செவ்வாய், 3 டிசம்பர், 2013

கே. ஈஸ்வரலிங்கம்

(10440) இரவில் உணவில் சேர்க்கக் கூடாதவை யாவை? இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் (10441) உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் சாதத்தைப் பரிமாறலாமா? கூடாது. (10442) முதலில் என்ன பரிமாற வேண்டும்? காய்கறிகளையோ, அப்பளத்தையோ அல்லது உப்பையோ பரிமாறலாம். மூக்குத்தி (10443) மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் ஏற்படும் நன்மைகள் எவை? உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. (10444) தங்கத்துக்கு உள்ள ஆற்றல்கள் என்ன? உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக்கூடிய ஆற்றல் உண்டு. (10445) ஏன் பெண்கள் மட்டும் மூக்குக் குத்திக்கொள்கிறார்கள்? ஆண்களின் மூச்சுக் காற்றைவிட பெண்களின் மூச்சுக் காற்றுக்கே சக்தி அதிகம் என்பதால் (10446) மூக்குக் குத்துவதால் உண்டான வேறு நன்மைகள் யாவை? சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்த ரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத் தடுமாற்றம் போன்றவற் றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. பொது (10447) விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்? மாலைநேரம் வழிபாட்டிற்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பாள் என்பது ஐதீகம். அந்தச் சமயத்தில் பெண்கள் விரித்த கூந்தலுடன் நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் தலைவாரி, பூ வைத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள் வது சிறப்பைத் தருமென்பது சான்றோர் வாக்கு. (10448) கோயில்களில் மணி அடிப்பது எதற்காக? மணிச் சத்தம் அதிம்ம் போது ‘ஓம்’ என்ற பிரணவம் எழுகிறது. ஆத்மார்த்த சிந்தனையுடன் இறைவனுடன் கருத் தொருமித்துக் கேட்டால் இந்த நாதத் தைக் கேட்கலாம். இதற்கு ‘எல்லாம் நானே’ என்பது பொருள். இருப்பவை யாவும் இறைவனே என்ற பொருளை உணர்த்து வதே மணியோசை. (10449) திருமணமான பெண்களை ‘திருமதி’ என அழைப்பது ஏன்? திருமணத்திற்கு முன் ஆண்கள் பொறுப்பற்றவர்களாக வீண் செலவுகள் செய்பவர்களாக இருப்பார்கள். திருமணத்தின் பின் அவள் அவர்களைத் திருத்திவிடுகிறாள். கணவனின் வரம்புமீறிய செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இல்லத்தில் லட்சுமிகடாட்சம் ஏற்படுகிறது. இவ்வாறு திருவையும் மதியையும் இணைத்து அவள் திருமதி என அறியப்படுகிறாள். (10450) கோயிலுக்குச் சென்றால் நேராக வீட்டுக்குத் தான் வரவேண்டுமென்பது ஏன்? நாம் கோயிலுக்குச் சென்று மனத்தின் மாசுக்களைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால் நமது புனிதத் தன்மை பாதிப்பிற்குள்ளாகாத இடங்களுக்குச் செல்வது தவறில்லை. ஆலயத்திற்குச் செல்லும் முன் ஆண்ட வனுக்குப் படைக்கப்படுகின்றனவற்றை ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே நன்மை பயக்கும். (10451) புதுமனைகளின் திருஷ்டி பூசணிக்காய் தொங்க விடுவதன் நோக்கம் என்ன? கண்ணூறு கழித்தல் என்பது எமது பண்டைய மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநலமும் உல்நலமும் பாதிக்கப்படுகின்றனவென்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. திருஷ்டிதோஷம் என்பது இதுவே, இவ்வளவு அழகாக வீடு கட்டியுள்ளார்களே என யாராவது பொறாமையோடு பார்த்தால் திருஷ்டிதோஷம் ஏற்படும். தொங்கவிடப்படும் பூசணிக்காயும் அதில் வரையப்பட்டிருக்கும் வடிவமும் பார்ப்போர் கவனத்தைத் திசைதிருப்பும் புது வீட்டை முழுமையாகப் பார்ப்பதிலி ருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டி தோஷம் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812