வியாழன், 10 ஜூன், 2021

ுருகன்

முருகனின் திருவுருவங்கள் எத்தனை? 16 அந்த 16 திருவுருவங்களும் எவை? 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும். முருகன் அழித்த ஆறு பகைவர்கள் யார்? ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடங்கள் எத்தனை? மூன்றாகும். அந்த மூன்று இடங்களும் எவை? திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், போரூர் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தது எங்கு? திருச்செந்தூர் தாரகாசுரனை வதம் செய்தது எங்கு? திருப்பரங்குன்றம், சூரபத்மன், தாரகாசுரன் ஆகிய இருவரின் சகோதரர் யார்? சிங்க முகாசுரன் சிங்க முகாசுரனை வதம் செய்தது இடம் எங்கு? போரூர் முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ளவை எவை? ஆயுதங்கள் முருகப்பெருமானின் வலப்புறத்தில் ஆயுதங்கள் எவை? அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் என்னென்ன இருக்கிறது? வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவை. முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை? திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், முருகன் யாரால் தாங்கப்பட்டான்? கங்கையால் கங்கையால் தாக்கப்பட்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? காங்கேயன் சரவணப் பொய்கையில் உதித்ததால் வந்த பெயர் என்ன? சரவண பவன் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் வந்த பெயர் என்ன? கார்த்திகேயன் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் வந்த பெயர் என்ன? கந்தன் சண்முகப் பெருமானின் வாசஸ்தலம் எது? குமரக்கோட்டம் குமரக்கோட்டம் எங்கே உள்ளது? காஞ்சீபுரத்தில் கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூல் எது? திருப்புகழ் திருப்புகழ் நூலினை இயற்றியவர் யார்? அருண கிரிநாதர். முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று யார் பாடியுள்ளார் ? அருட்கவி அருணகிரி அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யார்? முருகன் ஆவான். முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் யார்? மகாகவி களிதாசர். யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் எங்கே செதுக்கப்பட்டுள்ளது? மாமல்லபுரத்துப் பாறைகளில் முருகனின் கையில் உள்ள வேல் என்னவென்று பெயர் பெறும்? இறைவனின் ஞானசக்தி என பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் யாரை காணலாம்? முருகனை பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகப்பெருமானுக்கு உண்டு. அது எது.? பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். 23. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார். 24. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது. 25. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது. 26. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும். 27. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும். 28. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன. 29. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். 30. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். 31. முருகனைப் போன்று கருப்பைப வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர். 32. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம். 33. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள். 34. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார். 35. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது. 36. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது. 37. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும். 38. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது. 39. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம். 40. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

எல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏன் ஏற்றபடுகிறது?

திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள் நம் வீட்டு பெரியோர்கள். காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. மேலும், அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத் தான். திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள் நம் வீட்டு பெரியோர்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் ஏற்றுவது காமாட்சியம்மன் விளக்கை தான். மேலும் காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

தமிழைக் காக்க அன்னை சரஸ்வதியே அடிபணிந்த கதை

கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும், சோழ மன்னன் மகள் அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது. சோழ அரசின் அவைப்புலவரான ஒட்டக்கூத்தர் அவர்கள் இருவரையும் மன்னனிடம் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்தில் உணவு பரிமாற அமராவதி வந்தவுடன், அவரைக்கண்ட அம்பிகாபதி “இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய...” என்று தன்னை மறந்து பாடுகின்றார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்க சோழ மன்னனுக்கு அதீத கோபம் வருகின்றது. உடனே கம்பர் சரஸ்வதியை மனதில் தியானித்து தன் மகன் அம்பிகாபதியின் பாடலைத் தொடர்ந்து “கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்” எனப்பாடி முடிக்கின்றார். இந்த பாடலுக்கு சோழ மன்னன் விளக்கம் கேட்க, அதற்குக் கம்பர் வீதியில் வயதான மூதாட்டி ஒருத்தி வெயில் தாங்க முடியாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அதனால் அடி கொப்பளித்ததையும் பொருட்படுத்தாது கொட்டிக் கிழங்கு விற்றுக்கொண்டு வீதி வழியாக வருகின்றார்.எனக்கூற, உடனே அரசன் காவலாளியை அழைத்து வீதியில் போய் உண்மை நிலையை அறிந்து வரகூறினார். கம்பரின் வார்த்தையைக் காப்பாற்ற சரஸ்வதி தேவியே கொட்டி கிழங்கு விற்கும் வயோதிகப் பெண்ணாக உருவெடுத்து வீதியில் வர, காவலாளியால் அரசரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறாள். தமிழைக் காக்க அன்னை சரஸ்வதியே அடிபணிகிறார் என்பதையே இக்கதை உணர்த்துகின்றது.

