திங்கள், 10 ஜனவரி, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(மஞ்சள்)


8302) மங்கலப் பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழ்வது எது?

மஞ்சள்


8303) மஞ்சள் இருக்கும் இடத்தில் யார் வாசம் செய்வதாக கூறப்படுகிறது?

திருமகள்

8304) சுமங்கலப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக் கொள்வது ஏன்?

அதில் திருமகள் வாசம் செய்வதால்

8305) புத்தாடை அணியும் போது அதில் என்ன தடவப்படுகிறது?

மஞ்சள்

8306) எந்த சுப நிகழ்ச்சி அழைப்பிதழ் என்றாலும் அதில் என்ன தடவி கொடுக்கிறோம்?

மஞ்சள்

8307) அட்சதைக்கு எடுக்கப்படும் அரிசி எப்படி பட்டதாக இருக்க வேண்டும்?

முனை முறியாத அரிசாக இருக்க வேண்டும்

8308) அட்சதை தயாரிக்கும் போது என்ன சேர்க்கப்படுகிறது?

மஞ்சள்

8309) சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும் போது அவர்களுக்கு என்ன கொடுப்பது வழக்கம்?

மஞ்சள், குங்குமம்

8310) சுமங்கலிகளுக்கு இவ்வாறு மஞ்சள் குங்கும் அளிப்பது ஏன்?

அவை மங்கலத்தின் அடையாளம் என்பதால் ஆகும்.

8311) பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் எதனை கட்டி அடுப்பில் ஏற்றுவார்கள்?

மஞ்சள் கிழங்கு செடியை


(கரும்பு)


8312) பொங்கலில் மஞ்சளைப் போல் கரும்பு முக்கிய இடத்தை பெறக் காரணம் என்ன?


கரும்பு இனிமையின் அடையாளம் அடி முதல் நுனி வரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக் கரும்பு உப்பு சுவையுடையது. அடிக் கரும்பு தித்திப்பாய் இனிக்கும். இதன் மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால் தொடக்கத்தில் உப்புத் தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் அதன் முடிவில் கரும்பு போல இனிமையைத் தந்திடும்.

கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுகளும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம்.

அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812