புதன், 8 ஆகஸ்ட், 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்
கல்யாண நாள்
9325) இரண்டு பெளர்ணமி அல்லது இரண்டு அமாவாசை ஒரே மாதத்தில் வருவது உண்டு. இந்த மாதத்தை என்ன மாதம் என்று அழைப்பார்கள்?
மல மாதம்
9326) மல மாதத்தில் திருமணம் செய்யலாமா?
கூடாது
9327) எந்தெந்த மாதங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது?
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
9328) இயன்றவரை எந்த காலத்தில் திருமணம் செய்வது நல்லது?
சுக்கில பட்ச காலத்தில்
9329) திருமணம் செய்வதற்கு மிக மிக ஏற்ற கிழமைகள் எவை?
புதன், வியாழன், வெள்ளி
9330) எந்தெந்த லக்கின நாள்களில் திருமணம் நடத்த வேண்டும்?
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுபலக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
9331) எந்தெந்த திதிகளில் திருமணம் வைப்பது நல்லது?
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகள் தவிர்ப்பது நல்லது.
9332) எந்தெந்த காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்று கூறப்படுகிறது?
அக்னி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது
9333) திருமணத்தின் போது குரு சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கலாமா?
கூடாது
9334) திருமண நாள் மணமக்களின் சந்திராஷ்டம் தினமாக இருப்பது நல்லதா?
இல்லாமல் இருப்பது மிக மிக முக்கியம்.
9335) மணமக்களின் ஜனன நட்சத்திர நாளில் திருமணம் நடத்தலாமா?
கூடாது
9336) திருமணம் வேறு எந்தெந்த நட்சத்திர நாட்களில் நடத்தக்கூடாது?
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23 ஆவதாக வரும் நட்சத்திர நாட்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
9337) மணமக்களின் பிறந்த திகதி அல்லது கிழமைகளில் திருமணம் செய்யலாமா?
கூடாது
ஆடிக்கஞ்சி
9338) ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும் கூழ் ஊற்றுவதும் வழக்கம். இது ஏன் தெரியுமா?
ஆடி மாதம் வீசக் கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்.
9339) இதனை என்னவென்று கூறுவார்கள்?
ஆடிக் கஞ்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக