திங்கள், 18 பிப்ரவரி, 2013

திருக்குறள் மனனப் போட்டி

தமிழர் நற்பணி மன்றம், தமிழ் மொழியின் முதன்மை நூலாகவும் உலக பொதுமறை நூலாகவும் போற்றப்படும் தெய்வப்புலவர் என அழைக்கப் படும் திருவள்ளுவர் பெருந்தகையால் இயற்றப்பட்ட திருக்குறளை இன்றைய மாணவ சமுதாயம் கற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் அறநெறி பாடசாலை மாணவர்களிடையே திருக்குறள் மனனப் போட்டியை நடத்த உள்ளது. எதிர்வரும் 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை கொழும்பு 15 அளுத்மாவத்தையிலுள்ள அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தில் இப்போட்டி நடைபெறும். மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் காலை 8.30 மணிக்கு போட்டி மண்டபத்துக்கு சமுகமளிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812