புதன், 28 ஆகஸ்ட், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10266) பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதா? நல்லது, லாபம் 10267) ஆண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன நடக்கும்? கேடு 10268) இடது கண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என எதில் கூறப்பட்டுள்ளது? இராமாயணத்தில் 10269) இராமாயணத்தில் எத்தனை பேருக்கு இடது கண்கள் துடித்தன? மூவருக்கு. 10270) யார் யாருக்கு இடது கண்கள் துடித்தன? சீதை, வாலி, இராவணன் 10271) சீதைக்கு எப்போது இடது கண் துடித்தது? விடுதலைக்கான நேரம் நெருங்கிய போது 10272) வாலிக்கும் இராவணனுக்கும் எப்போது இடது கண்கள் துடித்தன? அவர்களது அழிவு நெருங்கிய போது. 10273) பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடது கண் துடித்தால் என்ன அர்த்தம்? அவனது முடிவு காலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். 10274) வாசலில் கோலமிடக்கூடாதது எப்போது? திதியன்றும் அமாவாசை நாளிலும் 10275) முன்னோரது ஆசி பெற உகந்த நாட்கள் எவை? அமாவாசை, வருஷ திதி, மகாளய பட்சம் 10276) சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் எது? அமாவாசை 10277) ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்ற பழமொழி முதன் முதலில் எப்போது சொல்லப்பட்டது? இந்த பழமொழிக்கு உரிய பொருள் என்ன? குருசேத்திர போரில் போருக்கு முன் தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கெளரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார். அதில் தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன். இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். 10278) இத்தகைய கர்ணனை எதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார்கள்? கொடைத்தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கு. 10278) நமது உடல் எதனால் ஆனது? தசையால் 10279) தசை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாவது எது? உளுந்து 10280 உளுந்து உணவு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன? சதைப்பிடிப்பு ஏற்படும் 10281) ஆஞ்சநேயருக்கு உளுந்து வடை மாலை அணிவிப்பது ஏன்? சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்து வடை மாலை அணிவிக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812