திங்கள், 13 ஆகஸ்ட், 2018

மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்


வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பால் குட பவனி இன்று திங்கட்கிழமை (13.08.2018) இடம்பெற்றது. ஆடிப்பூரத் தினமான இன்றைய தினம், பம்பலப்பிட்டி ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் காலை 6 மணி தொடக்கம் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று, பால் குட பவனி காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை காலை 8 மணிக்கு வந்தடைந்தது. பக்தர்களால் தலையில் சுமந்து வந்த பால் கொண்டு அன்னைக்கு பாலாபிஷேகம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் ஆகியன தொடர்ந்து இடம்பெற்றன. காலை 11 மணிக்கு மயூரபதி அன்னைக்கு ருதுசாந்தி வைபவம் என அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டுவிழா இடம்பெற்றது. அதன்போது புட்டு, களி, அடை மற்றும் வளையல்கள் முதலியன சுத்தி, நெய்வேத்தியம் படைத்து, சோடோபசார பூசைகள் மயூரபதி அம்பாளுக்கு இடம்பெற்றது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812