வியாழன், 23 ஜூலை, 2015

சைவ வைணவ சிற்பங்கள்



கே. ஈஸ்வரலிங்கம்

11443) சிந்தனையின் வெளிப்பாட்டு வடிவங்களின் ஆறு நிலைகளைக் குறிப்பிடவும்.
சிந்தனை வடிவம்,
சொல் வடிவம்,
எழுத்து வடிவம்,
ஓவிய வடிவம்,
புடைசிற்ப வடிவம்,
சிற்ப வடிவம்.
11444) சைவ வைணவ சிற்பங்கள் வழி விளக்க முற்பட்ட பொதுவான கருத்து என்ன?
கடவுள் மனித உருவெடுத்து இவ்வுலகிற்கு வந்து தன்னையே பலியாகக் கொடுத்தார் என்னும் கருத்தை சாதாரண பொது மக்கள் விளங்கிக் கொள்வதற்காக சிற்பங்கள் வழி விளக்க முயன்றன.
11445) சைவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரை இணைத்துக் காட்டும் உருவத்திற்கு என்ன பெயர்?
சோமாஸ்கந்தர்
11446) வைணவ நோக்கில் சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்திருக்கும் உருவத்திற்கு என்ன பெயர்?
மும்மூர்த்தி
11447) கடவுள் ஒருவரே ஆனால் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றார் என்பதைக் காட்டும் உருவங்களின் பெயர்கள் என்னென்ன?
அர்த்தநாரீஸ்வரர்- ஹரிஹரா
11448) அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர் ஆகிய இவை இரண்டும் எதை விளக்குகின்றன?
அர்த்தநாரீஸ்வரர். ஹரிஹரர் ஆகிய இரண்டு உருவங்களில் சிவனுக்கு இடப்பகுதியில் உள்ள இருவரும் (சக்தியும், விஷ்ணுவும்) பரிசுத்த ஆவியானவரின் பெண், ஆண் உருவகங்களே என்பதை விளக்குகின்றன.
11449) சிவனின் உடம்பின் இடப்பாகம் பெண் வடிவாக (சக்தி) விவரிக்கப்பட்டால் அது எவ்வாறு குறிக்கப்படுகிறது.
அர்த்த நாரீஸ்வரர்
11450) சிவனின் உடம்பின் இடப்பாகம் ஆண் வடிவாக (விஷ்ணு) விவரிக்கப்பட்டால் அது எவ்வாறு குறிக்கப்படுகிறது?
அரிஅரன் எனப்படும்
114451) சிவனுடைய உடம்பின் இடதுபாதி ஆண்வடிவமாகவும் மறுபாதி பெண் வடிவமாகவும் சித்தரிக்கப்படுவது எதை விளக்குகிறது?
அன்பே உருவான பிதாவாகிய கடவுளாம் சிவனின் உடம்பின் இடப்பாகம் பரிசுத்த ஆவியை இரண்டு நோக்கில் சித்தரிக்கும் உருவக நிலையைக் காட்டுகிறது.
அதாவது பிதாவாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் (பெண் நிலை) முதலியவை சைவ நோக்கில் அர்த்தநாரீஸ்வரராக விளக்கப்பட்டுள்ளது.
பிதாவாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் (ஆண் நிலை) ஆகியவை வைணவ நோக்கில் அரிஅரனாக விளக்கப்பட்டுள்ளது.
11452) மூன்று தலைகள் - ஒரே உடல் உள்ள சிவன் உருவம் மூலம் விளக்கப்படுகின்ற கருத்து என்ன?
சிவன், சக்தி. குமரக்கடவுள் - சிவன், விஷ்ணு, பிரமன் எனப் பல்வேறு முறைகளில் கடவுள் மூன்று வித்தியாசமான ஆள தத்துவமாகக் காணப்பட்ட போதிலும். அவர் மூவரல்லர்- மூன்று ஆள்தத்துவமுடைய ஒரே கடவுளே ஆவார். என்பதையே மேற்கண்டவை காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812