திங்கள், 25 ஜூன், 2018

கண்டி நகரத்தின் அருகாமையிலுள்ள சுதும்பொல ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கண்டி பேராதனை பிரதான வீதியில் தெய்யன்வல சந்தியிலிருந்து ஆலயத்தை நோக்கி பால்குட பவனி சென்ற போது பிடிக்கப்பட்ட படங்களை காணலாம்

ஆனித் திருமஞ்சனம்



ஆனி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம் இருந்து சிவன் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.


சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும் இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாக கருதப்படுகிறது. எனவே கல்வியில் தேர்ச்சி பெற மாணவச் செல்வங்கள் இம்மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு வழிபட்டால் முதன்மை பெற வழிவகுக்கும்.

சிவராத்திரி அன்று சிவனை நாம் வழிபடும் போது இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம் இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.

‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால் அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கரிசனத்தோடு வந்து காட்சி கொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

அன்றைய தினம் சிவபிரானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் பால் அபிஷேகம் பார்த்தால் நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல் வந்துகொண்டே இருக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். எனவே அந்த அற்புத தரிசனம் தரும் ஆனி மாதம் ஒரு அபூர்வ மாதமாகும். அகிலத்து மாந்தர்களுக்கு அனைத்து நலன்களையும் தரும் வழிபாட்டிற்குரிய மாதம் இதுவாகும். மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகை கண்ணார காண்பதற்காகவே என்கிறார்கள் சான்றோர்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

“கீதை மூலம் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை” விசேட சொற்பொழிவு

“கீதை மூலம் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை” என்ற விசேட சொற்பொழிவை இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியும் பட்டய கணக்காளரும் எழுத்தாளரும் நகைச்சுவை மூலம் அனைவரையும் ஈர்க்கவல்ல சிறந்த பேச்சாளருமான பி.கே.பிரிஜ்மோகன் எதிர்வரும் 04 ஆம் திகதி மாலை 4.30 மணிமுதல் 7.00 மணிவரை கண்டி செல்வவிநாயகர் ஆலய மண்டபத்தில் சிறப்புரையாற்றவுள்ளார். இதற்கான ஏற்பாட்டை இணைப்பாளர் எஸ். வேலாயுதம் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தொிவித்தார். அவர் மேலும் கருத்து கூறுகையில், அன்றைய தினம் பகல் 1.00 மணி முதல் 5.00 மணிவரை ஆலய மண்டபத்தில் ஆன்மீக படவிளக்கக் கண்காட்சி நடத்தவும் ஒழுங்குகள் மேற்கொண்டுள்ளதாக தொிவித்தார்.
உடப்பூர் இந்து நெறிக்கழகம் ஏற்பாட்டில் திருஞானசம்பந்தர் குருபூஜை அண்மையில் மிகவும் கோலாகளமாக கொண்டாடப்பட்டது.இதனை அதன் கழகத் தலைவர் திரு.பா.முருகானந்தர் ஏற்பாடு செய்திருந்தார்.இறுதியில் வீதி ஊர்வலமும்

பிரசங்கமும் இடம்பெற்றது .

ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால் இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை.

இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம்.

புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.

பாம்பு கனவில் வந்தால்



1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் என்ன நடக்கும்?
விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2. இரட்டைப் பாம்புகளை கண்டால்
என்ன நடக்கும்?
நன்மை உண்டாகும்.
3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால்
என்ன நடக்கும்?
விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால்
என்ன நடக்கும்? தனலாபம் உண்டாகும்.5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் என்ன நடக்கும்? வறுமை உண்டாகும்.



6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்? சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.

7. பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் என்ன நடக்கும்? பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால்
என்ன நடக்கும்? பணக்காரன் ஆகலாம்

ஞாயிறு, 17 ஜூன், 2018

நாகராஜ பிரபுவுக்கு விசேட அபிஷேகம்



கொழும்பு – 15, அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ நாகராஜ பிரபுவுக்கு விசேட அபிஷேக அலங்கார பூஜையும் ஆராதனைகளும் இடம்பெற உள்ளன.
தீராத நோய், தொழில் முடக்கம் ஆகியன நீங்கி நல்வாழ்வு பெற இப்பூஜை வழிவகுக்கும்.
இராகு, கேது, திசா புத்திகளின் கீழ் அடியார்கள் எதிர்நோக்கும் சொல்லொணா துயர் துன்பங்கள் நீங்கி சுப வாழ்வுக்கு இப்பூஜை வழிவகுக்கும் என்பது அடியார்களின் அசையாத நம்பிக்கையாகும்.
மாாங்கல்ய தோசம் நீங்கி குழந்தைப் பேற்றுடன் நல்வாழ்வு பெறவும் இப்பூஜை வழிவகுக்கும்.
மாதாந்தம் ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விசேட பூஜை இங்கு நடைபெறுவது வழக்கமாகும். யாவும் கேரள முறைப்படி நடக்கும்.

அளுத்மாவத்தையில் கருப்பண்ண சாமிக்கும் விசேட பூஜை



கொழும்பு – 15, அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீ கருப்பண்ண சாமிக்கும் ஸ்ரீ கருத்த சாமிக்கும் விசேட அபிஷேக அலங்கார பூஜை ஆராதனைகள் யாவும் சிறப்பாக நடைபெற உள்ளன.
மாதாந்தம் இறுதி ஞாயிறு தினங்களில் இவ்விசேட பூஜை நடைபெறுவது வழக்கமாகும்.
ஸ்ரீ கருப்பண்ண சாமி ஸ்ரீ ஐயப்பனின் காவல் தெய்வமாக மாத்திரம் அன்றி அடியார்களைக் காக்கும் அரணாக விளங்குவதோடு அநேகரது குல தெய்வமாகவும் விளங்குவதால் அடியார்கள் இவர் பற்றி அதிக நம்பிக்கை விசுவாசம் கொண்டுள்ளனர்.

காரணம் இல்லாமல் - இறைவன் கஷ்டம் ஏதும் தருவது இல்லை



பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,”அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார்.
“மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ”
அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. “தேரை விட்டு இறங்கு!” என்றார் கண்டிப்புடன்…. வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
அப்போது அவர்,” தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!” என்றார் அதட்டலுடன்!
அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.
“பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,” என்றார் புன்முறுவலுடன்.
“தேர் ஏன் எரிந்தது?” அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.
“அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்துஅனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.வெற்றி பெற்றதும் “நான்’ என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,” என்று அறிவுரை கூறினார்.
தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.
இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

அன்ன தோஷம்


தோஷங்களில் அன்ன தோஷம் என்பது ஒரு வகையான தோஷமாகும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த விரதம் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற பார்க்கலாம்.

தோஷங்களில் அன்ன தோஷம் என்பது ஒரு வகையான தோஷமாகும். பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை இந்த தோஷம் பாதிக்கும்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பவர்கள், உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களை சாப்பிடவிடாமல் விரட்டியடித்துக் கோபித்துக்கொண்டவர்கள், கைவசம் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள், ஒழுங்காகப் பிண்டம் கொடுக்காதவர்கள், சிறு குழந்தைகளை எதிரில் பார்க்க வைத்துக் கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்கள் ஆகியோரை இந்த அன்ன தோஷம் பாதிக்கும் என்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் நிலைக்காது. அவர்கள் வெள்ளி தோறும் விரதம் இருந்து அன்னபூரணியை வழிபட்டு வருவதோடு, இயன்றவரை அன்னதானங்களும் செய்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்.

தாம்பூலம்



வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது ஏற்படும் நன்மை என்ன?
அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கு ஆயுர்வேதம் காரணம் என்ன?
உடம்பில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது.

வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் என்ன நடக்கும்?
நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வரும்.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க எது உதவி செய்கிறது?
தாம்பூலம்

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு என்ன செய்யும்?
பித்தத்தை கண்டிக்கும்

சுண்ணாம்பில் உள்ள காரம் என்ன செய்யும்?
வாதத்தை போக்கும்.

