திங்கள், 29 டிசம்பர், 2014

வாஸ்து சாஸ்திரம்

கே. ஈஸ்வரலிங்கம் 11154) வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டுவதற்கு மட்டும் தானா? வாஸ்து சாஸ்திரம் என்றால் வீடு கட்டுவதற்கு மட்டும் அல்ல. நாம் வசிக்கும் வீட்டின் அமைப்பு, உபயோகிக்கும் பொருளின் இடம், அவ்வளவு ஏன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் வாஸ்துதான். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஓர் இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். சிலர் வீட்டின் வெளியில் பூச்செடிகள், கொடிகள் என அழகாக அலங்கரித்திருப்பர். ஆனால் வீட்டின் உட்பகுதி தூசியும், தும்புமாக இருக்கும். சிலர் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டுமே வீட்டை பயன்படுத்துவர். சுத்தமாக இருக்கும் வீட்டில் மட்டும்தான் திருமகள் வாசம் செய்வாள். வீட்டில் தூசியும், தும்பும் அதிக அளவில் சேரவிடக்கூடாது. தூய்மையாக இருக்கும் வீட்டில் பணத்திற்கும். உணவுக்கும் பஞ்சம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக பணக்காரர்கள் தங்களின் வீடுகளை தூய்மையாக வைத்திருப்பர். அதுபோல, நம்மவர்களில் பணக்காரர்களின் வீடுகளிலும் தூசியும், தும்பும் இருப்பதில்லை. அதிக அளவில் தூசியும் தும்பும் சேர்ந்த வீடுகளில் வசிப்பவர்கள், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றம் குறைந்து காணப்படுகிறது. சிலரின் வீடுகளில் ஒட்டடை தான் மேற்கூரையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றதோ என எண்ணும் படியாக ஒட்டடை அதிகளவில் சேர்ந்திருக்கும். அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால், நல்ல வாஸ்து தன்மை உள்ள வீட்டுக்கு முக்கியமானது. வீட்டை தூய்மையாக வைத்திருப்பதும், தூசியும், தும்பும் சேர விடாமல் பார்த்துக்கொள்வதும் தான். 11155) வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கவோ சுவர்களில் தொங்க விடவோ கூடாதவை எவை? ஆயுதங்கள், போரை சித்திரிக்கும் சிற்பங்கள், புகைப்படங்கள். பொம்மை பீரங்கி, பெருக்கல் குறி போல் வாள்கள், ஆகியவற்றை வைக்கக் கூடாது. 11156) வீடுகளில் அலங்கரிக்க வைக்கக் கூடியவை எவை? போர் வீரன், போர் விமானம் ஆகியவை வைக்கலாம். சீனர்களின் டிராகலை வைக்கலாம். இரண்டு கொக்கு, இரண்டு பறவைகளின் படங்களை வைக்கலாம். 11157) இரண்டு பறவைகளின் படங்கள் வைப்பதால் என்ன நடக்கும்? ஒற்றுமையை மேம்படுத்தும். 11158) மான் படத்தை மாட்டி வைக்கலாமா? வைக்கலாம். 11159) மான் படத்தை மாட்டி வைப்பதால் என்ன நடக்கும்? செல்வம் பெருகும். 11160) யானை எதனை குறிக்கும்? பலம், அறிவு, சக்தி ஆகியவற்றை குறிக்கும். 11161) யானையை எந்த திசையில் வைக்க வேண்டும்? கிழக்கில் 11162 இந்த யானையின் அமைப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும்? யானையின் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது போல் இருக்க வேண்டும். 11163) மிருகங்கள் வாயில் உணவை கவ்வி கொண்டிருக்கும் உருவப்படத்தை வீட்டில் வைக்கலாமா? வைக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812