செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கே. ஈஸ்வரலிங்கம்

11084) திருமணமானவர்களை திருமதி என்பது ஏன்? திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்துத் திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறார்கள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு. 11086) வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷயம் சற்று சுவாரஷ்யமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும், விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் கொல்லைப்புறத்தில் (முதல் கட்டு, இரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற்கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவது, தேவைப்பட்டால் அங்கே சமைப்பது இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறை, தோட்டம் இவை இடம்பெறும்), அதிகப்படி சமையலானால் அது முதற்கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து, சுற்றியுள்ள மரங்களில் அமரும் காகங்கள் முதற்கட்டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்டபின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும், இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டு, காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது.

புதன், 13 ஆகஸ்ட், 2014

முருகனுக்குரிய பெயர்கள்

கே. ஈஸ்வரலிங்கம் 11080) முருகனுக்குரிய பெயர்கள் எத்தனை? 118 11081) அந்த 118 பெயர்களையும் தருக 1. அமரேசன் 2. அன்பழகன் 3. அழகப்பன் 4. பால முருகன் 5. பாலசுப்பிரமணியம் 6. சந்திரகாந்தன் 7. சந்திரமுகன் 8. தனபாலன் 9. தீனரீசன் 10. தீஷிதன் 11. கிரிராஜன் 12. கிரிசலன் 13. குக அமுதன் 14. குணாதரன் 15. குருமூர்த்தி 16. ஜெயபாலன் 17. ஜெயகுமார் 18. கந்தசாமி 19. கார்த்திக் 20. கார்த்திகேயன் 21. கருணாகரன் 22. கருணாலயம் 23. கிருபாகரன் 24.குலிசாயுதன் 25. குமரன் 26. குமரேசன் 27. லோகநாதன் 28. மனோதீதன் 29. மயில்பிரீதன் 30. மயில்வீரர் 31. மயூரகந்தன் 32. முருகவேல் 33. மயூரவாஹனன் 34. நாதரூபன் 35. நிமலன் 36. படையப்பன் 37. பழனிவேல் 38. பூபாலன் 39. பிரபாகரன் 40. ராஜசுப்பிரமணியம் 41. ரத்னதீபன் 42. சக்திபாலன் 43. சக்திதரன் 44. சக்கர்குமார் 45. சரவணபவன் 46. சரவணன் 47. சக்தியகுணசீலன் 48. சேனாதிபதி 49. செந்தில் குமார் 50. செந்தில்வேல் 51. சண்முகலிங்கம் 52. சண்முகம் 53. சிவகுமார் 54. சஷிவாகனன் 55. செளந்தரீகன் 56. சுப்ரமண்யன் 57. சுதாகரன் 58. சுகதீபன் 59. சுகிர்தன் 60. சுப்பய்யா 61. சுசிகரன் 62. சுவாமிநாதன் 63. தண்டபாணி 64. தணிகைவேலன் 65. தண்ணீர்மலயன் 66. தயாகரன் 67. உத்தமசீலன் 68. உதயகுமாரன் 69. வைரவேல் 70. வேல்முருகன் 71. விசாகன் 72. அழகன் 73. அமுதன் 74. ஆறுமுகவேலன் 75. பவன் 76. பவன்கந்தன் 77. ஞானவேல் 78. குகன் 79. குனானந்தன் 80. குருபரன் 81. குருநாதன் 82. குருசாமி 83. இந்திரமருகன் 84. ஸ்கந்தகுரு 85. கந்தவேல் 86. கதிர்காமன் 87. கதிர்வேல் 88. குமரகுரு 89. குஞ்சரிமணாளன் 90. மாலவன்மருகன் 91. மருதமலை 92. முத்தப்பன் 93. முத்துக்குமரன் 94. முத்துவேல் 95. பழனிநாதன் 96. பழனிச்சாமி 97. பரமகுரு 98. பரமபரன் 99. பேரழகன் 100. ராஜவேல் 101. சைவலோளிபவன் 102. செல்வவேல் 103. செங்கதிர்செல்வன் 104. செவ்வேல் 105. சிவகார்த்திக் 106. சித்தன் 107. சூரவேல் 108. தமிழ்ச்செல்வன் 109. தமிழ்வேல் 110. தங்கவேல் 111. தேவசேனாதிபதி 112. திருஆறுமுகம் 113. திருமுகம் 114. திரிபுரபவன் 115. திருச்செந்தில் 116. உமைபாலன் 117. வேலப்பன் 118. வெற்றிவேல்

