செவ்வாய், 29 ஜூன், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

6919 ஆரத்தி எடுப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் எவை?

மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர்

6920 ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?

ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும்போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்று விடும்

6921 இதனை என்னவென்று கூறுவர்?

நீர் வலம் நாடுதல்

6922 வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் தொடங்குவர். இது ஏன்?

இது போன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக நம்புவதால்.

6923 புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும்போது திருஷ்டி கழிக்கப்படுவது ஏன்?

இக்காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள் சில கெட்ட சக்திகள் கண் திருஷ்டி உள்ளிட்டவை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பதாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.

6924 குங்குமம் எவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து.

6926 மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் என்னவென்று கூறலாம்?

கிருமிநாசினி

6927 மனித உடலில் தெய்வ சக்தி வாய் ந்த இடமாக கருதப்படுவது எது?

நெற்றிக்கண்

6928 இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் உண்டாகும் பலன் என்ன?

அமைதி கிடைக்கும்.

6929 குங்குமத்துக்குரிய சக்தி என்ன?

ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி உள்ளது.

6930 நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன் என்ன?

உஷணம் குறையும்

6931 உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது உடலின் எந்தப் பகுதி?

நெற்றிப் பகுதி

6932 நெற்றியில் குங்குமம் வைப்பதால் உண்டாகும் வேறு பலன்கள் என்ன?

குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால் அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் விட்டமின் டி உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812