செவ்வாய், 27 ஜனவரி, 2015

11212) புருவ மத்தியில் மூளையின் முன்புறம் என்ன சுரப்பி உள்ளது? பைனீயல் கிளாண்ட் 11213) யோகசாஸ்திரத்தில் இதனை என்ன என்பர்? ஆக்ஞாசக்கரம் 11214) சந்தனம், குங்குமம் பொட்டு வைப்பது ஏன்? ஆக்ஞாசக்கரத்த குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் இடுகிறோம். 11215) நெற்றியில் இடும் பொட்டை என்ன என்பர்? நெற்றித் திலகம் என்பர் 11216) ‘திலம்’ என்றால் என்ன? எள் 11217) பொட்டு திலகம் என்று எப்படி பெயர் வந்தது? பொட்டை எள் அளவில் சிறிதாக எள்ளைப் போல இட்டுக் கொள்வதால் ‘திலகம்’ என்று பெயர் வந்தது. 11218) அக்காலத்தில் அரசர்கள் நெற்றியில் எதனை வரைந்து கொள்வர்? வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர். 11219) இதற்கு உபயோகப்படுத்தும் வாசனைத் திரவியங்கள் என்னென்ன? சந்தனம், ஜவ்வாது 11220) இதற்கு என்ன பெயர்? ‘திலக தாரணம்’ என்று பெயர் 11221) இதில் என்னென்ன வடிவங்கள் இடம்பெறும்? பூக்கள். பாம்பு, திரிசூலம் போன்ற வடிவங்கள் 11222) இதில் இடம்பெறும் சிறப்பான வடிவம் எது? தாமரை மலர் 11223) “மாளவிகாக்னிமித்ரம்’ என்ற காவியத்தில் நெற்றித்திலகம் பற்றி விரிவாக விளக்கியுள்ளவர் யார்? மகாகவி காளிதாசர் 111224) பசுவையும் நீரையும் விற்கலாமா? கூடாது 11225) கலியுகத்திலிருந்து வரும் கேடுகளிலிருந்து தப்பிக்கவும் அவை நம்மைத் தாக்காமல் இருக்கவும் இரண்டுவித செயல்களை விட்டுவிட வேண்டும் என்று கூறுவார்கள் அந்த இரண்டுவித செயல்களும் எவை? ஒன்று பசுவை அதிக விலைக்கு விற்பது அதில் கமிஷன் தரகு பெறுவது கூடாது. மற்றொன்று தண்ணீரை விற்று இதனால் பலவித நோய் வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 11226) நெருப்பை யாருக்கும் கொடுக்கலாமா? நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது வீட்டில் சாம்பிராணி போட வேண்டும், பக்கத்து வீட்டில் எரியும் விறகு அடுப்பிலிருந்து கங்கு (அக்னி) வாங்கி வா என்று பிள்ளைகளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பாதீர்கள். இது சாஸ்திரத்துக்கு விரோதமானது. 11227) கோயிலில் தீபமேற்றினால் ஒரு விளக்கிலிருந்து இன்னொன்றை ஏற்றலாமா? ஏற்றக் கூடாது. தனியாக தீப்பெட்டி வைத்து ஏற்றுங்கள். 11228) இதை தன் வாழ்வில் கடைபிடித்தவர் யார்? அனுமன் இலங்கையிலே அவரது வாலில் நெருப்பு வைத்து விட்டார்கள். நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக் கூடது. கேட்காமல் கொடுத்ததை என்ன செய்வது என்று அனுமன் சிந்தித்தார். கொடுத்தவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்தார். ஊருக்கே தீ வைத்தார். அக்னிதேவனுகுக் அருமையான விருந்து அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812