வெள்ளி, 27 நவம்பர், 2015

(14571) வேலவனின் வேறு பெயராகிய சுப்ரமணியன் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.


(14572) வேலவனின் வேறு பெயராகிய வள்ளற்பெருமான் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

(14573) வேலவனின் வேறு பெயராகிய மயில்வாகனன் என்ற பெயரும் அதற்குரிய விளக்கமும் என்ன?

மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

(14574) பஞ்ச என்றால் என்ன? ஐந்து

(14575) பஞ்சபு+தத் தலங்கள் எவை?

காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

(14576) பஞ்சலோகங்கள் எவை?

செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

(14577) பஞ்சபுராணங்களும் எவை?

தேவாரம் , திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

(14578) பஞ்சலிங்கத் தலங்களும் எவை?

அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.

(14579) பஞ்சபட்'pகள் எவை?

வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்

(14580) பஞ்ச கங்கைகள் எவை?

ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.

(14581) பஞ்சாங்கங்கள் எவை?

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.

(14581) பஞ்ச ரி'pகள் யார் யார்?

அகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர்.

(14582) பஞ்ச குமாரர்கள் யார்?

விநாயகர், முருகர், வீரபத்திரர், பைரவர், சாஸ்தா.

(14583) பஞ்ச நந்திகள் எவை?

போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி, தர்ம நந்தி.

(14584) பஞ்ச மூர்த்திகள் எவை?

விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.

(14585) பஞ்சாபஷேகங்கள் எவை?

வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பு+ரம், குங்குமப்பு+ கலந்த நீர் , கிராம்பு, கொரோசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.

 (14586) பஞ்ச பல்லவம் எவை?

அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி.

(14587) பஞ்ச இலைகள் எவை?

வில்வம், நொச்சி, விளா, துளசி, கிளுகை. (14588) பஞ்ச உற்சவங்கள் எவை?
நித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச(மாதம் இருமுறை)உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.

(14589) பஞ்ச பருவ உற்சவங்கள் எவை?

அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப்பிறப்பு.

14590) பஞ்ச சபைகள் எவை?

ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812