திங்கள், 25 பிப்ரவரி, 2013
மாரியம்மன்
கே.ஈஸ்வரலிங்கம்
9823) சிவனிடமிருந்து பிரிந்த சக்திகள் எத்தனை? நான்கு
9824) அந்த நான்கு சக்திகளையும் தருக
பவானி, விஷ்ணு, காளி, துர்க்கை
9825)அந்த சக்தி துர்க்கையாக செயல்படுவது எப்போது?
போரிலே
9826) காளியாக செயல்படுவது எப்போது? கோபத்தில்
9827) புருஷர்களிடத்தில் என்னவாக செயல்படுகிறார்?
விஷ்ணுவாக
9828) இன்பத்தில் என்னவாக செயல்படுகிறாள்? பவானி
9829) சக்தி மூர்த்தங்களுள் கிராம தேவதையாக கருதப்படுபவள் யார்? மாரியம்மன்
9830) காவல் தெய்வமாக கருதப்படுபவள் யார்?
மாரியம்மன்
9831) மாரியம்மனின் சிறப்பை குறித்து கூறும் போது பெரியோர் எவ்வாறு கூறுவர்? மாரியல்லது காரியமில்லை
9832) மழை தரும்தெய்வம் எது?
மாரி
9833) மழையின் இன்றியமையாமையை மிக உயர்வாக குறிப்பிடுபவர் யார்? திருவள்ளுவர்
9834) திருவள்ளுவர் மழையின் இன்றியமையாமை குறித்து எந்த அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்?
வான் சிறப்பில்
9835) மழையில்லாவிடில் என்ன நடக்கும்?
பயிர்கள் வாடும்
9836) மாரித்தாயின் கருணையில்லாவிடில் என்ன நடக்கும்?
உயிர்கள் வாடும்
9837) இது நமது பிரதி உபகாரத்தைக் கருதிப் பொழிவதில்லை? அது எது? மழை
9838) அதேபோல் கைமாறு கருதாமலேயே நம்மீது கருணை பொழிகின்றவள் யார்? அன்னை
9839) மாரியம்மனை ஆகமங்கள் என்னவென்று அழைக்கின்றன?
சீதலாதேவி
9840) அன்னையின் அருள் எத்தகைய தன்மை வாய்ந்தது?
குளிர்ச்சியானது
9841) அன்னை எவற்றையெல்லாம் தணிக்கும் ஆற்றல் கொண்டவள்?
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சநியம் என்ற கொடிய வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவள்.
9842) மக்களுக்கு உடல் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் என்னென்ன? அம்மை, வைசூரி
9843) அம்மை, வைசூரி போன்ற நோய்களைப் போக்கும் கண்கண்ட தெய்வம் யார்? மாரியம்மன்
9844) மும்மூர்த்திகளும் யார்?
பிரம்மன், விஷ்ணு, உருத்திரன்
9845) உலகின் முதல் தத்துவம் எது? சக்தி தத்துவம்
9846) இந்த மும்மூர்த்திகளுக்கும் வலிமையைத் தருபவள் யார்? சக்தி
9847) சக்திகள் எத்தனை வகைப்படும்? ஐந்து
9848) அந்த பஞ்ச சக்திகளையும் தருக
சித்சக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி
9849) மூர்த்திகள் எத்தனை வகைப்படும்? ஐந்து
9850) அந்த பஞ்ச மூர்த்திகளையும் தருக?
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்
9851) இந்த பஞ்ச மூர்த்திகளாக திகழ்பவள் யார்? சக்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக