புதன், 1 ஜூலை, 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11393) பஞ்சலிங்கத் தலம் எவை?
அர்கேசுவரர் லிங்கத் தலம், பாதாளேஸ்வரர் லிங்கத் தலம், மரனேஸ்வரர் லிங்கத் தலம், மல்லிகார்ச்சுனர் லிங்கத் தலம், வைத்திய நாதேஸ்வரர் லிங்கத் தலம்.
11394) பஞ்சபட்ஷிகள் எவை?
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்
11395) பஞ்ச கங்கை எவை?
ரத்தின கங்கை, தேவ கங்கை, கையிலாய கங்கை, உத்திர கங்கை, பிரம்ம கங்கை
11396) பஞ்சாங்கம் எவை?
திதி, வாரம், நட்சத்திரம், யோகம். கரணம்
11397) பஞ்சர ரிஷிகள் எவை?
அகத்தியர். புலஸ்தியர். துர்வாசர், ததீசி, வசிஷ்டர்
11398) பஞ்ச குமாரர்கள் எவை?
விநாயகர், முருகர். வீரபத்திரர், பைரவர், சாஸ்தா
11399) பஞ்ச நந்திகள் எவை?
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி
11400) பஞ்ச மூர்த்திகள் எவை?
விநாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு
11401) பஞ்சாபிஷேகம் எவை?
வில்வ இலை கலந்த நீர், இரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர், கிராம்பு, கொரேசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.
11402) பஞ்ச பல்லவம் எவை?
அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி
11403) பஞ்ச இலைகள் எவை?
வில்வம், நொச்சி, விளா. துளசி, கிளுகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812