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஆண்டாள்

வரலட்சுமி விரதம்: பு+iஜ முறை வரலட்சுமி நோன்பு கே. ஈஸ்வரலிங்கம் கே. ஈஸ்வரலிங்கம் 11080) ஆண்டாள் யாருடைய அம்சம்? பு+மிப்பிராட்டியின் அம்சம் 11081) ஆண்டாள் ஏன் இப் பு+வுலகில் அவதரித்தாள்? கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய், தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல, பாசம், ஆசை என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்றி, பரந்தாமனிடம் சேர்க்க பு+வுலகில் அவதரித்தாள். 11082) ஆண்டாள் எங்கு பிறந்தாள்? ஸ்ரீPவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், 11083) ஆண்டாளுக்கு எத்தனை வயது? 5018 11084) ஆண்டாள் எப்போது பிறந்தால்? கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும், பு+ரநட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார் அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5115 நடக்கிறது. இவ்வகையில் ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5018 வது பிறந்த நாள். 11085) இந்த குழந்தையை எடுத்துச் சென்றவர் யார்? வடபத்ரசாயி (ஸ்ரீPவில்லிபுத்தூர் மூலவர்) 11086) அந்த குழந்தைக்கு என்ன பெயரிடப்பட்டது? கோதை 11087) கோதை என்றால் என்ன? நல்வாக்கு அருள்பவள் எனப்பொருள். 11088) ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி என்னவாக மாறியது? காதலாக 11089) ஆண்டாள் யாரை தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள்? பெருமாளை 11090) ஆண்டாள் தன்னை என்னவாக கருதிக் கொண்டாள்? கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள்.
கே. ஈஸ்வரலிங்கம் 11073) வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டு மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியுமா? முடியும் 11074) இந்த வகை மந்திரங்களை என்னவென்று கூறுவார்கள்? "துவனியாத்ம சப்தம்" என்று 11075) பஞ்ச பு+தங்களில் முதன்மையானதாக கருதப்படுவது எது? ஆகாயம் 11076) பஞ்ச பு+தங்களில் ஆகாயம் முதன்மையானதாக கருதப்படுவது ஏன்? ஆகாயத்திலிருந்தே மற்றைய நான்கு பு+தங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுவதாலாகும். 11077) மந்திர ஒலிக்கும் பஞ்ச பு+தங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? மந்திர ஒலியானது பஞ்ச பு+தங்களிலும் பாயக் கூடியது. 11078) நாம் எழுப்பும் மந்திர ஒலி என்ன செய்யும்? நாம் எழுப்பும் மந்திர ஒலியானது காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றைய பு+தங்களையும் தாக்கி செயல்படுகிறது. 11079) மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் எத்தகைய சக்தி கொண்டவை? உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும். மந்திரங்களில் பயன்படும் ஒவ்வோர் எழுத்திற்கும் ஒலிக்கும் வலிமையும் அந்த ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை. பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானா கவே இந்த பொருள் அதிரும் என்று நிருபி க்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக் கப்படுகிறது. அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை உரிய அதிர்வுடன் nஜபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் nஜபிக்கும் மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன நோக் கத்திற்கு நாம் மந்திரம் nஜபிக் கிறோமோ அந்த செயலைச் செய்கிறது. மந்திரங்களைப் nஜபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த முறைப்படி பு+சை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812