வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

06ம் வகுப்பு


(11486) அட்சர அப்பியாச ஆரம்பம் என்று அழைப்பது எதனை?
ஏடு தொடக்குதலை

(11487) மனித வாழ்வை மேம்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படும் வாழ்க்கை பண்புகளை எவ்வாறு அழைப்பர்.
விழுமியங்கள்

11488) உண்மை என்பதற்குரிய ஒத்த கருத்துள்ள சொல் எது?
மெய்ம்மை

11489) நன்கு முற்றாத தேங்காயை எவ்வாறு அழைப்பர்?
முட்டுக்காய்

11490) பதில் என்பதற்குரிய ஒத்த கருத்துள்ள சொல் எது?
மறுமொழி

11491) சம்பந்தர் எத்தனை திருமுறைகளை பாடினார்?
முதல் மூன்று திருமுறை

11492) சுந்தரமூர்த்தி எத்தனையாம் திருமுறையை படினார்?
7 ஆம் திருமுறையை

11493) திருவாசகம் எத்தனையாம் திருமுறை?
8 ஆம் திருமுறை

11494) திருப்புகழை பாடியவர் யார்?
அருணகிரிநாதர்

11485) மாவட்டபுரம் என்ற சொல்லில் “மா” என்பது எதனை குறிக்கும்?
குதிரையை

11486) இதில் “விட்ட” என்ற சொல் எதனை குறிக்கும்?
நீங்கிய

11487) “புரம்” என்ற சொல் எதனை குறிக்கும்?
இடம்

11488) மாவிட்டபுரத்தின் தலவிருட்சம் எது?
மாமரம்

11489) பால்குடம் எடுப்பது ஏன்?
ஒருவன் பால் குடம் எடுக்கிறேன் என்று பிரார்த்தனை செய்துகொண்டு அதனை செய்கின்றபோது குடத்தை சுத்தம் செய்வதுபோல தனது மனதையும் சுத்தப்படுத்துகிறான்.

அதனை பக்தியுடன் தனது சிரசின் மீது வைத்துக்கொண்டு தன்னை மறந்த நிலையில் ஆலயத்துக்கு செல்கிறான். இதனை தத்துவரீதியாக பார்க்கிறபோது குடம் என்றால் மனித சரீரம். கீழே போட்டால் குடம் உடைந்துவிடும். மனது கெட்டால் மனிதன் அழிந்து விடுவான்.
 
இப்படி பால்குடம் எடுக்கிற பக்தனுக்கு ஆண்டவனுக்காக வேண்டிக்கொண்ட பிரார்த்தனை என்ற சத்தும் அதனை சுமப்பதால் ஏற்படும் சித்தும் அபிN'கத்தால் ஏற்பட்ட திருப்தி என்ற ஆனந்தமும் கிடைக்கிறது. இது அவன் நினைத்துள்ள நல்ல எண்ணங்களை, நல்ல காரியங்களை நடத்தி வைத்துவிடுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812