திங்கள், 24 ஜூன், 2013

சிவன்

கே.ஈஸ்வரலிங்கம் 10115) நடராஜப் பெருமானுக்கு ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதை எண்ணவென்று அழைப்பார்கள்? ஆனித்திருமஞ்சனம் 10115) ஆனித்திருமஞ்சனம் விசேஷமாக எங்கு கொண்டாடப்படும்? சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் 10116) ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் யார்? பதஞ்சலி மகரிஷி 10117) பதஞ்சலி மகரிஷி யாரின் அம்சம்? ஆதிசேஷனின் 10118) பஞ்ச சபைகளும் எவை? ரத்தின சபை, கனக சபை, ரஜித சபை, தாமிர சபை, சித்திர சபை 10119) ரத்தின சபை எங்கு உள்ளது? திருவாலங்காட்டில் 10120) கனகசபை எங்கு உள்ளது? சிதம்பரத்தில் 10121) ரஜிதசபையை வேறு எவ்வாறு அழைப்பர்? வெள்ளி சபை 10122) வெள்ளிசபை எங்குள்ளது? மதுரையில் 10123) திருநெல்லியில் உள்ளது எது? தாமிரசபை 10124) திருக்குற்றாலத்தில் உள்ளது எது? சித்திரசபை 10125) பஞ்ச தாண்டவங்களும் எவை? ஆனந்த தாண்டவம், அஜபா தாண்டவம், 10126) சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம்? பிரம்ம தாண்டவம் 10127) ஆனந்த தாண்டவம் தலம் எங்குள்ளது? சிதம்பரம், பேரூர் 10128) அஜபா தாண்டவம் தலம் எங்குள்ளது? திருவாரூர் 10129) சுந்தரத் தாண்டவம் தலம் எங்குள்ளது? மதுரை 10130) ஊர்த்துவ தாண்டவம் தலம் எங்குள்ளது? அவிநாசி 10131) பிரம்ம தாண்டவம் தலம் எங்குள்ளது? திருமுருகன் பூண்டி 10132) சிவனின் தாண்டவங்கள் எத்தனை? ஐந்து 10133) இந்த ஐவகை தாண்டவங்களும்எதனை உணர்த்துகின்றன? ஐந்தொழில்களை 10134) ஐந்தொழில்களையும் தருக. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் 10135) ஐ வகை தாண்டவங்களையும் தருக. காளிகா, கவுரி, சங்கார, திரிபுர, ஊர்த்துவ 10136) படைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? காளிகா 10137) காத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? கவுரி 10138) அழித்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? சங்காரம் 10139) மறைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? திரிபுர 10140) அருளல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? ஊர்த்துவ 10141) தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது எது? மார்கழி 10142) காலைச் சந்திக்கு சமமானது எது? மாசி 10143) உச்சி காலத்திற்கு சமமானது எது? சித்திரை 10144) மாலைக் காலத்திற்கு சமமானது எது? ஆனி 10145) இரவுக்கு சமமானது எது? ஆவணி 10146) அர்த்த யாமத்துக்கு சமமானது எது? புரட்டாதி 10147) ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனத்தை எவ்வாறு அழைப்பார்கள்? ஆனி உத்திரம் 10148) ஆனி உத்திரத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்? ஆனித் திருமஞ்சனம் 10149) தில்லையில் எத்தனை சபைகள் உள்ளன? ஐந்து 10150) அந்த ஐந்து சபைகளையும் தருக சித்சபை, கனக சபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை. 10151) கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் என்ன? ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர். இதைத் தான் கல்லினால் அடிபட்டால் கூட அது விரைவில் ஆறிவிடும். ஒருவர் கண்ணடி (கண் திருஷ்டி) பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதை அறிந்த நம் முன்னோர்கள் கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் இப்போது புரிந்திருக்குமே! 10152) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா? சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன்கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812