரங்களின் ரீங்கார ஓசையும் தொட்டக்கலி ஆற்றிலிருந்து பாய்ந்து தவழ்ந்து வரும் தென்றலின் சாரலிலே அமைந்து அருள்பாலித்து அருள்மழை பொழிந்து அண்டி வரும் அடியார் குறைகளை தீர்த்து அபயமளித்து ஆறுதல் தரும் அன்னையாக போற்றப்படும் திரௌபதைத்தாயின் மகிமை சொல்லில் அடங்காதவை. இவ்வாலயத்தில் உற்சவங்களுக்கெல்லாம் மூலவிசையாக இருந்து நகர்த்துவது மகாபாரதக் கதையாகும். இக்கதையானது 18 தினங்களாக முன்றையகாலலட்சணமாக படிக்கப்படும் அக்கதை அம்மானை வடிவில் உடுக்கடி பாட்டுகளுடன் தெம்மாங்குப்பாடல் மெட்டுக்களுடன் அவ்வூருக்கே சொந்தமான மரபுவழிப்பாடல்களுடன் மகாபாரதக்கதை பாடிப் படித்து உற்சவங்கள் கொண்டாடப்படும்.

இவ்வாலயத்தில் இன்னுமோர் மரபுமுறைகளில் ஒன்றே கரகம் பாலித்தல். இக்கரகம் பாலிக்கும் பூசகரே தன்னை திரௌபதியாக ஆவனம் பண்ணி வாதை முடித்து வெற்றி இலக்கை அடைந்த நோக்குடன் தீமிதிப்பு வைபவம் இறுதியாக நிகழ்த்தப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் இந்துக்களின் இருப்பை அடையாளப்படுத்துவது இங்கு அமைந்துள்ள தமிழ் கிராமங்களேயாகும். அக்கிராமங்கள் இன்று ஏதோ ஓர் புறக்காரணங்களால் உள்வாங்கப்பட்ட நிலையில் காணப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் ஈடுகொடுத்து தமது தனித்துவத்தை இதன் செந்நெறிகளை பாரம்பரிய உணர்வுகளை தமிழ் இந்துக்களிக் இருப்பை பாதுகாக்கும் இடமாகவும் தலமாகவும் இருப்பதே உடப்பு, முந்தல் போன்ற இடங்களாகும். இவ்விரு இடங்களில் இருக்கும் திரௌபதி அம்மன் ஆலயங்களில் நடைபெறும் தீமிதிப்பு உற்சவங்கள் இந்து தமிழ் மக்களின் உணர்வுகளை சமய நெறிகளை இதுவரை பிளவாத முறையில் பேணிப்பாதுகாக்கின்றது.

இன்றும் இம்மக்கள் தமது சமயத்தின்பால் கொண்டுள்ள ஈடுபாட்டையும் பற்றுருதியையும் கோடிட்டு காட்டுவதாக இருக்கின்றது.

ஈழத் திருநாட்டில் திரௌபதி அம்மன் திருத்தலங்கள் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. இதன் உள்ளீடாகக் கொண்டு இம்மாவட்டத்தில் உடப்பு முந்தல் போன்ற இடங்களில் திரௌபதி அம்மன் ஆலயங்கள் உள்ளன. இவ்விரு ஆலயங்களில் நிகழ்வுறும் உற்சவங்களை நோக்கும் போது மரபை சார்ந்ததாகவும் பாரம்பரிய பண்பாட்டையும் முன்னோர்கள் கடைப்பிடித்த சமய நெறிகளை இன்னமும் அப்பழுக்கற்ற முறையில் பேணிப்பாதுகாப்பதாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் ஓர் பகுதியினர் முந்தல் போன்ற இடங்களில் குடியேறியதாக வரலாறு கூறுகின்றது. இவர்கள் தஞ்சை மாவட்டம் இராமநாதபுர மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என தொல்லியல்சான்றுகள் கோடிட்டு காட்டுவதாக இருக்கின்றது. தஞ்சை மாவட்டங்களில் எவ்வாறு திரௌபதி வழிபாடு இடம்பெறுகிறதோ அவ்வாறே முந்தல் ஆலயங்களிலும் நிகழ்த்தப்படுவதாக அறியமுடிகின்றது. சிறு கொட்டுகையில் வணங்கிவந்த இவ்வூர் மக்கள் பின்னர் பூரணவடிவில் ஆலயத்தை அமைத்து பெயர் சொல்லுமளவிற்கு கட்டி முடித்து விழாக்களை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.



ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா எப்போது கொண்டாடப்படுகிறது?

ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

இது யாருக்குரிய திரநாள்?

தேவிக்குரிய திருநாளாகும்.

இந்த நாளில் உள்ள சிறப்பு என்ன?

இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.

அம்பாள் உருவெடுத்தது எதற்காக?

உலக மக்களை காக்க

இந்நாளில் உள்ள சிறப்புக்கள் வேறு என்ன?

சித்தர்களும் யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு ஆடிப்பூரத்தன்று என்ன நடக்கும்? வளை காப்பு நடக்கும்

ஆடி மாதம் என்பது எந்த காலத்தின் தொடக்க காலம்?

தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம்.

இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது எது? சூரியன்

சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம் எது ?

ஆடி

நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு எத்தனை நாள்?

ஒரு நாள்.

அவர்களது இரவுக்காலம் எது?

இந்த தக்ஷிணாயன காலம் ஆகும்.

உத்தராயணக்காலம் யாரை வழிபட உகந்தது?

சிவபெருமானை வழிபட உகந்தது

உத்தராயணக் காலம் சிவனை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் யாரை வழிபட உகந்தது? அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை ஆகும்.

ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்



பெரியாழ்வார் தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்துச் செல்வார். அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து, அந்த மாலை, பெருமாளுக்கு பொருத்தமாக இருக்குமா என தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாள் ஆண்டாள். ஒருசமயம், அவள் அவ்வாறு அழகு பார்த்த போது, அவளது கூந்தல் முடி ஒன்று அதில் ஒட்டிக்கொள்ள குட்டு உடைந்து போனது. பெரியாழ்வார் அவளை கண்டித்து, வேறு ஒரு மாலை கட்டி எடுத்துச் சென்றார். ஆனால் பெருமாளோ, பக்தை அணிந்து தரும் மாலை தான் வேண்டும் எனச் சொல்லி, ஆண்டாளின் காதலை ஏற்றுக் கொண்டார். கடவுள் மேல் அவள் கொண்ட ஆத்மார்த்தமான பக்தியும், காதலும், சிலையாக இருந்த தெய்வத்தையும் மனம் உருக வைத்து, அவளை ஏற்றுக் கொள்ள வைத்தது. தான் நினைத்த திருமாலையே கணவனாக அடைந்து, எந்த மானிட பெண்ணும் செய்யாத சாதனையைச் செய்தாள் ஆண்டாள். அந்த தெய்வமும், அவள் வாழும் காலத்திலேயே அவளுக்கு அனுக்கிரகம் செய்தது. தன் மனதையே யாக குண்டலமாக்கி, தன்னுடைய பக்தியையும், காதலையும் நெருப்பாக்கி, தன் ஆன்மாவையே ஹவிசாக இட்டு, திருப்பாவை என்னும் மந்திரத்தால் அவனைத் துதித்து, தான் நினைத்ததை சாதித்தாள் ஆண்டாள். இத்தகைய வைராக்கிய உணர்வு கொண்ட இந்த சாதனைப் பெண்மணி, ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும், அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு, ஆண்டாளே வாழ்ந்து காட்டியுள்ளாள்!

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812