செவ்வாய், 7 ஜனவரி, 2020

தர்மம் தலைகாக்கும்



பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும்போது ஒரு பொய்கையில்

தாகத்தால் தண்ணீர் அருந்த எல்லோரும் மரண மடைந்தனர்.

யுதிஷ்ட்ரரும் தண்ணீர் அருந்தச் செல்லும்போது யக்ஷதேவதை

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல். பிறகு சாப்பிடலாம்

என்று சொல்லிற்று.பிறகு அதுவும் கேட்க இவரும் பதில் சொன்னார். இதற்கு யக்ஷப்ரச்னம்

எனப் பெயர்.சந்தோஷமடைந்த யக்ஷன் வரம் கொடுக்கிறேன் கேள் என்று சொல்லிற்று.இவரும், நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு யக்ஷன் சொன்னதாவது. ”போர் நடக்கும் ஸமயம்.

இப்போது பீமனையோ அர்ஜுனனையோ பிழைக்க விரும்ப வேண்டும்.

அதை விட்டுவிட்டு நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்கிறாயே”.

இது ஆச்சர்யம் என்றது.

அதற்கு விடை யுதிஷ்ட்ரர் சொன்னதாவது. தர்மம்தான் எனக்கு வேண்டும்.என் தகப்பனாரான பாண்டுவிற்கு இரண்டு மனைவிகள். குந்தி என்றும் மாத்ரீஎன்றும். அதில் குந்திக்குப் பிள்ளையாய் நான் ஜீவித்திருக்கிறேன்.

மாத்ரியின் பிள்ளை இருவரும் ஜீவிக்க வில்லை. ஆக அவளுக்கு

மூத்த பிள்ளையான நகுலன் பிழைக்கவேண்டும் என்றுப் ப்ரார்த்தித்தேன்என்றார்.

அதைக் கேட்ட யக்ஷன் உன்னுடைய தர்மபுத்தியைப் பார்த்து

சந்தோஷமடைந்தேன். நீ தர்மம் நழுவாதவன்.

ஆகையால் எல்லோரையும் பிழைக்கச் செய்கிறேன் என்று

எல்லோருக்கும் ஜீவனம் கொடுத்தான்.

இங்குதான் நாம் கவனிக்க வேண்டும். தர்ம புத்திரருடைய செயலை.

தர்மம் தலைகாக்கும் என்பது சரியாகிவிட்டதல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812