செவ்வாய், 29 ஜூன், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

6919 ஆரத்தி எடுப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் எவை?

மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர்

6920 ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?

ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும்போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்று விடும்

6921 இதனை என்னவென்று கூறுவர்?

நீர் வலம் நாடுதல்

6922 வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் தொடங்குவர். இது ஏன்?

இது போன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக நம்புவதால்.

6923 புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும்போது திருஷ்டி கழிக்கப்படுவது ஏன்?

இக்காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள் சில கெட்ட சக்திகள் கண் திருஷ்டி உள்ளிட்டவை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பதாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.

6924 குங்குமம் எவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து.

6926 மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் என்னவென்று கூறலாம்?

கிருமிநாசினி

6927 மனித உடலில் தெய்வ சக்தி வாய் ந்த இடமாக கருதப்படுவது எது?

நெற்றிக்கண்

6928 இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் உண்டாகும் பலன் என்ன?

அமைதி கிடைக்கும்.

6929 குங்குமத்துக்குரிய சக்தி என்ன?

ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி உள்ளது.

6930 நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன் என்ன?

உஷணம் குறையும்

6931 உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது உடலின் எந்தப் பகுதி?

நெற்றிப் பகுதி

6932 நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன்கள் என்ன?

குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால் அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் விட்டமின் டி உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்குகிறது.

திங்கள், 21 ஜூன், 2010

அறநெறி அறிவு நொடி


ஆலயம்

6899) ஆலயத்தில் ‘ஆ’ என்பது என்ன?
ஆன்மா அல்லது ஆணவம்

6900) ‘லயம்’ என்பது என்ன?
லயிப்பதற்கு உரியது அல்லது அடங்குதல்

6901) ஆலயம் என்றால் என்ன?
ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம்

6902) ஆலயம் என்ற பதத்திற்கு வேறு எவ்வாறு பொருள் கூறலாம்?
ஆணவ மனம் அடங்கும் இடம்

6903) முக்திக்கு வழி எது?
பக்தி

6904) அப்பக்திக்கு தூண்டுகோலாக அமைந்தது எது?
ஆலயம்

6905) கோயிலுக்கு சென்று வழிபடுதற்குரிய சிறந்த நேரம் எது?
காலை, உச்சி, அந்திப் பொழுதுகள்

6906) காலை, உச்சி அந்திப் பொழுதுகளை என்ன வென்று கூறுவர்?
திரிசந்தி காலங்கள்

6907) ஆலயத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடிய பழம், தேங்காய், வெற்றிலை இவற்றை என்னவென்று கூறுவர்?
நிவேதனப் பொருட்கள்

6908) தூபம், தீபம், பத்திர, புஷ்பம், பூமாலை முதலியன என்ன?
நிவேதனத்தின் அங்கங்கள்
6909) அபிஷேகம் என்பது என்ன?
இறைவன் திருமேணியை நீரால் நீராட்டுவது

6910) திருக்கோயில் பூசையில் முதன் முதலில் இடம்பெறும் அபிஷேகத்தை என்ன வென்று கூறுவர்?
திருமஞ்சம்

6911) இறைவன் திருமேனியை நீரால் நீராட்டிய பின் வேறு எவற்றால் அபிஷேகம் செய்வர்?
பால், பழம், இளநீர், நெய், தேன், பன்னீர், திருநீறு

6912) திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகளில் ஒன்று கூறவும்?
பரார்த்த பூசை

6913) பரார்த்த என்றால் என்ன?
பிற உயிர்களின் நன்மைக்காக என்று பொருள்
6914) பரார்த்த பூசை யார் பொருட்டு செய்யப்படுகிறது?
நாடு, மக்கள், நாட்டுத் தலைவர்கள் ஆகியோர் பொருட்டு.

6915) திருக்கோயில்களில் வழிபாடு செய்பவர்கள் வலமாக பிரதட்சணம் செய்வது எதற்காக?
உலக நன்மைகளை விரும்பி

6916) இடமாக பிரதட்சணம் செய்வது எதற்காக?
வீட்டுப் பேற்றை விரும்பி

6917) இந்த இரண்டையும் விரும்புபவர்கள் என்ன செய்யலாம்?
வலமிடமாக பிரதக்ஷணம் செய்யலாம்

6918) பிரதட்சணம் செய்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூறப்படும் உதாரணம் எது?
பூரண கர்ப்பவதியான ஒரு பெண் காலில் ஒரு விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தலையில் எண்ணெய் நிறைந்த குடத்தை சுமந்து நடந்தால் எப்படி மெதுவாக நடப்பாளோ, அப்படி மெதுவாக நடந்து செல்ல வேண்டும். மனம் அவனது திருவடிகளை சிந்திக்க, வாய் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரண்டு கைகளும் மார்ப்புக்கு சமமாக இருக்க வேண்டும்.

திங்கள், 14 ஜூன், 2010

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் (பிரதோஷத்தில் சிவ வழிபாடு)

6883) நிம்மதி இழந்து துன்பத்தால் துவள்கிற மனிதனுக்கு துன்பங்களில் இருந்து விடுபட எது சிறந்த மார்க்கம்? ஆலய வழிபாடு ஒன்றே

6884) எப்படிப்பட்ட துயரையும் துன்பத்தையும் நோயையும் தீர்க்கும் ஆற்றல் எதற்கு உண்டு? இறை வழிபாட்டுக்கு

6885) இறை வழிபாடுகள் பல இருந்தாலும் சிவபெருமானுக்கு சிறந்ததாக எது கருதப்படுகிறது? பிரதோஷ வழிபாடு

6886) பிரதோஷ காலம் என்பது என்ன? சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள 3 3/4 நாழிகையும் சூரியன் மறைந்த பின்பு உள்ள 3 3/4 நாழிகையும்.

