திங்கள், 17 செப்டம்பர், 2012
கே. ஈஸ்வரலிங்கம்
9414) விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளலாமா?
கூடாது. கருமம் சார்ந்தவை செய்யும்போது மட்டும் நீரில் குழைத்து பூசிக் கொள்ள வேண்டும்.
9515) புண்ணிய தீர்த்தங்களில் சென்று நின்றவுடன் காலை நனைக்கலாமா?
கூடாது
9416) புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்றவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும்?
தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். அதன்பின் காலைக் கழுவலாம்.
மயானம் சார்ந்த சடங்குகளுக்குச் சென்று வந்தபின் வெந்நீரில் குளிக்கலாமா?
தவிர்ப்பது நல்லது
9417) சோப், ஷாம்போ போன்ற வாசனைப் பொருட்களை உபயோகிக்கலாமா?
கூடாது
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் தலையில் சிறிது தண்ணீரை தெளித்தபின் போகலாம்.
9418) ஆண்கள் தான் பிறந்த நட்சத்திர நாளில் செய்யக்கூடாதவை எவை?
மருந்து உட்கொள்ளல், தாம்பத்தியம், திருமணம், பயணம் புறப்படுதல், எண்ணெய் தேய்த்து குளித்தல், புதுத் துணி உடுத்தல், பெரியவர்களுக்கு திதி கொடுத்தல்.
9419) தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தபின் வெளியூர் பயணம் செய்யலாமா?
கூடாது
9420) தெய்வ காரியங்களுக்கு முதலில் செல்ல வேண்டியது கணவனா, மனைவியா?
கணவன்
9421) மனைவி எதற்கு முதலில் செல்வது நல்லது?
இறப்பு, தீட்டு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு
9422) எவற்றின் மீது உட்காரக்கூடாது
உரல், அம்மி, உலக்கை, வாயிற்படி, முறம்
9423) கண்டிப்பாக கையால் பரிமாறக்கூடாதவை எவை?
சாப்பாடு, உப்பு, நெய், (கரண்டியை பாவிக்கலாம்)
9424) இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?
சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
9425) நாம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது ஆலயத்தில் சற்று நேரம்
அமர்ந்து விட்டு வருகிறோம். எல்லா ஆலயங்களிலும் இவ்வாறு அமர்ந்துவிட்டு வர வேண்டுமா?
இல்லை. சிவாலயங்களில் மட்டுமே அவ்வாறு அமர்ந்துவிட்டு வரவேண்டும்
9426) இது ஏன்?
நம்மைப் பின் தொடர்ந்து சிவனுடைய பூதகணங்கள் நம் வீட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
9427) விஷ்ணு கோயில்களில் தரிசனம் செய்தபின் அமர்ந்துவிட்டு வரலாமா?
கூடாது
9428) விஷ்ணு கோயில்களில் ஏன் இவ்வாறு அமர்ந்துவிட்டு வரக்கூடாது என்கிறார்கள்?
ஏனென்றால் அப்போது தான் லட்சுமி நம்முடன் வீட்டிற்கு வருவாள். அதிர்ஷ்டம் பொங்கும் என்பது ஒரு கருத்து.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக