செவ்வாய், 17 ஜூன், 2014

வியாழபகவான் அகிலாவதி

கே. ஈஸ்வரலிங்கம் 10867) பிரபஸ்பதியின் வேறு சிறப்புகள் என்ன நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர், மங்கலமே வடிவானார். 10868) வியாழபகவானின் தந்தை யார்? ஆங்கிரச முனிவர் 10869) ஆங்கிரச முனிவர் யாருடைய புத்திரர்? பிரம்மதேவரின் 10870) வியாழபகவானின் தாயார் யார்? சிரத்தா தேவி 10871) வசிதா என்று யாரை சொல்வதுண்டு? வியாழபகவானின் தாயாரை 10872) அகிலாவதி யார்? நாககன்னி 10873) இந்த அகிலாவதியான நாககன்னி எதில் வருகிறாள்? மகாபாரதத்தில் 10874) அகிலாவதி யாரை மணந்தார்? கடோற்கஜனை 10875) கடோற்கஜன் யாருடைய மகன்? பீமனின் 10876) கடோற்கஜன் அகிலாவதியை எவ்வாறு மணம் புரிந்தான்? அகிலாவதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து 10877) அகிலாவதியின் மகன் யார்? பார்பரிகா 10878) பார்பரிகாவுக்கு அகிலாவதி என்ன பழக்கினாள்? போரிடப் பழக்கினாள் 10879) யாருடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள்? தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து 10880) பார்பரிகா பாரதப்போரில் எத்தனையாம் நாளில் போரிடத் தொடங்கினான்? பதினான்காம் நாளில் 10881) பதினான்காம் நாளில் யாருடன் இணைந்து போரிடத் தொடங்கினான்? கெளரவருடன் 10882) பார்பரிகா யாரையெல்லாம் வென்றான்? பீமன், கடோற்கஜன். அருச்சுனன் ஆகியோரை 10883) பார்பரிகா யாரால் கொல்லப்பட்டான்? கிருஷ்ணனால் 10884) அசுவத்தாமன் யார்? மகாபாரதக் கதை மாந்திர்களுள் ஒருவன் 10885) அசுவத்தாமன் யாருடைய மகன்? துரோணாச்சாரியாருடைய. 10886) அசுவத்தாமன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் யார்? அவரது தந்தை துரோணாச்சாரியார் 10887) அசுவத்தாமன் இந்துக்களின் நம்பிக்கைப்படி எவ்வாறு கருத ப்படுகிறான்? ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவனாக 10888) குருசேத்திரப் போரில் அசுவத் தாமன் இறந்துவிட்டதாக யார் மூலம் கூறப்பட்டது? தருமர் 10889) இந்த வதந்தியை நம்பி கவலை அடைந்தவர் யார்? துரோணர் 10890) இவர், இவ்வாறு கவலையில் இருந்த போது இவரை கொன்றவர் யார்? திருஷ்டத்யும்னன் 10891) திருஷ்டத்யும்னன் யார்? இளவரசன் 10892) குருசேத்திரப் போரில் 18 ஆம் நாள் இரவில் கெளரவர் பக்கம் உயிர் பிழைத்திருந்தவர்கள் எத்தனை பேர்? மூவர் 10893) அந்த மூவரில் ஒருவர் யார்? பார்பரிகா 10894) பாண்டவர்கள் படைகளின் தலைமைப்படைத் தலைவர் யார்? திருஷ்டத்யும்னன் 10895) திருஷ்டத்யும்னனைக் கொன்றவர் யார்? பார்பரிகா 10896) பார்பரிகா திருஷ்டத்யும்னன் என்ன செய்து கொண்டிருக்கும்போது கொன்றான்? தூக்கத்தில் இருக்கும் போது 10897) பார்பரிகா இதேபோல் வேறு யாரையெல்லாம் அன்றிரவு கொன்றான்? பாண்டவர்களின் ஐந்து குலக் கொழுந்துகளையும் பாண்டவ படை வீரர்களையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812