திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கே. ஈஸ்வரலிங்கம் 11073) வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டு மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியுமா? முடியும் 11074) இந்த வகை மந்திரங்களை என்னவென்று கூறுவார்கள்? "துவனியாத்ம சப்தம்" என்று 11075) பஞ்ச பு+தங்களில் முதன்மையானதாக கருதப்படுவது எது? ஆகாயம் 11076) பஞ்ச பு+தங்களில் ஆகாயம் முதன்மையானதாக கருதப்படுவது ஏன்? ஆகாயத்திலிருந்தே மற்றைய நான்கு பு+தங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுவதாலாகும். 11077) மந்திர ஒலிக்கும் பஞ்ச பு+தங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? மந்திர ஒலியானது பஞ்ச பு+தங்களிலும் பாயக் கூடியது. 11078) நாம் எழுப்பும் மந்திர ஒலி என்ன செய்யும்? நாம் எழுப்பும் மந்திர ஒலியானது காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றைய பு+தங்களையும் தாக்கி செயல்படுகிறது. 11079) மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் எத்தகைய சக்தி கொண்டவை? உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும். மந்திரங்களில் பயன்படும் ஒவ்வோர் எழுத்திற்கும் ஒலிக்கும் வலிமையும் அந்த ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை. பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானா கவே இந்த பொருள் அதிரும் என்று நிருபி க்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக் கப்படுகிறது. அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை உரிய அதிர்வுடன் nஜபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் nஜபிக்கும் மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன நோக் கத்திற்கு நாம் மந்திரம் nஜபிக் கிறோமோ அந்த செயலைச் செய்கிறது. மந்திரங்களைப் nஜபித்து அதன் சக்தியை யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த முறைப்படி பு+சை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812