வெள்ளி, 5 அக்டோபர், 2018

முருகன்

முருகன் அழித்த ஆறு பகைவர்களும் யார்?
ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?
அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல்

இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ள ஆறு ஆயுதங்களும் எவை?

வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில்

முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை?
திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை ஆகும்.

முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று பாடியவா் யார்?
அருட்கவி அருணகிரி நாதர்

யார் யாரின் கூட்டுக் கலவை முருகன்?
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம்

முருகனின் கையில் உள்ள வேல் எதனை குறிக்கும்?
இறைவனின் ஞானசக்தியை

விசாகன் என்று அழைப்பது யாரை?
முருகனை

விசாகன் என்றால் என்ன பொருள்?
மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

குக்குடம் என்று அழைப்பது எதனை?
முருகனின் கோழிக் கொடியை

கந்தனுக்குரிய விரதங்கள் எவை?
1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

முருகனின் மூலமந்திரம் எது?
ஓம் சரவணபவாய நம

முருகனை எத்தனை முறை வலம் வருதல் வேண்டும்?
ஒரு முறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812