புதன், 20 அக்டோபர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ஸ்தாபகர்,

தமிழர் நற்பணி மன்றம்

(தானங்களும் பலன்களும்)


8091) அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?

தரித்திரமும் கடனும் நீங்கும்

8092) வஸ்திரதானம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

ஆயுள்விருத்தி

8093) பூமிதானம் செய்வதால் விளையும் நன்மை என்ன?

பிரமலோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்

8094) கோதுமை தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?

ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் நீங்கும்

8095) தீப தானம் செய்தால் ஏற்படக் கூடிய நன்மை என்ன?

கண் பார்வை தீர்க்கமாகும்

8096) நெய், எண்ணெய் தானத்தால் ஏற்படும் நன்மை என்ன?

நோய் தீரும்

8097) தங்கம் தானம் செய்தால் ஏற்படும் பலன் என்ன?

குடும்ப தோஷம் நீங்கும்

8098) வெள்ளிதானம் செய்தால் ஏற்படும் பலன் என்ன?

மனக்கவலை நீங்கும்

8099) தேன் தானம் செய்தால் ஏற்படும் பலன் எது?

புத்திர பாக்கியம் உண்டாகும்.

8100) நெல்லிக்கனி தானம் செய்தால் விளையும் நன்மை என்ன?

ஞானம் உண்டாகும்

8101) அரிசி தானம் அளிக்கும் பலன் யாது?

பாவங்களைப் போக்கும்

8102) பால் தானம் எந்தப் பலனை அளிக்கும்?

துக்கம் நீங்கும்

8103) தேங்காய் தானம் செய்தால் விளையும் பலன் என்ன?

நினைத்த காரியம் நிறைவேறும்

8104) பழங்கள் தானம் செய்தால் விளையும் பலன் யாது?

புத்தியும் சித்தியும் கிட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812