திங்கள், 24 செப்டம்பர், 2012

கே. ஈஸ்வரலிங்கம் 9429) பஞ்ச சபைகள் எவை? ரத்தின சபை, கனகசபை, ரஜிதசபை, தாமிரா சபை, சித்திரசபை 9430) ரத்தின சபை எங்குள்ளது? திருவாலங்காடு 9431) கனகசபை எங்குள்ளது? சிதம்பரம் 9432) ரஜிதசபை எங்குள்ளது? மதுரை 9433) சித்திர சபை எங்குள்ளது? திருக்குற்றாலம் 9434) வெள்ளிசபை என்று அழைப்பது எந்த சபையை? ரஜித சபையை 9435) பஞ்ச தாண்டவங்களும் எவை? ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம் 9436) ஆனந்த தாண்டவ தலம் எது? சிதம்பரம் பேரூர் 9437) அஜபா தாண்டவ தலம் எது? திருவாரூர் 9438) சுந்தரத் தாண்டவம் தலம் எது? மதுரை 9439) ஊர்த்துவ தாண்டவ தலம் எது? அவிநாசி 9440) பிரம்ம தாண்டவ தலம் எது? திருமுருகன்பூண். 9441) தில்லையில் உள்ள ஐந்து சபைகளும் எவை? சித்சபை, கனகசபை, தேவசபை, திருத்த சபை, ராஜசபை 9442) அருவம் என்பது என்ன? உருவமற்ற நிலை 9443) உருவம் என்பது என்ன? கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை 9444) அருவுருவம் என்பது என்ன? உருவமும் அருவமும் கலந்த நிலை 9445) அருவம், உருவம், அருவுருவம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக விளங்குவது எது? சிதம்பரம் 9446) உதயத்திற்கு முன் தினமும் நடைபெறும் பூஜை எது? நித்தியபூஜை 9447) விசேட கால பூஜை எது? நைமித்தி பூஜை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812