புதன், 7 ஆகஸ்ட், 2019

நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?



நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?

சிவன் கோயில்களில்

“நம:பார்வதீபதயே’ என ஒருவர் சொல்ல, “ஹரஹர மகாதேவா’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இவ்வாறு சொல்ல வேண்டியது எந்த ஆலயங்களில்?

சிவன் கோயில்களில்

"நம: பார்வதீ பதயே" என்பதற்கு என்ன விளக்கம்?

பார்வதிதேவிக்கு பதியாக இருப்பவர் என்று அர்த்தம்.

இதில் பதி என்பதற்குரிய பொருள் என்ன?

கணவர்

பார்வதி தேவியின் கணவராக இருப்பவர் யார்?

பரமசிவன்.

பார்வதியின் அதிபதி யார்? பரமசிவன்

இவரை ஏன் “பார்வதீபதி’ என்கிறார்கள்?

அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால்

தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் இவரை எப்படி அழைப்பார்கள்?

நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?

“திருஞானசம்பந்தர்” ஊர் ஊராக “ஹர ஹர” நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து ஜனங்களும் “அரோஹரா” என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும் உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. “என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும்! அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்” என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார்.

இப்போது “நம: பார்வதீபதயே!” என்று ஒரு பெரியவர் சொல்ல, உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு “”ஹர ஹர மகாதேவா” என்று சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812