வெள்ளி, 24 அக்டோபர், 2014

20/10/2014

கே. ஈஸ்வரலிங்கம் 11126) திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் இலையில் முதலில் வைப்பது என்ன? உப்பு 11127) உப்புக்கு அடுத்தபடியாக முதலில் வைப்பது என்ன? இனிப்பு 11128) உப்பில் யார் வாசம் செய்வதாக கூறப்படுகிறது லட்சுமி 11129) கிரகப்பிரவேச வீட்டிற்கு செல்பவர்கள் என்ன கொண்டு செல்வார்கள்? உப்பு 11130) கிரகப்பிரவேச வீட்டிற்கு உப்பு கொண்டு செல்வதன் காரணம் என்ன? உப்பில் லட்சுமி வாசம் செய்வதால் 11131) சுப நிகழ்ச்சிகளில் இனிப்பை முதலில் சாப்பிடுவது ஏன்? இனிப்புச் சுவை இரைப்பையையும் மண்ணீரலையும் அதற்குரிய வேலையைச் செய்யத் தூண்டுகிறது. இனிப்பை தொடர்ந்து சாப்பிடும் உணவு நன்றாக ஜீரணமாகும். 11132) ராமனுக்கு திருமணம் நடந்த போது என்ன வயது என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது? 12 11133) சீதாவின் வயது என்ன? 6

திங்கள், 13 அக்டோபர், 2014

13/10/2014

கே. ஈஸ்வரலிங்கம் 11114) நாம் வெளியே செல்லும் போது விதவைப் பெண் எதிரே வந்தால் அபசகுனமா? அந்தக் காலத்தில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித் தான் இருந்தது. அதிலும் ஆண் வயதில் மூத்தவராக (குறைந்தபட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்தது) இருந்ததால், கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் பூ. பொட்டு, வளையல். வண்ண உடைகள் எதுவுமே அணியக் கூடாது. வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய சமூகக்கட்டுப்பாடு இருந்தது. திருமணமான தம்பதிகளோ, அலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும்போது இவர்கள் எதிர்ப்பட்டால். இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும். அது ஏதோவொரு வகையில் இப்படி சந்தோஷமாக வெளியேற கிளம்பும் பெண். தம்பதி பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம். அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் அந்த விதவைப் பெண்மனிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்து கொண்டு வரப்பட்ட சம்பிரதாயம். ஆனால் வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுன சம்பிரதாயமே. அந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமுமில்லை அவசியமும் இல்லை. 11115) திருமாலுக்குரிய வைணவ ஆகமங்கள் எத்தனை? இரண்டு 11116) திருமாலுக்குரிய வைணவ ஆகமங்கள் இரண்டையும் தருக பாஞ்சராத்ரம், வைகானசம் 11117) மகாபாரதத்தை வியாசர் விருந்து என்னும் பெயரில் எழுதியவர் யார்? ராஜாஜி 11118) இந்தியில் துளசிதாசர் இழுதிய ராமாயணம் எது? ராமசரித மானஸ் 11119) ராமர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் எழுதியது எது? பெருமாள் திருமொழி 11120) திருமாலுக்கு விரதம் இருக்க உகந்த நட்சத்திரங்கள் எவை? திருவோணம், ரோகிணி 11121) எத்திசை நோக்கி நின்று திருநீறு பூசவேண்டும்? கிழக்கு, வடக்கு 11122) ஞானசம்பந்தர் “மந்திரமாவது நீறு” என்று பாடிய தலம் எது? மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 11123) விபூதி என்பதன் பொருள் என்ன? மேலான செல்வம் 11124) தாசமார்க்கம் என்னும் அடிமை நெறியில் சிவனை அடைந்தவர் யார்? திருநாவுக்கரசர் 11125) அக்னியைப் பற்றிக் கூறும் நூல் எது? ஆக்னேய புராணம்

செவ்வாய், 7 அக்டோபர், 2014

சகுனம்

கே. ஈஸ்வரலிங்கம் 11111) சகுனம் பார்ப்பது எதற்காக? இந்து மதத்தின் பல நெறிமுறைகளில் சகுனமும் நிமித்தமும் முக்கியமான வையாக இருந்தாலும் சில குறிப்பிட்ட சகுனத்தடை அல்லது நல்ல சகுனம் என்று பொதுவாகக் கருதப்படும் சில விஷயத்திற்கு விளக்கங்கள் : 11112) வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷயம் சற்று சுவராசியமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும், விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் கொல்லைப்புறத்தில் முதல் கட்டு, இரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற் கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவது, தேவைப்பட் டால் அங்கே சமைப்பது - இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறை, தோட்டம் இவை இடம்பெறும்) அதிகப்படி சமையலானால் அது முதற் கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டி ருப்பதைப் பார்த்து. சுற்றியுள்ள மரங்களில் அமரும் காக்கைகள் முதற்கட் டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும். விருந்தினர் சாப்பிட்ட பின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும். இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக் காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டு. காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது. 11113) வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால் அபசகுனம் என்று கூறுகிறார்களே இது உண்மையா? பூனை என்கிற பிராணி எப்போது எப்படிப் பாயும் என்று எதிர்பார்க்க முடியாத குணாதிசயம் உள்ளது. நாய் என்றால் அது தெரிந்தவர்களிடம் வாலை ஆட்டிப் பின்தொடரும். தெரியாதவர்களைப் பார்த்துக் குலைக்கும். வெகு சில நாய்களே தெரியாதவரைக் கடிக்க முற்படும். ஆனால் பூனை, எதிர்பாராத வகையில் மேலிருந்து கீழும் குறுக்கேயும் ஆள்மேலேயே கூட பாயும். பாய்வது அன்பினாலும் இருக்கலாம். விரோதத்தினாலும் இருக்கலாம். அப்படி எதுவும் காரணமே இல்லாமல்கூட சடாரென்று பாயும் சுபாவம் பூனைக்கு. நாம் வெளியே செல்ல எத்தனிக்கும் போது அப்படிப் பூனை பாய்ந்தால் நாம் பயந்து விடலாம் அல்லது நமது மனநிலை ஏதோவொரு வகையில் பாதிக்கப்படலாம். இதை மனதில் வைத்துத்தான் பூனை குறுக்கே போவதை அபசகுனம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812