புதன், 5 டிசம்பர், 2018

கலைஞர் ஈஸ்வரலிங்கத்திற்கு கௌரவம்



மேல் மாகாண கலைஞர்களை கௌரவிக்கும் விஷ்வாபிநந்தன 2018 விருதுக்காக கலைஞரும் இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் பொருளாளரும் தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகருமாகிய கே. ஈஸ்வரலிங்கம் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கான விருதை அதிதிகளாக கலந்து கொண்ட மேல் மாகாண கல்வி, கலாசார, கலை விவகார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச, மேல்மாகாண சபை உறுப்பினர் கே. டீ. குருசாமி ஆகியோர் வழங்குவதை காணலாம். இந்நிகழ்வு மேல் மாகாண அழகியல் கலை கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812