செவ்வாய், 12 அக்டோபர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

தில்லையம்பலவாணனின் தாண்டவ சிறப்பு

8067) சிவபெருமான் செய்தருளுகின்ற தாண்டவங்கள் எத்தனை?

108

8068) இந்த நூற்றி எட்டுக்குள் அடங்குகின்ற ஐந்தொழில்களும் எவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

8069) ஐந்தொழில்களையும் இறைவன் இடைவிடாமல் செய்துகொண்டிருப்பது எதற்காக?

உயிர்கள் மலம் நீங்கி தூய்மையடைந்து பேரின்பம் அடைவதற்கு.

8070) இச் செயல்களை இறைவன் எவ்வாறு செய்வதாகக் கூறப்படுகிறது?

தாண்டவமாக

8071) கடவுள் இவ்வாறு செய்தருளுவதை எவ்வாறு அழைப்பர்? ஞானக்கூத்து

8072) பஞ்சசெயல் தத்துவத்தை பாமர மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் செய்திருப்பது என்ன?

தாண்டவ உருவத்தை உருவகம் செய்து காட்டியிருப்பது.

8073) தாண்டவ உருவத்தை உருவகம் செய்து காட்டியிருப்பவர்கள்?

சைவ சித்தார்ந்த சாத்திரம் அறிந்த அறிஞர்கள்.

8074) பரந்து விரிந்த ஆகாயம் எதைக் குறிக்கும்?

தாண்டவமூர்த்தியின் உடம்பை.

8075) இதனை திருமந்திரப் பாடலில் குறித்துக் காட்டியவர் யார்?

பட்டினத்தடிகள்

8076) பட்டினத்தடிகள் இதனை எவ்வாறு கூறியுள்ளார்.

ஆகாசமாம் உடல்

8077) பஞ்ச செயல்களில் தாண்டவமூர்த்தியின் இரு திருவடிகளும் எதைக் குறிக்கும்?

மறைத்தல், அருளல் செயல்களை

8078) உயிர்கள் வினைகளை அனுபவிக்கச் செய்து இருவினையொப்பும் மலபரிபாகம் எனும் பக்குவ நிலையை அடையச் செய்வது எது?

ஊன்றிய திருவடி.

8079) அதாவது இது ஐந்தொழில்களில் எந்தத் தொழிலைச் செய்கிறது?

மறைத்தல்

8080) தூக்கிய திருவடியை என்னவென்று அழைப்பர்?

குஞ்சிதபாதம்.

8081) இந்தத் திருவடி எதனைக் குறிக்கிறது?

பக்குவம் அடைந்த உயிருக்கு அனுக்கிரகம் என்னும் அருளைக் கொடுத்து வீடளிக்கின்றது.

8082) தாண்டவமூர்த்திக்கு எத்தனை கண்கள் என்று கூறப்பட்டுள்ளது?

மூன்று

8083) மூன்றாவது கண் எங்குள்ளது?

நெற்றியில்

8084) இந்த முக்கண்களும் எவற்றைக் குறிக்கின்றன?

இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்னும் மூன்று சக்திகளை

8085) இந்த முக்கண்களும் மூன்று சக்திகளை குறிப்பாக எதில் கூறப்பட்டுள்ளது!

காமிகா ஆகமத்தில்

8086) காதுகள் எதை குறிக்கின்றது?

ஓங்காரத்தை

8087) கடவுள் தமது திருக்கையில் உள்ள துடியை ஒலித்து உண்டாக்கும் ஓசை எந்த வடிவமுடையது?

ஓங்கார வடிவம்.

8088) சடைமுடி எதற்கு அடையாளம்? ஞானத்துக்கு

8089) நுன்சிகை ஞானம் என்பது எதனை?

திருமந்திர வாக்கை

8090) தாண்டவமூர்த்தியின் ஊன்றிய பாதத்தின் கீழே காணப்படுகின்ற உருவம் எது?

முயல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812