திங்கள், 13 செப்டம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

(ஆய கலைகள் அறுபத்து நான்கு)


7948) கவி புனையும் ஆற்றல் பெற எவற்றை படிக்க வேண்டும்?

காவியங்களை

7949) அலங்காரம் என்பது என்ன?

அலங்கரித்தல்

7950) மதுர பாடணம் என்பது என்ன?

மொழித் தேர்ச்சி

7951) நிருத்தம் என்பது என்ன?

நடனம்

7952) சத்தத்தைக் கொண்டு அறிதலை என்னவென்பர்?

சத்தப்பிரமம்

7953) வேணு என்பது என்ன கலை?

புல்லாங்குழல் ஊதும் கலை

7954) கால நிர்ணயப் பயிற்சி எது?

தாளம்.

7955) எறியும் அல்லது பாணப் பயிற்சி என்பது என்ன?

அஸ்திரப் பரீட்சை

7956) கனகப் பரீட்சை என்பது எதனை?

தங்கத்தை சோதிக்கும் அறிவு

7957) இருதப் பரீட்சை என்பது எதனை?

தேர் ஓட்டும் பயிற்சி

7958) கஜப் பரீட்சை என்பது என்ன?

யானை ஏற்றம்

7959) அகவப் பரீட்சை என்பது எதனை?

குதிரை ஏற்றம்

7960) இரத்தினப் பரீட்சை என்பது எதனை?

இரத்தினக் கல் சோதிக்கும் திறனை

7961) மண்ணை சோதிக்கும் திறனை என்னவென்பர்?

பூமிப் பரீட்சை

7962) சங்கார மவிலக்கணம் என்பது என்ன?

படைகளை வழிநடத்தும் திறன்

7963) ஆகருடணம் என்பது என்ன?

கவர்ச்சிக்கலை

7964) பேய்களை ஏவுதலை என்னவென்பர்?

உச்சாடணம்

7965) வித்தையின் மூலம் அதிர்ச்சியினை உண்டாக்கலை என்பன வென்பர்?

வித்து வேடணம்

7966) மதன சாஸ்திரம் என்பது என்ன?

காதல் கலை

7967) மோகனம் என்பது என்ன?

மயங்கச் செய்யும் கலை

7968) மற்றவர்களை வசீகரித்தலை

என்னவென்பர்?

வசீகரணம்

7969) ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றும் கலையை என்னவென்பர்?

இரசவாதம்

7970) காந்தருவ வாதம் என்பது என்ன?

குழுவாத்தியப் பயிற்சியை

7971) மிருகம், பறவை, ஊர்வன என்பவற்றை வசீகரிக்கும் ஆற்றலை என்னவென்பர்?

பைபீலவாதம்

7972) துக்கமுள்ள மனதை தேற்றும் பயிற்சியை என்னவென்பர்?

கவுத்துகவாதம்

7973) தாது வாதம் என்பது என்ன?

தாது பயிற்சியை

7974) விஷத்தை முறிக்கும் பயிற்சியை என்னவென்பர்?

காரூடம்

7975) முட்டி என்பது என்ன?

கைரேகை சாஸ்திரம்

7976) ஆகாயப் பிரவேசம் என்பது என்ன?

ஆகாயத்தில் மறைத்தலை

7977) ஆகாயத்தில் நடந்து செல்வதை என்னவென்பர்?

ஆகாய ஸ்தம்பம்

7978) பரகாயப் பிரவேசம் என்பது என்ன?

மறு உடம்பில் பிரவேசித்தல்

7979) அதிசயமானவற்றை வரவழைத்தலை என்னவென்பர்?

இந்திரஜாலம்

7980) மகேந்திரஜாலம் என்பது என்ன?

ஆகாயத்திலும் பூமியிலும் அதிசயம் செய்தல்

7981) அக்னி ஸ்தம்பம் என்பது என்ன?

நெருப்பில் நடத்தலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812