அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் / ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(தில்லையம்பலவாணனின் தாண்டவச் சிறப்பு)
8105) முயலகனை என்னவென்று குறிப்பிடுவார்கள்?
கரு, அபஸ்பாரம்
8106) முயலகனின் உருவம் எதைக் குறிக்கும்?
ஆன்மாவில் படிந்துள்ள மலத்தை
8107) தாண்டவமூர்த்தியின் கைகளில் காணப்படுபவை எவை?
துடி, தீச்சுடர், சூலம், பாசம், பாம்பு
8108) பஞ்ச செயல்களுக்கும் எத்தனை தாண்டவங்கள் உள்ளன?
ஐந்து தாண்டவங்கள்
8109) பஞ்ச செயல்களில் காத்தல் எத் தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்.
8110) காத்தல் தாண்டவம் இரண்டு வகைப்படுவதால் ஐந்தொழில் தாண்டவங்களின் எண்ணிக்கை எத்தனையாகும்?
ஆறு
8111) 5 தொழில்களையும் தனித்தனியே காட்டுகின்ற தாண்டவங்கள் ஆறும் 5 தொழில்களையும் ஒருங்கே காட்டுகின்ற தாண்டவம் ஒன்றும் ஆக எல்லாமாக எத்தனை யாகும்?
ஏழு
8112) படைத்தல் தாண்டவத்தை என்ன வென்று கூறுவர்?
காளிகா தாண்டவம்
8113) முனி தாண்டவம் என்பது எதனை?
படைத்தல் தாண்டவத்தை
8114) படைத்தல் தாண்டவ மூர்த்திக்கு எத்தனை கைகள்?
எட்டு
8115) இந்த மூர்த்தியின் வலப்பக்க கைக ளில் உள்ள பொருட்கள் எத்தொழிலை குறிக்கின்றன?
படைத்தல்
8116) திரிசூலம் எதைக் குறிக்கின்றது?
ஆன்மாவின் முக்குணங்களையும்
8117) பாசக்கயிறு எதைக் குறிக்கிறது?
ஆணவம், கன்மம், மாயை
8118) துடி எதைக் குறிக்கின்றது?
படைத்தல் தொழிலை
8119) வலப்பக்க கைகளில் காணப்படும் பொருட்கள் எவை?
திருசூலம், பாசம், துடி
8120) மும்மலத்தினால் மறைப்புண்டு முக்குணவசப்பட்டு ஆன்மா வுக்கு தாண்டவப் பெருமான் தனு, கரண, புவன போகங்களை தருகிறார் எனும் தத்துவத்தை விளக்கும் மூர்த்தம் எது?
முனிதாண்டவ மூர்த்தம்
8121) காத்தல் தாண்டவத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
புஜங்க லளிதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக