புதன், 26 மார்ச், 2014

தீட்டு

கே. ஈஸ்வரலிங்கம் 10681) பெண்களின் உடன்பிறந்த சகோதரன் இறந்தால் எத்தனை நாளுக்கு தீட்டு? மூன்று 10682) பெண்களின் உபநயனமான மருமகன் (சகோதரனின் பிள்ளை) இறந்தால் எத்தனை நாட்களுக்குத் தீட்டு? மூன்று 10683) பெண்களின் இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு ? மூன்று 10684) இரண்டு பகலும் ஓர் இரவும் கொண்டது எது? பஹிணீ 10685) இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம் எது? பஹிணீ 10686) பஹிணீ என்பது எத்தனை நாள்? ஒன்றரை நாள் 10687) பெண்களுக்கு தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10688) பெண்களுக்கு தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10689) பெண்களுக்கு தாயின் சகோதரர்கள் (மாதுலன்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10690 பெண்களுக்கு தந்தையின் சகோதரர்கள் (அத்தைகள்) இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10691) ‘பிதாமஹன்’ என்று அழைப்பது யாரை? தந்தையின் தந்தை 10692 ‘பிதாமஹி’ என்று அழைப்பது யாரை? தந்தையின் தாயை 10683) ‘மாதாமஹன்’ என்று அழைப்பது யாரை தாயின் தந்தையை 10684) பெண்களுக்கு தாயின் சகோதரனின் மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை 10685) பெண்களுக்கு உபநயனமான உடன் பிறந்த சகோதரனின் மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10686 பெண்களுக்கு உபநயனமான மருமகனின் (சகோதரரின் பிள்ளை) மனைவி அல்லது பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்ரறை நாள் 10687 பெண்களுக்கு தந்தையுடன் பிறந்த பெரியப்பா சித்தப்பாவின் மனைவி பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10688) பெண்களுக்கு பிதாமஹன் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10689) பெண்களுக்கு பிதா மஹி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10690) மாதாமஹன் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10691) ‘மாதாமஹி’ என்பது யாரை? தாயின் தாயை 10692) பெண்களுக்கு மாதாமஹி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10693) பெண்களுக்கு உடன் பிறந்த சகோதரி இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10694) பெண்களுக்கு சகோதரியின் பெண் பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள் 10695) சகோதரரின் பெண் பிள்ளைகள் இறந்தால் எத்தனை நாள் தீட்டு? ஒன்றரை நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812