சங்க இலக்கியத்தில் சரவணன் பெருமை

சங்க இலக்கியத்திலும் சரவணன் பெருமை உண்டு. குறிப்பாக, நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை முழுவதும் கந்தனிடம் நம்மை ஆற்றுப்படுத்தும் காவியம்தான். முருகன் தன் அழகிய மார்பில் கடம்ப மாலை அணிந்திருக்கிறான். அது எப்படிப்பட்ட மாலை? நக்கீரர் அழகு மிளிர விவரிக்கிறார்: கார் கொள் முகத்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள் உறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண் நறும் கானத்து இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்து உருள்பூத் தண் தார் புரளும் மார்பினன்! மேகம் கடலுக்குச் சென்று தண்ணீரை முகந்துகொள்கிறது. அதனால், அது கருமை நிறத்தைப் பெற்றுக் கர்ப்பம் அடைகிறது. அதனை மின்னல் வெட்ட, வானத்தில் மழையாகப் பெய்கிறது. அப்படிப் பெய்த முதல் மழை காட்டைக் குளிர்ச்சியாக்குகிறது, நல்ல மணம் வீசச் செய்கிறது. அந்தக் காட்டில் அடர்த்தியான, செறிவான, பெரிதான செங்கடம்ப மரம் இருக்கிறது. அதில் அழகிய பூக்கள் மலர்கின்றன. அவற்றைத் தொகுத்துக் கட்டிய மாலையை அணிந்த திருமார்பு முருகனுடையது!
முருகன் அழித்த பகைவர்கள் எத்தனை? ஆறு முருகன் அழித்த ஆறு பகைவர்களை தருக ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் எத்தனை? மூன்றாகும். முருகப்பெருமானின் வலப்புறம் எத்தனை கரங்கள் உள்ளன? ஆறு அந்த ஆறு கரங்களில் என்னென்ன உள்ளன? அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் எத்தனை கரங்கள் உள்ளன? ஆறு அந்த ஆறு கரங்களில் என்னென்ன உள்ளன? வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும். முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை? திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், முருகன் யாரால் தாங்கப்பட்டான்? கங்கையால் இதனால் முருகப்' பெருமானுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? காங்கேயன் சரவணப் பொய்கையில் உதித்ததால் ஏற்பட்ட பெயர் என்ன? சரவண பவன் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன? கார்த்திகேயன் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன? கந்தன் முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பவன் யார்? முருகன் முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று பாடியவர் யார்? அருட்கவி அருணகிரி 9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யார்? முருகன் ஆவான். முருகனின் கையில் உள்ள வேல் எதை குறிக்கும்? இறைவனின் ஞானசக்தியை

ஆனி திருமஞ்சனம்

ஆனி மாதம் பல விரத சிறப்புகளை உள்ளடக்கியது. இந்த மாதத்தில் நிறைய நிகழ்வுகள் நடந்ததாக புராணங்கள் சொல்கின்றன. உத்தராயன புண்ணிய காலத்தின் கடைசி மாதமாக, ஆனி மாதம் விளங்குகிறது. இது தேவர்களின் மாலைப் பொழுது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. பூலோகத்தில் இந்த மாதத்தில் இளவேனிற் காலமாக இருக்கும். கோடையின் தாக்கம் நீங்கி, இதமான காற்று வீசும் மாதம் இது. ஆனி மாதம் பல விரத சிறப்புகளை உள்ளடக்கியது. வட மொழியில் இந்த மாதத்தை ‘ஜேஷ்ட மாதம்’ என்று அழைப்பார்கள். இதற்கு ‘மூத்த’ அல்லது ‘பெரிய’ என்று பொருள். இந்த மாதத்தில் நிறைய நிகழ்வுகள் நடந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் அன்று, மாலை வேளையில் நடராஜருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை ‘ஆனி திருமஞ்சனம்’ என்று அழைப்பார்கள். அன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடோறும். இந்த ஆனி மாத பௌர்ணமி தினம் பொதுவாக கேட்டை நட்சத்திர தினத்தில் வருகின்றது. ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலை போற்றும் விதமாக வருடந்தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. மேலும் கோயில்களில் இறைவனுக்கு முக்கனிகள் படைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆனி பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆனி பௌர்ணமியில் கிருஷ்ண பகவானுக்கும், கற்புக்கரசியான சாவித்திரி தேவிக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பானதாகும். முன்னிரவு வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. ஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் மேற்கூறிய முறையில் விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும். பெண்களின் கணவர்களின் ஆயுள்பலம் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உண்டாகும். நீண்ட காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மாணவர்கள் விரும்பிய உயர் கல்வியை கற்கும் சூழல் ஏற்படும். கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வார்கள். உணவு, உடை ஆகியவற்றிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாது.

கணபதி

கணபதி மந்திரங்களை எந்த வேளையில் உச்சரிக்கலாம்? பிரம்ம முகூர்த்த வேளையில் பிரம்ம முகூர்த்த வேளை எது? அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளையில் உச்சரிப்பது மிகவும் நல்லது என எதில் கூறப்பட்டுள்ளது ? கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவதை என்னவென்று கூறுவர்? சங்கடகர சதுர்த்தி சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகரை எந்த மரத்தடியில் வழிபடுவது மிகவும் நல்லது? வன்னி பிள்ளையார் எத்தனை பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது? 15 பெண்களை இது எந்த புராணங்களில் காணப்படுகிறது? வடக்கு இந்திய புராணங்களில் அந்த 15 தர்மபத்தினிகள்ளும் யார்? சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை. வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் எங்கே காணப்படுகின்றன? ஜப்பான் நாட்டில் இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் என்ன நடக்குமாம்? நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர். ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று கொழுக்கட்டை செய்து தானமளித்தால் என்ன நடக்குமாம்? வறுமைகள் நீங்கி வளம் பெருகுமாம் எத்தனை கொழுக்கட்டைகள் செய்து தானமளித்தால் நல்லது? எட்டு இந்தியாவிலுள்ள சாதூர் அருகே போத்திரெட்டிபட்டி எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ளவர்கள் விநாயகருக்கு என்ன செய்வார்கள்? இங்கு தீப்பெட்டி செய்வோர் உள்ளனர். ஒவ்வொருவரும் தினமும் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் என்ன நடக்கும் என்று கூறப்படுகிறது? மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும். கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் என்ன நடக்குமாம்? ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். கேதுவுக்கு உரிய தெய்வம் யார்? விநாயகர் அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் என்ன நடக்குமாம்?துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாமாம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812