திங்கள், 17 ஜனவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(சடங்குகள்)


8313) ஒரு பொருளை தூய்மை அல்லது புனிதப்படுத்தும் வழிமுறைகளுக்கு என்ன பெயர்?

சடங்குகள்

8314) புனிதப்படுத்துவதால் எத்தனை வகை நன்மைகள் உள்ளன?

இரு வகை

8315) புனிதப்படுத்துவதால் ஏற்படும் இரு நன்மைகளையும் தருக?

அதன் புனிதத் தன்மை மேலும் பொலிவு பெறும். இரண்டாவதாக அப்பொருளிலுள்ள குறைகள் நீங்கும்.

8316) சடங்குகளின் பயன்கள் எவ்வாறு அமையலாம்?

கண்களுக்கு புலனாகும் படியும் புலனாகாதபடியும் அமையலாம்.

8317) ஒரு பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் அதிலுள்ள அழுக்குகள் மறைந்து பிரகாசம் பெறலாம். இது என்ன பயன்?

கண்களுக்குப் புலப்படும் பயன் அல்லது விளைவு

8318) ஒரு பொருள் மந்திரம் ஏற்றப்பட்ட ரோல் என்னவாகும்?

புனிதம் பெறும் இந்தப் புனிதத்தின் மதிப்பை கண்ணால் அறிந்துகொள்ள முடியாது. மாறாக உணர முடியும்.

8319) சடங்குகள் மூலம் மனிதன் தன் உடம்பை என்ன செய்து கொள்ளலாம்?

புனிதப் படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812