திங்கள், 1 ஜூலை, 2013

வைரவர்

கே.ஈஸ்வரலிங்கம் 10153) காவல் தெய்வமாகவும் காத்தல் கடவுளுமாக விளங்குபவர் யார்? வைரவர் 10154) வைரவர் எவற்றை காவல் காப்பவராக விளங்குகிறார்? இவ்வுலகையும் உலகில் உள்ள திருக்கோயில்கள், தீர்த்தங்களையும் 10155) வைரவரை வேறு எப்பெயர்களில் அழைப்பார்கள்? §க்ஷத்ர பாலகன், தீர்த்த பாலகன் 10156) §க்ஷத்ர பாலகன் என்று அழைப்பது ஏன்? திருத்தலங்கள் எனப்படும் §க்ஷத்திரங்களை காவல்புரிவதால் 10157) தீர்த்த பாலகன் என்று அழைப்பது ஏன்? கடல் பொங்கி எழுந்து பூமியை அழிக்காமல் காப்பதற்காக 10158) உலகில் படைக்கும் உயிர்களைக் காக்கும் உரிமை யாருக்கு உண்டு? சிவனுக்கு 10159) அவ்வுயிர்களைக் காக்க சிவன் என்ன உருவில் வெளிப்படுகிறார்? வைரவர் 10160) படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஆற்றும் இறைவனுக்கு என்ன பெயர்? வைரவர் 10161) படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் வேறு எவ்வாறு அழைப்பர்? பரணம், ரமணம், வமணம் 10162) பரணம் என்பது எதனை? உலகில் உயிர்களை தோற்றுவித்து நிரப்பும் படைத்தொழில் செய்தலை 10163) ரமணம் என்பது எதனை? உயிர்களைக் காக்கும் தொழிலை 10164) நெடுங்காலம் வாழ்ந்து சோர்ந்த உயிர்களை அழித்து தன்னுள் அடக்கி கொள்ளும் அழித்தல் தொழிலை என்னவென்று சொல்வார்கள்? வமணம் 10165) ப+ரணம், ர+மணம், வ+மணம் ஆகிய மூன்றும் சேர்ந்தது எது? (பைரவம் (பை+ர+வ+ம்) 10166) பைரவரின் வலக்கரத்தில் இருப்பது என்ன? டமருகம் 10167) இந்த டமருகம் எதனை குறிக்கிறது? படைத்தலை 10168) கபாலம் எதனை குறிக்கிறது? காத்தலை 10169) மேனியில் பூசிய விபூதி எதனை குறிக்கிறது? அழித்தலை 10170) பைரவர் முத்தொழில்களையும் ஆற்றும் போது எவ்வாறு அழைக்கப்படுகிறார்? விரிஞ்சி வடுகர், முகுந்த வடுகர், உருத்திர வடுகர் 10171) இவர்களுக்கு தேவிகளாக விளங்குபவர்கள் யார்? வாக்தேவி, வைஷ்ண சக்தி, கெளரிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812