வெற்றிலையில் உள்ள உரைப்பு என்ன செய்யும்?
கபத்தை நீக்கி விடும்.

தாம்பூலம் போடுவதால் என்ன நன்மை?
உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் என்ன செய்யும்?
வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

எந்த நிகழ்வுகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது?
விருந்துகளில்

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது?
வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் எது கிடையாது?
புகையிலை. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.


முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் என்ன?
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஆகும்.

இதற்கு என்ன காரணம்?
ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்கபட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் என்ன அதிகமாக இருக்க வேண்டும்?
பாக்கு

இதற்கு காரணம் என்ன?
மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பின் எது அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்?
சுண்ணாம்பு சத்து

அது என்ன செய்யும்?
உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் எதை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?
வெற்றிலையை

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்ன நன்மை?
நெஞ்சில் கபம் தங்காது

தாம்பூலம் தரிப்பதில் நமது முன்னோர்களின் கட்டளை என்ன?
மேற்குறிப்பிடப்பட்ட முறையில்தான் தாம்பூலம் தரிக்க வேண்டும். இதை மீறும் போதுதான் சிக்கல் வருகிறது.

செவ்வாய், 12 ஜூன், 2018

மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு நாட்கள்

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் ஆகிய மூன்றும் எந்த அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது?

அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

மேல்நோக்கு நாட்கள் எவை?
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் எந்த வேலைகளை தொடங்குவது சிறந்தது?
மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.

மேல்நோக்கி செய்யும் வேலைகள் எவை?
கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவை.

கீழ்நோக்கு நாட்கள் எவை?
கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் எந்த வேலைகளை தொடங்குவது சிறந்தது?
இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.

மேல்நோக்கி செய்யும் வேலைகள் எவை?
கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட்டில் குழாய் கிணறு அமைப்பது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

சமநோக்கு நாட்கள் எவை?
அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் எந்த வேலைகளை தொடங்குவது சிறந்தது? இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.

செய்யும் வேலைகள் எவை?
வீதி அமைப்பது, சமமான வீதியில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.

தமிழ் கலைஞா்கள் பலருக்கு களம் அமைத்து கொடுத்த "கலியுக காலம்" இது

கே. எஸ். பாலச்சந்திரன் உள்ளிட்ட பல வானொலி கலைஞர்கள் திடைப்படத்துறையோடு முதல் தொடர்பை எற்படுத்திக்கொண்டது கலியுக காலம் என்ற மொழிமாற்றப்படத்தின் மூலமாகததான்.

"கலியுக காலய" என்ற சிங்களப்படத்தை T.அர்ஜுனா என்ற தமிழர் தயாரித்தார். இவர் எற்கெனவே "வசந்தயே தவசக்" என்ற சிங்களப்படத்தை தயாரித்து இயக்கியவர். அந்தப்படத்திற்காக சிறந்த படம் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். கலியக காலய படத்தில் ரொனி ரணசிங்க, நீற்றா பெர்னாண்டோ போன்ற நடிகர்கள் நடித்தனா்.( இந்த நடிகை பின்னாளில் கனடாவிற்கு குடிபெயர்ந்து, மொன்றியேல் மருத்துவமனையில் வரவேற்புபணியாளராக வேலை பார்த்தவர்) சிங்களப் படத்தை திரையிடுவதற்கு முன்னரே தமிழில் மொழிமாற்றம் செய்துவிட்டு இரண்டு மொழிகளிலும் வெளியிடலாம் என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்திருக்கவேண்டும்.



தமிழில் குரல் என்றவுடன் இலங்கை வானொலிதானே நினைவுக்கு வரும். அப்போது வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்த கே.எம்.வாசகரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வானொலி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த ஒரு நடிகர் பட்டாளத்தை அழைத்துக்கொண்டு "சிலோன் ஸ்டூடியோ" வுக்குப் போனார்.

அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ கதாநாயகன் ரொனி ரணசிங்கவுக்கு குரல் கொடுக்க, "தணியாதாகம்" விஜயாள் பீற்றர் கதாநாயகிக்கு (நீற்றா பெர்னாண்டோ) பின்னணி குரல் கொடுக்க ஏற்பாடாகியது. இப்படியே ராம்தாஸ், ராஜகோபால், செல்வசேகரன், சுப்புலக்சுமி காசிநாதன் ஆகியோருடன் கே. எஸ். பாலச்சந்திரனும் குரல் கொடுத்தார்.

அக்காலத்தில் விஜய் கொரியா என்றொரு பிரபல ஆங்கில அறிவிப்பாளர் இலங்கை வானொலியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். (பின்னாளில் இலங்கை ஒலிப்ரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்தவர்) அவருக்கு நடிக்கும் ஆசை ஏன் வந்ததோ தெரியவில்லை. அர்ஜுனாவின் நண்பராக இருக்கவேண்டும். அவருக்கு வில்லன் வேடம் கொடுக்கப்பட்டது. பீ.எஸ்.வீரப்பாவின் "ஹஹஹா" சிரிப்பு ஒன்றும் இல்லை. ஒரு சாதா வில்லன். அவருக்குத்தான் கே. எஸ். பாலச்சந்திரன் பின்னணிக் குரல் கொடுத்தார்.

ஈழத்து இரத்தினம் தமிழ் வசனங்களையும் அத்தனை பாடல்களையும் எழுதினார். தமிழ், சிங்களப்படங்களுக்கான இசையமைப்பாளராக "சண்" அறிமுகமானார். தற்போது நோர்வேயில் வசிக்கும் "சண்" 5 பாடல்களுக்கு இசையமைத்தார். "அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள்.. இனிவரும் நாளெல்லாம் இன்ப நாள்' என்றொரு இனிமையான பாட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஏ.குலசீலநாதன், சுஜாதா என்று பலரும் பாடினார்கள். அமுதன் அண்ணாமலை ஆரம்பப் பாடலைப் பாடி அறிமுகமானார். கோணேஷ் பரமேஸ் குழுவின் எம்.பி.பரமேஸ் தனது முதலாவது திரைப்படப்பாடலை பாடியது பற்றி இவ்வாறு கூறினார்.

"கலியுககாலம் மனம்போல் வாழ்வு இனியொரு குறையில்லை’’ என்னும் பாடலை இசையமைப்பாளர் 'சண்' கேட்டதற்கமைய நான் பாடியிருந்தேன். இதனையே கே.எஸ்.ராஜா இப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தியிருந்தார். இந்தப் பாடலுக்காகவே இந்தப் படம் சிறப்பாக ஓடியது. திருகோணமலையில் மாத்திரம் 2 வாரங்கள் இப்படம் ஓடியது"

சிங்களப்படம் வெளியிடப்படுவதற்கு முன்ன்ரே வெள்ளவத்தை
"சவோய்" தியேட்டரில்1974 ஏப்ரல் 14ந் திகதி
"கலியுகாலம்" திரையிடப்பட்டது.

இது பற்றி கே. எஸ். பாலச்சந்திரன் கூறியது, எங்கள் குரல் பெரிய திரையில் ஒலிப்பதை கேட்க ஆவலுடன் நாங்கள்தான் முண்டியடித்துப் போனோம். மற்றப்படி தியேட்டர் ஈயோட்டிக் கொண்டிருந்தது. ஒரு வாரம் ஓடியதே பெரிய காரியம். படத்தை இயக்கி, தயாரித்த அர்ஜுனா ஒரு ஆங்கிலப்படப்பிரியராக இருக்கவேண்டும். ஆங்கிலப்படப் பாணியில் Light Comedy படமாக எடுத்திருந்தார். சென்சார் கத்திரிக்கோல் பாவிக்கவேண்டிய காட்சிகளும் இருந்தன.

1975 மார்ச் மாதம் 3ந்திகதி ஒரிஜினல் படமான " கலியுகாலய"(சிங்களப் படம்) வெளியானது. ஆனால் அதற்குள் இது தமிழ்ப்படத்தை "டப்" பண்ணியது என்று யாரோ கதையைக் கட்டிவிட சிங்கள்ப்படமும் ஓடாமல் விட்டுவிட்டது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812