6887) இதற்கமைய சிவபெருமானை வழிபட சிறந்த நேரமாக எதனை வகுத்துள்ளனர்? மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை

6888) ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய் பிறைகளில் வரும் 13ஆம் நாளாகிய திரயோதசி திதியில் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறுவது என்ன! பிரதோஷ வழிபாடு

6889) அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் 13 ஆம் நாளாகிய பிரயோதசி திதி சனிக்கிழமையன்று வருமானால் அது என்னவென்று கொண்டாடப்படுகிறது? மகா பிரதோஷம்

6890) வாரத்தில் எத்தனை முறை பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது? இரு முறை

6891) சனிக்கிழமை நடைபெறும் பிரதோஷத்தை என்னவென்று அழைப்பர்? சனிப்பிரதோஷம், மகாப் பிரதோஷம்.

6892) ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு மூன்று நாளிகைகள் முன்பு நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள நேரத்தை என்ன வென்று கூறுவர்? சந்தியாகாலம்.

6893) இந்த சந்தியாகாலத்திற்குரிய பிரதோஷம் எது? நித்திய பிரதோஷம்

6894) வளர்பிறை சதுர்த்தி அன்று மாலைக் காலத்தில் வருவது என்ன பிரதோஷம்? பட்சப் பிரதோஷம்

6895) தேய்பிறை பிரயோதசி (23 ஆம் நாள்) அன்று வருவது என்ன பிரதோஷம்? மாதப் பிரதோஷம்

6896) தேய்பிறையில் சனிக்கிழமையன்று திரயோதசி திதி வந்தால் அதனை என்னவென்று கூறவர்? மகா பிரதோஷம்

6897) பிரளயம் ஏற்படுகின்ற காலத்தில் எல்லா உலகங்களும் ஈஸ்வரனிடம் ஒடுங்கும் நேரதத்தை என்னவென்று கூறுவர்? பிரளயப் பிரதோஷ காலம்

9898) பிரதோஷ வழிபாட்டினைத் தொடங்கும் முன்பு யாரை வழிபட வேண்டும்? நந்திதேவரை

திங்கள், 7 ஜூன், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

6862) ஹோமம் நடத்துவது ஏன்?காலம் மாறும்போது எல்லாத் துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஹோமங்கள் நடத்த வேண்டும்.

6863) ஹோமங்கள் மூலம் நிகழ்வது என்ன?இறைவன் ஹோமங்கள் மூலம் நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான்.

6864) அக் கோரிக்கைகள் எவ்வாறு இறைவனை சென்றடைகின்றன?

அக்னி குண்டங்கள் மூலமாக

6865) ஹோமங்கள் சிலவற்றைத் தருக?

கணபதி ஹோமம், அவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மிருத்தியஞ்ச ஹோமம், லட்சுமி ஹோமம், வித்யா ஹோமம், கனகதார ஹோமம்

6866) புதிய தொழில்கள் தொடங்கும் போது செய்யப்படும் ஹோமம்?

கணபதி ஹோமம்

6867) ஏனைய ஹோமங்களை துவக்கத்திற்கு முன்பு செய்யப்படும் ஹோமம் எது?

கணபதி ஹோமம்

6868) கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உடல், மனம், ஆன்மீக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும்.

6869) விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறவும், நாடு பசுமைப் புரட்சியில் சிறக்கவும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும் ஆன்மிக வளர்ச்சி ஏற்படவும் செய்யப்படும் ஹோமம் எது?

அவஹந்தி ஹோமம்

6870) அவஹந்தி ஹோமம் செய்வதால் உண்டாகும் வேறு பலன்கள் எவை?

பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக வளர்ச்சி ஏற்படும்.

6871) குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் எது?

ஆயுஷ்ய ஹோமம்.

6872) ஆயுஷ்ய ஹோமம் வேறு எந்தெந்த நாட்களில் செய்யலாம்?

ஒவ்வொரு மாதமும் வரும் குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில்

6873) ஆயுஷ்ய ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன?

குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்து விடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக் கூட குணப்படுத்தலாம்.

6874) பிறந்த நாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் எது?

மிருத்தியஞ்ச

6875) மிருத்தியஞ்ச ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது?அகால மரணத்தை தவிர்ப்பதற்காக சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது.

6876) இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் வேறு நன்மைகள் என்ன?

ஆயுள் விருத்தி அடையும், நீண்ட நாட்களாக தொடரும் வியாதிகள் நீங்கும்.

6877) சர்வமங்களங்களையும் மேன்மையையும் 16 செல்வங்களையும் அடைய செய்யப்படும் ஹோமம் எது?லட்சுமி ஹோமம்

6878) லட்சுமி ஹோமம் செய்வதால் ஏற்படும் வேறு பலன்கள் என்ன?

நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்து சேரும் ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள் சாபங்கள் நீங்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கும்.

6879) மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும் புத்தி கூர்மை ஏற்படவும் ஞானம் விருத்தி அடையவும் படிப்பில் மட்டும் கவனம் செல்லவும் நினைவாற்றல் பெருகவும் செய்யப்படும் ஹோமம் எது?

வித்யா ஹோமம்.

6880) திருமணமாகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் என்ன?

மங்கள சமஸ்கரண ஹோமம்

6881) ஏழையைக் கூட செல்வந்தனாக்கி விடும் வகையில் அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் சக்தி உடைய ஹோமம் எது?கனகதார ஹோமம்

6878) ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி என்னவாக கருதப்படுகிறது?

அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும் அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812