திங்கள், 7 மே, 2012

அறநெறி அறிவுநொடி 9128) வித்தியாரம்பம் எப்போது செய்யலாம்? விஜயதசமியில் அல்லது வேறு நல்ல நாளில். 9129) வித்தியாரம்பம் செய்ய என்ன செய்ய வேண்டும்? ‘ஹாரி ஸ்ரீ கணபதியே. நம’ எனவும் குரு வாழ்க குருவே துணை’ எனவும் கூற செய்ய வேண்டும். 9130) இவ்வாறு கூற செய்தபின் என்ன செய்ய வேண்டும்? பின்னர் குருவை வணங்க செய்து, கணபதி, சரஸ்வதி தேவியை வணங்கி அரிசியில் அரி என்னும் எழுத்தை எழுத செய்ய வேண்டும். 9131) காது குத்துதலை எவ்வாறு அழைப்பர்? கர்ணபூஷணம் 9132) நல்ல விஷயங்களை செவியின் வழியே செலுத்த வேண்டும் தீய விஷயங்களை உள்ளே செலுத் தாமல் துளை வழியே வெளியே செலுத்த வேண் டும் இதனை உணர்த்துவதற்காக செய்யப்படும் சடங்கு என்ன? காது குத்தல் 9134) பூணூல் என்னும் சடங்கு எத்தனை வயதில் நடத்தப்பட வேண்டும்? ஏழு வயதில் 9135) பூணூல் அணிவிக்கும் சடங்கை என்னவென்று கூறுவார்கள்? உபநயன கிரியை 9136) உபநயனகிரியை செய்யாதவர்களுக்கு என்ன செய்து வைக்க வேண்டும்? தீட்சை 9137) குழந்தைகள் குருவுடன் இருந்து கல்வி பயிலும் காலம் எது? குரு குலவாசம் 9138) குறிக்கோள் பகர்தலை என்னவென்று கூறுவர்? சங்கற்பம் 9139) காலத்தையும் இடத்தையும் செயலையும் விளக்கி பிரார்த்திப்பதை என்னவென்பர்? சங்கற்பம் 9140) உடம்பையும் உள்ளத்தையும் சுத்தி செய் வதன் பொருட்டு நடத்தப்படுகின்ற சடங்கு எது? புண்யாவாசனம் 9141) புண்யாவாசனம் எவ்வாறு செய்யப்படும்? தண்ணீரை (புனித நீராக சுத்தி செய்து) திருவருள் பெருக்காக கருதி மணமக்கள் மீது தெளிந்து அவர்களை புனிதமாக்க வேண்டும். 9142) சிற்றின்ப வாழ்க்கையை வெறுத்து கடவுள் பணியை மேற்கொண்டு ஆன்மீக நெறியில் நிலை நிற்க வேண்டுமென தம்பதியினர் சங்கற்பம் ஏற்பதை குறிப்பது எது? சஷ்டியப்த பூர்த்தி 9143) சஷ்டியப்த பூர்த்தியை வேறு எவ்வாறு அழைப்பர்? அறுபதாம் ஆண்டு நிறைவு விழா 9143) எண்பது அல்லது எண்பத்து நான்காவது ஆண்டில் செய்யும் சடங்கு எது? சதாபிஷேகம் 9144) எண்பது வயதிற்கு மேல் வாழ்ந்தவர்களை என்ன வென்று கூறுவார்கள்? ஆயிரம் பிறை கண்டவர்கள் 9145) மனிதன் இறந்தபின் அவரது புத்திரர்கள் செய்யும் கிரியை எது? அபரக்கிரியை 9146) அபரக் கிரியை எதற்காக செய்யப்படுகிறது? ஆன்மா நலம் அடைதற்பொருட்டு 9147) புத்திரன் என்பதன் அர்த்தம் என்ன? பத்தென்னும் நகரத்தில் தந்தை விழாமல் கரையேற்றுபவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812