திங்கள், 11 நவம்பர், 2013

கே. ஈஸ்வரலிங்கம்

(10396) வேதங்களை வகுத்துக் கொடுத்தவர் யார்? வேதவியாசர் (10397) பதினெட்டுப் புரானங்களை உபகரித்தவர் யார்? வேதவியாசர். (10398) சத்தியலோகத் தில் உள்ள மண்டப த்தின் பெயர் என்ன? சபா மண்டபம் (10399) ஈரேழு லோகங்களையும் படைத்தருளியர் யார்? பிரம்மதேவன் (10400) சரஸ்வதியின் மறு பெயர் என்ன? நாமகள், கலைமகள் (10401) பிரம்மதேவனின் மறு பெயர்கள் என்ன? நான்முகன், கமலோற்பவன், வேதமுதல்வன், சதுர்முகன், திருசடைப்பிரான், மலரோன், (10402) பற்றற்ற பரமன் என்பது யாரைக் குறிக்கும்? சிவபெருமானைக் குறிக்கும். (10403) பிரம்மதேவன் அருந்தவசியர்களுக்காக படைத்தருளிய தபோவனத்தின் பெயர் என்ன? நைமிசாரணியம், (10404) சந்திரவேள்வி என்பது ஒரு பிரம்மாண்டமான வேள்வி. இது எவ்வளவு காலம் நடைபெற்றது? 12 ஆண்டுகள். (10405)ஆதி காலத்தில் சிவபெருமான் நந்தி பெருமானுக்கு எத்தனை புராணங்களை உபதேசித்து அருளினார்? 18 புராணங்களை (10406) 18 புராணங்களையும் சனத் குமார முனிவரிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொண்டவர் யார்? வியாச பகவன். (10407)வியாச பகவான் அந்த 18 புராணங்களையும் என்ன செய்தார்? சுலோகங்களாக்கி உலகம் உய்ய அச் சுலோகங்களை வழங்கினார். (10408)வியாச பகவன் 18 புராணங்களையும் சுலோகங்கள் ஆக்கிய பின்னர் வேறு பற்பல முனிவர்கள் அப்புராணங்களை என்ன செய்தார்கள்? வேறு வேறு பரம்பரை வழியாக உபதேசம் பெற்று, அம்மகா புராணங்களுக்கு 18 உப புராணங்கள் இயற்றி அருளினார்கள். (10409)சிவபெருமானின் மறு பெயர்கள் சில தருக. கயிலை மலைவாசன், முக்கண்ணப் பெருமான், ஸ்ரீ பரமேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812