திங்கள், 9 செப்டம்பர், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10292) அனுமானுடைய தாய் யார்? அஞ்சனாதேவி 10293) அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க என்ன செய்து கொடுத்துள்ளார்? உளுந்து வடை 10294) உளுந்தினால் போஷாக்கு கிடைப்பது உடலின் எந்த பகுதிகளுக்கு? எலும்பு 10295) ராம ராவண யுத்தம் நடைபெற்ற போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றவர் யார்? அனுமான், 10296) ராவணன் அம்பு தொடுக்க அம்பால் தாக்கப்பட்ட அனுமான் அந்த காயத்திற்கு மருந்தாக என்ன செய்தார்? தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டார். 10297) வெண்ணெய் சார்த்தும் பழக்கம் எப்படி உருவானது? வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையால் 10298) மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன் னால் கோலம் போடுவார்கள். மணக் கோலம் காணவேண்டிய பெண்கள் கோலம் போடும்போது என்ன செய்ய வேண்டும்? கோலத்தின் நடுவில் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப் பூவை பதிக்க வேண்டும். 10299) இவ்வாறு வைப்பதால் என்ன நடக்கும்? இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். 10300) மாட்டுச் சாணத்தால் ஏற்படும் தன்மை என்ன? கிருமிநாசினி 10301) இவ்வாறு பூவைப்பதற்குரிய வேறு காரணங்கள் ஏதாவது உண்டா? பூ மலர்ந்திருப்பது போல வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு திகழ்வார்கள் என்பது நம்பிக்கை 10302) புஷ்பவதி ஆகாத பெண்கள் இவ்வாறு மார்கழியில் பூ வைத்து கோலமிட்டால் என்ன நடக்கும்? புஷ்பதிவாகும் வாய்ப்பு உருவாகும். 10303) இறைவன் உருவாக்கிய ஏழு உலகங்களும் எவை? சத்திய லோகம், தபோ லோகம், ஜனோ லோகம், சொர்க்கம், மஹர் லோகம், புனர் லோகம், பூலோகம். 10304) சத்தியலோகத்தில் இருப்பது யார்? பிரம்மன் 10305) தபோலோகத்தில் இருப்பது யார்? தேவதைகள் 10306 ஜனோ லோகத்தில் இருப்பது யார்? பித்ருக்கள் 10307) சொர்க்கத்தில் இருப்பது யார்? இந்திரன் முதலான தேவர்கள் 10308) புனர்லோகத்தில் இருப்பது யார்? கிரகங்கள், நட்சத்திர தேவதைகள் 10309) பூலோகத்தில் இருப்பது யார்? மனிதர்கள், விலங்குகள் 10400) இந்த ஏழு உலகங்களும் எங்கு உள்ளன? பூமிக்கு மேலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812